“ஏமாயிந்தி?…” என அவளின் அருகே வந்து சொடுக்கிட்டு பார்த்தான்.
அதிகாலை ஒருபொழுதில் வந்து அவளை பார்த்துவிட்டு தான் சென்றார் செவிலி பெண்.
இப்போது இன்னும் விழிக்காமல் இருக்க தலையில் கட்டை மீறி ரத்தம் கசிந்தது அவளுக்கு.
“ஷிட்…” என்றவன் மருத்துவரை அழைக்க உடனே வந்தனர்.
“பிளட் வருதே? பாருங்க…” என்றான் பதட்டமாக.
மருத்துவர் வந்து பார்த்துவிட்டு கட்டை பிரித்து பரிசோதித்து மீண்டும் புதிதாய் கட்டை போட்டுவிட மெல்ல விழிகள் அலைபாய்ந்தது அவளுக்கு.
“நிலா, இங்க பாருங்க. நிலா…” என்று அவர் கன்னம் தட்டவும் விழி திறந்தாள் பெண்.
“தேங்க் காட்…” வம்சி நெஞ்சில் கை வைத்து அண்ணார்ந்து பார்த்துவிட்டு மீண்டும் அவளிடம் திரும்ப சுற்றியிருந்தவர்களை பார்த்தவள் மலங்க மலங்க விழித்தாள்.
“நா…” என்று பேச வாய் திறந்தவளுக்கு உடலும், இதழ்களும் ஒத்துழைக்கவில்லை.
“ரிலாக்ஸ் நிலா…” என்ற மருத்துவரிடம் மறுப்பாய் அவள் தலையசைக்க வம்சி மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு ஒரு கையால் மீசையை நீவியபடி அவளை பார்த்துக்கொண்டிருக்க அதில் மிரண்டு பார்த்தாள்.
“மிஸ்டர் வம்சி சைத்ரயேஷ் உங்க வொய்ப் கொஞ்சம் மிரண்டிருக்காங்க நைட் ஆக்ஸிடன்ட்ல. ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும். இந்த ட்ரிப்ஸ் முடியவும் நீங்க அழைச்சிட்டு கிளம்பலாம்…” என்று சொல்லியவர் அந்த பெண்ணையும் பார்த்து தலையசைத்துவிட்டு,
“கட்டு பிரிஞ்சதுல ரத்தம் கசிஞ்சிருக்கு. வேற எதுவுமில்லை…” என்று அவளின் காயம் சம்பந்தமாக பேசிவிட்டு அவர் சென்றதும் என்ன நடக்கிறது என அவள் பார்க்கும் பொழுதே கதவை சாற்றிவிட்டு வந்தான்.
“நான் நான்…” என்று அவள் திணறி அவனையும் கதவையுமே பார்த்தாள் அச்சத்துடன்.
“தமிழா?…” வம்சி கேட்க வேகமாய் தலையசைத்தவள்,
“நிலா இல்லை…” என்றாள் அவனிடத்தில்.
“வாட்?…”
“என் பேர் நிலா இல்லை…”
“தெலுசு…” என்றவன் அந்த நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான்.
“உன் பேர் என்ன?…” சுத்த தமிழில் அவன் கேட்க,
“ஷ்ராவணிதேவி…”
“ஹ்ம்ம், நைட் உன்னை நான் தான் இங்க அட்மிட் பண்ணேன்…” என்றவன் அவள் பேசாமல் இருக்க,
“என் வொய்ப்ன்னு சொல்லி அட்மிட் பண்ணேன்…” என்றதும் இன்னும் மிரட்சி பார்வை தான் அவளிடத்தில்.
“நன்னு தப்புக்கா அர்த்தம் சேஸுகோக்கு…” என்றான் அவள் பார்வையின் அர்த்தத்தில்.
“என்ன சொல்றீங்க?…” என்னவோ தனக்கு புரியாமல் பேசுகிறான் என்பது மட்டுமே விளங்கியது.
அதுவும் அந்த நேரம், தானிருக்கும் இடம். இந்த நிமிடம் தன்னை தன் வீட்டினர் தேடியிருப்பார்களே? நினைக்கவே பதட்டம் கூடியது.
“அச்சோ…” என கண்ணில் நீர் நிறைந்துவிட,
“இப்ப தானே சொன்னேன், என்னை தப்பா புரிஞ்சுக்காதன்னு…” என சொல்லும் பொழுதே அவனின் அதட்டலில் உடல் தூக்கி போட்டது.
“இது எந்த ஊர்?…”
“நீ எங்க இறங்கினியோ அதுக்கு பக்கத்து ஊராம். எனக்கு தெரியாது இந்த ஊர்…” என்றவன்,
அரண்டு எழுந்துவிட்டாள் பதட்டத்தில் அந்த குரலில். இத்தனை கோபமெல்லாம் அவள் அறிந்திராதது.
கூடவே இவன் யார் தன்னை இப்படி பேச என கோபமும் எழுந்துவிட கடுப்பும், ஆற்றாமையும், பயமுமாய் அவனை பார்த்தாள்.
மனதில் தான் அத்தனை எண்ணங்களும், ஆனால் கோழிக்குஞ்சாய் அவனின் அதட்டலில் உடல் சுருண்டுவிட்டது. முகம் இருண்டுவிட்டது.
“ஓகே, கூல்…” என்றவன் தலையை கோதிக்கொண்டான்.
“ஐ’ம் வம்சி சைத்ரயேஷ். ப்ரம் சென்னை. நான் ஆர்மி மேன். இங்க உன்னோட ட்ரீட்மென்ட் அன்ட் செக்யூரிட்டி பர்ப்பஸ்க்காக உன்னை என் வொய்ப்ன்னு சொல்லவேண்டியதாகிருச்சு…” என்றவன்,
“ஜஸ்ட் ஒரு ஹெல்ப். அப்ஜக்ஷன் இல்லையே?…” என்றான் அதையும் அதிகாரமும், அதட்டலுமாக.
“ஹாங், ம்ஹூம்…” தன்னைப்போல அவளிடமிருந்து பதில் வந்தது.
“குட், எந்த ஊர் உனக்கு?…”
“ராமேஸ்வரம்…”
“ஓஹ், எங்கருந்து வரம்மா நீ?…”
“சென்னைல இருந்து. ஒரு இண்டர்வ்யூ. அங்க அட்டன் பண்ணிட்டு…” என்றவள் மேலும் பேசும் முன் கதவு தட்டப்பட,
“எஸ், கமின்…” என்றான் வம்சி. அவர்கள் உள்ளே வரும் முன்னர்,
“நான் சொன்ன பொய்…” என்றவன் மேலும் அவளுக்கு சொல்லவேண்டி இருக்கவில்லை அவளின் தலையசைப்பில்.
“ஸார், உங்க வொய்ப் ரிப்போர்ட் அன்ட் மெடிசின். உங்களுக்கு டிபன் வேணும்னா சொல்லலாம். ஹாஸ்பிட்டல் எதிர்க்கவே கடை இருக்கு…” என்று வந்த நர்ஸ் சொல்லி செல்ல கார் ட்ரைவருக்கு அழைத்து இருவருக்கும் உணவிற்கு சொல்ல,
“எனக்கு வேண்டாம்…” என்றாள் அவள்.
“ஓகே, காஃபி தாகு…” என்றவன் இருவருக்கும் காபிக்கு சொல்லிவிட்டு வைத்தான்.
“மிட் நைட் டைம், ரெஸ்ட்ரூம் போக வந்தா மொபைல் எடுத்துக்க வேன்டாமா? தனியா ட்ராவல் பண்ணும் போது அந்த பேஸிக் நாலேஜ் லேதாம்மா?…” என்று கேட்க ஷ்ராவணி அமைதியாக இருந்தாள்.
இப்படியாகும் என்று அவள் மட்டும் என்ன கனவிலுமா நினைத்தாள்? யாருமற்ற ஹைவேய்ஸ் தாபாவில் பஸ் நின்றதும் அவசரத்திற்கு இறங்கியவள் திரும்பி வருகையில் பஸ் கிளம்பியிருந்தது.
தாபாவை தாண்டி ஓடி சென்று பிடிக்கும் முன் பஸ் சென்றிருக்க கால் இடறி விழுந்து உடலிலும், தலையிலும் காயம் பட்டது தான் மிச்சம்.
இப்போது நினைக்கையில் நடுக்கமாய் இருந்தது. இவனாக போய் கொண்டுவந்து சேர்ப்பித்திருக்க வேறு எதுவுமென்றால்?
“வாட்?…” என்றான் வம்சி அவளிடத்தில்.
“ஹ்ம்ம், போன் பேசனும். அப்பா தேடுவாங்க…”
“ஓஹ், வெய்ட்…” என்று தன் மொபைலை எடுத்து அவளிடம் நீட்டியவன்,
“டயல் பண்ணிக்கோ…” என்றான்.
வேகமாய் வாங்கியவள் தன் தந்தையின் எண்ணிற்கு அழைக்க நினைத்து பின் தாயின் எண்ணிற்கு தான் அழைப்பு விடுத்தாள்.
முதல் அழைப்பிலேயே தன் வீட்டில் அழைப்பை எடுத்துவிட அவளின் தம்பி தான் பேசியது.
“யாருங்க…” என்றவன் குரலில் அழுகையின் சாயல் தெரிய,
“சந்துரு அக்காடா, ஷ்ராவணி…”
“வணிக்கா, எங்க இருக்க? ஏன் அந்த பஸ்ல வரலை?…” என அவளின் குரல் கேட்டுவிட்ட மகிழ்ச்சியிலும் அழுகையுடன் கேட்க,
“சந்துரு…” என்று ஷ்ராவணி ஒருபக்கம் அழ,
“டீடெய்ல்ஸ் சொல்லாம அழற நீ? இதான் வெளியூர்ல வேலை பார்க்க போறதா?…” என்றான் வம்சி கடுமையுடன்.
“ம்மா, அதெல்லாம் வேண்டாம். அப்பாவுக்கு சொல்லு. நான் வந்திருவேன்…” என பதறினாள் ஷ்ராவணி.
“சந்துரு போய் கூப்புட ஓடிட்டான். இங்க ஒரே கலாட்டாவாகிருச்சு. உன் அத்திம்பேர் வேற வந்துட்டு ஒரே அழிச்சாட்டியம். பொண்ணு ஓடிட்டாளோன்னு கேட்டு…” என்று கேவி கேவி ஒரு அழுகை.
“ம்மா, அவர் பேசினா நீ கேட்டுட்டு நிப்பியோ? அக்கா எங்க?…” என சீற்றத்துடன் பேச புருவம் உயர்த்தியபடி பார்த்தான் வம்சி.
“ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். என்னென்னே தெரியாம அதுக்குள்ளே போலீஸ் ஸ்டேஷன். நான் வந்து பேசறேன்…” என்றவள்,
“இது இந்த நம்பர்ல இருக்கறவர் தான் என்னை காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தார்…” என விவரங்களை விளக்கமாகவே அவள் சொல்ல வம்சியுமே கேட்டுக்கொண்டான்.
“தேங்க்ஸ்…” என பேசி முடித்து அவனிடம் போனை நீட்டியவள் இப்போது திகைப்புடன் இருந்தாள் எப்படி செல்வது என்று.