“நான் தப்பு பண்ணிட்டேன் தான். தெரிஞ்சு ஒன்னும் பண்ணலை. என் மேல நம்பிக்கை. என்னை மீறி என்னாகிடும்? அதுவும் என்னோட கொலீக். அவரோட நான் வந்துட்டிருக்கேன்னு என் ரூம் மேட்க்கும் மெசேஜ் பண்ணிருந்தேன்…”
“நிலா…”
“ஷ்ராவணி ஸார். ப்ளீஸ் அந்த பேர் சொல்லவேண்டாம். எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கீங்க. அந்த மரியாதையும், நன்றிக்கடனும் எப்பவும் இருக்கு. அதுக்காக எல்லாமே பொறுத்துட்டு போகனும்னு இல்லை…”
“ப்ச், அப்பறம் ஏன் கடத்தல்க்காரனோட போற மாதிரி அவ்வளவு நெவெர்ஸா உன் ஹேண்ட்பேக்கை புடிச்சுட்டு கார்ல உட்கார்ந்திருந்தியாம்? அதை பார்த்துட்டு தான் என்னவோன்னு நினைச்சு வந்துட்டேன்…”
“ஆமா இருந்தேன் தான். என்னால மறுக்க முடியலை. அதோட இப்படி நான் வரது முதல் தடவை. அதான் ரொம்ப ஒருமாதிரி இருந்துச்சு…” என்றவளிடம் ஒன்றும் பேசாமல் பார்த்தான்.
“ஓகே உங்க ப்ரெண்ட் வீடு அங்க தானே இருக்கு. நான் அவங்கட்ட கேட்டு வாங்கிக்கறேன்…” என்றாள் அடுத்த நொடியே.
“திட்டினா கோவம் வருது. இப்பவும் யோசிக்காம பேசற நீ. என் ப்ரெண்ட் தான். அதுக்குன்னு நீ போய் கேட்பியா? என்ன பொண்ணு நீ?…”
“ஸார் ப்ளீஸ், ரொம்ப ஹர்ட் பன்றீங்க…” என்று அவனின் பேச்சை நிறுத்தினாள் ஷ்ராவணி.
அவனின் அனுமான பேச்சுக்கள் எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை அவளுக்கு.
‘பேசாமல் கோவிலில் போட்டுவிட்டால் என்ன? என தோன்றினாலும் அவளின் தன்மானம் இடமளிக்கவில்லை.
வெறுமனே தன்னை ஒன்றுத்துக்கும் லாயக்கில்லை, பொறுப்பில்லை, அறிவில்லை என பேசுபவனுக்கு தான் பணத்தை உண்டியலில் போட்டேனா இல்லையா என தெரியவா போகிறது?
எல்லா பெயர்களுடன் ஏதேனும் ஒரு சூழலில் இதையும் சொல்லி காண்பித்துவிட்டால்?
அதற்கு துளியளவும் வாய்ப்பளிக்க கூடாதென்று இன்னுமின்னும் வீறுகொண்டது அவளின் மனது.
யோசித்துக்கொண்டே அவள் நின்ற விதம் வம்சியை அமைதிப்படுத்த பெருமூச்சுடன் பார்த்தான்.
“வா உன்னை ட்ராப் பன்றேன்…” என்று சொல்லி பைக்கை எடுத்து அவள் முன் நிறுத்த,
“தேவையில்லை, நான் பஸ்ல போய்ப்பேன்…” என்று நகர்ந்தாள் ஷ்ராவணி.
சுர்ரென்று அத்தனை கோபம் பொங்க உடனே அவன் தன்னிச்சையாக அவளின் கையை பிடித்த நொடி ஷ்ராவணியின் கையில் இருந்த சிறு ஆயுதம் அவனின் கையை பதம் பார்த்திருந்தது.
“ஊஃப் ஆ…” என்ற அலறலில் தான் ஷ்ராவணிக்கு தான் செய்த செயலில் வீரியம் புரியவர பயந்து போனாள்.
சற்றுமுன் இருந்த தைரியமெல்லாம் எங்கோ சென்று மறைந்திருந்தது. பதறியபடி அவள் இரு கைகளையும் உதற சிறு சத்தத்துடன் அது கீழே விழுந்தது.
“என்ன வச்சிருந்த கையில?…” என்று தனது கைக்குட்டை கொண்டு கையில் கட்டு போட முயன்றான் வம்சி.
“நான் நான் பன்றேன்…” என நடுங்கியபடி கைக்குட்டையை வாங்கினாள்.
ஆள் அரவமற்ற அந்த சாலையில் இருளில் இருவரும் இருக்க அவர்களை ஓரிரு வாகனம் மட்டுமே கடந்து சென்றிருந்தது.
“ஹ்ம்ம், போடு…” என கையை நீட்டினான்.
பேக்கில் இருந்த சிறிய வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொண்டு அந்த கைக்குட்டையை நனைத்தவள் காயம் பட்ட இடத்தை கட்டு போட,
“நான் நினைச்ச மாதிரி இல்லை. கொஞ்சம் தைரியம் தான் உனக்கு…” என்றான் மெச்சுதலாய்.
“வேணும்னு பண்ணலை…” குரல் கலங்கி போய் வந்தது அவளிடமிருந்து.
“தெரியும், லீவ் இட்…” என்றவன்,
“கைலயே வச்சிருந்தியா அந்த கத்தியை…” என கேட்கவும் அதனை எடுக்கவும் யோசித்தவளாக தலையசைத்து நிற்க,
“குட். பட் நைஃப் ரொம்ப ஷார்ப்…” என்றான் மெல்லிய சிரிப்புடன்.
“வலிக்குதா?…”
“கத்தியால கிழிச்சா வலிக்காம?…” என கேட்டவன்,
“சரி கிளம்பு. இந்த ஏரியா சேஃப் இல்லை…” என்றான்.
சற்று முன் அவள்மீது கொண்ட கொந்தளிப்புகள் எல்லாம் கொதிநிலையிலிருந்து அடங்கி அதன் ஆர்ப்பாட்டத்தை இழந்திருந்தது.
நொடியும் யோசிக்காத அவளின் இந்த எதிர்வினை ஒருவகையில் மனதிற்கு சந்தோஷத்தை தான் தந்தது வம்சிக்கு.
“தேங்க்ஸ்…” என்றாள்.
“நான் வரலைனாலும் ஒன்னும் பிரச்சனை ஆகியிருக்காது. ஆனா சூழ்நிலை அப்படி இல்லை. எதையும், யாரையும் நம்ப முடியாது. அதனால எப்பவும் கேர்ஃபுல்லா இருக்கனும் நீ….”
“ஹ்ம்ம்…”
“ஒரு டென் டேய்ஸ் முன்னாடி உங்கப்பா கால் பண்ணியிருந்தார்…”
“எனக்கும் சொன்னாங்க…” முணுமுணுப்பாய் அவள் குரல்.
“ஓகே, புரிஞ்சுக்கோ. உன் குடும்பம் இருக்கு தானே? நீ பத்தரமா இருந்தா தான் அவங்களும் இருப்பாங்க…” என்றான் தன்மையுடன்.
“சரிங்க ஸார்…”
“சரி வா பஸ் ஸ்டாப் வரை கூட்டிட்டு போறேன்…” என சொல்ல மறுப்பாய் தலையசைத்தாள்.
“ப்ச், வேகமா நடம்மா. ஒன்னொன்னும் சொல்லனுமா? அதான் என்னை இப்படி பண்ணிட்டியே? அப்பறம் என்ன?…”
அவளின் தயக்கத்திலும், பதட்டத்திலும் மீண்டும் கோபம் உருவெடுக்க அவனை திரும்பி பார்க்காமல் விறுவிறுவென்று நடந்துவிட்டாள்.
பஸ் வரும் இடத்தில் வந்து நின்றவள் வம்சி அங்கே நிற்பதை உணர்ந்தும் திரும்பி பார்க்கவில்லை.
இதென்ன இத்தனை கோபம் இவனுக்கு என அவனின் கோபத்தின் மேல் கோபமாக வந்தது.
பஸ் வந்ததும் நம்பர் பார்த்து ஏறி அமர்ந்தவள் ஜன்னலோரம் வர வம்சி ஹெல்மெட்டை மாட்டினான்.
தன்னை பார்க்கிறான் என்பது மட்டுமே அவளுக்கு புரிந்தது. திரும்பி பார்க்க மனது உந்த முயன்று பிடிவாதமாய் திரும்பவில்லை.
பஸ் கிளம்பவும் தான் வம்சி தானும் பைக்கை ஸ்டார்ட் செய்தான். அவன் ஹெல்மென்ட் கழற்றிய பொழுதில் காதில் இருந்த ப்ளூடூத் கழன்று விழுந்திருக்க பைக்கை நிறுத்திவிட்டு தலையில் கை வைத்துவிட்டான்.
“இந்த பொண்ணால…” என பல்லை கடித்தவன் ஆனந்திற்கு அழைத்து விவரத்தை சொல்வதற்கு தனது மொபைலை எடுக்க ஏகப்பட்ட அழைப்புகள்.
“போச்சுடா…” என அவனுக்கு அழைத்து வந்துகொண்டிருப்பதாக சொல்ல,
“என்ன வம்சி நீ? இதுக்கு மேல நீ வந்து. இங்க ஆரம்பிச்சுட்டாங்க….” என்று கடிந்துகொண்டான் ஆனந்த்.
“அப்படியா? ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க முடிச்சிட்டு வாங்க. நான் ரூம் போறேன்…” என்று சொல்ல,
“டேய் டேய் டேய். இருடா…”
“வரேன் வை…” என்று அழைப்பை துண்டித்தவன் போனை அணைக்க போக ஷ்ராவணியிடமிருந்து மெசேஜ்.
“உங்க அக்கவுன்ட் நம்பரை அனுப்பி வைங்க, ப்ளீஸ்…” என்று.
“நோ…” என பதில் அனுப்பிவைத்தான் உடனே.
பார்த்ததும் அத்தனை கடுப்பு. உடனே அவளின் என்னை ம்யூட்டில் போட்டுவிட்டான் வம்சி.
அதன் பின்னர் இரு தினங்களுக்கு ஒருமுறை ஷ்ராவணி அவனுக்கு மெசேஜ் அனுப்புவதும் அக்கவுன்ட் நம்பரை கேட்பதுமாக இருக்க எதுவும் பார்க்கப்படவில்லை அவனிடத்தில்.
அவனுக்கு அழைப்பு விடுத்தாலும் அவன் ஏற்பதுமில்லை. ஷ்ராவணியை அவனின் நினைவுகள் வருத்த, வம்சி ஷ்ராவணியை முயன்று மறந்தான்.
அவ்வப்போது ஏதேனும் ஒன்று அவளை ஞாபகப்படுத்திவிடும். அதில் மெல்லிய அதிர்வுடன் மனதை அடக்கினான் வம்சி சைத்ரயேஷ்.
இவன் என்னை எப்படி குறைவாக நினைக்கலாம், இவன் மனதில் அத்தனை கீழாகவா தான் இருக்கிறேன் என்ற ஆதங்கம் எங்கணம் திசை மாறியதோ?
ஷ்ராவணிக்கு ‘இல்லை இவன் மனதில் அப்படி ஒரு இடத்தில் தான் இருக்க கூடாது’ என்னும் நினைவு வலுத்தது.
அந்த நினைவுகளில் எல்லையை மறுவாரமே அவனே ஷ்ராவணியை நேரில் சந்தித்து அவளுக்கு உணர்த்தி, உடைத்து சென்றான் வம்சி சைத்ரயேஷ்.