“நான் சொன்னா தானே தெரியும்? நான் வந்தேன். வரப்போ எல்லாம் உன்னை பார்ப்பேன். நீ என்னை தேடுறதையும் கவனிப்பேன்…” என்ற பொழுதே சுர்ரென்று என்னவோ சொல்ல வர அவளின் இதழ்களை கை கொண்டு மூடினான்.
“உனக்கு எப்போ ஃபீலாச்சோ எனக்கு தெரியலை நிலா. இந்த லவ் மேல பெருசா அபிப்ராயம் இல்லைன்னு எல்லாம் இல்லை. என்னவோ கல்யாணம் பண்ணி, வொய்ப் வரவும் அடுத்து என்னோட அடுத்த ஜெனரேஷனை பார்க்கனும்னு அவங்களுக்கு நல்ல லைப் குடுக்கனும்…”
“இதுதான் கல்யாணம் பத்தி எனக்குள்ள இருந்த டெபினிஷன். யாரை மேரேஜ் பண்ணினாலும் அவங்களை நல்லா பார்த்துக்க முடியும்ன்னு ஒரு கான்பிடன்ட். இந்த பீலிங் இதெல்லாம் பெருசா எனக்கு தோணினதில்லை…”
“அம்மா இருந்திருந்தா அவங்க லைப் பார்த்து எனக்கு தெரிஞ்சிருக்குமோ என்னவோ? அம்மா இல்லை. அப்பாவும் ரஃப் டைப். நான் வளர்ந்த சூழல் இந்த லவ் எல்லாம் சுத்த ஹம்பக். கல்யாணம் பண்ணினா லவ் தானா வந்துட்டு போகுது….”
“சித்திட்ட பொண்ணு பார்க்க சொன்னபோ கூட அழகா இருக்கனும் அப்படி எந்த கண்டிஷனும் வைக்கலை. லைஃப் ஸ்மூத்தா போகனும். வொய்ப் என்னை டென்ஷன் பண்ணாம, கண்ட்ரோல் பண்ணாம இருக்கனும். அப்படித்தான் சொல்லியிருந்தேன். இன்னும் சிலவும்…”
“ஆனா என்னை மீறி நடந்த விஷயங்கள் உன்னோட சந்திப்புக்கப்பறம் தான். பர்ஸ்ட் டைம் கூட பெருசா எதுவும் தோணலை. ஆனா உன்னோட விஷயத்துல ஒவ்வொரு முறையும் நீ கூப்பிடாம உனக்காக வந்து நிக்க தோணுச்சு. உன் பக்கம் நான் நெருங்கற மாதிரி. இதெல்லாம் எனக்கு புதுசு…”
“அதான் உன்னை ஒவ்வொருதடவையும் அவாய்ட் பண்ண நினைச்சு இன்னும் பக்கமா தான் வந்தேன். நான் எதிர்பார்த்த ப்ரமோஷன். ஆனா ட்ன்ஸ்பரோட. அந்த ஆடரை கையில வாங்கும் போது அந்த நிமிஷம் எனக்கு ஞாபகம் வந்தது உன் முகம் தான்…”
“நான் சென்னைல இல்லாம எவ்வளோ கஷ்டப்படுவியோன்னு தான் உன்னை நேர்ல பார்க்க வர சொன்னேன். அன்னைக்கு காபி ஷாப்ல கூட நான் சொல்லிட்டு போக வந்திருக்கறப்போ ஏற்கனவே எனக்கு உன்னை இனி பார்க்க போறதில்லைன்றதுல அவ்வளோ கஷ்டம். இதுல உன்னோட கண்ணீர். ஷப்பா…”
முகத்தை அழுத்தமாய் துடைத்துக்கொண்டவன் விரல்கள் நிதானமின்றி அவன் மீசையை நீவியபடி அந்த கேசத்தை இழுத்து பிடிக்க அதுவே அவனின் மனநிலையை எடுத்துரைத்தது.
“உன்னை புரிஞ்சது. உன்னோட விருப்பம் புரிஞ்சது. ஆனா அதை நான் அனலைஸ் பண்ணனுமே? எனக்கு இதுல எந்தளவுக்கு ஈடுபாடுன்னு தெரியனும் நிலா. எனக்கே நிச்சயமில்லாததை நான் எப்படி அக்சப்ட் பண்ணிக்க?…”
“அதான் டைம் எடுத்துக்க தோணுச்சு. எடுத்துட்டேன். ஆனா பிடிச்சதுன்னு கன்பார்ம் பண்ணின நிமிஷம் ரெண்டுபேரோட டிஃபரன்ஸ் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு…” என்றதும் ஷ்ராவணி முகம் கசங்கியது.
“அதுக்காகவெல்லாம் உன்னை விடறதா இல்லை நிலா…” என சிரித்தான் அவளின் சோர்வில்.
“என்ன பார்க்கற? மேரேஜ் பண்ணிக்கத்தான் வேணும். கல்யாணத்துக்கப்பறம் உனக்காக நான் மாறுவேன். எனக்காக நீ மாறு. இந்த கான்சப்ட்டே வேண்டாம். கல்யாணமானா இதெல்லாம் மாறிடுமா என்ன?…” என வம்சி சொல்ல,
“இதுக்கு நீங்க மாறமாட்டீங்கன்னு வெளிப்படையாவே சொல்லியிருக்கலாம்…” என ஷ்ராவணி அவனின் மனதை கண்டுகொள்ள,
“எக்ஸாக்ட்லி நா தல்லி…” என அவளின் கன்னம் பிடிக்க வர ஹேன்ட்பேக்கால் கையை தள்ளிவிட்டாள்.
“கண்டிப்பா அப்படி ஒரு பர்சனாலிட்டி தான் நான். என்னை நான் மாத்திக்கறது ரொம்ப கஷ்டம்ரா…”
“எதுவும் மாத்திக்க வேண்டாம்….” ஷ்ராவணியும் சொல்ல,
“அப்போ எப்ப பேசலாம்? சொல்லு சொல்லு…” என்று ஆர்வமாய் கேட்டான்.
“என்ன சொல்ல?…”
“விளையாடுறியா? உன் அப்பாட்ட வந்து பேசனும். கல்யாணம் பண்ணனும். அப்பறம்…”
“போதும். நான் இன்னும் எதுக்கும் ஓகே சொல்லலை. நீங்க கல்யாணம் வரை போய்ட்டீங்க…”
“அப்ப கல்யாணம் லேதா?…” என்றவன்,
“மேஜராகிட்டு தான் மேரேஜ்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். கர்னலாகிட்டு தான் கல்யாணம் போல?…” என்று கடுப்பாய் சொல்ல ஷ்வாரணிக்கு சிரிப்பு பொங்கியது.
“ஓய் என்ன?…” என்றான் கடுப்பாய்.
“நத்திங்…” என சொல்லியவளுக்கு இன்னும் மனது சமன்படவில்லை.
“ஒன்னு கேட்கனும்…”
“ஹ்ம்ம், இன்னும் கேள்வி மிச்சமிருக்கா? எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ணமுடியாது இதுக்கு மேல…”
எறும்பாய் வாகனங்கள் நகர்ந்துகொண்டிருக்க மழையும், மேகமூட்டமுமாக சாலையே தெரியாதளவிற்கு இருந்தது.
“அன்னைக்கு என்னை பார்க்காம அந்த இடத்துல வேற எதாச்சும் பொண்ணு இருந்திருந்தா அந்த பொண்ணை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ண கேட்டிருப்பீங்களா?…”
“கேர்ள்ஸ் ஆல்வேஸ் கேர்ள்ஸ் தான்…” என வம்சி சலிக்க ஷ்ராவணி முறைத்தாள்.
“உன்னை காப்பாத்தும் போது கூட தான் இப்படி ப்ரப்போஸ் பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. ஒருவேளை அப்படி வேற பொண்ணு இருந்து அந்த பொண்ணை பிடிச்சிருந்தா கண்டிப்பா ப்ரப்போஸ் பண்ணிருப்பேன்…”
விளையாட்டாய் தன்னை சீண்டுவதற்கு சொல்கிறானோ என அவனின் முகத்தை அதிர்வாய் பார்க்க,
“என்ன? நம்பலையா?…” என சீரியஸ் பாவனையுடன் சொல்ல,
“நான் கேட்டிருக்கவே கூடாது…” என முகத்தை திருப்பினாள்.
“இதை கேட்கிறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கனும் நிலா. இஷ்டத்துக்கு மனசுல தோணுறதை எல்லாம் கேட்கனும்னா என் பதில் இப்படித்தான் இருக்கும். ஃபேக்ட் என்னவோ அதான் சொல்லுவேன்…”
“போதும்…”
“என்ன போதும்? இப்ப இருந்தே தெரிஞ்சுக்கோ. உன்னை பொய்யா சந்தோஷப்படுத்த பேசற கேட்டகிரி நான் இல்லை. வலிக்கும்னாலும் நிஜம் சொல்லிருவேன்…” என்றவனை மனதிற்குள் அத்தனை திட்டி தீர்த்தாள்.
“என்ன சைலன்ட் ஆகிட்ட?…”
“தலை வலி…”
“ஓகே டேக் ரெஸ்ட்…” என்று சொல்லிவிட்டு காரை அமைதியாக செலுத்தினான்.
எந்தவிதத்திலும் தான் செய்தது தவறு என்றும் சொல்லவில்லை, சமாதானமும் செய்யவில்லை. காதலிக்கிறேன் என்றே சொல்லாமல் திருமணத்தில் வந்து நின்ற பேச்சில் ஷ்ராவணியின் மனதில் திருப்தியில்லை.
அதையும் விட குழப்பங்கள் தான் மிஞ்சியது. தான் மட்டும் விரும்பியிருந்த சூழ்நிலை வேறு.
இப்போது வம்சியின் பக்கத்திலிருந்து அவள் எதிர்பார்த்த அந்த விருப்பம் எதிர்பாராமல் கிடைத்திருக்க முழுதாய் அனுபவிக்க முடியாமல் குடும்ப சூழ்நிலையும் அவளை அலைகழித்தது.
கண்களை மூடியவாறு யோசித்துக்கொண்டே வந்தவள் ஒருகட்டத்தில் உறங்கியிருக்க வெகுநேரம் கழித்து எழுப்பப்பட்டாள்.
“வந்துட்டோமா?…” என தலையை பிடித்தபடி எரிந்த கண்களை கசக்கிவிட்டு கேட்க எல்லாம் மங்கலாக தெரிந்தது.
“ஹ்ம்ம், என் ப்ளாட்க்கு வந்துட்டோம்…” என சொல்ல திடுக்கிட்டவள் இன்னும் விழிகளை பரபரவென்று தேய்த்து பதட்டமாய் பார்த்தாள்.
அவளின் பாவனையில் அடக்கமாட்டாமல் சிரித்தவன் உச்சந்தலையில் கை வைத்து அவள் தலையை ஆட்டினான்.
“சீக்கிரம் வீட்டுல பேச ஓகே சொல்லு. ரொம்ப நாள் வெய்ட் பண்ண முடியாது. சும்மா நாளை தள்ளி போட்ட?…”
“தள்ளி போட்டா? என்ன மிரட்டுறீங்களா?…” ஷ்ராவணி அவனின் பேச்சில் மெல்லிய சிரிப்புடன் கேட்க,
“மில்ட்ரிக்காரன் துப்பாக்கி மட்டும் சுடமாட்டேன். பொண்ணையும் சுட்ருவேன். அப்பறம் நிலா ஸ்வாஹாவானதுக்கப்பறம் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலைன்னு எல்லாம் சொல்ல கூடாது…” என சொல்ல ஆவென்று பார்த்தாள் ஷ்ராவணி.
“என்ன லுக்? இறங்கலையா? அப்போ என்னோட வரியா நிலா?…” என கேட்க காரை விட்டு இறங்கினாள்.
அவளுடன் தானும் இறங்கி நடந்தவன் அறையின் வாசல் வரைக்கும் அவளுடனே வந்தான்.