நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருத்த புத்தகங்கள், கண்ணாடி ஓவியங்கள், சில கலைநயமிக்க பொருட்கள் என அவள் அறையில் இருந்தவைகள் சில நொடிகள் அவனை ஈர்த்துக்கொண்டாலும், சிறு வயது முதல் கல்லூரி காலம் வரை அவளது புகைப்படங்கள் மூலம் ஓவியமாக அவள் முகவடிவம் தாங்கிய புகைப்படம் அவனை வசிகரித்தது. அதன் அருகில் சென்றவன் பிருந்தாவின் பிம்பத்தை விரல் கொண்டு வருடிக்கொடுத்தான். அவனுக்கு சூடாக காச்சிய பாலுடன் அறைக்குள் நுழைந்தவள் கண்களுக்கு தப்பாமல் சிக்கியது இந்த காட்சி.
அவனிடம் தெளிவாக பேச வேண்டும் என்று வந்துவளுக்கு இந்த காட்சி பேச முடியாதபடி தடையிட குரலை செருமி தன் இருப்பை அவனுக்கு உணர்த்தினாள் பாவை.
கை வளையின் ஓசையிலும் கால் கொலுசின் சிணுங்களிலும் மனைவியின் வருகையை அறிந்தவன் அவள் புறம் திரும்பாமல் புகைப்படத்தின் ஆராய்சிலேயே இருக்க அவள் செருமியதும் “நாளைக்கு வீட்டுக்கு கிளம்பலாம் பிருந்தா” என்றான் அழுத்தம் நிறைந்த குரலில்.
அவன் கூறியதும் எதையும் யோசிக்காது “நான் வரலை” என்றாள் தீர்கமான குரலில். சட்டென அவள் புறம் திரும்பியவன் “என்ன சொன்ன பிருந்தா?… நீ சொன்னது என் காதுல விழல” என்றான் கிண்டலாக
“நான் வீட்டுக்கு வரலன்னு சொன்னேன் கிருஷ்ணா”… சற்று அழுத்தமாகவே கூறினாள் பிருந்தா
“ஓ…. ஏன்” என்றான் அவளை நேருக்கு நேராக பார்த்தபடி
“என்னால அங்க இருக்க முடியல” என்றாள் குரல் கமர
“நீ என்ன சொல்ல வர பிருந்தா? ஏன் அங்க இருக்க முடியல? இத்தனை நாள் நல்லா இருந்தவளுக்கு இப்போ தீடீர்னு இப்படி வர காரணம்…?”
“ப்ளீஸ் கிருஷ்ணா புரிஞ்சிக்கோங்க உங்களுக்கு நான் ரொம்ப அநியாயம் செய்றேன்… எனக்கே அது நல்லா தெரியுது கல்யாணம் ஆகி இத்தனை தாள் ஆகியும் என்னால அந்த வாழ்க்கைய முழுசா ஏத்துக்க முடியல… என்னால உங்களை நெருங்க முடியல” என்றாள் குரல் உடைய
“இதுக்கா… இந்த காரணத்துக்கு தான் இப்படி.ஒரு முடிவை எடுத்தியா… என்னை பத்தி அவ்வளவு தான் புரிஞ்சி வச்சிருக்கியா பிருந்தா? என்றான் ஆதங்கமாக
“அய்யோ” என பதறி அருகில் வந்தவள் “இ… இல்ல கிருஷ்ணா நான் உங்கள அப்படி நினைக்கல நீங்க சொல்லனாலும் உங்க காதலை நான் எல்லா விதத்துலையும் உணர்ந்து இருக்கேன்…” குரல் கரம கூறியவள்
“உங்ளுக்கு என்ன தலையெழுத்தா கிருஷ்ணா… எங்க அம்மா ஆப்ரேஷனுக்கு அவ்வளவு பணம் கொடுக்க, ஆனாலும் எனக்காக செய்து இருக்கிங்களே… காதலிச்ச ஒரே காரணத்துக்காக விவாகரத்து ஆனாலும் பரவாயில்லைன்னு கல்யாணம் செய்து எனக்கு ஒரு கௌரவமான இடத்தை கொடுத்திங்களே… உங்களுக்கு இதுவரை நான் என்ன செய்து இருக்கேன். கல்யாணத்துக்கு
முன்னாடியும் சரி இப்பயும் சரி நீங்க மட்டும் தான் உண்மையா இருக்கிங்க… எனக்கு அவ்வளவு கில்டியா இருக்கு… என்னால அந்த அன்புக்கு பூரணமா உங்கள மனசார ஏத்துக்க முடியல” என கண்களில் நீர் சூழ குரல் தழுதழுக்கவும்
அவளை இழுத்து அணைத்து உன் அன்பு, நான் செய்தது எல்லாத்தையும் விட பெருசுடா என்று சத்தமிட வேண்டும் போல் துடித்தது அவனுக்கு… இருக்கும் இடம் உணர்ந்து தன்னை நிதானப்படுத்திய கிருஷ்ணா… “இது நீயா எடுத்த முடிவா? இல்லை அஞ்சலி சொல்லி நீ எடுத்த முடிவா?” என்றான் காட்டமாக
அதிர்ச்சியுடன் அவனை பார்க்க எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் கைகளை கட்டி அவளை உறுத்து நோக்கியவன் “அவ சொன்னா ஏன் எதுக்குன்னு யோசிக்காம நாம எடுக்கறதுதான் முடிவு… இவன் ஒரு லூசுன்னு நினைச்சிட்டு வந்துட்டியா?” என்றான் கோபமாக
அஞ்சலி அன்று பார்த்து பேச வேண்டும் என்று கூறியதும் பிருந்தா கிளம்பி சென்றிருக்க அவளுக்கு முன்னரே அஞ்சலி பிருந்தாவிற்காக உணவகத்தில் காத்திருந்தாள்.
“ஹேய்.. பிந்து வா வா… எப்படி இருக்க?” என்று அவள் கைபிடித்து பக்கத்தில் அமர்த்திக்கொண்டாள் அஞ்சலி.
பிருந்தாவும் உற்சாகத்துடன் வந்து அஞ்சலியின் அருகில் அமர்ந்தவள் அவளிடம் பேசியபடி அவளது குழந்தை சாருவை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தாள்.
“மேடம் முதல்ல நீங்க வாங்க… உங்க புருசனை கெட்டுகெதர் கூப்பிட்டாலே வேலை வேலைங்கறான்… ஓழுங்கா முதல்ல நீங்க வாங்க” என்றாள் அவளை குறுகுறுவென பார்த்தபடி
“சரி சரி வந்துடுறோம் ரொம்ப பண்ணாதே…” என்று அவளிடம் பேசிக்கொண்டே குழந்தையின் பட்டு கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவள் “பேபி ரொம்ப சாப்ட்” என்றாள்.
அதில் வாய்விட்டு சிரித்தவள் “குழந்தைன்னாலே சாப்ட் தானே பிந்து… நான் ஒரு ஐடியா சொல்லவா நீயும் ஒரு குழந்தைய பெத்துக்கயேன்” என்றாள் அவள் முகத்தை ஆராய்ந்தவாறு. அதுவரை சிரிப்புடன் இருந்தவள் சட்டென முகம் மாறிட அமைதியானாள் பிருந்தா.
“என்னடி… அமைதியா ஆகிட்ட… நான் சொல்றது தப்புன்னு நினைக்கிறியா? உன் லைப் நல்லா இருக்கனும்னு தான் இதை சொல்றேன்… இன்னும் உன் வாழ்க்கைய நீ ஆரம்பிக்கலன்னு இதோ நீ மூஞ்சை தூக்கறதுலையே தெரியுது… என்னடி உன் பிரச்சனை சொன்னா தானே அதை சால்வ் பண்ண முடியும் .. பாவம் டி அவன்… இன்னும் எவ்வளவு நாள் தான் அவனை காக்க வைக்கப் போற?” என்றாள் சற்று ஆதங்கமாகவே
அஞ்சலியின் ஆதங்கம் பிருந்தாவின் நெஞ்சை அழுத்த வார்த்தைகளின்றி மௌனமாக அமர்ந்திருக்க “இதோ பாரு பிந்து உன் மனசு மாற நீதான் முயற்சி பண்ணனும்.. இதை இப்படியே விட்டா உங்களுக்குள்ள எதுவுமே சரியாகாது…. உன்னை நீயே கேளு உன்னை என்ன தடுக்குதுன்னு உனக்காக இல்லன்னாலும் உங்கள பெத்தவங்கள ஒரு முறை நினைச்சி பாருங்க… எந்த கேள்வியும் கேட்காம இந்த கல்யாணத்தை செய்து வைச்சவங்க இதை எதிர்ப்பார்க்க மாட்டாங்களா? யோசி பிந்து…” என்று கூறி அவளை விட்டிற்கு அனுப்பி வைக்க. இதோ இவள் விட்டை விட்டு வந்துவிட்டாள்
“அவ என்ன செல்லி இருந்தாலும் இது எனக்கும் கிருஷ்ணாவுக்கும் உள்ளது… இதுல நீங்க தலையிடாதிங்கன்னு சொல்லிட்டு வரவேண்டியது தானே இதை எல்லாம் மனசுல வைச்சிக்கிட்டு இங்க வந்து உட்காந்து இருக்க…” என்றான் காட்டமாக
“அவ பேசினது எதுவுமே தப்பில்லலயேங்க… அது உண்மை தானே…” என்று அவள் மூக்கு விடைக்க கூறியதும்
“ஹேய் கோவப்பட கூடாதுன்னு நினைக்கிறேன்டி…என்னை கோவப்பட வைக்காத… ஏன் சின்ன புள்ள மாதிரி பேசினதையே பேசிக்கிட்டு இருக்க நான் இது வேணும்னு கேட்டேனா?… இல்ல உன் உடம்புக்கு ஆசைப்பட்டு உன்னை தொந்தரவு பண்ணேனா…?” என்று கேட்டு தலையை அழ்ந்து கோதி தன்னை கட்டுப்படுத்தியவன் “மேடம் இதுக்கு என்ன முடிவு எடுத்து இருக்கிங்க…” என்றான் அவளை கூர்ந்து நோக்கியபடி
இதற்கே இந்த குதி குதிப்பவனிடம் வக்கீலை பார்த்து விட்டு வந்ததை பற்றி கூறினாள் இருக்கும் கோவத்திற்கு அறைந்தால் கூட ஆச்சர்யபடுவதற்கு இல்லை என்று எண்ணியவள் திருதிருவென விழிக்க
“கேக்கிறதுக்கு பதிலை சொல்லாம என்னடி பார்வை இது… முழிச்சிட்டு நிக்குற?… என்று அவளை மிரட்டவும் “நான் வக்கீலை பார்த்தேன்” என்றாள் பயந்தவாறே அவள் நினைத்தது போலவே அவன் கண்கள் கோபத்தில் சிவந்து கை முஷ்ட்டி இறுகியது. “உன்னை போய் தைரியமான பொண்ணு… ஒரு முடிவை தெளிவா அழகா போல்டா எடுத்துருக்கான்னு அவ்வளவு மதிப்பு வைச்சிருந்தேன் தெரியுமா? சே… அவ்வளவும் போச்சி என்னடி இப்போ என்னை டைவர்ஸ் பண்ணி வேற பொண்ணை கட்டி வைக்க பிளான் பண்றியோ…?” என்று கூறவும் சட்டென அவன் முகம் பார்த்தவள் அழுகையில் அவளது அதரங்கள் துடிக்க “சத்தியமா என்னால முடியலங்க போனேனே தவிர்த்து என்னால ஒரு வார்த்தை கூட பேச முடியல உங்கள பிரிந்து வாழ முடியும்னு தோணலை” என்றாள் முகத்தினை முடி ஆழதுபடி
அவள் வார்த்தைகளில் கிருஷ்ணா உருகிவிட ஆஸ்வசமான மூச்சை வெளியேற்றி ‘தெரியும் பிந்து என்னால மட்டும் இல்ல உன்னாலையும் என்னை விட்டு இருக்க முடியாதுன்னு…. கண்டிப்பா நான் உன் மனசை மாத்துவேன் நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வோம்’ என்று உள்ளுக்குள் அவளோடு பேசியவன் பிருந்தாவின் கரங்களை தன் கரங்களுக்குள் பத்திரப்படுத்தி கொண்டு “நாளைக்கு நம்ம வீட்டுக்கு போவோம்… நாம நமக்கான வாழ்க்கை வாழ்வோம் டா…” என்றான் அவளை தன் நெஞ்சில் சாய்த்து
…..
கிருஷ்ணா பிருந்தாவை வீட்டிற்கு அழைத்து வந்து இரு வாரங்கள் கடந்திருந்தது… இப்பொதெல்லாம் கிருஷ்ணாவுடன் அதிக நேரம் செலவிட ஆரம்பித்து இருந்தாள்.
இருவருக்குள்ளும் ஒரளவு மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவிற்கு இயல்பான பேச்சி வார்த்தைகள் தொடங்கி இருந்தது.
ஒரு அழகான காலை நேரம் விஷ்ணுவிற்கு ஒருகுறுந்தகவலை அனுப்பியவன் கண்ணாடியில் தெரிந்த பிருந்தாவின் பிம்பத்தினை பார்த்தபடி தலை வாரிக் கொண்டிருந்தான். அவனுக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளுக்கு செல்போனில் குறுந்தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்பவும் “பிந்துமா ஏதோ மெசேஜ் வந்தா மாதிரி இருக்கு பாத்தியா…?” என்று கேட்டான் கிருஷ்ணா .
“உங்களுக்கு கோட் எடுத்து வைச்சிட்டு அப்புறம் பாக்குறேங்க” என்றதும்
விஷ்ணு ஏதோ தகவலை அனுப்பி இருந்தான் போல அதை பார்த்தவளுக்கு கை காலெல்லாம் ஆட்டம் காண கண்களில் நீர் திரண்டு நிற்க முடியாது தள்ளாடினாள்.
கண்ணாடி வழியாக அவளையே கவனித்திருந்தவன் அவள் தள்ளாடுவது தெரியவும் ஓடிச்சென்று தங்கிக் கொள்ள அச்சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாமல் அவனை இறுக்க அணைத்து அவன் மார்பினில் முகம் புதைத்து அழுதவள் உடல் நடுங்கியது…
“என்னடா” என்றான் கனிவாய் அவனிடமிருந்து பிரியாமலேயே கையை மட்டும் பின்பக்கம் இருந்த செல்போனை காட்டியவள் மேலும் மேலும் அவனுள் புதைந்து அழுதிட அவள் தலையை ஆதுரமாக தடவிக் கொடுத்தவன் “பாத்துட்டியா?” என்றதும் விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்து பிருந்தா “உ… உங்களுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா?” என்றாள் அதிர்ச்சியுற்றவளாக.
“ம்… தெரியும்டா… உன்னை பத்தி தெரிஞ்ச அன்னைக்கே அந்த பொறுக்கிய பத்தியும் தெரிஞ்சிக்கிட்டேன்… என் பிரெண்ட் மும்பைல தான் S.P. யா இருக்கான் அவன்கிட்ட தான் இவனை பத்தி விசாரிக்க சொல்லி இருந்தேன்… அவனோட நேரம் இது மும்பைல என் பிரெண்ட் லீட் பண்ற கேஸா போயிடுச்சி” என்றதும் கணவனையே ஆச்சரியம் நீங்காமல் பார்த்தாள்.
“பிரகாஷ் கூட இருந்த பொண்ணு பெயர் சோனல் அவளுக்கு வேற ஒருத்தன் கூட அஃபேர் இருக்க போய் அதனால் அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏற்பட்ட சண்டையில பிரகாஷ் பெயர் எழுதி வைச்சிட்டு அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா… கேஸ் என் பிரெண்டு கிட்ட வந்துருக்கு அதான் எனக்கு அனுப்பினான்… நான் விஷ்ணுக்கு அனுப்பி உனக்கு பார்வர்ட் பண்ண சொன்னேன் எப்படியும் அவனுக்கு ஆயுள் தண்டனையாவது கிடைக்கும்” என்றான்.
அவனை அணைத்தபடியே கண்களில் வழிந்த நீருடன் கணவனை பார்க்க அவள் கண்ணீரை துடைத்து விட்ட கிருஷ்ணா “இது கடவுள் உனக்கு கொடுத்த நீதி பிருந்தா… எல்லோருக்கும் இது கிடைச்சிடாது… உனக்கு கிடைச்சிருக்கு மனசை அமைதியா வைச்சிக்கோ” என்றான் அவள் முதுகை வருடியபடி.
“எ…எனக்கு எதிலிருந்தோ விடுதலையான மாதிரி இருக்குங்க… இப்போ தான் நான் நானா இருக்கேன்… அவனுக்கு தண்டனைன்னு ஒன்னு நான் கொடுத்து இருந்தேன்னா இதிலிருந்து நான் எப்போவோ மீண்டு வந்திருப்பேன் போல…அதுதான் என் மனசை உறுத்திக்கட்டு இருந்திருக்குங்க…”
ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு போகும் போது அவ்வளவு போராட்டமா இருக்கும்… அவன் பேசிய பேச்சி என் மேல போட்ட பழின்னு அப்பப்ப்பா என்னால முடியலங்க இதை பார்த்தலுக்கு அப்புறம் அழுத்திக்கிட்டு இருந்த ஏதோ ஒன்னு என்னை விட்டு விலகினா போல லேசா இருக்குங்க… என் மனசையும் என்னால உணர முடியுது” என்று தன் மனநிலையை அவன் மீது சாய்ந்தபடியே கூறினாள்.…
“எனக்கும் தோணுச்சி டா… உனக்கு இதுதான் பிரச்சனையா இருந்திருக்கும்னு… அதான் அவனை தேட சொல்லியிருந்தேன் இப்போ ஓகே வா இருக்கியா” என்றான். அவள் தலையின் தன் தாடையை பதித்து.
“ம்”என்றவள் நியாபகம் வந்தவளாக “ப்ராடு ப்ராடு நீங்களே இதை காமிச்சி இருக்கலாம்ல” என்று மூக்கை உறிந்தாள்.
“அப்போ இந்த மாதிரி ஒன்னு கிடைச்சி இருக்காதுல… இப்போ பாரு எனக்குள்ள நீ இருக்க…” என்று அவளை இறுக்கமாக அணைத்தபடி கிருஷ்ணா கூறவும்… கன்னங்கள் இரண்டும் சிவக்க நாணம் கொண்டு அவனிடமிருந்து விலகிட, அவள் கைபிடித்து இழுத்து தன் முகம் பார்க்க வைத்தான் கிருஷ்ணா.
அவள் செந்நிற விழிகள் கலங்கி சிவந்திருக்க “எனக்காக நீங்க ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செய்யும் போது நான் அதுக்கு எல்லாம் தகுதிறானவளான்னு எத்தனையோ முறை என்னை நானே கேட்டுகிட்டு இருக்கேன் தெரியுமாங்க…. என்னையும் மீறி என் மனசு உங்களை தேடும்… உங்களை பார்த்தா அவ்வளவு சந்தோஷமா இருக்கும் மனசு… ஆனா இதெல்லாம் என்னால காமிச்சிக்கவே முடியாத அளவுக்கு என்னை என் மைன்டை இந்த ஒரு விஷயம் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கும்ங்க… அடுத்தவன் சாப்பிட்ட எச்சிய எப்படி என் கிருஷ்ணா சாப்பிடலாம்னு கூட கோவம் வரும்… உங்க கிட்ட வர ஆசையா இருக்கும்… ஆனா இதெல்லாம் என்னை உங்கிட்ட நெருங்க விடாம அடிக்கடி மனசுல தோனிக்கிட்டே இருக்கும்…” என்று அவன் மார்பில் சாய்ந்து கண்ணீரை வடிக்க
என் ஏஞ்சல் எப்பவுமே அழக்கூடாது என்று அவள் கண்ணீரை இரு விரல் கொண்டு துடைத்தவன் “எனக்கு தெரியும் பிந்து மா என்னை உனக்கு கொஞ்சம் இல்ல ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு… நான் தான் உன் மனசுல இருக்கேன்னும் தெரியும்… என்னை புரிய வைக்க தான் ஊருக்கு போனேன் அதனால தான் உன்னை காண்டாக்ட் பண்ணவே இல்ல… அப்போவே நீ என்னை தேட ஆரம்பிச்சிட்டா அதோட வெளிப்பாடு தான் உரிமையா என்கிட்ட பேசின… உன் கண்ணு என்னை தேடுச்சி… எனக்கான தேடலை உன் கண்ணுல பார்த்த பிறகு தான் என் மனசை உன் கிட்ட சொன்னேன். என்று அவள் செந்நிற அதரங்களின் மேல் விரல்களை வைத்து வருடி மருத்துவ முத்தத்தை விடுத்து காதல் கணவனாக தன் முதல் இதழ் அச்சாரத்தை பதித்து.. அவளை தேற்றி இருந்தான்.
…..
“என்னடா இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று சத்தமாக குரலை கொடுத்து வெளியே நின்று வாட்சை பார்த்திருந்தான் கிருஷ்ணா…
“ஒரு நிமிஷம் இருங்க… சும்மா குதிச்சிக்கிட்டே இருக்கிங்க…” என்று புடவை மடிப்பை எடுத்தவள் “சே முடியல” என்று புடவையை கட்டாமல் கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
“பிந்துமா” என்று அறைக்குள் நுழைந்தவள் அவள் அமர்ந்திருந்த நிலையை பார்த்தவன் “என்னடா கிளம்பளையா?” என்றதும் அவனை பாவமாக பார்த்தவள் தன் மேடிட்டிருந்த ஆறு மாத வயிற்றை பிடித்தபடி எழுந்து “புடவை மடிப்பு வைக்க முடியல” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு….
தாய்மையின் பூரிப்பில் கன்னங்கள் மெருகேறி முகம் பொலிவுடன் அவளை கொள்ளை கொண்டவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறவும் அதில் வாய்விட்டு சிரித்தவன் “என் செல்ல குட்டிக்கு, நானே கட்டி விடுறேன்” என்று மடிப்புக்களை அழகாக வைத்து கட்டி விட கணவனின் கன்னம் வழித்து முத்தம் வைத்து அவன் நெற்றியோடு தன் நெற்றியை முட்டினாள்.
“ஹேய் வலிக்குது பிந்து மா… என்னு நெற்றியை தேய்த்தவன் இது அநியாயம் டி ஸ்ட்ரெய்டா லிப்புக்கு கிஸ் வைச்சா என்னவாம்… கையில் தொட்டு முத்தம் வைக்கிற” என்று கிருஷ்ணா கோபித்துக் கொள்ள அவன் கன்னத்தை திருப்பி முத்தம் வைக்க போக சட்டென அவன் முகம் திருப்பவும் கணவனின் இதழுடன் தன் இதழை பதித்திருந்தாள் பாவை.
“ப்ராடு ப்ராடு” என்று அவன் நெஞ்சில் அடிக்கவும் அவள் கைகளை தடுத்தபடி இருந்த கிருஷ்ணாவிற்கு விஷ்ணுவிடமிருந்து போன் வரவும் சரியாய் இருந்தது.
அவள் கரங்களை தன் நெஞ்சோடு அணைத்திருந்தபடியே”வந்துட்டே இருக்கேன் டா” என்று அவனிடம் கூறி போனை அணைத்தவன் “ஏஞ்சல் விஷ்ணு கால் பண்ணிட்டான் வாடி” என்றான் கெஞ்சலாக.
“உங்களுக்கு நான் பெண்டாட்டியா இல்ல அவன் பொண்டாட்டியா எப்போ பார்த்தாலும் கொஞ்சிக்கிட்டே சுத்தறிங்க… உங்க ரெண்டு பேரோட அழிச்சாட்டியம் தாங்க முடியலடா சாமி” என்று சலித்தபடி கூறினாலும் அவர்களின் பாசமும் அன்பும் பிடித்தே இருந்தது.
பிருந்தாவிற்கு விஷ்ணு செய்வது எல்லாம் அன்பின் வெளிப்பாடு என்று புரிந்தாலும் கிருஷ்ணா என்று வந்து விட்டாள் அவன் முழுவதும் தனக்கே என்ற உரிமை உணர்வும் வந்துவிட அப்பப்போது விஷ்ணுவிற்கும் பிருந்தாவிற்கும் முட்டிக்கொள்ளும்.
“நீ பார்க்கும் முன்னாடியே அவன் தான் டி என்னை பார்த்து சைட் அடிச்சது.. ஹேண்டசம்னு பேரு வச்சி ரசிச்சது…” என்று மனைவியை வம்பிழுத்தபடியே அழைத்துச் செல்ல அவனை முறைக்க முயன்று சட்டென சிரித்துவிட்டாள். இப்படியே இவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் எப்போதும் நிறைந்திருக்க நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்
கிருஷ்ணாவிற்கு பிருந்தா இன்றி அமையாது உலகு… பிருந்தாவிற்கு கிருஷ்ணா இன்றி அமையாது உலகு…