“அதெல்லாம் வேண்டாம். நான் கிளம்பனும். அதோட எனக்கு அவங்க யாருன்னே தெரியாதே?…”
“இனி தெரிஞ்சுக்கோ நிலா. உனக்கும் புடிக்கும்…”
“தெரிஞ்சு? எப்பயாச்சும் பார்க்கும் போது பேசறளவுக்கு கூட எதுவுமில்லையே?…” என்றவள்,
“எங்க நீங்க பார்த்த பொண்ணு வரலையா?…” என கேட்டாள்.
“ஏன் உனக்கு பார்க்கனுமா?…” வம்சி புன்னகையுடன் திருப்பி கேட்க,
“ம்ஹூம், அப்படி இல்லை. ஆனா ஒரு க்யூரியாஸிட்டி. எப்படி அந்த பொண்ணுக்கு உங்களை பிடிச்சதுன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு? அதோட உங்களுக்கு பிடிச்சிருக்கே?…”
“ஏன்? ஏன்? எனக்கு ஒரு பொண்ணை பிடிக்காதா?…” என்றான் அவளின் கிண்டலில் வேகமாய்.
“அதான் நம்ப முடியலை. எப்பவும் எரிஞ்சு விழ, கோபப்பட, திட்ட இதுதானே தெரியும். அதான் டவுட்…”
மனதின் புகைச்சலை அவனை வெறுப்பேற்றுகிறேன் பேர்வழி என்று ஒருவழி செய்துகொண்டிருந்தாள்.
இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் அதனை கண்டுகொண்டவன் விழிகள் மின்னியது.
இடது கையால் அவனின் மீசையை முறுக்கிக்கொண்டே அடிக்கண்ணால் பார்த்தவன்,
“அவ்வளவு டெரரா நான்? எனக்கு ஒரு பொண்ணை புடிக்க கூடாதா?…”
“புடிக்கலாம் புடிக்கலாம். ஒருவேளை அவங்களும் சேம் தாட், சேம் டேஸ்ட் இப்படி உங்களுக்கு ஒத்து போயிருக்கலாம். அதான் இம்ப்ரெஸாகிருப்பீங்க. கரெக்ட்டா?…” என்றாள்.
என்னவோ கண்டுபிடித்துவிட்ட பாவனையில் சொன்னாலும் அதன் பின்னிருந்த வலியும், ஏமாற்றமும் கொஞ்சமே அவனை அடைந்தது.
“நோ நிலா. உன் கெஸ்ஸிங் ராங். அந்த பொண்ணு என்னோட எக்ஸ்படேஷன்ல ஒரு பர்சன்டேஜ் கூட இல்லை. சொல்ல போனா நான் என் சித்திட்ட சொல்லி பொண்ணு பார்க்க சொன்ன எந்த குவாலிட்டியும் எனக்கு பிடிச்ச பொண்ணுக்கிட்ட இல்லை…”
அவன் கனவில் மிதப்பதனை போல சொன்னாலும் அந்த பார்வையின் வீரியம் அவன் மனதினை எடுத்துரைப்பதை போல தோன்ற,
“அவங்க ரொம்ப லக்கி போல…” என்றாள் ஷ்ராவணி.
“இஸ் இட்?…” என புருவமுயர்த்தியவன்,
“கொஞ்சம் முன்ன தான் என்னை கோபம், டெரர், திட்டறேன்னு நிறைய சொன்ன. அப்பறம் எப்படி லக்கி?…” என்றான் சிரிப்புடன்.
“உண்மை தான். ஆனா இதுவும் உண்மை. உங்களுக்கு கோபம் வரும் தான். அதுக்கு பின்னால அவ்வளோ கேர் பண்ணுவீங்க…”
“பார்ரா…”
“நிஜமாவே தான். தெரியாத எனக்கே எதிர்பார்ப்பில்லாம நிறைய பண்ணிருக்கீங்க. வெளிப்படையா பார்த்தா நீங்க அதட்டி பேசறது எனக்கு புடிக்காது தான். ஆனா…”
“உள்ளுக்குள்ள பிடிக்குமா நிலா?…” என்றவன் கேள்வியில் திகைப்பாய் அவள் விழிக்க,
“என்னாச்சு? சரியா தானே கேட்டேன்?…”
“ஹாங், ஆமா, உங்க கோவத்துக்கு பின்னால அக்கறை இருக்கும். அது பிடிக்கும்…” என்றாள்.
அந்த பிடிக்கும் என்ற வார்த்தையில் சொல்லப்படாத நேசம் அவ்வளவு ததும்பியது.
மறைமுகமான இந்த வார்த்தை பிரயோகங்கள் இருவருக்கும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை அள்ளி தெளித்தது.
“அதான் சொன்னேன், அவங்க லக்கி…” என.
“ஹ்ம்ம், எனக்கே ஆச்சர்யம் தான். அந்த பொண்ணு என்னை இவ்வளவு தேட வைப்பான்னு. இன்ஃபேக்ட் நெக்ஸ்ட் மந்த் நானே சொல்லனும்னு இருந்தேன். சித்திக்கே இன்னைக்கு தான் சொன்னேன் அவங்க பார்த்த பொண்ணு வேண்டாம்ன்னு…”
“எக்ஸ்படேஷன் வேறையா இருந்தாலும் ரியாலிட்டின்னு ஒன்னு இருக்கே? ரொம்ப பிடிச்சிருக்கு அந்த பொண்ணை. அவ மட்டும் போதும். மத்தது ஏன்னு தோணுது நிலா…”
வம்சி பேச பேச தொண்டையில் என்னவோ அடைக்க பேச்சுக்கள் எதுவும் வரவில்லை ஷ்ராவணிக்கு.
விழிகளை தாழ்த்தியபடி அமர்ந்திருந்தவளுக்கு அதற்கு மேலும் அவனுடன் இந்த பேச்சு சம்பந்தமான வார்த்தைகள் எதனையும் கேட்க மனதில் திடமில்லை.
எச்சிலை கூட்டி விழுங்கியவள் கண்ணை நிறைத்த நீரை உள்ளிழுத்துக்கொண்டாள்.
விரல்கள் மெல்ல நடுக்கத்துடன் இருக்க ஹேண்ட்பேக்கை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு எழுந்துவிட்டாள்.
ஷ்ராவணி சொல்லவும் அப்படி ஒரு சிரிப்பு வம்சியிடத்தில். தலையை கோதியபடி தாஜ்மஹாலை பார்த்தவன்,
“பார்க்கலாம் என்னால சமாளிக்க முடியுமான்னு…” என்று சொல்லியவன்,
“ஓகே, நாளைக்கு ஒரு நாள். லஞ்ச் தானே? வா…” என்றான்.
“வணி போலாமா?…” என்று குமுதாவும், அவளின் டீம் லீடரும் வர தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் வம்சி.
“நான் மேஜர் வம்சி சைத்ரயேஷ், இவங்களோட பேமிலி ப்ரென்ட்…” என அலட்டாமல் சரளமாக சொல்ல ‘அடப்பாவி’ என பார்த்தாள் ஷ்ராவணி.
அதனை சொல்லியே தனது குடும்பத்தையும் காண்பித்து மறுநாள் வெளியே செல்லவிருப்பதை கூற ஷ்ராவணிக்கு மறுக்க முடியவில்லை.
சொல்லியது போல வந்துவிட்டான் மறுநாள் ஷ்ராவணியை அழைத்து செல்ல என்று.
வம்சி மனதிற்குள் அத்தனை உல்லாசம். ஆனால் அதற்கு நேர்மாறாய் இருந்தது ஷ்ராவணியின் நிலை.
‘இந்த ஒருதடவை. இதுதான் லாஸ்ட். லாஸ்ட்’ என சொல்லிக்கொண்டே தான் சென்றாள்.
அவள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே தான் ரெஸ்டாரென்ட் இருக்க அதிக தூரமில்லாது வந்ததும் வெளியே அவர்களுடன் வந்து இணைந்துகொண்டாள் ஷைலஜா.
“ஹாய் வதினா…” என ஷைலஜா வர,
“ஹாய்…” என்ற ஷ்ராவணி,
“வதினா இல்லை. ஷ்ராவணி…” என்று சொல்லிவிட்டு வம்சியை பார்க்க, ஷைலஜா தன் அண்ணனை பார்த்தாள். அவன் சமாளிப்பாக,
“நேத்து பார்க்கலைல நீ? என் தங்கச்சி. ஷைலஜா…” என்று சொல்ல,
“எனக்கு தமிழ் தெரியும். நாம தமிழ்ல பேசலாம்…” என்று ஷைலஜா சொல்லவும் பெரிய விடுதலையுணர்வு ஷ்ராவணிக்கு.
“ஹப்பா…” என அவள் சிரிக்க,
“ஷைலு நீ உள்ள போ…” என சொல்லியவன் ஷ்ராவணியிடம்,
“ஏன் நான் கூட தான் தமிழ்ல பேசினேன்? இந்த ஹப்பா அப்ப இல்லை…” என்றான்.
“நீங்க பண்ணினது ட்ரான்ஸ்லேட். ஆனா நான் இப்ப நேரடியா பேசலாமே?…”
“அதுக்கு தான் தெலுங்கு கத்துக்கோன்னு சொன்னேன்…”
“அவசியமில்லையே. கத்துக்கிட்டு என்ன செய்ய போறேன்?…” என்றவள் தான் பின்னாளில் மாங்கு மாங்கு என்று தானே தெலுங்கு கற்றுக்கொள்ளும் அளவிற்கு பாடாய் படுத்தி வைத்தான் வம்சி சைத்ரயேஷ்.