ராமேஸ்வரம் நெருங்கும் வரை ஷ்ராவணி எதுவும் பேசாமலே வர அவளிடமிருந்த பைலை கேட்டான் வம்சி சைத்ரயேஷ்.
“என்ன?…” என அவள் புரியாமல் பார்க்க,
“ஆ ஃபைல் நாக்கு இவ்வு…” என அந்த மெடிக்கல் பைலை தன்னிடம் தர சொல்லி கேட்க அவள் தராமல் பார்த்தாள்.
“பைலை குடு, இதை வச்சு உனக்கு தான் பிரச்சனையாகும். மெடிசின்ஸ், ப்ரிஸ்க்ரிப்ஷன் மட்டும் எடுத்துக்கோ…” என சொல்லவும் தான் அவன் கூறியதன் அர்த்தமே புரிந்தது.
“ஓகே…” என பைலை நீட்ட வாங்கிகொண்டான்.
“அவசரானிக்கி ஏ பேர் செப்பலானிக்கி தெல்லேது. உன் பேரும் தெரியாது. அதான் தோணினதை சொல்லிட்டேன்…” என்றான் விளக்கம் போல.
“ஹ்ம்ம், சரி…” வேறு எதுவும் பேசவில்லை அவள்.
மனதெங்கும் தங்கள் வீடும், அங்கு என்ன நிலவிக்கொண்டிருக்குமோ என்னும் பதட்டமுமே நிரம்பியிருந்தது.
“ஏன்ட்டி மா இதி?…” என்றான் சலிப்பாய் அவள் பேசாமல் வருவதை கண்டு.
“என்ன? என்ன கேட்டீங்க?…” ஷ்ராவணி அவனிடம் கேட்க,
“உனக்கு என்னாச்சு? இப்ப வீட்டுக்கு போய்டுவ. எதுக்காக இந்த நெவர்ஸ்?…”
“ஹாங் அதொன்னுமில்லை, வீட்ல அப்பா என்னை காணுமேன்னு போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டாங்க போல?…”
“அது உன்னோட கேர்லெஸ்…” என்றான் உடனே.
உண்மை என்றாலும் ஏற்க முடியவில்லை. இவனுக்கு என்ன தெரியும் தன்னுடைய நிலை என்று தான் நினைத்தாள்.
“உன் அப்பா என்ன பன்றார்?…” அவனே கேள்வி எழுப்ப,
“கோவில்ல வேலை. அம்மா ராமேஸ்வரம் டூரிஸ்ட்க்கு வர ஃபேமிலிக்கு சாப்பாடு செஞ்சு தருவாங்க. ஒரு அக்கா இப்ப ரீசண்டா கல்யாணமாகிருக்கு. தம்பி ஸ்கூல் படிக்கிறான்…”
அவன் கேட்ட ஒரு கேள்விக்கு வரிசையாக வந்தது அவளிடமிருந்து இந்த பதில்கள்.
“அப்பாவுக்கு கஷ்டம், அவர் சம்பாத்தியம் பத்தலை. அம்மா இப்படி சமைச்சு குடுத்து வருமானம் பார்க்க ஆரம்பிச்சு சேர்த்து வச்சதை வச்சு, கொஞ்சம் கடன் வாங்கி அக்கா கல்யாணத்தை முடிச்சு வச்சாங்க. அத்திம்பேர் அதே ஊர் தான். அப்பா மாதிரி தான் வேலை…”
“இப்ப நான் படிப்பு முடிக்கவும் வேலைக்கு ட்ரை பண்ணேன். காலேஜ்ல எந்த கேம்பஸ் இண்டர்வ்யூவும் வரலை. அதான் எழுதி போட்டிருந்தேன். இப்ப கிடைச்ச வேலை நல்ல கம்பெனி. ஓரளவுக்கு சம்பளம். இப்போதைக்கு அதுவே போதும்ன்னு தோணுது…”
“அங்க போய்ட்டு திரும்பி வரும் போது தான் மிஸ் பண்ணிட்டேன். ட்ரைவர், கிளீனர் யாரும் நான் இறங்கறதை பார்க்கலை. நானும் போய்ட்டு வந்திருவோம்ன்னு பார்த்தா என் நேரம் இப்படியாகிட்டு…”
“வேற பஸ்ல போக கைல எதுவுமில்லை. அப்ப தான் மூவ்வாச்சு பஸ். அதான் துரத்திட்டு போய் கீழே விழுந்து அடிபட்டுச்சு…”
அமைதியாய் தலையை கவிழ்ந்தபடி பேசிக்கொண்டே அவள் இருக்க கண்ணிலிருந்து முத்து முத்தாய் நீர் துளிகள் உதிர்ந்து கொண்டிருந்தது.
அத்தனையும் அவளறியாமல் பேசியிருந்தாள் என்பதை வம்சி புரிந்துகொண்டான்.
“நிலா…” என்றவன்,
“ப்ச், ஓகே, ஷ்ராவணி…” என்றான் அவள் பெயரை திருத்தி.
“நான் நீங்க செலவு பண்ணினதை கண்டிப்பா திருப்பி தருவேன். ப்ளீஸ் நோ சொல்லாதீங்க…” என அவள் சொல்லியவிதம் அவனுக்கும் மறுக்க தோன்றவில்லை.
“ஓகே, சென்னைக்கி ஒஸ்துன்னாவு காதா? அப்புடு தீஸ்குண்ட்டான்னு நேனு…” என சொல்லவும்,
“சென்னைக்கு?…” அவள் திருதிருவென்று விழிக்க,
“சென்னைக்கு வரும் போது வாங்கிக்கறேன். போதுமா?…” என விளக்கம் சொல்ல சமாதானமானதை போல முகம் தெளிய தன் விழிகளை நகர்த்திக்கொண்டான் வம்சி.
‘ஆ பில்லக்கு சாலா செல்ப் ரெஸ்பெக்ட்’ என நினைத்துக்கொண்டவன் பேச்சை வளர்க்கவில்லை.
பசி வேறு வயிற்றை கிள்ளியது. அவள் இப்போதைக்கு உண்ணவும் போவதில்லை என தெரிந்து அமைதியாக வந்தான்.
வழியில் இருவருக்கும் தனி தனியே வாட்டர் பாட்டில்களும் வாழை பழமும் வாங்கிக்கொண்டான்.
“தீஸ்க்கோமா…” என அவளிடம் சொல்ல தயங்கி வாங்கிக்கொண்டாள்.
ஏதோ வேகத்தில் அவன் கேட்காததையும் சேர்த்து உளறி வைத்திருக்க தன் மீதே அத்தனை கோபமாக வந்தது.
அவனை திரும்பி பார்க்கவும் முடியவில்லை. தன்னை, தன் குடும்பத்தை குறித்து என்ன நினைப்பான் என்று தோன்றியது.
இதில் அவனின் அதிகாரமான அதட்டல் பேச்சுக்கள் வேறு அவளை வருத்த முதலில் அவனிடம் பணத்தை தந்துவிட வேண்டும் என மீண்டும் மீண்டும் நினைத்தபடி வர பெரிய சாலையை கடந்து அவள் சொல்லிய வீதிக்குள் நுழைந்தது கார்.
வீட்டின் முன்னால் அக்கம்பக்கத்தினர் சிலர் சலசலத்தபடி இருக்க கார் வந்து நிற்கவும் அனைவரின் பார்வையும் அதில் நிலைத்தது.
“வணிக்கா…” என சந்துரு வந்து விட்டான் ஓட்டத்துடன்.
“என் தம்பி சந்துரு…” என வம்சியிடம் ஷ்ராவணி சொல்ல தலையசைத்தான்.
“அம்மா சொன்னாங்க உனக்கு ஆக்சிடன்ட்ன்னு. என்னக்கா? பார்த்து இருக்கனும்ல…” என்றவன்,
“உள்ள வாங்க ஸார்…” என்று அழைக்க அதற்குள் தாய் சுலோச்சனா வந்துவிட்டார்.
“அப்பா எங்கம்மா?…” தாய் பேசும் முன் மகள் கேட்க,
“ஓகே, பை…” என்று வம்சி மீண்டும் காரில் ஏற முயன்றான்.
“தம்பி நில்லுங்க. ரொம்ப ரொம்ப நன்றி தம்பி…” என சுலோச்சனா கையெடுத்து கும்பிட்டார்.
“இட்ஸ் ஓகே…” என தோள் குலுக்கிக்கொள்ள,
“தம்பி நீங்களா?…” என்ற சத்தத்தில் அப்போது தான் தடுமாற்றத்துடன் வந்தவரை கவனித்தான்.
“நீங்க…” வம்சி கேட்க,
“என் பொண்ணு தம்பி…” என்றார் வெங்கடராமன்.
“நல்லாயிருக்கே, தெருவே பாத்து சிரிக்குது. முதல்ல உள்ள வாங்க. ரோட்டுல தான் அவ்வளோ பேச்சும்…”என்று ஒரு பெண் கோபத்தை கொட்டிவிட்டு செல்ல ஷ்ராவணியை பார்த்தான் வம்சி.
“தம்பி தம்பி. நில்லுங்க தம்பி. எங்க பொண்ணை காப்பாத்திட்டு இப்படியே கிளம்பறீங்களே? வீட்டுக்கு உள்ள ஒரு எட்டு வந்துட்டு போங்க…” என சுலோச்சனா மனமில்லாமல் கேட்கவும் ராமனும் அழைத்தார்.
“வாங்க தம்பி…” என்று.
மறுக்க முடியாமல் வம்சியும் யோசனையுடனே உள்ளே சென்றான். தெருவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்னும் முணுமுணுப்புடன் நிற்க,
“வேற வேலையே இல்ல…” என்றான் சந்துரு அவர்களை பார்த்து.
மிக மிக சின்ன வீடு தான் ஷ்ராவணியுடையது. சமீபத்தில் வெள்ளையடித்திருக்க பெரிதாய் ஒட்டுதலில்லாததை போல தான் அதுவும் காட்டியது.
சரியாய் அடிக்காமல் இங்குமங்கும் ஈஷியதை போல தெரிந்தது. அவனின் பார்வைக்கு எல்லாமே தெரிய அமைதியாக தலையை குனிந்து உள்ளே நுழைந்தான்.
“உக்காருங்க தம்பி…” முன்னில் இருந்த முற்றம் போன்ற ஒரு வெற்றிடம்.
ஸ்டூல் ஒன்றை எடுத்து போட்டு அவனை சந்துரு அமர சொல்ல அங்கொருவன் இன்னொரு நாற்காலியில் சட்டமாய் அமர்ந்திருந்தான்.