அதிகாலை நான்கரை மணி அலாரம் அடிக்கச் சிரமப்பட்டு கண் திறந்தவன் அலைபேசியை எடுத்து அமர்த்தினான், மீண்டும் அது அடிக்க மெல்லிய சிணுங்கல் அவன் தேவதையிடம்.
“ஒண்ணுமில்ல டா” என்று அவள் முதுகை வருடியவன் அலைபேசியை பார்க்க மதி அழைத்திருந்தான்.
“சொல்லுடா” என்க.
“இமயா நீ போக வேண்டாம், நாப்பண்ணைக்குப் போறேன் ஒரு நாலு நாள் வீட்லயே ரெஸ்ட் எடு” என்றான்.
“ஹ்ம்ம்” என்றிவன் கூற “சரி நாப்போய்ட்டு வரேன்” என்று வைத்துவிட்டான்.
அலைபேசியை தூர வைத்தவன் தன் மார்பில் துயில் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்திருந்தான், எத்தனை வருட கனவு இன்று நிஜமாக… மூக்குத்தி தடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று ஆசைகொள்ள, அவள் மேனி எங்கும் அவனின் முத்த தடங்கள்.
அயர்வையும் மீறிய மிளிர்வு அவள் முகத்தில், அவள் சேலை இருவருக்கும் போர்வையாய் மாரி இருந்தது, அவள் கன்னங்களில் அவன் விரல்கள் ஊர்வலம் போக மெல்ல சினுங்க தொடங்கியவள் ஒரு கண்ணை விழித்து அவனைப் பார்த்தாள்.
“மருந்து போடணும் பொண்டாட்டி” என்க.
“மாட்டேன்” என்றாள் அவள்.
“அப்போ எனக்கு வலிச்சா பரவாயில்லையா!” என்றவனை பார்த்தவள்.
“நீங்களே போட்டுக்கோங்க” என்றாள் அவனோடு இழைந்துகொண்டு, அவள் கன்னத்தில் பதிந்த இதழ்கள் மெல்ல மெல்ல அவள் மேனியில் இசை மீட்டியது இரவின் இனிமையை விடியலில் அவளுள் தேடினான்.
காவல் நிலையத்திலிருந்து வந்த அன்றும் மறுநாளும் பண்ணையிலே தங்கியிருந்தவன், போனில் அவளிடம் பேசிக்கொண்டிருந்தான் “இங்கே மாட்டிக்கொண்டேன் எப்படியும் பூஜைக்கு வந்துவிடுவேன்” என்று.
இமயனை பற்றி எப்படி ஹிமானியிடம் கூறவில்லையோ அப்படியே ஹிமானி மருத்துவமனையில் இருந்ததை அவனிடமும் சொல்லவில்லை, அவள் குரலின் சோர்வு தன்னை காணாமல் இருப்பதால் என்றே அவன் எண்ணினான்.
அவன் குரலைக் கேட்டபிறகே அவளுக்கு உயிர் வந்தது, கொஞ்சம் சமாதானமாகிவிட்டாள் என்றாலும் நேரில் பார்க்காமல் முழுதாக யாரையும் நம்ப தயாரில்லை அவள்.
வியாழன் அதிகாலை வந்து சேர்ந்தான், உடலில் வலி அதிகம் இருந்தது கன்றிப்போய் இருந்த காயங்கள் எரிந்தது மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் சரியாக நாட்கள் ஆகும் என்றிருந்தார் மருத்துவர்.
குளித்து வேட்டி சட்டை அணிந்து வந்து நின்றவனை கண் நிறைய பார்த்துக்கொண்டாள் ஹிமானி, அவன் அருகில் சென்றவள் நன்றாக அவனைப் பார்த்து “நல்லா இருக்கீங்கல்ல” என்று அவன் முகத்தை வருடினாள்.
அவளுக்குப் புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது அவள் உச்சியில் இதழ் பதித்தவன் “நல்லா இருக்கேன்” என்றான்.
அதிகநேரம் பூஜையில் அமர முடியவில்லை பல்லைக் கடித்து பொறுத்துக்கொண்டான், பால் காய்ச்சி முடித்து அனைவருக்கும் கொடுத்து இமயனின் அருகில் வந்தவள் அவன் கரம் கோர்த்துக்கொண்டு அமைதியாக நின்றுவிட்டாள்.
அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை அதீத மகிழ்ச்சியில் அவள் உடல் நடுங்கியது, அதை உணர்ந்து கொண்டவன் தன்னோடு சேர்த்தனைத்தான்.
“மாப்ள…. பண்ணைக்கு டாக்டர வரச் சொல்லி இருந்தியா” என்றான் மதி, “ஆம்” என்று சொல் என்ற பார்வையோடு.
“ஹ்ம் ஆமாடா” என்றான் இமயன்.
“சரி வாப்போயிட்டு வரலாம், அவர் வெய்ட் பண்றார்” என்க.
“இன்னைக்கா!….” என்றாள் அவள்.
“முன்னாடியே அப்பாயிண்ட்மென்ட் வாங்கினதுடா பாத்துட்டு வந்துறோம், எல்லாரும் இங்கயே இருங்க சாப்பாடு சொல்லி இருக்கு நாங்க போயிட்டு வரோம்” என்றவர்கள் பண்ணைக்குச் சென்றனர்.
அவன் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் அதோடு இரவு உறங்கவில்லை இப்பொழுது உறங்கி ஓய்வெடுக்கவே மதி அழைத்து வந்தான் மருந்துகளை எடுத்துக்கொண்டு படுக்க.
“பிரீயா விடு எல்லாம் சரி ஆயிடும் ஒழுங்கா ரெஸ்ட் எடு” என்றவன் அங்கேயே லேப்டாப்போடு அமர.
“மதி மாமாவை வரச் சொல்லு” என்றுவிட்டு சிறிது நேரத்தில் உறங்கிவிட்டான் தூக்க மாத்திரையின் உதவியில்.
மாலை அவன் எழுந்தபோது முத்துவேல் காத்திருந்தான் அங்கே “எப்படி இருக்க மாப்ள” என்க.
“ஹ்ம்ம் பரவாயில்ல மாமா முக்கியமான விஷயம் பேசணும்” என்றவன்.
“ஒரு ஆறு பேர் வேணும் மாமா நம்பிக்கையான திடமான ஆளுங்க, சொல்றத சரியா செய்யணும் விஷயம் நம்மள மீறி வெளில போகக் கூடாது, அப்படி நம்பிக்கையான ஆளு மட்டும் போதும்” என்க.
“சரிடா” என்றவர் “நாப்பாத்துக்குறேன்” என்று கிளம்பி சென்றார்.
“சக்கரைகிட்ட சொல்லி இவனுங்க பட்டறைல நம்ம ஆளுங்க யாரவது இருந்தா, என்னைக்கு மரம் லோட் வருதுன்னு தகவல் வாங்க சொல்லு, எங்க இருந்து… என்ன வழி… எல்லாம் வேணும்” என்றான்.
“சரி மாப்ள” என்றான், மதி வீட்டில் பொருட்கள் ஒன்றும் இன்னும் வரவில்லை ஞாயிறு அன்றே வரும், இரவு எட்டுமணிபோல இவன் வீட்டிற்கு செல்ல மற்றவர்களுக்குத் தெரியும் என்பதால் யாரும் ஒன்றும் கேட்கவில்லை.
“பரவாயில்லையாய்யா” என்றார் மாணிக்கம்.
“ஹ்ம்ம் ஒன்னும் பிரச்சனை இல்லை சித்தப்பா” என்க.
“சரி இன்னைக்கு ராத்திரி இங்கதான் தங்கணும் நீங்க” என்றவர் “அம்மாடி பொருள் எல்லாம் வந்து கொஞ்சம் அடங்கட்டும் அப்பறம் சமைக்கலாம், சாப்பாடு அதுவரைக்கும் அங்கேயே சாப்பிடுங்க” என்க.
“சரி மாமா” என்றாள் அவள்.
அனைவரும் விடைபெற்றுச் சென்றபிறகு மனைவியைக் கைப்பற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன் கதவை அடைத்தான், தலை நிறைய பூச்சூடி சிகப்பு நிறத்தில் பேப்பர் சில்க் புடவை உடுத்தி இருந்தாள்.
அவர்கள் அறை மேலே “சாப்பிடலையா” என்றவள் கேட்க “குளிச்சுட்டு வரேன் நீ எடுத்துட்டு வா” என்றவன் அறைக்குச் செல்ல உணவை எடுத்துச் சென்றாள்.
குளித்து வந்தவன் அவளை ஊட்டிவிட சொல்லி வாங்கிக்கொண்டான் அவளுக்கு அவனும் கொடுக்க இருவரும் உண்டுமுடித்தனர்.
“எதுக்கு அப்படி பயந்த ஹாஸ்ப்பிட்டல் போற அளவுக்கு” என்றவன் அவளைப் பிடித்து மடியில் அமர்த்த அவளிடம் அமைதி.
“ஹிமா புருஷன் இப்படி பயமுறுத்தலாமா?” என்றாள் அவள்.
“அது சரி இப்போ சொல்லு என்ன நடந்துச்சு” என்று இரண்டு நாட்களாக நடந்ததை கேட்பதை போல அவளைப் பேச வைத்தான், மெல்ல மெல்ல அவன் விரல்கள் அவள் கன்னத்தில் கோலமிட தொடங்க ஹிமாவின் வார்த்தைகள் தடுமாறியது.
மோகத்தோடு அவளின் செவி மடலை அவன் கடித்துவைக்க இறுக்கமாக அவன் முதுகில் கைவைத்து பிடித்தாள் ஹிமா.
“ஸ்ஸ்” என்றவன் சத்தத்தில் என்னாச்சு என்றாள் பதறி.
தன் மடத்தனம் புரிய “இல்ல ஒண்ணுமில்ல” என்றவன் ”வேற ஏதோ யோசனை” என்றான்.
சட்டென்று எழுந்தவள் அவன் முதுகில் சட்டையைத் தூக்கி பார்க்கக் கன்றிப்போய் இருந்தது முழுதும், அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்துவிட்டாள், அவளிடம் அசைவே இல்லை.
“ஹிமா” என்றவளை அவன் உலுக்க, அவன் கையைத் தட்டி விட்டவள் கொத்தாகச் சட்டையைப் பற்றி “எப்படி? யாரு?” என்றாள் வார்த்தைகளைத் தேடிப்பிடித்து.
கொஞ்சமாக விஷயத்தை அவன் கூற அவனிடமிருந்து தள்ளிப்போய்ச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.
“குட்டிமா” என்று அவளின் அருகில் நெருங்க “என் பக்கத்துல வராதீங்க நா வேண்டாம் உங்களுக்கு” என்றவள் அடுத்த நொடி அவனை அனைத்திருந்தாள்.
“ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என்றாள்.
“உன்னை வேற யாருக்கும் என்னால குடுக்க முடியாதுடா நீ எனக்கானவ, நீ வேணும் எனக்கு” என்றவனை அனைத்து அப்படியே அமர்ந்திருந்தாள் அமைதியாக.
“ஹிமா வலிக்குது மறுந்துபோடனும்” என்றவன் குரல் செவிமடலை தீண்ட “எங்க இருக்கு” என்றாள் உடனே எழப்பார்த்துக்கொண்டே.
அவளை மீண்டும் தன்னிடம் பிடித்து அமர்த்தியவன் “இங்க” என்றான் அவளைக் காண்பித்து.
“எனக்கான மருந்து நீதான் போட்டுக்கவா” என்றவனை பார்க்க முடியாமல் தலை தாழ்த்தியவள்.
“உங்களுக்கு வலிக்கும்” என்க.
“அந்த வலிக்கு நீதான் வேணும் ரொம்பநாள் ஏக்கம், இதுக்குமேல முடியாது குட்டிமா” என்றவன் குரலே அவளுள் ரசாயன மாற்றத்தை விதைத்தது.
அவன் கை அவள் இடையில் தன் பிடியை அழுத்த ஹிமாவின் விழிகள் தன்னாலே பூட்டிக்கொண்டது, அவள் உச்சியில் முத்தத்தைத் தொடங்கிய அவன் இதழ்கள் மெல்ல கீழிறங்க.
“இதயா பயமா இருக்கு” என்றாள் காற்றாக.
“என்கிட்டே என்ன பயம் உன்னைக் காயப்படுத்துவேனா” என்றான் அவள் இதழில் முத்தம் வைத்து.
அவனின் வலிகள் எல்லாம் அவளுள் நிறைய நிறைய தேய்ந்து மறைந்தது, ஏங்கித்தவித்து கையில் கிட்டுமா இந்த வரம் என்று காத்திருந்த தேவதையை மொத்தமாகத் தன்னுள் வாரிச் சுருட்டினான்.
கூடு விட்டுக்கூடு ஜீவன் பாயும்போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று படத் தியானம்
ஆலிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
மூன்று நாட்களாகக் காலை எழ முடியவில்லை விடியும் வரை கணவனுக்கு மருந்தாக இருப்பவள் விடியலில் அவனை மஞ்சனையாக்கி உறங்கிக்கொண்டிருந்தாள்.
இன்று கல்லூரிக்குப் போயே ஆக வேண்டும் என்ற முடிவோடு வேகமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள், பொருட்கள் வந்துவிட்டது இன்னும் கொஞ்சம் அடுக்கி வைக்க வேண்டும், நித்யா காணும்போதெல்லாம் கிண்டல் செய்தாள் அவளைப் பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ள தொடங்கினாள் ஹிமானி.
இன்றுதான் மூன்று நாட்களுக்குப் பிறகு பண்ணைக்குச் சென்றிருந்தான் இமயன் வீட்டிற்கு வந்தவன், அவள் தயாராவதை பார்த்து “உஷா போய்ட்டா ஹிமா” என்க.
வெட்கத்தில் சிவந்து ஜொலித்தது முகம், அவள் அருகில் நெருங்கிப் பின்னிலிருந்து அனைத்தவன் “பண்ணிட்டு போறாங்க என்ன இப்போ?” என்றவன் விரல்கள் அவள் வயிற்றில் பதிய.
“நேரம் ஆச்சு போகணும்” என்றாள் மெல்ல “நாளைக்கு போகலாம்” என்றதோடு பேச்சுக்கள் முடிந்துவிட்டது…
அவள் வார்த்தைகளை அவனுள் வாங்கிக்கொண்டான், கைகளில் அவளை அள்ளிக்கொண்டவன் அவளோடு கட்டிலில் சரிந்தான், மதியம் அவன் பண்ணைக்குப் போகும்போது அவனுடன் செல்லவே முடிந்தது அவளால்.
விராலி வீட்டோடு வந்து பத்து தினங்கள் ஆகிறது, என்ன கேட்டாலும் பதிலில்லை, வம்ஷியை விரோதியைப் போலப் பார்த்தாள் கையில் சிக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வீசினாள், மாப்பிள்ளை வீட்டில் கேட்டால் அவள் மதிக்கவில்லை, அடங்காப் பெண்ணை எங்கள் மகனுக்குக் கட்டி வைத்துவிட்டீர்கள் என்று புகார் கூறினார்கள்.
“உங்க எல்லார்க்கும் இப்போ சந்தோஷமா” என்றார் மூத்த மருமகள் ரமீலா, “நல்லா சந்தோஷமா இருங்க” என்றவர் மகள் மஹாராஷ்ட்ரா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
யாஷ் இப்படியொரு கேவலமான விஷயத்தைச் செய்தபிறகு மகன் கணவன் இருவருடனும் பேசுவதில்லை ரமீலா, போராடி அதிக பணம் செலுத்தி யாஷை வெளியில் எடுத்தனர்.
அன்று இரவு அவர்கள் நகை கடையில் திருடு போயிருந்தது மொத்தமாகக் கடையைக் காலி செய்திருந்தனர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடக்க இவனுக்குத் துணை நின்ற காவல் அதிகாரி கைகால் முறிந்து ஹாஸ்பிட்டலில் கிடந்தான்.
ஒட்டவைக்க கொஞ்சம் கஷ்டம் என்றனர் மருத்துவர்கள் அவன் இதுவரை கொள்ளை அடித்த பணம் எல்லாம் அதற்கே செலவானது.
நகை கடைக்கு இன்சூரன்ஸ் இருந்ததால் பணம் கிடைக்கும் என்று கொஞ்சம் நிம்மதி வந்தது, அந்த எண்ணத்திற்கும் வெடி வைத்தான் இமயன்.
மறுநாள் கடையில் ரெய்டு நடந்தது, முதல்நாள் கடைக்குக் கொண்டுவரப்பட்ட மரம் லோட் ஒருபக்கம் இறக்கி வைக்கப் பட்டிருந்தது, அனைத்தையும் அவர்கள் பரிசோதிக்க இரண்டுமரம் மட்டும் வேறு சப்தம் எழுப்பியது.
அதை அவர்கள் தனியே எடுத்துப் பரிசோதிக்க மரத்தை நன்றாகக் குடைந்து அதற்குள்ளே கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வைத்திருந்தனர்.
“என்ன இது” என்ற அவர்களின் கேள்வியில் திரு திரு என்று விழித்தான் யாஷ்.
“என்ன யாஷ் இது? ஏன் இப்படி செஞ்ச!” என்றார் முன்ஜல்.
யாஷின் நடவடிக்கைகள் வைத்து அவன்தான் செய்திருப்பான் என்று அவர்களும் நினைத்தனர்.
“இன்சூரன்ஸ் காசுக்காக இப்படி செஞ்சியா” என்றார் பிரவன்.
“என்ன பேசுறீங்க நாச்செய்யல” என்றான் அவன்.
வந்தவர்கள் நகைகளைக் கைப்பற்றிக்கொண்டு “இங்குக் கடத்தல் மரம் யூஸ் பண்றீங்கன்னு தகவல் இருக்கு, அதையும் பாக்கணும்” என்றார்கள்.
பதறிய முன்ஜல் “சார் அப்படிலாம் நாங்க எதுவும் செய்யறதில்ல, இது எங்க குடும்ப பிசினெஸ் ரொம்ப வருஷமா செய்ரோம்” என்றார் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.
“ஏன் குடும்பமா கடத்தல் பண்ண மாட்டாங்களா” என்ற ஆபிஸ்ர் போய்ச் செக் பண்ணுங்க என்றார் உடன் வந்தவர்களிடம்.
உள்ளே சென்றவர்கள் சில சந்தன கட்டைகளை எடுத்து வந்தனர் “சார் இது கஸ்டமர் கேட்டு நாங்க செஞ்சு குடுக்குறது” என்க.
முன்ஜல், பிரவன், பிரணத் மூவரும் யாஷை பார்த்தனர், இதை எல்லாம் அவன்தான் பார்த்துக்கொள்கிறான் அங்கிருந்த சந்தன கட்டைகளைப் பார்த்தவனுக்கு தலை சுற்றியது.
அவன் வைத்திருந்ததை விட அதிகம் இருந்தது எப்படி வந்திருக்கும் என்று புரியவில்லை அவன் நின்று விழிப்பதை பார்த்தவர்கள் இதையும் அவனே செய்திருக்கிறான் என்று முடிவே செய்துவிட்டனர் அரெஸ்ட் ஹிம் என்றார் ஆபிஸர்
இப்பொழுதான் போதை மருந்தை எங்கு வாங்கினாய் யார் உனக்குக் கொடுத்தது என்று உள்ளே வைத்துக் கவனித்து அனுப்பினர், அடுத்து மரம் கடத்தல் நகை திருட்டு என்று குற்றத்தின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது.
ஜீப்பில் ஏறும் அவனை வண்டியில் சாய்ந்து நின்று பார்த்திருந்தான் இமயன் “நீதானடா?” என்று அலறினான் யாஷ், அப்பொழுதும் இவன் அமைதியாகவே பார்த்திருந்தான்.
பேப்பர், நியூஸ் அனைத்திலும் வந்தது இதற்க்கு முன் பொருட்கள் வாங்கிய பலர் கடத்தல் மரத்தில் எங்களுக்குப் பொருட்கள் செய்து தந்தீர்களா என்று நேரில் வந்து சண்டையிட்டனர்.
யாஷின் மாமியார் வீட்டிலிருந்து அழைத்த அவனின் மாமனார் “நல்ல குடும்பம்னு நம்பி ஏமாந்துட்டோம், உங்க புள்ள வெளில வந்தாலும் உடனே எல்லாம் இங்க அனுப்ப வேண்டாம் எங்களுக்குக் கொஞ்சம் யோசிக்கணும்” என்று வைத்துவிட்டார்.
ஆன்சல் மற்றும் அன்சலுக்கு ஹிமாவை திரும்ப அழைத்து வரும் எண்ணமெல்லாம் இல்லை, போனவள் போகட்டும் அவளுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பது மட்டுமே, முன்பே முடிவான திருமணம் கூட இப்பொழுது அந்தரத்தில் நின்றது அவர்களுக்கு.
தேவகியின் நிலை மிகப் பரிதாபமாகப் போனது ரமீலா ஊருக்குச் சென்றுவிட்டார், சல்மா கடமையைச் செய்தார் வம்ஷி மகளைப் பற்றிய எண்ணத்தில் தவித்து நின்றாள், எப்படி சரி செய்ய என்று தெரியாமல் பைத்தியம் பிடித்தது அவளுக்கு.
இப்படி அனைத்தும் சிதைந்து போகும் என்று தேவகி எண்ணவில்லை அவர் எண்ணம் இப்பொழுதும் ஹிமா போனதால் மட்டுமே என்பதுதான் சிலரை திருத்த இயலாது.
ரமீலா ஊரில் இருக்கும் வீட்டில் தனியே தங்கி இருந்தார், சிறிது நாட்கள் நின்றபிறகு முன்ஜலும் மனைவியைத் தேடி சென்றுவிட்டார் அங்கிருக்கும் பிசினெஸ்ஸை அவர் பார்த்துக்கொண்டார்.
தொழிலில் நம்பிக்கை மிக முக்கியம் இவர்கள்மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்தது, தொழில் சரிய தொடங்கியது அவர்களின் பரம்பரை தொழில் வேறு, மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கிறோம் அவர்களை இங்கேயே தொழில் செய்யச் சொல்லுங்கள் என்றனர் ஆன்சல் மற்றும் அன்சலுக்கு பார்த்த பெண் வீட்டினர்.
“என்ன முடிவெடுக்க” என்று இவர்கள் யோசனை செய்யச் சகோதரர்கள் சம்மதம் சொல்லிவிட்டனர், யாஷ் எப்படியும் மொத்தமாக ஆறு வருடங்கள் உள்ளே இருக்க வேண்டும், தேவகி அவரின் மகள் வீடு சென்றார் நிம்மதி வேண்டி.
மேகமலையில் இருக்கும் தொழிலை மட்டும் பார்த்துக்கொண்டனர் பிரணவும் பிரனதும்.
அமைதியான ஒரு வாழ்வு ஹிமானிக்கு, எந்த விதமான நிர்பந்தங்களும் இல்லாமல் பிடித்ததை செய்து விரும்பியதை உண்டு ஊர்ச்சுற்றி உறவுகளோடு நேரம் செலவிட்டு கணவனுடன் காதல் செய்து அழகாகச் சென்றது நாட்கள்.
ஊட்டி ஹனிமூன் செல்லும் முன்னே மதியை தந்தை ஆக்கிவிட்டாள் நித்யா, அவர்களின் குழந்தையை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்தனர், அவளுடன் நேரம் செலவிடவும் கதைகள் பேசவும் நேரம் போதவில்லை பெண்களுக்கு.
ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நடத்தி வர்ணத்தின் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்து மருத்துவமனை சென்றுவிட்டாள், மதி நித்யாவிற்கு ஆண் மகவு.
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கடந்து இருந்தது, ஊருக்குள் இருக்கும் பண்ணையில் அனைத்தையும் சரி பார்த்துவிட்டுத் தாமதமாக இரவு வீட்டிற்கு வந்தவனை வாயிலிலே வழிமறித்து நிறுத்தினாள் மனைவி.
“சாரி டா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” என்றவன் கெஞ்ச மிஞ்சினாள் மனைவி.
“இனிமே இப்படி வரமாட்டேன் இன்னைக்கு மட்டும்” என்றவனை பார்த்தவள் “இனிமே நா மட்டுமில்ல வேற ஒருத்தங்களும் மன்னிக்கணும், அவங்க சரி சொன்னா நீங்க உள்ள வரலாம்” என்க.
“அது யாரு?” என்றவன் உள்ளே நுழைந்து அவளைத் தன் கைவளைவில் கொண்டு வந்தான், சில நொடிகள் அமைதியாக இருந்தவள்.
“உங்க பிள்ளைக்குக் கூட இந்த மனம் பிடிக்குது, உங்கள மாதிரியே…” என்றாள் மெதுவாக, அவள் சொன்னதின் பொருள் புரிய சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு.
“குட்டிமா” என்றவள் முகத்தை நிமிர்த்த “இந்த மாதிரி நேரத்துல சில வாசனைகள் பிடிக்காது சொன்னாங்க, வந்தவுடனே உங்கள இப்படி கட்டிப்பிடிக்க முடியாதோ இனிமே அப்படினு நெனச்சேன், இப்போ பிரச்சனையில்லை” என்றவளை மார்போடு சேர்த்தனைதான்.
பத்து வருடங்களுக்குப் பிறகு
சுற்றிலும் அனைவரும் அமைதியாக நிற்கப் புன்னகையோடு கணவனைப் பார்த்தே நின்றிருந்தாள் ஹிமானி, தன் முன்னே நின்றிருந்த ரன்வீரை ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தான் இமயன்.
“அப்போ முடிவுல உறுதியா இருக்க” என்க.
“ஆமா” என்றான் அவன்.
“நா முடியாது சொன்னா” என்றவனை பார்த்து ஒருநொடி தடுமாறியவன் தமக்கையை பார்க்க, அவள் விழிகள் கணவனில் மட்டுமே.
“தீதி” என்று பல்லைக் கடித்தவன் “மாமா ப்ளீஸ் என்மேல நம்பிக்கை இல்லையா, உங்க தங்கச்சிகிட்ட பேசறதுக்கு நம்ம பண்ணைல இருக்குற நாலு மாடுகிட்ட பேசலாம் அதவாது எனக்கு ஏதோ ஒரு பதில் தரும், அவகிட்ட என்னால போராட முடியாது நீங்களே பாத்து செஞ்சு வெச்சுடுங்க” என்றவனை பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வந்தது.
உஷாவின் மூன்று வயது குழந்தையுடன் நின்ற அவள் கணவன் “அவ்ளோ சீக்கிரம்லாம் ஒத்துக்காதீங்க மச்சான், என்ன எத்தனை மாசம் வெச்சு செஞ்சீங்க அவனையும் அப்படி ஓடவிடுங்க” என்க.
“ஏன்” என்று அவனைக் கொலைவெறியோடு பார்த்தான் ரன்வீர்.
இமயன் விழிகள் மனைவியைப் பார்க்க அவள் புன்னகையே சொன்னது அவளுக்குத் தன் முடிவு தெரிந்துவிட்டது என்று “ஜமுனா” என்றவன் அழைப்பில் அவன் முன் வந்து நின்றாள் அவன் தங்கை.
“வீட்ல வந்து முறைப்படி பேசச்சொல்லுங்க” என்க அடுத்த நொடியே பறந்துவிட்டான் ரன்வீர், இரண்டு வருடம் முன்பே தன் விருப்பத்தை இமயனிடன் கூறிவிட்டான் ரன்வீர்.
குடும்ப தொழில் சொத்து எதையும் நாடாமல் அவன் படிப்பில் கிடைத்த வேளையில் உயர்ந்த நிலையை எட்டினான், வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்திருக்கிறது திருமணம் முடிந்து அவளையும் உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறான்.
முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் ஹிமணியின் தந்தை மெல்ல மெல்ல இந்தக் குடும்பத்தின் பிணைப்பில் கட்டுண்டார், பேரப்பிள்ளைகளை பார்க்காமல் நாள் தொடங்குவதும் முடிவதும் இல்லை இருவருக்கும், ஜமுனாவை தங்கள் மருமகளாக எப்பொழுதோ ஏற்றுக்கொண்டனர்.
மகனுடன் வெளிநாடு சென்று தங்க விருப்பம் இல்லை, அவர்களுக்கு இங்கேதான் பிடித்திருக்கிறது வேண்டுமானால் கொஞ்சம் நாட்கள் வந்து நிற்கிறோம் என்றுவிட்டனர்.
மாணிக்கம் வர்ணத்திற்கு முழு சம்மதம், இத்தனை வருடங்களாகப் பார்த்துப் பழகிய ஒருவன் அதோடு இமயனின் முடிவில் அதீத நம்பிக்கை, உஷாவுக்கு அப்படி தேடி தேடி பிடித்தான் மாப்பிள்ளையை.
நல்ல குடும்பம் அவனும் பள்ளியில் ஆசிரியனாகப் பனி புரிகிறான், பக்கத்து ஊர் வேறு, நல்ல நிலையிலே வாழ்கிறாள்.
மதி நித்யாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இப்பொழுதும் அண்ணனின் பண்ணையில் அவளே மேனேஜர், உஷாவுக்கு ஆண் ஒன்று பெண்ணொன்று.
இமயன் ஹிமானிக்கு ஒரு பெண் குழந்தை, அடுத்த பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகள், கவியரசன் மல்லிக்கு நான்கு குழந்தைகள், நெறய புள்ள பெத்துக்கிட்டு நல்லா வளக்கணும் என்று சொல்லிச் சொல்லி நான்கு பிள்ளைகள் பெற்றுக்கொண்டான்.
ஐந்தாவது பிள்ளை மல்லியின் வயிற்றில் இருக்க கவியை அழைத்துச் சென்று குடும்ப கட்டுப்பாடு செய்ய வைத்துவிட்டான் இமயன்.
செல்வராணி தனிமையில் வாடினாலும் இன்னும் அந்தத் திமிர் கொஞ்சம் இருக்கவே செய்தது, பாண்டியன் ஊருக்குள் இருக்கும் மகனின் பண்ணையில் மேற்பார்வை பார்த்துக்கொள்கிறார், அவருடைய நாட்கள் நிறைவாக நகர்கிறது.
யாஷின் மனைவி பிரிந்து சென்றுவிட நலிந்த தொழிலை வைத்து ஏதோ சாப்பிட்டு வாழ்ந்துவருகிறான், விராலி வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை.
வம்ஷியின் நெஞ்சில் பெரும் பாரமாக மகள் வாழமாலே வீட்டோடு நின்றாள்.
உன் குழந்தை என் குழந்தை என்ற வேறுபாடு இல்லை அங்கு யாருக்குமே, வர்ணம் தங்கராணி சல்மாவுக்கு பேரப்பிள்ளைகள் பின்னே ஓடவே நேரம் சரியாக இருந்தது.
அவர்களுக்குப் பிடித்ததை செய்துவைத்து மாலை அவர்களைக் காத்திருப்பது அத்தனை ஆனந்தம், பிரணத் மாணிக்கத்திற்கு பேரப்பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லிக் காடு வயல் என்று அழைத்துக்கொண்டு சுற்றுவதே வேலை.
ஒருவரை ஒருவர் ஆதரித்து, உறவுகளை அரவணைத்துத் தன்னுடன் இருப்பவர்களையும் சேர்த்து கைபிடித்து உயர்த்தி அழகாக நிறைவாக ஒரு வாழ்வை கொண்டுசென்றான் இமயன்.
“காயம் பட்ட இதயத்தில் நாம் தூவும் சிறு அன்பின் விதைகூட பெரு விருட்சமாகி அவர்கள் வாழ்வில் வசந்தத்தை கொண்டுவரலாம்”
குழந்தைகளை உறங்கவைத்து மனைவியின் மடியில் தலை சாய்த்து படுத்தவனின் தலை கோதியவள் வீணையின் நாதமாக மெல்லிசையில் பாடினாள்