“உனக்குஒருமண்ணும்தெரியாது , இவளுங்கஎல்லாம்மந்திரம்போட்டுபுருஷனமுந்தானைலமுடிஞ்சுடுவாளுங்கஆரம்பத்துலயேதட்டிவைக்கணும்” என்ற செல்வராணியை பார்க்க பார்க்க எரிச்சல் மண்டியது “அத்தகூப்டாச்சுலவாபோலாம்” என்றான்மதி.
“அப்போ நா இன்னும் சரியா உன்கூட ஒட்டல போல…” என்றவன் தன்னை இறுக்கிக்கொண்டு நிற்கும் நிலையை பார்த்து “இல்லையே நீங்க என்கூட….” என்றவள் அவன் பார்வை மாற்றத்தில் முகத்தை மூடிக்கொள்ள.
அவன் சத்தமாக சிரித்துவிட்டான் , உடனே அவன் அதரங்களில் தன் கைவைத்து மூடியவள் பதட்டத்தோடு கதவை பார்க்க, மென்மையான பஞ்சுப்பொதி போல இருந்த அந்த உள்ளங்கையில் இதழ்பதித்தான்.
அவள் கையை சட்டென்று விலக்கிக்கொள்ள “நீங்க என் பொண்டாட்டி இப்போ அத மறந்துடீங்களா, என் பொண்டாட்டிய கொஞ்சுறேன் எவன் கேள்வி கேப்பான்” என்றவன் மீண்டும் அவள் தளிர் கரங்களை பற்றி இதழொற்றி கன்னத்தில் பதித்துக்கொண்டான் , அவனின் நிறைந்த புன்னகையை பார்த்திருந்தாள் ஹிமானி.
அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவொடு நான் எரிவதும் பகலொடு நான் உறைவதும்
நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலருவதும் நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ…
“ஏண்டி பூ எடுக்க போனவள இன்னும் காணும் , தேனி சந்தைக்கு போய்ட்டாலோ” என்று பாப்பாத்தி வெளியில் வர , அவனிடம் இருந்து விலகி அவசரமாக வெளியில் ஓடி வந்தவளயும் பின்னையே சிரித்துக்கொண்டே வந்த தம்பியையும் பார்த்த பாப்பாத்தி.
“அடியே உஷா கொஞ்சம் புடி டி கண்ண இருட்டிட்டு வருது” என்றாள்.
“காலைல கொஞ்சமா சாப்ட்ருக்கனும் , நெய்ல கேசரியா கேசரில நெய்யான்னே தெரியல மாப்ள அத குன்டான்ல போட்டு காலையிலே உள்ள தள்ளியாச்சு” என்று வந்த மதியை பார்த்து சிரித்துக்கொண்டே அக்காவாவை பார்த்து புருவம் உயர்த்தி சென்றான் இமயன்.
மதியை விழிகள் தெரிந்துவிடும் அளவு அவள் முறைக்க “பாரு கண்ணுமுழி எல்லாம் வெளில வந்துடுச்சு ரெண்டு பி.பி மாத்திரையை முழுங்கிட்டு போய் படுத்துக்கோ” என்றவன் அவள் அடுத்து பேசும்முன் இமயனுடன் வெளியில் சென்றுவிட்டான்.
ஊரும் உறவும் கூடி நிற்க நிச்சயம் சிறப்பாக நடந்தது , நித்யாவின் பக்கம் நின்று வர்ணமும் மாணிக்கமும் தட்டை கொடுக்க , மதியின் பக்கம் பாப்பாத்தியையும் கணவன் முத்துவேலயும் நிறுத்தினான் இமயன்.
“நா ஏன் மாப்ள பெரிய மனுஷங்க யாரையாவது நிறுத்துடா” என்றார் முத்துவேல்.
“அப்போ ஊர்ல நீரு பெரிய மனுஷன் இல்லையா , அப்படி சொல்லி ஊர ஏமாத்துறியா” என்றவனை பார்த்தவர் “ஏண்டா நா எதுக்குன்னு கேட்டது ஒரு குத்தமாடா , நானே நிக்குறேன் சாமி” என்று நின்றுகொண்டார்.
செல்வராணியை நிறுத்த சொல்லி வர்ணம் கேட்க அவன் பார்த்த பார்வையிலே கப்சிப் என்று கணவனுடன் முதல் ஆளாக சபையில் நின்றுவிட்டார்.
மதியின் தந்தையை அழைக்கவில்லை , தங்கராணி மட்டும் அவர்கள் வீட்டுக்கு சென்று விவரத்தை கூறினார்.
“உங்க மவன் நிச்சயம்தான் ஆனா உங்கள கூப்பிட முடியாது” என்று சங்கடமாக நிற்க.
“நீ ஏன்மா வருத்தப்படுற நா செஞ்ச செயல் அப்படி , இதுக்கெல்லாம் நா ஆசைப்படக்கூடாது , புள்ளைங்க நல்லா இருக்கட்டும்” என்று முடித்துக்கொண்டார்.
மல்லி மூன்று நாட்களாகவே மூலையில் முடங்கி இருந்தாள் , இப்படி திடீர் என்று ஒருத்திக்கு தாலிகட்டி அழைத்துவருவான் என்று எண்ணவில்லை , அதிலும் அவன் விரும்பிய பெண் என்று தெரிந்த பிறகு அதை மறந்துவிடுவது சிறந்தது என்று அவள் புத்திக்கு உரைத்தது.
ஒருபக்கம் சொந்த அண்ணன் மறுபக்கம் இந்த ஊரில் தன்னை ஆதரவாக அணைத்துக்கொண்ட ஒரு நட்பு , இருந்தும் தன்னால் அவர்களின் சந்தோஷத்தில் பங்குகொள்ள முடியாது , தூர நின்றாவது பார்க்க முடியுமா என்று அவள் யோசனை செய்ய , சரியாக தட்டு மாற்றும் நேரம் அடுத்த வீட்டின் தோட்டத்தில் மறைந்துநின்று தந்தையும் மகளும் நிச்சயத்தை பார்த்திருந்தனர்.
தானும் மனைவியும் நிற்க வேண்டிய இடத்தில் வர்ணமும் மாணிக்கமும் நிற்பதை பார்த்தார் செந்தில் , மல்லியின் பார்வை ஜோடியாக நின்றிருந்த இமயன் ஹிமாவின் மீது பதிந்தது , நல்லா அழகாக இருக்காங்க என்று எண்ணியவள் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
மனதில் வலி இருந்தாலும் அவனுக்கு அவன் மனம் விரும்பியவளுடன் திருமணம் முடிந்துவிட்டது , இனி தான் அப்படி நினைப்பது தவறு என்ற எண்ணம் மீண்டும் மனதில் பதிந்தது , தன் தாய் மணமானவர் என்று தெரியாமல் தந்தை மீது விருப்பம் கொண்டு அதனால் ஒரு குடும்பம் சிதைந்துவிட்டது , நிதர்சனம் கண்முன்னே இருக்க ஆசையை வளர்த்துக்கொள்வது முட்டாள்தனம் என்று நன்றாக புரிந்தது மல்லிக்கு.
ஹிமானியை பார்த்த கவியரசனின் நெஞ்சம் அடித்துக்கொண்டது “ஐயோ ஐயோ இம்புட்டு அழகா ஒரு புள்ள நம்ம தெருவிலே இருந்திருக்கு நம்ம கண்ணுல படாம போயிடுச்சே” என்று.
அவன் பார்வை தன்னவளின் மீது படிவதை பார்த்த இமயன் வேட்டியை மடித்துக்கட்டி சட்டையை முழங்கைக்கு உயர்த்த மெல்ல அங்கிருந்து நழுவி தோட்டத்து பக்கம் நடந்தான் கவியரசன் , எப்படி இது நடந்திருக்கும் என்ற யோசனையில் சென்றவன் பார்த்தது செந்திலும் மல்லியும் அங்கு நின்று பந்தலின் உள்ளே நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதை தான்.
இது தான் மாமன் மவளா என்று எண்ணியவன் மனது ஹிமானியிடம் இருந்து மல்லியிடம் தாவியது , நல்லாத்தான்யா இருக்கா என்று எண்ணியவன் “என்ன மாமா உங்க சொந்த மகன் நிச்சயம் உரிமையா உள்ள போகாம இங்க நிக்குறீங்க” என்றான் வார்த்தைகளில் தேன் தடவி.
செந்தில் ஊருக்கு வந்தது அதன் பிறகு நடந்த பிரச்சனைகள் அனைத்தும் ஊரில் அனைவருக்கும் தெரியும் , வேலைக்கு செல்லும் செந்திலை பல முறை பார்த்திருக்கிறான் , ஆனால் வீட்டில் மற்றவர்களை பார்த்ததில்லை.
“யாரு மாமா உங்க பொண்ணா” என்றான் செந்திலிடம்.
“தம்பி யாருன்னு சரியா புடிபடலயே” என்றவரை பார்த்தவன் “என்ன மாமா ஊர விட்டு போன எல்லாரையும் மறந்துடுவியா , செல்வராணி மவன் கவியரசன்” என்க.
“இமயனோட அண்ணனா” என்றார் அவர்.
“ஹும்ஹும் , அவனை சொன்னாதான் தெரியுமா” என்று உள்ளுக்குள் எரிச்சல் படர்ந்தாலும் அதை மறைத்து “ஆமா” என்றான்.
“ஆமா தம்பி பேரு மல்லி” என்ற செந்தில் “தம்பி குடும்பம்வரலையா?” என்க.
“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல மாமா பொண்ணு தேடிட்டு இருக்கேன்” என்றான் மல்லியை பார்த்துக்கொண்டே , அவள் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
உள்ளே சடங்குகள் முடிந்து புடவை மாற்றி நித்யா வர அவளுக்கு பூ வைக்க ஹிமாவை அழைத்தான் மதி “நீ வந்து வைடா” என்க.
கணவனை திரும்பி பார்த்தாள் அவள் “போ சாருக்கு ஊரெல்லாம் முறை பொண்ணுங்க தான் தங்கச்சி இல்ல” என்று பாப்பாத்தி கிண்டல் செய்ய , இமயன் “போ” என்றான்.
அவள் சென்று பூ வைத்து நித்யாவை அணைத்துக்கொண்டாள், மல்லிக்கு மனம் வருந்தியது நான் தங்கைதானே என்று.
“வாம்மா போலாம்” என்க விழிநீரை துடைத்துக்கொண்டு தந்தையுடன் நடந்தவளை பார்த்த கவியரசனை முதல் முறையாக ஒரு பெண்ணின் கண்ணீர் தடுமாற வைத்தது.
வந்ததில் இருந்து மருமகளை நோட்டம் விட்டது செல்வராணியின் விழிகள் , அனைவரிடமும் நன்றாகவே பேசினாள் ஓடி ஓடி அனைவரையும் கவனித்தாள் , தெரியாததை வர்ணம் பாப்பாத்தி சொல்ல கேட்டுக்கொண்டாள்.
மாமியார் முறுக்கோடு நின்று அவளை பார்த்திருக்க “இதுதான் எங்க அம்மா” என்று அவளை அழைத்துச்சென்று செல்வராணியின் முன்னில் நிறுத்தினாள் பாப்பாத்தி , அதுவரை ஒன்றும் சொல்லாதவன் அடுத்தநொடியே அவளை அழைத்து சென்று விட்டான் , தாயின் அருகில் கூட அவளை விடவில்லை அனைத்தும் முடிந்து பந்தி நடந்துகொண்டிருக்க முத்துவேல் மாணிக்கத்திடம் பேச்சுக்கொடுத்தான்.
“மாமா கல்யாணம் அப்படி நடந்துடுச்சு , அதுக்காக அவ்ளோதான்னு விட முடியாது நம்ம செல்லியம்மன் கோவில்ல பொங்கல் வெச்சு மாலை மாத்ர சடங்கை செஞ்சிடலாம் , நாங்க எல்லாரும் முறை செய்யா வேண்டாமா , கல்யாண சாப்பாடு வேண்டாமா” என்றான்.
அவர்களுக்கும் அந்த யோசனை இருந்தது “அவன் என்ன யோசிக்குறான்னே தெரியலையே மாப்ள பேசி பாக்குறேன்” என்றார் அவர்.
வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தனர் , நித்யாவும் மதியும் சாப்பிட அமர அவர்களை கலாட்டா செய்து முடித்து அனைவரும் அமர்ந்துவிட்டனர் நேரம் அதிகம் ஆகி இருந்தது , இமயனின் அருகில் அமர்ந்தவள் இலையில் இருந்த உணவுகளை பார்த்துக்கொண்டே “எவ்ளோ இருக்கு” என்று சாப்பிட அவனுக்கு உணவு இறங்கவில்லை.
தாலி மட்டும் கட்டியாகிவிட்டது , ஒரு திருமணத்தின் எந்த சடங்குகளும் இல்லை ஒரு வாய் கல்யாண சாப்பாடு கூட கொடுக்க இயலவில்லை , இப்படி ஒரு திருமணத்தையா அவள் கனவு கண்டிருப்பாள் என்ற எண்ணம் சூழ கைகள் வாய்க்கு உணவை வழங்க மறுத்தது.
“சாப்பிடலையா?” என்றவளை பார்த்தவன் “இல்ல தல வலிக்குது சாப்பிட முடியல நீ சாப்பிடு” என்று கூறி பேருக்கு இரண்டு வாய் எடுத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டான்.
அவனையே அவள் பார்த்திருக்க “சாப்பிடுங்க பொண்டாட்டி நா அப்பறம் உங்க கையால சாப்பிடுறேன்” என்க அவளும் கொஞ்சமாக உண்டு எழுந்துவிட்டாள்.
“அவன் சம்பாத்தியம் எல்லாததையும் தீத்துடீங்களா , பொண்டாட்டிய மூலி மாதிரி நிறுத்தியிருக்கான் , ஏன் ஒரு நெக்லஸ் வாங்கி போடக்கூட வசதி இல்லையா , நன்றி வேணும்டி கொஞ்சமாவது… உன் மவளுக்கு வாங்கி வெச்சதுல ஒன்னு குடுத்தா கொறஞ்சு போய்டுவியோ” என்று வர்ணத்திடம் செல்வராணி எகிற.
அவர் அமைதியாக விலகி சென்றுவிட்டார் , இப்படி ஒரு கேள்வி வரும் என்று முன்பே எதிர்பார்த்தார்கள் அனைவரும் , செல்வராணியை அழைப்பதில் யாருக்குமே விருப்பம் இல்லை என்றாலும் அப்படியும் விட முடியாதே.
தோப்பில் காய் விற்ற பணம் மாணிக்கத்தின் பங்கு அவரிடம் இருந்தது அதை கொடுத்தால் வாங்க மறுத்துவிட்டான்.
“என் மனைவி போடுற முதல் நகை என் சம்பாத்தியத்துல வாங்கினதா இருக்கணும் சித்தப்பா” என்ற பிறகு வேறு என்ன செய்ய அவன் உணர்வுக்கு மதிப்பளித்து விட்டுவிட்டார்கள் , இதெல்லாம் செல்வராணிக்கு சொன்னாலும் புரியாது என்பதால் அவரை அமைதியாக கடந்துவிட்டனர்.
நிச்சய வீட்டின் ஆரவாரங்கள் அடங்கியது இரவு காலில் நல்ல வீக்கம் கண்டிருந்தது ஹிமானிக்கு , அன்று படியில் இருந்து விழுந்த பிறகு அதிக நேரம் நின்றால் வீக்கம் வைக்கிறது , சில மாதங்கள் அப்படி இருக்கும் சரியாக போய்விடும் என்று கூறியிருந்தார் மருத்துவர்.
படியில் அவளை அமரவைத்து கீழே அமர்ந்து அவள் பாதங்களை தன் மடியில் வைத்து எண்ணெய் தேய்த்து மெதுவாக பிடித்துவிட்டான் இமயன்.
“வேண்டாம்” என்று மறுத்தால் விடுவானா…. மனம் லேசான உணர்வு ஹிமானிக்கு , நேசிப்பவரின் வலியை சொல்லாமல் புரிந்துகொள்ளும் துணை கிடைப்பது பெரிய வரம் அல்லவா , கணவனை ரசித்திருந்தவளின் சிந்தனையை கலைத்தது “படிக்க போறியா? என்றவனின் கேள்வி.
“ஹா..” என்றவள் அவனை விழிவிரித்து பார்க்க “உஷாவுக்கு இன்னும் ஒருவாரத்துல பரிச்சை முடிஞ்சு அவ காலேஜ் போவா , உனக்கு என்ன படிக்க ஆசை சொல்லு மதி கிட்ட சொல்லி விசாரிக்கலாம் , நீயும் உஷாவும் ஒன்னாவே போயிட்டு வரலாம் என்றான்.
திருமணம் முடிந்து படிப்பா , அதுவும் தனக்கு மறுக்கப்பட்ட கல்வி இப்பொழுதா என்று எண்ணியவள் “நா எப்படி? அதும் இப்போ…..” என்க.
அவளை நெருங்கி அமர்ந்தவன் “ஏன் இப்போ என்னாச்சு, படிக்க வயசு இருக்கா என்ன , எம்பது வயசு பாட்டி படிக்கிறாங்க அப்பறம் நமக்கு என்ன , சொல்லு என்ன படிக்க ஆசை” என்க.
அவளால் நம்பவே முடியவில்லை இப்படி ஒரு விஷயத்தை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை “சொல்லுங்க ஹிமானி” என்றான் அவள் தாடையை பற்றி.
“நியூட்ரிஷன் அண்ட் டயட்” என்றாள் அவள்.
“ஹா…. அப்படினா என்ன படிப்பு?” என்றவனை பார்த்து சிரித்தவள் “நல்ல சத்துள்ள உணவு , எந்த உணவுல என்ன சத்து இருக்கு அப்புறம் எதை எதை எப்படி சாப்பிடணும்னு சொல்ற படிப்பு”.
“இதுக்கெல்லாமா படிப்பாங்க” என்றவன் “அத படிச்சுக்கோ ஆனா நீ அப்படி சாப்பிடாத , பிடிச்ச எல்லாத்தையும் சாப்பிடு என்ன வேணும் சொல்லு நா கொண்டு வரேன்” என்றவனை அவ்வளவு பிடித்தது அவளுக்கு.
இறுக்கமாக அனைத்துக்கொண்டவளை “அச்சோ கை எல்லாம் எண்ணெய் என்னால பிடிக்க முடியலையே” என்க.