மழை இன்னும் விடவில்லை. இருவரும் கடையின் வாசலருகே வரவும் அவளிடம் ஒரு கவரை நீட்டினான் வம்சி.
“இந்த ரெயின் கோட்டை போட்டுக்கோ…” என தர அதை வாங்கிக்கொண்டாள்.
“ஏறு…” என்று பைக்கில் வம்சி அமரவும் ஷ்ராவணி ஒருபக்கமாய் அமர,
“கீழே இறங்கு…” என அதட்டினான்.
குளிரில் வேறு உடல் நடுங்க அவன் கொடுத்த ரெயின்கொர்ட் அவசர உபயோகத்திற்கு பயன்படுத்துவதை போல இருக்க அதுவேறு மழையின் சில்லிட்டை உடலுக்கு கடத்தியது.
“ரெண்டுபக்கமும் கால் போட்டு உட்கார் நிலா. இல்லைன்னா மழைக்கு வழுக்கும்…” என்று சொல்ல நடுங்கிக்கொண்டே நின்றாள் இன்னும்.
“இது யூஸ் அன் த்ரோ. அப்டித்தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணு…” என்றான் அவள் நடுங்குவதை பார்த்து.
“டைமாகுது, ஏறுன்றேன்ல…” என்று இப்போது பல்லை கடித்துக்கொண்டு சொல்ல அவன் சொல்லியதை போல அமர்ந்துகொண்டவள் தனது ஹேண்ட்பேக்கை நெஞ்சோடு இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள்.
பைக்கை வளைத்து அடுத்த வீதியில் செலுத்தவும் தான் ஷ்ராவணிக்கு ஞாபகம் வந்தது.
“இங்க ட்ரேயினேஜ் ஓபனாகியிருந்துச்சு நான் ஈவ்னிங் வரப்போ…”
“ஹ்ம்ம்…” என்றவன் வேறு வழியில் திரும்பினான்.
அந்த பகுதிக்கு வந்திருக்காதவள் சுற்றிலும் பார்த்தபடி இருக்க பைக் வேகமாகவும் பிடித்திருந்த பேக்கைவிட்டு அவனின் தோளை பற்றிக்கொண்டாள்.
“விழுந்திடாத. கீழே விழுந்தா கூட இந்த மழைக்கு எனக்கு உன் சத்தமே கேட்காது…”
வம்சி பல்லிடுக்கில் வார்த்தைகளை நிறுத்தி பேசுவதை கேட்க ஷ்ராவணிக்கு அவனோடு பயணப்படவே பிடிக்கவில்லை.
தன்னை மெயின் ரோட்டில் இறக்கிவிடும்படி சொல்லிவிட்டால் என்ன என்று தோன்ற பஸ் ஸ்டாப்பை பார்த்ததும் அவனின் தோளை தட்டினாள்.
அதனை கவனிக்காதவாறு அதனை வேகத்துடன் கடக்க மழைநீர் பைக்கின் சக்கரத்தின் பக்கவாட்டின் இருபுறமும் விரிந்து சிதறியது.
ஹாஸ்டல் வரும் வரை இருவரிடத்திலும் மௌனம். மழைநீர் ஆறாய் பெருகி ஓடிக்கொண்டிருக்க போக்குவரத்து நெரிசலில் இருந்து லாவகமாக தப்பி ஹாஸ்டல் வந்து சேர்ந்திருந்தனர்.
பைக்கை விட்டு இறங்கும் முன் குளிரில் கை விரலெல்லாம் ஈரத்தில் ஊறி விரைத்திருந்தது ஷ்ராவணிக்கு.
“தேங்க்ஸ் அன்ட் ஸாரி…” என்றாள் பைக்கில் இருந்து இறங்கியதும்.
ஹெல்மெட்டை கழற்றியவன் அவளை அழுத்தமாய் பார்க்க அவனின் கோபத்தில் அவள் பேசும் முன்,
“மழை பெய்யுதுன்னு தெரியும் தானே? ஏன் ட்யூஷன் வந்த?…” என்றான் கடுமையாக.
“அந்த பொண்ணுக்கு எக்ஸாம் இருக்கு. அதான் போனேன். இல்லைன்னா லீவ் போட்டிருப்பேன். போகும் போது மழை விட்டுடுச்சு. இனி வராதுன்னு நினைச்சேன்….”
“ட்யூஷன் முடிஞ்சு கிளம்பும் போது ரெண்டாவது வீதிலையே மழை பிடிச்சிருச்சு. அதான் அடுத்த தெரு வழியா வரலாம்ன்னா அதுக்குள்ளே கரண்ட் போய் மழையும் பெருசாக டார்ச்க்காக மொபைல் எடுத்து அது கீழே விழுந்துருச்சு…”
“பக்கத்துல வழி வேற எதுவும் தெரியலை அந்த இருட்டுல. அந்த இட்லி கடையில மட்டும் லைட் தெரிஞ்சது. அங்க போய் அவங்கட்ட கேட்டு கால் பண்ணேன். அந்த வீதில இருந்து அடுத்து எப்டி போகன்ணும் தெரியலை…”
“அப்போ உன் ட்யூஷன்க்கு போறவங்க வீட்டு நம்பர்க்கு கூப்பிட்டிருக்க வேண்டியது தானே?…”
“அதுவும் மொபைல்ல தான் இருந்துச்சு. மொபைல் ஆன் ஆகவே இல்லை…” என்றவள்,
“வாவ், உனக்கு அவ்வளவு அறிவு இருக்கா?…” என அத்தனை நக்கல் அவனின் குரலில்.
“நீங்க வந்திருக்கவே வேண்டாமே? நான் தான் கூப்பிடலைன்னு சொன்னேன்ல…” ஷ்ராவணியும் கோபத்துடன் கேட்க,
“ஏன் சொல்லமாட்ட? வர கூடாதுன்னு தான் நினைச்சேன். டேமிட், அந்த நிமிஷம் நீ என்ன பண்ணுவியோன்னு வேற எதுவும் தோணலை…” என ஹெல்மெட்டை ஒரு அடி வைக்க திடுக்கிட்டு பின்னே நகர்ந்தாள்.
மெல்லிய மழைத்துளிகள் சாரலாக தூறிக்கொண்டிருந்தது அவர்கள் மேல். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க அவனும் செல்லவில்லை. அவளும் நகரவில்லை.
“இதே என் நம்பர்ல இருந்து கூப்பிட்டா எடுத்திருக்கமாட்டீங்க தானே? அப்ப மட்டும் உங்களுக்கு எதுக்கு கூப்பிடறேனோன்னு தோணலையா?…” மனதை அரித்த கேள்வியை கேட்டு அவனை குற்றம் சாட்ட,
“ஏன் அட்டன் பண்ணனும்? நீ அன்வான்ட்டாடா பேசுவ. நான் கேட்கனுமா? கடையை எப்ப ஸார் திறப்பீங்கன்னு அக்கவுண்ட் நம்பர் கேட்டு என் உயிரை எடுப்ப. நான் அதை கேட்டுட்டு தலையாட்டனுமா?…”
“உங்களை ஒன்னும் வர சொல்லலை. திரும்ப என்னவோ நீங்க வந்தே ஆகனும்ன்னு நான் சொன்ன மாதிரி பேசறீங்களே? நீங்களா கிளம்பி வந்தா அதுக்கு நா…”
“ஜஸ்ட் ஷட்அப் நிலா, சும்மா எனக்கு வேலையே இல்லாத மாதிரி நீ என்னை ட்ரீட் பன்ற? இதுதான் உன் லிமிட். என்னவோ உங்கப்பாட்ட சொல்லிட்டோமேன்னு போனா போகுதுன்னு உனக்கு ஹெல்ப் பண்ணினா….” என சொல்ல அவளுக்கு சுத்தமாய் புரியவே இல்லை.
“எனக்கு நீ யாருமில்லை. ஆனாலும் என்னவோ எனக்கு பெரிய ரெஸ்பான்சிபிலிட்டியை தருது உன்னோட போன் காலும், உன் அப்பா பேச்சும். ஐ ஹேட் இட்…” என்றவன்,
“இப்பவும் நான் என்னோட வேலையெல்லாம் விட்டுட்டு வந்து நிக்கறேன் பாரு…” என கோபமாக சொல்லியவன் வாட்சை பார்க்க இந்த நேரம் நிச்சயம் பஸ் சென்றிருக்கும்.
“ஷிட்…” என்று மீண்டும் ஒரு கோபம் அவனுக்குள்.
உண்மை தான். தன்னை வா என்று அழைக்காமல் அவளின் குரலிலேயே என்னவோ என்று பதறி வந்தும் அதனை மனதளவில் ஏற்கமுடியாமல் அவளையே சாடுவது வம்சிக்கு தன் மீதே எரிச்சலாகியது.
இவள் அழைக்காமல் இருந்திருந்தால் இது எனக்கு தேவையே இல்லையே என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் தலைதூக்கியது.
“ஒரு நிமிஷம் கேளுங்க, நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியுதா? நான் ஒன்னும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு கூப்பிடலைன்னு சொன்னேன். நீங்களா தான் வந்தீங்க, அதட்டி கூப்பிட்டீங்க. இப்ப என்னை சொல்றீங்க?…” என்றவள்,
“அன்ட், இதுவரைக்கும் செஞ்சதுக்கெல்லாம் நன்றி. இனி மறந்தும் கூட பெரிய பிரச்சனையாவே இருந்தாலும் நான் உங்களை கூப்பிடமாட்டேன். போதுமா? எவ்ரித்திங் க்ளியர்…” என்று சொல்ல அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“டன், ரொம்ப ரொம்ப கிளியர். இதை நீ ஃபாலோ பண்ணினா சந்தோஷம்…” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய அதற்குள் ஷ்ராவணி கேட்டை திறந்து ஹாஸ்டலுக்குள் நுழையும் முன்,
“இன்னொரு விஷயம் என் பேர் ஷ்ராவணி. நிலா இல்லை. ஆனா இனி அப்படி கூப்பிட கூட உங்களுக்கு நான் வாய்ப்பு தரமாட்டேன்…” என சொல்ல,
“உன்னை…” என அவன் பேசும் முன் உள்ளே சென்றுவிட்டாள்.
“எந்த போகரோ, மாட்ல சூடு…” என உறுமினான். (திமிர் பிடிச்சவ. பேச்சை பாரு)
அந்த கோபத்தில் பைக்கை உதைத்து கிளப்பியவன் குடியிருப்பிற்கு வர ஆனந்த் அங்கே தான் இருந்தான்.
“எங்க மேன் போன நீ?…” என கேட்க,
“அர்ஜன்ட்ன்னு சொல்லிட்டு தானே போனேன்?…” என சொல்லியபடி உள்ளே நுழைந்தவன் உடை மாற்ற செல்ல,
“பஸ் போயிருக்கும் வம்சி…” என்றான் நேரத்தை பார்த்து.
“நெக்ஸ்ட் எந்த பஸ்ன்னு பாரு…” என சொல்லி உடை மாற்றிவிட்டு வந்தவன் தனது மொபைலில் தேடினான்.
“மழை, கண்டிப்பா இந்த நேரம் பஸ் கிடைக்கிறது கஷ்டம் வம்சி…”
“ஓகே, டாக்சி புக் பண்ணிக்கறேன். ஃபோர் ஹவர்ஸ் தானே? ரிட்டர்ன் அதுலயே வந்திருவேன்…” என்று உடனே டாக்சிக்கு அழைக்க,
“நீ என் காரை எடுத்துட்டு போயேன்…”
“ப்ச், வேண்டாம்…” என டாக்சிக்கு தான் அழைத்தான்.
ஒரு வண்டி கிடைக்கவும் வர சொல்லிவிட்டு தயாராகி அமர்ந்தவனின் மனநிலை அத்தனை கொதிப்பாய் இருந்தது.
எதற்கென்றே தெரியாத பெரும் கோபம் காரணமின்றி பொங்கி ததும்பியது வம்சிக்கு.
“நேனு எதைநா செப்தே இ அம்மாயி தட்டுகொலேக்கா பொதுந்தே. நா கோபம் அந்த பாத படுதுந்தா?…” என வம்சி பொறுக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். (நான் சொன்னா இவளுக்கு தாங்காதோ? கோபமா பேசினா பொறுக்கமுடியாதா?)
இத்தனை கோபமும், ஆற்றாமையும் புதிதாய் இருந்தது. தான் பேசவும் வேண்டாம் என்பதை போல தூக்கி எரிந்து பேசிவிட்டவளை நினைத்து நினைத்து ஆத்திரம் கொண்டான்.
“ஆர் யூ ஆல்ரைட் வம்சி?…” ஆனந்த் கேட்க,
“ஹ்ம்ம், ஆல்ரைட் ஆல்ரைட்…” என தலையை அசைத்துக்கொண்டிருந்தவனின் விரல்கள் மீசையை இறுக்கமாய் முறுக்கிவிட்டது.
எப்போதும் அந்த மீசை ஒரு கம்பீரம் தொட்டு நிற்கும். அதில் கர்வமாய் திரிபவன் இன்று அதனை கன்னாபின்னாவென்று முறுக்க ஆனந்த் திகைப்பாய் பார்த்துகொண்டிருந்தான்.