அவளின் முகத்தை வருடி அதிர்வை உணர்ந்து மென்மையாய் கைகளுக்குள் கொண்டுவந்திருக்க விளக்குகள் அணைக்கப்பட்டு மெல்லிய வெளிச்சமும், அதில் அவனின் முகத்தின் நெருக்கமும் ஷ்ராவணியை நிலைகுலைய செய்தது.
மெல்ல கண்களை மூடிக்கொண்டவள் அதனை ஸ்வீகரிக்க முற்பட அவளிடம் மெல்லிய திணறல்.
“என்னை ரஃப் அன்ட் டஃப், லவ்க்கு செட்டாகமாட்டேன்னு சொன்னியே. இப்ப சொல்லு. என்ன பீல் பன்ற? நான் ராஃபா?…” என கேட்டவனின் அணுகுமுறையிலும், மென்மையிலும் மெழுகாய் கரைந்துகொண்டிருந்தாள்.
இன்று எதையும் ஏற்கும் அளவிற்கு தன் மனது இடம் தராது என்பதற்கு எதிராய் மொத்தமாய் அவனுக்குள் உருகிக்கொண்டிருந்தாள் ஷ்ராவணி.
“எதாச்சும் பேசு ரா?…” என்று வம்சி அவளோடு முகம் வைத்து இழைய,
“ஹ்ம்ம்…”
“நிலாரா செப்பு….”
“நாம எப்போ ரூம்க்குள்ள இங்க வந்தோம்?…” என்று அவள் கேட்கவும்,
“டேய்…” என்று சிரித்துவிட்டான் வம்சி.
“எனக்கு நிஜமா தெரியலை…”
“அதான் வந்துட்டோமே. சொல்லு, பீல் பன்றியா? இன்னைக்கு தான் நம்ம பெல்லி. நிலா மை வொய்ப்….” என சொல்லி சொல்லி கொஞ்சி கொண்டாடினான் அவளை.
வம்சியின் இந்த முகம் முற்றிலும் எதிர்பார்க்காதது. அதுவும் அவனின் பேச்சுக்கள் பாதி புரியவும் இல்லை.
என்னவோ சொல்கிறான். அந்த வர்ணனைகள் பிதற்றலோ, மயக்கமோ, கிறக்கமோ என பிரித்தறியமுடியாமல் ஒரு உலகிற்குள் மூழ்கிக்கொண்டிருந்தாள் ஷ்ராவணி.
பேசிய வார்த்தைகள் தெலுங்கில் பேசியவை எதுவும் புரியாமல் அதில் ஒருபக்கம் கவனம் வைக்க,
“உன்னை ஹேண்டில் பன்றது கஷ்டம்ன்னு நினைச்சேன் ரா. பட் யூ ஆர் சோ ஸ்வீட் தல்லி…” என கொஞ்ச,
“எப்ப உள்ள வந்தோம்ன்னு கூட சொல்லலை. ஏன் கேட்கவே இல்லை என்கிட்டே…”
“ஓகே, இப்ப கேட்கவா?…” என மீண்டும் அவளை அனைத்து தன் மீது போர்த்திக்கொள்ள,
“அவ்வளோ ஈஸியா நான்?…”
“நீ கொஞ்சம் வெய்ட்லெஸ் தான். அதான் டக்குன்னு மூவ் பண்ணிட்டேன்…”
“நான் என்ன கேட்கறேன்?…”
“இப்ப என்ன நடந்தது, எப்படின்னு தெரியனுமா என்ன?…”
“ஆமா…”
“நான் கதையா சொன்னா நீ நம்பமாட்ட. அதனால…”
“அதனால?…” என்றவள் கன்னத்தை வருட ஷ்ராவணி விழிகள் மெல்ல மூடியது.
“நெக்ஸ்ட்…” என்று கன்னத்தில் இதழ் பதிக்க அவனின் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டவள் அவன் ஒவ்வொன்றாய் அடுத்த கட்டத்திற்கு நகர மீண்டும் ஒரு ஆலாபனை.
“இதான்ரா நடந்தது…” என்றான் குறும்பு புன்னகையுடன்.
“ஹாங்…” என திகைத்தவள் எழுந்தமர்ந்து பில்லோவை கொண்டு அவனை மொத்தினாள்.
“பிராட், சீட்டர் எவ்வளவோ பன்றீங்க…” என்று மொத்த,
“நீ தானே கேட்ட? அதான் உனக்கு சொன்னா புரியாது, நம்ப மாட்டன்னு…” என்று அவளை வம்பிழுத்தபடியே இருந்தான்.
இன்னும் நம்பமுடியாமல் அவனையே பார்த்த ஷ்ராவணியின் பாவனையில் மென்னகை புரிந்தவன்,
“நான் பேசாம தான் இருந்தேன். நீ தான் பீல் பண்ணலைன்னு சொன்ன? அதான் எனக்கு பீலாகிருச்சு. சரி சேர்ந்தே மேரேஜ் லைஃபை பீல் பண்ணுவோம்ன்னு. அவ்வளோ தான் நிலா…” என அப்பாவியை போல.
“சாதிக்கறீங்க? இதுவா அந்த பீலிங்?…”
“இல்லையா?…” என கேட்டவன் அவளை தன் மீது சாய்த்துக்கொள்ள,
“சூடு நிலா….” என்றவன் குரல் பேதத்தில் அவனை நிமிர்ந்து பார்க்க,
“அப்பறம் என்ன? கூல். ஒருநிமிஷம் பயந்துட்டேன்…” பயந்ததை போல வம்சி சொல்ல,
“யார் நீங்க? நம்பவே மாட்டேன்….”
“சரி நம்பனும்னா என்ன செய்யனும்?…” என்றவன் விஷமத்தில்,
“ஒன்னும் வேண்டாம். தூங்கனும்…” என்றாள் உஷாராக.
“யூர் விஷ் ரா தல்லி. நம்ப முடியலைன்னு டவுட் வந்தா என்னை எழுப்பு….” என சொல்லியவன் உடல் சிரிப்பில் குலுங்க அவனின் கன்னத்தை வலிக்க கிள்ளினாள்.
“அப்ப தள்ளுங்க…” என்றவள்,
“முதல்ல நீங்க பேசினதை எல்லாம் கூகுள் பண்ணனும்…” என மொபைலை தேட,
“நோ…” என்றவன் அவளில் கை பிடித்து நிறுத்தினான்.
“ஏன்? எனக்கு ஓரளவு ஞாபகமிருக்கு…”
“நோ ரா. நா தல்லி கதா…” அவளின் முகம் பற்றி கெஞ்சலுடன் கொஞ்ச,
“இந்த தள்ளிவிடற கதையெல்லாம் சொல்லாதீங்க. நீங்க தான் கத்து தரேன்னு சொன்னீங்களே?…”
“நாளையில இருந்து. இப்ப கத்துக்கற நேரமில்லை…” என்றவன் அவளை அதன்பின் மொபைலை எடுக்கவே விடவில்லை.
“மஞ்ன்சி பில்லாடா நிலா…” என்று சொல்ல ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் கேட்பதும் அவன் சொல்லுவதும் என்று புன்னகையும் பூரிப்புமாய் ஒரு இல்லறம்.
கார்முகிலன் எண்ணவண்ணம் காதலென்னும் தூரிகை கொண்டு காரிகையின் உயிர் சேர துளித்துளியாய் தேன்வார்த்தது அவர்கள் இணைவு.
அதிகாலை பொழுது அலுங்காமல் விடிய டெல்லியின் பரபரப்பு அந்த வீட்டிற்குள் நுழையவே இல்லை.
இன்னும் விலக்கபடாத திரைஜன்னல்கள் வெளியிலிருந்து வெளிச்சத்தை ஊடுருவ அனுமதிக்கவில்லை.
சோம்பலுடன் கண்களை திறந்த ஷ்ராவணி நேரத்தை பார்த்துவிட்டு பதறி அமர்ந்தாள்.
இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோம் என அடித்துபிடித்து குளித்து வர வெளியே அன்றைய நாளிதழில் சீரியசான முகபாவனையுடன் வம்சி அமர்ந்திருந்தான்.
“குட்மார்னிங் நிலா…” என்று அவள் வரும் அரவத்தின் நிமிர்ந்து பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் செய்தித்தாளை புரட்ட,
“லேட்டாகிருச்சா?…” என்றாள் கையை பிசைந்துகொண்டே.
“லீவ் தானே? நோ ப்ராப்ளம். காபி கலந்துக்கோ. இன்னும் ரெண்டு பேஜ் முடிச்சுட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு அவன் பேப்பரில் மூழ்க ‘என்ன இப்படி இருக்கிறான்?’ என்ற யோசனை செய்தபடி கிட்சனுக்குள் நுழைந்தாள்.
முந்தைய நாளுக்கும், இப்போது பார்ப்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாது முந்தைய நாளின் சுவடுமின்றி அவனிருக்க திரும்பி திரும்பி பார்த்தாள்.
ஸ்டவ்வில் ஏற்கனவே பால் காய்ச்சப்பட்டு இருக்க மீண்டும் சூடு செய்தவள் காபி பவுடரை தேடிக்கொண்டிருக்க பின்னிருந்து அணைத்தான் வம்சி.
“போங்க போங்க. நீங்க, உங்க முகம் ரொம்ப சீரியஸா இருக்கவும்…”
“இருக்கவும்?…” என்று தன் பக்கம் திருப்பியவன்,
“பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். நீ வரவும் என்ன பன்றன்னு தான் சீரியஸா பார்த்தேன். அது கூட முடியலையாமா?…” என்று கிண்டலுடன் சிரித்தான்.
“வேணும்னு பண்ணிருக்கீங்க…”
“ஹ்ம்ம், நிலா வேணுமேன்னு தான்…” என்றவன் அவளை தூக்கி சுழற்றியவன்,
“இப்படி ஒரு மார்னிங் என் லைப்ல பர்ஸ்ட் டைம் ரா தல்லி. சச் எ வொண்டர் ஃபுல் மார்னிங். தேங்க்ஸ் அ லாட் ரா பொம்மாயி. இது டெய்லி வேணும்…” என்றான் அவளின் நெற்றியில் முட்டி.
இந்த வம்சி இன்னும் புதிது. இப்படி ஒரு பாவனையை என்றும் கண்டந்தில்லை. காதலை தாண்டிய உணர்வுடன் ஒரு எதிர்பார்ப்பு அவனிடத்தில்.
என்றுமே தான் மட்டுமே அவனிடத்தில் எதிர்பார்ப்பு வைத்திருக்க அவனிடம் கண்டதே இல்லை அப்படி ஒரு உணர்வை.
உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை. காட்டப்படுவதும் மறைக்கப்படுவதும் நிகழ்வுகளை பொறுத்தே.
வம்சியிடம் இவ்வளவு மென்மையும், நெகிழ்வும் ஷ்ராவணிக்கு ஆச்சர்யங்களை தான் தந்தது.
“நிலா…” என்றவனின் ஒவ்வொரு தீண்டலும் உயிரை சிலிர்க்க செய்ய அவளுக்குமே அந்த காலை வேளை நெஞ்சத்தை நிறைக்க செய்தது.