“அவசியப்படலை. இனியும் படாதுன்னு தான் நினைக்கறேன். உனக்கு நம்பர் ஞாபகமில்லைன்னா சொல்லு, நான் சொல்றேன்…” என்றுவேறு சொல்ல ஷ்ராவணிக்கு அவன் தலையில் நங்கென்று கொட்டினால் என்றவென்று வந்தது.
ஷ்ராவணியிடம் சாந்தினி, அவரின் பிள்ளைகள் என எல்லோரின் அலைபேசி எண்ணும் பதிந்திருக்க, இப்படி தன் கணவன் தன் பெற்றோரின் எண்ணை கூட மொபைலில் இணைத்துகொள்ளவில்லையே என்று சுணக்கம் வந்தது.
“பேசலையா நீ?…” என்று எழுந்தவன் ஷர்ட்டை கழற்றிவிட்டு உடை மாற்றி வந்தான்.
“அவங்க சைட் கூப்பிடவா? இல்லை நம்ம பக்கம் கூப்பிடவான்னு தெரியலை க்கா. அதான் அங்கிள்ன்னு சொன்னேன்…”
“அவன் சொன்னதுல என்ன தப்பு? எல்லாம் காலாகாலத்துல நடக்கனும். அவன் வார்த்தைக்கு சொன்னாலும் என்னை அங்கிளாக்கி தான் என்னை மேரேஜே பண்ணிருக்க நீ…” என்றான் வம்சி.
“நானா?…” ஷ்ராவணி முறைக்க,
“தப்பு. தப்பு. நீயா பண்ணிப்பியா என்ன? நான் தான் செஞ்சுகிட்டேன். இதுல அங்கிள்ன்னு கூப்பிட்டதுல உனக்கு குறையா போச்சோ? விட்டா அவனும் தாத்தா சொல்லிருப்பான்…” என சொல்ல,
“சண்டை போடறீங்களா நீங்க?…” என சந்துரு பதறிவிட்டான் அப்பக்கம்.
“அதெல்லாம் இல்லைடா. சரி நீ உன் அக்காக்கிட்ட பேசு….” என சொல்லிவிட்டு ஷ்ராவணிக்கு தண்ணீர் எடுத்து வர சென்றான்.
ஷ்ராவணியும் பேசிக்கொண்டே அந்த வீட்டை சுற்றி பார்த்துவிட்டு கடைசியாக கிட்சனுக்கு வர வாசலில் பெல் சத்தம்.
“நான் போய் பார்க்கறேன்…” என வம்சி கிளம்பவும் போனை வைத்துவிட்டு வர ஒரு கவருடன் உள்ளே வந்தான் வம்சி.
“கீழே ஷாப்க்கு கால் பண்ணிருந்தேன். ப்ரெட், வெர்மிச்சில்லி பாகெட், பால் எல்லாம் குடுத்துட்டு போறாங்க…” என காண்பித்தபடி உள்ளே வந்து வைத்தான்.
“டின்னர் வேண்டாம்ன்னு சொல்லிட்ட. ஆனா பசிக்குமே? என்ன வேணும்?…”
“பால் மட்டும். வேற சாப்பிடலை…”
“தண்ணி குடிச்சாச்சா?…”
“ஹ்ம்ம்…” என்றவளுக்கு ப்ரெட்டை டோஸ்ட் செய்து நீட்டியவன்,
“எதாச்சும் வேணும்னா செஞ்சுக்க. எனக்கு வேற தெரியாது…” என்று கை விரித்தவன் டோஸ்டரில் தனக்கு ரெடி செய்தான்.
“ம்ஹூம், ஹெவியா சாப்பிடற மூட் போய்ருச்சு. இது போதும்…” என்று வந்து அமர்ந்துவிட்டான்.
உண்டு முடித்து நெட்டிமுறித்தவன் ஆனந்திற்கு அழைத்து பேச அவனின் வீட்டில் உள்ளவர்களிடம் ஷ்ராவணியும் பேசி முடிக்க தனது மொபைலையே பார்த்துகொண்டு இருந்தாள் அவள்.
“ஓகே தூங்கலாமா?…” என்று எழுந்து அறைக்குள் செல்ல அவனுடன் போனை பார்த்துக்கொண்டே தானும் சென்று அமர்ந்தாள்.
“என்னாச்சு, இன்னும் டல்லா இருக்க நிலா?…”
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை…”
“தப்புரா, என்ன சொல்லு…”
“அம்மாவுக்கு கால் பண்ணேன். எடுக்கலை…”
“ஓஹ்…” என்றவன் வேறொன்றும்பேசவில்லை.
அதற்குள் மீண்டும் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வரவும் ஷ்ராவணி வம்சியை பார்க்க,
“பேசு…” என்று பால்கனி கதவை திறந்துகொண்டு சென்றான்.
ஐந்து நிமிடமாகியிருந்தது. ஷ்ராவணியே வந்துவிட்டாள் அவனை தேடி அங்கே பால்கனிக்கு.
“பேசிட்டேன்…” என பின்னிருந்து சொல்ல,
“ஓகே…” என்றான்.
“அம்மா தான். அப்பா இன்னும் கோபமா இருக்காங்களாம்…”
“ஓஹ்…” என்றவன் அவளை தன் கை வளைவிற்குள் கொண்டுவர அதையும் உணரும் நிலையிலில்லை ஷ்ராவணி.
தான் சொல்லுவதை கவனிக்கிறானா இல்லையா என்பதே அவளின் பெரும் கவலையாகி இருக்க வம்சியின் முகத்தை கவனித்தபடி பேசினாள்.
அவனின் தொடுகை, அருகாமை எதுவும் இன்னும் அவளின் அடிமனதை அடையவில்லை. அவனின் கைகளுக்குள் நிற்பது கூட தெரியவில்லை.
சுலோச்சனா பேசியவையும், அங்கே வீட்டு சூழ்நிலையும் மட்டுமே இப்போதைய நினைவாகி போக,
“நமக்கு இன்னைக்கு தான் கல்யாணமாகியிருக்கு. ஆனா அந்த பீல் சுத்தமாவே இல்லை எனக்கு…” என சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்லவும் வம்சியின் விழிகளில், தொடுகையில் மாற்றம்.
இப்போது ஆறுதலான தொடுகை ஆசையுடன் அழுத்தத்தை கூட்ட ஷ்ராவணி இன்னும் ஊரில் சென்றதிலிருந்து நடந்தவற்றை அவனிடம் சொல்ல என எப்போது உள்ளே வந்தார்கள் என்றும் கூட கவனத்தில் கொள்ளாமல் கதை பேசிக்கொண்டிருந்தாள்.
“ஹ்ம்ம், அப்பறம்…” என கேட்டு கேட்டு வம்சி மொத்தமாய் அவளை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்திருந்தான்.
“ஒன் செகேன்ட் ரா தல்லி…” என்றவன் அவளின் பேச்சுக்களுக்கு சில நொடி ஓய்வை கொடுக்க அவளிதழ்களோடு தொடுத்து பிணைய இப்போது முற்றிலும் ஸ்தம்பித்த நிலை ஷ்ராவணியினது.