வானம் தனக்கே உரித்தான நீல நிறத்தை விட்டு அடர்ந்த கருமை நிற ஆடையை உடல் முழுவதும் உடுத்திக்கொள்ள இரவின் குளுமையில் நிலவு மங்கையின் வரவுதனில் அந்த இடமே ரம்யமாய் காட்சி அளித்தது. ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தெரிந்த கரு நிற வானில் அங்காங்கே வைரங்களாய் மின்னும் நட்சத்திர சிதறல்களின் மேல் பார்வையை பதிந்திருந்தாள் பாவை…. தான் எடுத்த முடிவு சரியா தவறா என்ற குழப்பத்தை விட அவன் ஏற்றுக்கெள்வானா என்ற தவிப்பே அவளை அலைகழித்து கொண்டிருந்தது.
இரு நாட்களாக அழுது வீங்கிய கண்கள் எனக்கு கொஞ்சம் ஓய்வை கொடேன் என கெஞ்சியது. அதை எல்லாம் கருத்தில் கொள்ளாது யோசனை படிந்த முகத்துடன் நிலவுமங்கைக்கு ஈடாக போட்டியிட்டு நின்றிருந்தாள் கிருஷ்ணாவின் பிருந்தா…
கதவு பலமாக தட்டும் ஒலியில் யோசனை களைந்த பிருந்தா மணியை பார்க்க இரவு ஒன்பதை நெருங்கி இருந்தது…
இன்னும் விஷ்ணு வீட்டிற்கு வந்தபாடில்லை வாசனின் வற்புறத்தலுக்கு இணங்க தினமும் இரண்டு மணி நேரம் அரிசி மண்டியில் கணக்கு வழக்கை பார்த்து விட்டு 9 அல்லது 9.30 மணியை போல் வீட்டிற்கு வர, இன்றும் அதே போல் நேரமாகி இருக்க மனதில் உள்ள கலக்கத்தை எல்லாம் ஓரங்கட்டியவள். விடாமல் தொடர்ந்து கதவு தட்டியடி இருக்கவும் “இரு விஷ்ணு இதோ வந்துட்டேன்” குரல் கொடுத்தபடியே கதவை திறந்தவளுக்கு அதிர்வில் கண்கள் இரண்டும் சாசரை போல் விரிந்து கொள்ள, இதயம் தாளம் தப்பி அடித்துக் கொண்டது.
அழுது அழுது மூக்கு சிவந்து கண்இமைகள் தடித்து கன்னங்கள் வீங்கி முகம் வாட, ஏனோதானோவென்று நின்றிருந்தாவளை பார்த்தவனுக்கு அவளை அனைத்து ஆறுதல் கூற இதயம் துடித்து கைகள் பரபரத்தது. அவளுக்காக துடித்த தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்ட கிருஷ்ணா, கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக காட்டி அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
எப்போதும் இதழில் குடிக்கொண்டிருக்கும் புன்னகை சிறிதும் இன்றி கண்களில் கனிவான பார்வைக்கு பதில் ஆளை துளைக்கும் பார்வையுடன் நின்றிருந்தவனை கண்டவளுக்கு சப்தநாடியும் ஆட்டம் கண்டது…
இரு தினங்களில் வருகிறேன் என்று சொல்லி வந்துவிட்டவளுக்கு மறுபடி அங்கு செல்லும் எண்ணம் இல்லாமல் இருக்க தன்னை தேடி நேரடியாக வந்துவிட்டனை கண்டு வார்த்தைகள் வர மறுக்க சிலையாய் நின்றாள் அவன் தாரகை.
“என்ன பிருந்தா இவ்வளவு அதிர்ச்சியா பாக்குற… ஒருவேளை இவன் வரமாட்டான்னு நினைச்சியோ?” என்றான் குத்தல் கலந்த பார்வையுடன். தன்னை தேடி வரவில்லையே என்ற வருத்தம் அதில் அப்பட்டமாய் வெளிப்பட அதிர்வில் அவளுக்கு கைகள் சில்லிட்டது.
அவன் கேள்வியில் பிருந்தா என்னும் சிலைக்கு உயிர் வர சிறு தடும்மாற்றத்துடனே “அ.. அப்படி எல்லாம் இல்லங்க….” என்றவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது.
எப்போதும் இதழில் உறைந்த நகையுடன் வலம் வருபவனுக்கு இன்று அது தொலைந்து போயிருக்க அவன் சிரிப்பை தொலைத்த முகம் மங்கையவளின் இதயத்தை பிசைய காதல் கொண்ட மனது அவனுக்காக மௌனமாய் ஏங்கியது.
தன்னை பார்த்தும் அவள் உடல் மொழியிலும் வாய் மொழியிலும் காட்டிய பாவனையில் சற்று மனம் இளகிய கிருஷ்ணா “ஓ… பார்ரா … அப்போ என்னை எதிர்பார்த்தியா?” என்று கேள்வி கேட்டு இதழ் வளைத்தவன் “உள்ள கூப்பிடாம இப்படியே பேசி அனுப்பிடலாம்னு பிளான் பான்றியா பிந்துமா?” என்றான் கிருஷ்ணா மென்மையாகவே….
என்ன முயன்றும் கிருஷ்ணாவிற்கு அவள் மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை… காதல் மனைவியின் பார்வையை அறிந்தவனுக்கு மேலும் அவளை வருத்தபட வைக்க மனதில்லாது அழுத்தம் கலந்த பார்வை மாறி விழிகள் கனிவான பார்வை தாங்கியிருக்க இதழ்கள் புன்னகையில் நெளிந்தது.
அவன் புன்னகையை பார்த்ததும் பிருந்தாவின் மனம் சற்றே இயல்பு நிலைக்கு திரும்பிட “உ.. உள்ள வாங்க” அவனுக்கு வழி விட்டு விலகி நிற்க கிருஷ்ணா வீட்டிற்குள் நுழைந்தான்.
இரவு உணவை உண்ட மகேஷ்வரி சீக்கிரமே உறங்கி விட மகனின் வரவிற்காக பரசு மட்டும் விழித்திருந்தார். மருமகனை பார்த்ததும் முகம் மலர “வாங்க மாப்ள… உள்ளே வாங்க” அவனை வரவேற்று கையை பிடித்துக்கொண்டார் பரசு.
அவர் கலக்கத்தை போக்கிய மாப்பிள்ளை ஆயிற்றே பாசமும் கனிவும் பொங்கியது அவருக்கு, மலர்ச்சியுடன் மருமகனின் கையை பிடித்துக்கொண்டு பேசிக் கொண்டு இருந்தார் பரசு.
மாமனாரின் மலர்ச்சி அவனையும் தொற்றிக்கொள்ள “எப்படி இருக்கிங்க மாமா… அத்தை எங்க?” என்று அவரிடம் விசாரிக்க “நான் நல்லா இருக்கேன்…. அத்த தூங்குறா மாப்ள… நீங்க நல்லா இருக்கிங்களா…?” முகம் மலர்ச்சியுடன் வினவியவர்.
மகளை பார்த்துவிட்டு “இந்த பொண்ணு தான் மாப்ள… வந்து ரெண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ள வீட்டு நியாபகம் வந்துடுச்சி போல முகமெல்லாம் வாடி போயிடுச்சி… பரவாயில்லை மாப்ள… இப்படி பாக்க எனக்கும் சந்தோஷமா இருக்கு…” நெகிழ்வுடன் கூறிட, தந்தையின் வார்த்தையில் தன்னை விஷம பார்வை பார்த்த கணவனின் முகத்தை காண முடியாது சமயலறைத்குள் புகுந்துக்கொண்டாள் பிருந்தா.
அவளுக்கு உள்ளுக்குள் புது ரத்தம் பாய்ந்தது போன்று முகமெல்லாம் சூடாகி அவன் முன் வரவே இயாலது சமையலறைக்குள் முடங்கி இருக்க “பிருந்தாம்மா மாப்பிள்ளைக்கு சாப்பாடு போடும்மா” என, மகளுக்கு குரலை கொடுத்தார் பரசு.
கிருஷ்ணாவிற்கும் மனைவியின் கையால் சாப்பிட ஆசை வர மறுப்பு எதுவும் கூறாது டைனிங் டேபிளின் மூன் வந்து அமர்ந்தான் . அதற்குள் விஷ்ணுவும் வீட்டிற்கு வந்து விட மாப்பிள்ளையிடம் கூறிவிட்டு பரசு படுக்க சென்று விட்டார்.
காலையில் சந்தித்துக் கொண்டதை இருவருமே வெளியே கூறவில்லை… ஏதும் அறியாதது போலவே இருவரும் நடந்துக்கொண்டனர். “அப்பறம் எப்படி போகுதுடா வொர்க்?” கிருஷ்ணா விஷ்ணுவை கேட்க இருவருக்கும் உணவினை பறிமாறினாள் பிருந்தா.
“ஓகே தான் மாம்ஸ்… பெரியப்பா கம்பெல் பண்றாறேன்னு தான் போனேன்… பட் பரவாயில்லை இப்போ பிடிச்சி இருக்கு” தன் பணியை பற்றி கூறியவன் “நீங்க என்ன மாம்ஸ் சொல்லம கொல்லாம வந்து இருக்கிங்க?… அக்காவை அனுப்பி ரெண்டு நாள் கூட ஆகல உங்க ஆளை பார்க்காம இருக்க முடியலையோ….?” என்றான் சற்று ஏற்ற இறக்கமாக
“உன் அக்காவே என்னை மறந்துட்டாலும் என்னால உங்க அக்காவை மறக்க முடியுமாடா மச்சான்?… அதான் ஓடோடி வந்துட்டேன்” என்றான் மனைவியை கள்ள பார்வை பார்த்தபடியே…
அந்நேரம் பிருந்தாவும் கிருஷ்ணாவை தான் முறைத்துக் கொண்டு இருந்தாள். “அதானே கல்யாணத்துக்கு முன்னாடியே ஓவர் லவ்சு… இப்ப கேட்கவா வேணும்…” அவன் பெரு மூச்சி விடுவது போல் நடிக்க அவர்களுக்கு பறிமாற அங்கு நின்று கொண்டிருந்தவள் “போதும் விஷ்ணு பேசினது சாப்பிட்டு போய் படு… நாளைக்கு கிளாஸ் இருக்குல்ல” என்றாள் கோபக் குரலில்.
“இருக்கா… மாம்ஸ் வந்துருக்காரு எங்களுக்குள்ள பேச ஆயிரம் விஷயம் இருக்கும்… இதுல குறைஞ்சது ஐநூறாவது நாங்க பேச வேண்டாமா? நீ போய் உன் வேலைய கண்டின்யூ பண்ணுக்கா… நான் மாம்ஸை அப்புறம் அனுப்புறேன்” என்றான் அக்காவின் முகத்தை ஆராய்ந்தவாறு.
“டேய்” என பல்லை கடித்தவள் “விளையாட்டு போதும் டா அவரு ஏற்கனவே லேட்டா வந்து இருக்காரு அவர் சாப்பிட்டு தூங்கட்டும் நீ காலைல பேசு” அழுத்தம் நிறைந்த குரலில் கூறிட
“ஹேண்ட்சம் இன்னைக்கு ஓவர் டிஸ்டபென்ஸா இருக்கு… நாளைக்கு நாம ரெண்டு பேரும் வெளியே போய் ஜாலியா பேசிக்கலாம்” அக்காவை பார்த்தபடியே கிருஷ்ணாவிடம் கூறியதும்
‘போடா ரொம்ப தான் கொஞ்சிக்கிறிங்க’ அவர்களை உள்ளுக்குள் கருவியவள் கணவனிடம் திரும்பி “போதும் பேசினது… தட்டை பார்த்து சாப்பிடுங்க…. சாப்பிடும் போது என்ன பேச்சி?” கண்டிப்புடன் கூறிவிட்டு கணவனுக்கு பாலை காய்ச்ச சமையலறைக்குள் புகுந்தாள்.
அதுவரை அவனை பார்ப்பதற்கும் பேசுவதற்கும் தயங்கிக்கொண்டு இருந்தவள் இவர்களுடைய சம்பாஷணையில் என் கணவன் என்ற உரிமை தலைதூக்க கூட்டுக்குள்லிருந்து தன்னையறியாமல் வெளியே எட்டி பார்த்தாள் பிருந்தா.
அவள் சென்றதும் “மாம்ஸ்” என ஆவலாக அழைக்க “டேய் நான் பாத்துக்குறேன்டா… நீ கவலைபடாதே… அவ என் ஏஞ்சல் டா…” என்றான் கிருஷ்ணா காதலாக
“ம்கூம் அப்போ நாங்கலாம் யாரம்” என்றான் விஷ்ணு கிருஷ்ணாவை வம்பு இழுக்கும் நோக்குடன்
அதற்கு விரிந்த புன்கையை உதட்டில் படற விட்டவன் “ஏற்கனவே உன்னையும் என்னையும் வைச்சி ஓட்டுவா. இதுல அவ எதிர்ல ஏண்டா இப்படி வம்பு பண்ற” அவனுக்கு முதுகில் ஒன்றை வைக்க “எங்க அக்காவுக்கு ரொம்ப தான் பயப்புடுறிங்க மாம்ஸ்” கேலியுடன் கூறியவன் உண்டு முடித்து அறைக்குள் சென்றிட கிருஷ்ணாவும் பிருந்தாவின் அறைக்குள் நுழைந்திருந்தான்.