“அன்னைக்கு எவ்வளவு அழ வச்சீங்க?…” இப்போதும் சூடு குறையாமல் கேட்க,
“அதுக்கு தான் இவ்வளோ நாள் என்னை தவிக்கவிட்டு வச்சு செஞ்சியே? போதாதா? ஏன்ட்டிம்மா நுவ்வு?…” என சலிப்பு தான் வம்சியிடம்.
இருவரையும் கண்டால் அன்றுதான் திருமணமானது என கண்டுகொள்ளும் எந்தவித அறிகுறிகளும் இல்லை.
ஷ்ராவணி கழுத்தில் மின்னும் புதுமஞ்சள் கயிறு மட்டுமே வித்தியாயம். மற்றபடி எப்போதும் போலவே இருந்தாள்.
“இப்போ எங்க போறோம்?…” என்று விமானநிலையத்தை விட்டு வெளியே வரவும் கேட்க,
“சீக்கிரம் கேட்டுட்ட. சால சந்தோஷங்கா…” என்றவன்,
“ரொம்ப சந்தோஷம்…” என்றான் உடனே.
ஷ்ராவணி அவனின் பதிலில் கோபத்தில் சொல்கிறானா? இல்லை கேட்கவில்லை என அறிவுறுத்துகிறானா என புரியாமல் விழிக்க,
“கார் வந்திருச்சு. ஏறு…” என்று லக்கேஜை தூக்கி டிக்கியில் வைத்தான்.
அவனின் வீட்டிற்கு தானோ என நினைத்தபடி அமர்ந்தவளுக்கு அங்கே தான் வந்த பொழுதின் பார்த்த இடங்கள் எல்லாம் ஞாபகம் வர ஒவ்வொன்றையும் பார்த்தபடி வந்தாள்.
வம்சியிடம் எதுவும் பேசவில்லை. ஏறியதிலிருந்து வெகுதூரம் சென்றுகொண்டிருக்க இன்னும் எவ்வளவு நேரமாகுமோ என்னும் சலிப்பு வந்தது.
வெளியே கவனிக்கும் சுவாரசியம் குறைந்து பின்னால் சாய்ந்துகொண்டவள் மொபைலை பார்க்க,
“ட்ராவல் பண்ணும் போது இதை கவனிக்காத. கண்ணுக்கு ஸ்ட்ரெஸ்…” என்று அதனை அமர்த்தினான்.
“இன்னும் எவ்வளோ நேரமாகும்ன்னு தெரியலை. அதான்…”
“நம்ம பிளாட் இங்க இருந்து கொஞ்சம் லாங் தான். இன்னும் ஒரு ட்வென்ட்டி மினிட்ஸ்…” என தன் வாட்சை பார்த்துவிட்டு சொல்ல,
“ஏற்கனவே ஒருமணி நேரத்துக்கு மேல போய்ருச்சே…”
“சோ…”
“சோ ன்னா?…”
“அதுக்காக ஏர்போர்ட் பக்கத்துல பிளாட்டை தூக்கிட்டு வந்து வைக்க முடியுமா என்ன?…” என்றான் கிண்டலாக.
“இனி நான் பேசவே இல்லை…” என்று ஜன்னல் புறம் பார்த்தாள்.
“குட்…” என்றான் அதற்குமே.
இவன் என்ன இப்படி செய்கிறான் என ஷ்ராவணி மனதிற்குள் புலம்பியபடி வெளிப்புறம் பார்க்க பிரதான சாலையிலிருந்து வேறு திசைக்கு பிரிந்து சென்றது கார்.
“இங்க தான் உங்க குவாட்டர்ஸா?…” என்று தான் சொல்லியதை மறந்து பேச ஒரு புன்சிரிப்புடன் தலையசைத்தவன்,
“ப்ளாட்ல இருக்கேன்னு சொன்னேன். பிளாட் நம்மோடதுன்னும் சொல்லிருக்கேன்….” என்று சொல்ல,
“ஓஹ், ஆமால. ஞாபகமில்லை…” என்றாள் அவள்.
வம்சிக்குமே புரியத்தான் செய்தது அவளின் குழப்பங்களும், கவலைகளும். அதற்காக எல்லாவற்றிலும் வளைந்துகொடுக்கவும் முடியாதே என மௌனமாக வந்தான்.
சில நிமிடத்தில் அந்த அப்பார்மெண்ட் வளாகத்திற்குள் கார் நுழைய அண்ணார்ந்து பார்த்தபடி இறங்கி நின்றாள் ஷ்ராவணி.
“மேல பிஃப்த் ஃப்ளோர்…” என சொல்லிக்கொண்டு டிக்கியிலிருந்த ட்ராலியை இறக்கிவிட்டு காருக்கு பணம் கொடுத்து அனுப்பினான்.
“வா…” என அவளின் கையையும் பிடித்துக்கொண்டு நடக்க ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்த்தபடி சென்றவள் வீட்டின் வாசல் முன் சென்று நிற்கவும்,
“இங்க நமக்கு ஆலம் எடுக்கமாட்டாங்க. நீயே எந்த கால் வைக்கனுமோ வச்சு வா…” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக,
“சேர்ந்தே போவோம்…” என ஷ்ராவணி.
“எஸ், பர்ஸ்ட் டே. பர்ஸ்ட் நைட்…” என்று இலகுவாக சொல்லிவிட்டு அவளுடன் உள்ளே நுழைய அதுவரை இருந்த இலகுத்தன்மையும், இறுக்கங்களும் என எல்லாம் மறைந்து படபடவென்றானது ஷ்ராவணிக்கு.
எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை. இந்த இரண்டு நாட்களும் எப்படி சென்றதென்றும் தெரியாமல் வேறொரு வருத்தத்தில் துவண்டு போய் இருந்தவள் திருமணமுமே அதே கவலையோடு தான் செய்துகொண்டாள்.
இப்போது வரை திருமனமாகிவிட்டதை முழுமையாக உணர கூட முடியவில்லை ஷ்ராவணி.
இப்போது வம்சி எதார்த்தமாக சொல்லியது கூட அவளுக்கு அன்றைய தருணம் அடுத்து என்னவென்பதை நினைவுப்படுத்த உள்ளே நுழைந்தவள் வாசல் பகுதியிலேயே ஆணியடித்ததை போல நின்றுவிட்டாள்.
இருவருக்குமான பேச்சுக்கள் பெரிதாய் நெருக்கமானதாக இருந்ததில்லை. அப்படியிருக்க இன்று அவனின் மனைவியாக இங்கே அடுத்து என்ற அச்சம் அவளை சூழ்ந்துகொண்டது.
ட்ராலியை அறைக்குள் கொண்டு சென்று வைத்துவிட்டு வெளியே வந்தவன் ஷ்ராவணி நிற்பதை பார்த்து,
“என்ன டோர்கிட்டையே நின்னிட்டிருக்க நிலா? உள்ள வந்து லாக் பண்ணு…” என்றான்.
“ஹாங்…” என அவனை திடுக்கிட்டு பார்க்க,
“என்ன முழிக்கிற?…” என கேட்டுக்கொண்டே,
“நகரு…” என்று அவளை நகர்த்தி கதவை பூட்டி தாழிட்டான்.
“என்னாச்சு நிலா?…” அவள் இன்னும் அரண்ட கோலத்தில் நிற்பதை கண்டு கேட்க,
“ஒன்னுமில்லையே?…” என்றாள் பதட்டத்தை மறைத்தபடி.
“டின்னர் என்ன வேணும்? வீட்ல நான் குக் பன்றதில்லை. அப்பப்ப காபி, டீ. இன்ஸ்டன்ட் காபி பவுடர், டீயும் டீ பேக் தான் யூஸ் பண்ணுவேன். உனக்கு எப்படி வேணுமோ அப்படி யூஸ் பண்ணிக்கோ…” என்று சொல்ல,
“தண்ணி, தண்ணி வேணும்…” என்றாள்.
“ப்யூரிஃபய்ர் ஆன் பன்றேன். இப்ப கொண்டுவந்த பாட்டிலை ப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன். எடுத்து குடி…” என சொல்லிவிட்டு கிட்சன் பக்கம் நகர்ந்தான் வம்சி.
கிட்சனை ஒட்டியிருந்த டைனிங் டேபிள் பக்கம் ப்ரிட்ஜை நோக்கி சென்றாள் அவனை கவனித்துக்கொண்டே.
“என்னை பார்த்துட்டு போய் ப்ரிட்ஜ்ல முட்டிக்காதரா…” என கிண்டலுடன் அங்கிருந்து சொல்ல,
“கிட்சன் எப்படி இருக்குன்னு பார்த்தேன்…” ஷ்ராவணியும் உடனே பாவனையை மாற்றிவிட்டு ப்ரிட்ஜை திறந்து பாட்டிலை எடுத்தவள் எடுத்த வேகத்தில் உள்ளே வைத்து பூட்டிவிட்டாள்.
உள்ளே சமைக்க தயாராக, மசாலுடன் அத்தனையும் அசைவ உணவுகள் பாக்கெட்டுடன் இருந்தது. பார்த்ததும் அதனை ஒட்டிய வாட்டர் பாட்டிலையும் உள்ளே வைத்துவிட்டாள்.
“ஹேய் என்னாச்சு? குடிக்கலையா?…”
“ஹ்ம்ம், இல்லை, சில்லுன்னு இருக்கு. நான் அப்பறமா குடிக்கேன்…” சமாளித்துவிட்டு வந்தமர்ந்தவள் முகமே சரியில்லை.
“நிலா…” என வம்சி அவளருகே வந்து நிற்க,
“அது ஒண்ணுமில்லை. உடனேன்னும் போது. ஒருநிமிஷம்…” என சொல்லும் முன் வியர்த்துவிட்டது.
“ப்ரோசன் சிக்கன் பார்த்துட்டு தான் நீ குடிக்காம வந்தன்னு தெரியும்…” வம்சி கண்டுகொள்ள,
“வெளில எல்லாம் ஒன்னும் தெரியலை. வீட்டுல பக்கத்துலன்னும் போது. பழகிப்பேன்…” என்றாள் மெல்லிய குரலில்.
“எப்படி? சமைக்கவுமா?…” என கேட்டதும் திடுக்கிட்டு முறைத்து பார்க்க,
“இத்தனை நாள் இதெல்லாம் நமக்கு தோணவே இல்லைல?…” என்றான் அவளை டைனிங் டேபிள் சேரில் அமர வைத்து.
“ஹ்ம்ம்…”
“எங்க நமக்கு தான் சண்டை போடவே சரியா இருந்ததே?…” அதையும் சிரிப்போடே சொல்ல,
“கோவம் வரலையா?…” என அதிமுக்கியமான கேள்வியை கேட்டாள்.
ஷ்ராவணி ஒரு வியந்த பார்வையுடன் சொல்லவும் இன்னும் வாய்விட்டே சிரித்தான் வம்சி.
“அப்ப ஒரு டென்ஷன், அதனால வந்த எரிச்சல். அது நிறைய கோபத்தை குடுத்துச்சு. இப்ப இன்னைக்கு அப்படி எதுவும் தோணலை…”
“நிஜமாவா?…”
“ஹ்ம்ம், வேற பொய்யா?…”
“ஆமா, நீங்க பொய் சொன்னதே இல்லையாக்கும்? எங்க வீட்டுல உண்மையை சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும்…” அவனை முறைத்துக்கொண்டே ஷ்ராவணி சொல்ல,
“இப்பவும் சொல்றேன், நான் யூஸ் பண்ணிக்கிட்டேன் தான். அதுக்காக பொய் சொன்னேன்னு சொல்லாத? உங்கப்பா சரியா கவனிக்கலை. உங்கம்மாவும் பேசவும் உங்கப்பாவுக்கு மனசு மாறுச்சு…”
“அது நிஜமா நான் பாய்சன் சாப்பிட்டேன்னு…”
“நீ வெளில சில இடங்கள்ல சாப்பிடறதை பாய்சன் மாதிரி தானே பார்ப்ப. அப்ப கரெக்ட் தான்…” என்று சிரிக்க,