தன் பக்கம், தன்னுடைய நியாயம் எல்லாம் கடந்து அவளை அவதானிக்க ஆரம்பித்தான் வம்சி.
“நான் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கறேனோ?…” என கேட்டவள் விழிகள் அந்த வீட்டை அலசியது யாரேனும் தன்னை, தன்னுடைய இந்த நிலையை பார்த்துவிட கூடுமோ என்று.
அவளால் அங்கே வெளிப்படையாக கூட பேசமுடியவில்லை. இதில் எங்கே முட்டிவரும் அழுகையுடன் அவனிடம் மனதை திறக்க? முடியுமென்று தோன்றவில்லை.
தொண்டைக்குழி ஏறி இறங்க அவள் பேச கஷ்டப்படுவதை கவனித்து தண்ணீரை எடுத்து நீட்டியவன் குழந்தையை வாங்கிக்கொண்டான்.
“இல்லை நானே?…”
“ப்ச், நான் ஒன்னும் உன் மடில உட்கார போறதில்லை. தண்ணியை குடி…” என அதட்ட சொல்பேச்சு கேட்கும் பிள்ளையாய் நீரை பருகினாள்.
“பேசலை பேசலைன்னு சொல்ற, ஏன்னு யோசிக்கலையா?…”
“அதான் கோபமா இருந்தீங்களே?…”
“ஹ்ம்ம், கோபம் தான். ஆனா உன் மேல இல்லை…” என்றவன்,
“அதுக்கப்பறம் கால் பன்ற சூழ்நிலை அங்க இல்லை. பிஸியா இருந்ததால கால் கூட பண்ண முடியலை. உன்னை பார்த்துட்டு ஒன் வீக் பேசமுடியாதுன்னு சொல்ல தான் கால் பண்ணேன். நீ எடுக்கலை…” என்றதும் ஷ்ராவணி விழித்தாள்.
“என் பக்கமும் கொஞ்சம் சரி இருக்கும்மா. புரியுதா? நான் அன்னைக்கு ‘லே’ கிளம்பவேண்டிய சூழ்நிலை. பி.எம். செக்யூரிட்டி பர்ப்பஸ். உடனே கிளம்பிட்டோம். அங்க உன்னை ரீச் பண்ண முடியாது. அதான் பண்ணலை. புரியுதா?..” என கேட்க தலையாட்டினாள்.
“வாயை திறந்து பேசேன். வேலை முடிஞ்சாலும் போன்ல பேச தோணலை. நேர்ல உன் பக்கத்துல நின்னு உன்னை பார்த்து பேசனும்னு தோணுச்சு. அதான் இன்னைக்கு வரை வெய்ட் பண்ணேன்…” என்றவன் காரணங்களை சொல்ல,
“நான் உங்ககிட்ட ரொம்ப எக்ஸ்ப்டேஷன் வச்சிட்டேனோ?…” என மெல்லிய குரலில் விழிகளை தாழ்த்தியபடி கேட்க,
“இதெல்லாம் இல்லைன்னா லைஃப் எப்படி இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும்? லீவ் இட்…”
“நான் நீங்க பேர் சொல்ல சொன்னதுக்கு கோபமா இருந்தீங்கன்னு எனக்கு கோபம். என்னை அவாய்ட் பன்றீங்களோன்னு ஒரு பயமும் கூட…” உள்மனதை அப்படியே சொல்ல,
“வாட் எ ஜோக்? நீ ஜஸ்ட் தெரிஞ்ச பொண்ணா இருந்தப்பவே என்னால உன்னை அவாய்ட் பண்ண முடியலை. இப்போ நீ தான் எல்லாம்ன்னு நான் இருக்கேன். அவாய்ட் பன்றேனாம்…” என்று அவளின் தலையில் குட்ட போக பின்னுக்கு நகர்ந்தாள்.
“எஸ்கேபிசம் நிலா…” என கைகளை தன் மீசைக்கு கொண்டுவந்து முறுக்கினான்.
அப்போது தான் அவனின் முகத்தை இன்னும் நன்றாக பார்த்தாள். முன்பை விட மீசை இன்னும் அடர்ந்திருந்ததை போல் தெரித்தது.
அதுவும் அதனை அவன் முறுக்கிவிட பார்க்கவே பயத்தை தான் கொடுத்தது அவளுக்கு.
மீசைக்கடியில் தெரிந்த புன்னகை கூட கண்களில் பிரதிபலிக்கவில்லை என்றால் சிரிக்கிறான் என்பதையே கண்டுகொள்ளமுடியாது.
அப்படி இருந்தது அவனின் முகத்தில் அந்த பெரிய மீசை. இப்படி மீசை ஆராய்ச்சியில் அவளிருக்க,
“யூர் விஷ்…” சட்டென்ன வந்த அவனின் வார்த்தையில் தடுமாறி நின்றாள்.
விட்டும் செல்லமுடியவில்லை. உடன் செல்லவும் முடியவில்லை. இருதலைகொள்ளி எறும்பாக அவள் நிற்க,
“கிளம்பு நிலா…” என்ற அழுத்தத்தில் கார் அருகே வந்து நின்றாள்.
முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. இன்னும் லாக் எடுக்கப்படாமல் இருக்க வம்சி கையிலிருந்த சாவியால் லாக்கை எடுத்தான்.
“இப்ப ஓபன் பண்ணு…” என்று தானும் உள்ளே அமர்ந்துகொள்ள முன்பக்கம் அவனருகே அமர்ந்தாள்.
“என்னோட வர உனக்கு எவ்வளவு தயக்கம்?…” என்று கேட்டபடி காரை கிளப்ப எதுவும் பேசவில்லை.
சிறிது தூரம் வரை சென்றவன் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு இருவருக்கும் சாப்பிட பர்கர் வாங்கி வந்தான்.
“எனக்கு வேண்டாம்…”
“வெஜ் தான்…” என்றதும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.
“சரி சொல்லு, மாப்பிள்ளை யாராம்?…” என சாப்பிட்டுக்கொண்டே சாதாரணமாக அவன் கேட்க,
“எனக்கு தெரியாது…” என்றாள்.
“தெரியாதுன்னா?…”
“தெரியாதுன்னா எதுவுமே தெரியாது. அதைபத்தி மட்டும் தான் பேசினாங்க…”
“ஓஹ்…”
“அப்போ நான் எப்போ பேச வர?…”
“ப்ளீஸ்…”
“நிலா புரிஞ்சுக்கோ. நான் ஒன்னும் இன்னைக்கே பண்ணிக்கனும்னு சொல்ல வரலை. எனக்கும் தெரியனுமே? என்னால இப்படி உன்னை பார்க்க ஒவ்வொரு இடமா தேடிட்டு இருக்கமுடியாது. பின்னால சுத்தவும் முடியாது. என் வேலை அதுக்கு இடம்கொடுக்காது…”
கோபமில்லை என்றாலும் அந்த குரலில் எரிச்சல் மிகுதியாகவே தெரிந்தது ஷ்ராவணிக்கு.
“இப்ப வீட்டு சூழ்நிலை…”
“எந்த வீட்டுலையும் உடனே ஒத்துக்கமாட்டாங்க. நாம தான் ஸ்டெப் எடுக்கனும். அன்ட் ஒன் திங், நான் உங்க சைட் சொல்ற மாதிரி எங்கிருந்தாலும் வாழ்க சொல்ற கேட்டகிரி இல்லை. காட் இட்…” என்றான் அவள் முன் விரல் நீட்டி.
“எப்போன்னா எனக்கு சொல்ல தெரியலை. நீங்க ஏன் புரிஞ்சுக்கமாட்டேன்றீங்க?…” என்றவள் தவிப்பில் ஆழ்ந்தவன்,
“பினான்ஷியலா ஏதாவது தேவையா நிலா?…” என்றான் சரியாய்.
“ஹாங்…”
“அப்ப அதான். ரைட்…” என்றதும் இன்னும் அவளுக்கு தலையிறக்கமாய் போனது.
“நிலா, நீ இருக்கறதை பார்த்தா சொல்ல முடியாம இல்லை. என்னோட ஷேர் பண்ணிட கூடாதுன்னு கவனமா இருக்க….” என்றதும் அவளின் அதிர்ச்சி இன்னும் அதிகமாக,
“அப்ப இதுவும் ரைட்…” என்றதும் தலையை தாழ்த்திக்கொண்டாள்.
“ஒருவிஷயம் புரிஞ்சுக்கோ, எல்லாத்தையும் உனக்குள்ளையே வச்சிட்டு சமாளிக்கனும்ன்னு நினைக்கிறது தன்னம்பிக்கைல சரி. ஆனா இவங்க என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு மறைக்கிறது என்னை தள்ளி வைக்கிற மாதிரி…”
“நீங்க மட்டும் தள்ளி கதை சொல்லலையா?…” என வேகமாய் அவள் சொல்லவும் பக்கென்று சிரித்துவிட்டான் வம்சி.
“நூறு தடவை இல்லை. லட்சம் தடவை கோடி முறை சொல்லுவேன். நா தல்லி கதான்னு. ஆனா ஒன்னு, நீ தெலுங்கு கத்துக்கவே வேண்டாம். இன்ட்ரெஸ்ட்டிங்…” என்று கண்ணடிக்க,
“அப்போ எதோ வில்லங்கமா சொல்லியிருக்கீங்க…”
“உன்கிட்ட ஏதோ வில்லங்கமா இல்லை ஏகப்பட்ட வில்லங்கம்மா பேசுவேன். என்ன செய்வ?…” என புருவம் உயர்த்த,
“நானும் பேசுவேன். இதோ…” என்றவள் தெலுங்கு கற்றுக்கொள்ளும் புத்தகத்தை எடுத்து அவனிடம் காண்பிக்க இப்போது அடக்கமாட்டாத சிரிப்பு தான் வம்சியிடம்.
“நுவ்வு அந்தால ராணி…”(அழகு பொண்ணுடி நீ) என கன்னம் பிடித்து கிள்ளினான் வம்சி.
“இதென்ன?…”
“அதான் கத்துக்க போறியே? அதுல தெரிஞ்சுக்கோ…” என்றதும் ஷ்ராவணி முறைப்புடன் முகம் திருப்ப,
“நிஜமா கஷ்டமா இருக்குடா நிலா. உன்னை யோசிக்கிற வரை எதுவும் தோணலை. ஆனா இப்போ முடியலை. அது உனக்கு புரியறதே இல்லை…” என்றவன் அவளை பார்த்துக்கொண்டே சொல்ல,
“எனக்கு புரியுது…” என்றாள்.
“என்ன என்ன புரிஞ்சது? இல்லைன்னா இப்படி என்கிட்டே பேச கூட யோசிப்பியா?…” என்றதும்,
“சந்துரு இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்கான்…” என்றாள் மேலோட்டமாய் சொல்லிவைப்போம் என்று.
அதுதான் அவள் சொல்லியதன் ஆரம்பம். இப்போது வம்சிக்கு ஷ்ராவணியின் தயக்கத்தின் முதல் நுனி கிடைத்துவிட்டது.
“அப்போ அவன் படிப்பு முடியற வரை நான் பேச்சிலர் தானா?…” என்றவன்,
ஆறுதலாய் அனுசரணையாய், ஆபத்பாந்தவனாய் என எல்லாமுமாய் அவளை அரவணைப்புடன் அணைத்திருந்தான் வம்சி.
வம்சியின் முகத்தில் பலவகை உணர்வுகள் ஷ்ராவணி பேச பேச. சிறு பெண் என்று தான் நினைத்திருக்க அவளுள் எத்தனை போராட்டம்?
ராமன் மீதிருந்த மரியாதை சுத்தமாய் மழுங்கிவிட்டிருந்தது. முதல் முறை பார்த்தபொழுது அவரை அப்பாவி என்று நினைத்திருக்க இப்போது அந்த பிம்பம் சுக்கு நூறாய் உடைக்கப்பட்டது.
இத்தனைக்கும் ஷ்ராவணி அத்தனை இறக்கி சொல்லவில்லை தன் குடும்பத்தை. குறையாகவும் சொல்லவில்லை. என் குடும்பத்தின் நிலை இப்படி.
இன்னென்ன பிரச்சனைகள், நிலவரங்கள் என்று கோடி காட்டியிருந்தாலும் அதன் ஆழம் அறியாதளவிற்கு அவனும் விவரம் தெரியாதவனல்லாவே.
பேசவே கூடாதென்று இருந்தவள் எப்படி பேசினாளோ? ஆனால் ஒவ்வொன்றாய் பேச்சினூடே அவளிடமிருந்து லாவகமாய் வாங்கியிருந்தான் வம்சி.
எல்லாம் சொல்லிமுடித்து கண்களை மூடி சாய்ந்திருந்தவள் உச்சந்தலையில் ‘நானிருக்கிறேன்’ என்பதை போல ஒரு அழுத்தமான இதழ் பதிப்பு.
அதில் சுதாரித்து அவனை நிமிர்ந்து பார்க்க மென்மையான புன்னகையுடன் அவளின் கண்ணீரை துடைத்தவன்,
என்ன சொன்னோம்? எப்படி சொன்னோம் என்ற திகைப்போடே அவளிருக்க அந்த உச்சந்தலை முத்தம் சித்தம் கலங்க செய்தது.
ஷ்ராவணி எதுவும் பேசாமல் இருக்கையில் சாய்ந்துகொண்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க வம்சியின் மனதினுள் அவளின் வார்த்தைகள் ஒன்றுக்கொண்டு அலைமோதிக்கொண்டிருந்தது.
அந்த நொடி புரிந்தது அவளின் எதிர்பார்ப்பும், ஏக்கங்களும் என எல்லாம். தன் பங்கிற்கு தானும் அவளின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் நடந்துகொன்டோமே என யோசனையுடன் ஒரு கையால் காரை செலுத்தியவனின் இன்னொரு கை மீசையை முறுக்கிக்கொண்டு இருந்தது.
‘மஞ்ன்சி மனுஷாலு. எலான்ட்டி நானா இதி?’ (நல்ல மனுஷங்க. என்ன அப்பா இவரு?) என தோன்றியது ராமனை நினைக்கையில்.
அவரின் மீதே அவ்வளவு கோபம் வர இதில் சிவரஞ்சனியின் பேச்சுக்கள் தெரிய வருகையில்?