“ஹ்ம்ம், சும்மா…” என தோள் குலுக்கிகொண்டவளுக்கு அவள் எதிர்பார்த்தது கிடைத்துவிட்ட உணர்வு.
பேச்சில் வெறுமனே திருமணம் செய்வோம், தனியாக முடியவில்லை என்று சொல்வதை விட இப்படி இந்த பொழுதுகள் எப்போதும் வேண்டும் என வேண்டி எதிர்பார்த்து நிற்பவனின் இந்த முகம் மிக பிடித்திருந்தது.
அதில் முழுதாய் கவரப்பட்டவள் வசியத்திற்குட்பட்டவளாய் இன்னும் ஆழ அவனை பார்க்க வம்சிக்கு அவளின் பார்வை வித்யாசமாய் தெரிந்தது.
“நிலா?…” என்றான் புரியாமல்.
“எனக்கும் இந்த மார்னிங் ரொம்ப ஸ்பெஷல் தான்…”
“நிஜங்கா?…”
“நிஜங்கா நிஜங்கா…” என வேகமாய் தலையாட்டி.
“ஹ்ம்ம், எப்பவும் வெடிங்க்கு மறுநாள் எல்லாருக்கும் ஸ்பெஷல் மொமென்ட் தான். ஆனா இப்படி இருந்திருப்பாங்களான்னு தெரியலை…” வம்சியிடம் குறுஞ்சிரிப்பு.
“ஏன்?…”
“பின்ன ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிக்கலாம், இல்லை வெக்கப்படலாம். ஆனா நம்மோட மார்னிங் லுக்…” என்று நினைத்து வாய்விட்டு சிரிக்க,
“எல்லாம் உங்களால தான்…” என்று அவனின் தோளில் அடித்தாள்.
“நீ இன்னும் ஸ்ட்ராங்கா அடிச்சாலே எனக்கு வலிக்காது. இதுல சும்மா தட்டிவிட்டு நிக்கிற நீ?…” என்று சிரிக்க,
“எத்தனை நாளைக்கு வாங்கனும்?…” என கேட்க வம்சி அவளை திடுக்கிட்டு பார்த்தான்.
“வாட்?…” என வம்சியின் முகம் மாற,
“இல்லை எத்தனை நாளைக்கு பொருள் வாங்கி வைக்கனும்? நீங்க உங்களுக்கு சமைக்க தெரியாதுன்னு வேற சொன்னீங்க. அதான் யூஸ் பண்ணலைன்னா வீணாகிடுமே?…”
“ஓஹ், ஹ்ம்ம்…” என்றவன் ஒன்றும் பேசவில்லை.
கார் பார்க்கிங் வரும் வரை அவன் மௌனமாக வர முகமெல்லாம் வாடிவிட்டிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது.
பேசுவான் பேசுவான் என நினைத்து முகத்தை திரும்பி பார்த்தபடி வந்தவள் கடைசியில் தானே பேசினாள்.
“கீழே தான் ஷாப் இருக்குன்னு சொன்னீங்க? இப்ப கார்ல போறோமா?…” என்று கேட்கவும் அவன் தலையை மட்டும் அசைத்தான்.
“அப்போ ஷாப்பிங்?…” என கேட்டபடி காரை நெருங்கும் முன் ஷ்ராவணி கால்கள் இடற கீழே விழாமல் அவளை பிடித்து நிறுத்தியவன்,
“எத்தனைதடவை சொல்றது? பார்த்து வரமாட்டியா?…” என்றான் அதட்டலாக.
சட்டென அவள் கண்ணில் நீர் கண்டுவிட அதிர்ந்து சுதாரிக்கும் போது அங்கே வேறு யாரும் பார்த்தனரா எனவும் கவனித்துக்கொண்டாள்.
பார்க்கிங் என்பதால் அவ்விடத்தில் பெரிதாய் ஆட்கள் இல்லை. ஆனாலும் அவன் சட்டென பேசிவிட்டதில் முகம் கன்றிவிட்டது.
“கால் வலிக்குதா?…” என்றான் அவள் அசையாமல் நின்றவிதத்தை பார்த்து.
விழிகளில் நீர் கோர்த்து உருண்டு விழாவா என்றிருக்க அவனின் கேள்விக்கு பதில் கூட சொல்லமுடியாமல் அங்கேயே நின்றாள்.
“சரி இங்கயே நில்லு…” என்று காரை நோக்கி சென்றவன் உடனே கிளப்பிக்கொண்டு வந்து அவள் பக்கமாய் ஏறுவதற்கு வாகாய் நிறுத்தவும் அமைதியாய் அமர்ந்தாள்.
உள்ளே வந்தவள் அவனை பாராததை போல இருக்க மீண்டும் காரை எடுத்த இடத்தில் கொண்டு நிறுத்தினான் வம்சி.
“காலை காட்டு…” என்றான்.
“ஹாங், இல்லை வலிக்கலை…” ஷ்ராவணி மறுக்க,
“ப்ச், கண்ணீர் வந்திருக்குன்னா வலிக்காமையா? ஷோ மீ…” என்றவன் அவளை பின்னால் சாய்த்து கால்களை தூக்கி மடியில் வைத்து பரிசோதித்தான்.
“வலிக்குதா? இப்போ? இங்க ஏதாவது பெய்ன்?…” இப்படி பாதங்களை அழுத்தி வருடி கேட்க,
“விடுங்க, எதுவுமில்லை. இதுக்கு போய் காலை பிடிச்சுட்டு…” என கூச்சத்தில் நெளிந்தபடி அவனிடமிருந்து பாதங்களை உருவ முற்பட,
“ஏன் நான் பிடிச்சா என்ன? என் வொய்ப் கால். என் இஷ்டம். இதுல உனக்கென்ன கஷ்டம்?…”
“அச்சோ நாம இருக்கறது பார்க்கிங்…”
“சோ வாட் ரா தல்லி?…” என்றவன்,
“முத்தம் கூட குடுப்பேன். மை ரைட்ஸ்…” என்று சொல்லமுகம் பூவாய் மலர்ந்தது ஷ்ராவணிக்கு.
“ரொம்ப கோவமா இருந்தீங்க, எப்படி உடனே சேஞ்ச்?…” என்றாள் தலை சாய்த்து அவனை கேள்வியாய் பார்த்தபடி.
“ரெண்டுக்கும் நீ தான் காரணம் நிலா. ஏற்கனவே சொன்னது தான். என்னை என் கண்ட்ரோல் விட்டு வேற மாதிரி ட்விஸ்ட் பன்ற நீ. உன்கிட்ட மட்டும் என்னால கெத்து மெய்ண்டெய்ன் பண்ண முடியலரா…” என்றான்.
“இது உலகமகா நடிப்பு. வேற யாராச்சும் காதுல பூ சுத்தியிருப்பாங்க. அங்க சொல்லுங்க இந்த டயலாக்கை…” என கால்களை உருவிக்கொண்டு நேராய் அமர்ந்துகொண்டாள்.
“அது எதுக்கு வேற ஆளை பார்க்க? இங்க பில்டிங் முன்னாடியே பூ வச்சிருப்பாங்க. வாங்கி உன் காதுல வச்சு திரும்ப உன்கிட்டயே இதை சொல்றேன்…” என்று சிரிக்க,
“பாருங்க, நீங்களே ஒத்துக்கிட்டீங்க பொய்ன்னு…”
“நோ நோ. இப்பவும் பொய் சொல்லலை நிலா. நீ தானே பூ வச்சிருக்கறவங்கட்ட சொல்ல சொன்ன? உனக்காக தான் உனக்கே பூ வாங்கி வச்சு சொல்லுவோம்ன்னு சொல்றேன். இது எப்படி பொய்யாகும்?…”
“அதானே பார்த்தேன். நீங்களாவது செஞ்சதை ஒத்துக்கறதாவது?…” என்று உதட்டை சுளித்தாள்.