“பாரேன், நேத்தும் இப்படித்தான் நம்பவே இல்லை நீ. இப்பவும் நம்பலை. இதை நான் ப்ரூவ் பண்ணனும். இல்லைன்னா…”
“பீல் பண்ணுவீங்களா? அச்சோ முடியலை உங்களோட. நாம வந்து எவ்வளவு நேரமாகிடுச்சு. கிளம்புவோம்…” என்றவள்,
“பசிக்கலையா?…” என்றதும்,
“போலாம் போலாம்…” என்று காரை கிளப்பினான்.
சற்றுமுன் அங்கே வம்சிக்கு வந்த கோபம் போன மாயம் தெரியவில்லை ஷ்ராவணிக்கு.
அது கோபம் என்று மட்டுமே அவள் நினைத்திருக்க ஏமாற்றத்தின் முதல்படி என அவளுக்கு தெரியவில்லை.
வம்சி காட்டும் உணர்வுகளை அவளளவில் வகைப்படுத்தியிருந்தது ஒருசில மட்டுமே.
அக்கறை, கோபம், சந்தோஷம். சில நேரங்களில் காதல். அவ்வளவே. அதை தவிர வேறு என்ன இருக்கிறது அவனுக்கு என புரியவில்லை.
அவளே எதிர்பாராத புதிய உணர்வாய் எதிர்பார்ப்பை காலை வீட்டில் வைத்து கண்டுகொண்டவள் இப்போது ஏமாற்றத்தை கவனிக்க தவறினாள்.
தன் பேச்சு கோபப்படுத்தியிருக்கிறது என்று நினைத்தபடி இருக்க இப்போது சிரித்து பேசவும் சரியாகிவிட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
அந்த அப்பார்ட்மென்ட் வளாகத்தை விட்டு வெளியே வர அடுத்தடுத்த வீதிகளிலேயே ஹோட்டல்கள் தென்பட்டது.
“அதான் இங்க ஹோட்டல்ஸ் இருக்கே?…” என காண்பிக்க,
“ஏன் எனக்கு அது தெரியாதா?…” என்றான் அவளிடம்.
“ஓகே, நான் சொல்லலை…”
“மௌன விரதமா?…” என கேலியாய் அவன் சிரிக்க,
“உங்களை எப்படி டீல் பன்றதுன்னே தெரியலை மில்டரி ஸார்…” என சரணடைவதை போல கையெடுத்து கும்பிட்டு அவள் சொல்ல வம்சியிடம் அப்படி ஒரு சிரிப்பு முகம் கொள்ளாமல் பொங்கியது.
“உனக்கு தெரியாததை சொல்லி தர நான் இருக்கேன் நிலா…” என கண்சிமிட்ட,
“ப்ச்…” என்றாள் போலி அலுப்புடன்.
“ஏதாவது குடுத்தியா நீ?…” என அவன் கேட்க,
“என்ன?…”
“இப்ப தந்தியே இச்…”
“அது இச் இல்லை. ப்ச்…”
“ரெண்டும் ஒன்னு தான்…” என்றவன்,
“பார்த்தியா நீ நம்பலை…” என்றதும்,
“அச்சோ தெரியாம பார்த்துட்டேன். நீங்க சொன்னா நிஜங்கா. நம்பிட்டேன். நம்பிட்டேன்….” என்று அரண்டவளாக அவள் சொல்ல அட்டகாசமான ஒரு சிரிப்பு வம்சியின் முகத்தில்.
“ஹோட்டல் இருக்குன்னு சொன்னதுக்கா?…”
“நிலா நிலா…” என்று அவளின் தலையில் கைவைத்து லேசாய் ஆட்டியவன்,
“நான் நம்ம சௌத் சைட் ஹோட்டலுக்கு போய்ட்டிருக்கேன். அதுவும் வெஜ் ஹோட்டல். போதுமா?…” என்று சொல்ல,
“முதல்லையே சொல்லிருக்கலாம்…”
“நீ சொன்னதும் நான் பதில் சொல்லியிருந்தா முடிஞ்சிருக்கும். இல்லைன்னதும் தானே இவ்வளோ பேசறோம்…” என்று சொல்ல அசட்டு சிரிப்பு ஷ்ராவணி முகத்தில்.
“ஆமால…” என்றவள் பேசும் முன் அவனே அங்கிருந்த ஒவ்வொன்றையும் சொல்லியபடி வந்தான்.
அந்த சாலையை, அதன் விளக்கங்களை என்று சொல்லிக்கொண்டு வந்தவன் ஹோட்டல் வரவும் காரை பார்க் செய்துவிட்டு வந்தான்.
“ப்ரேக்பாஸ்ட் முடிச்சுட்டு நம்ம வேலையை பார்க்க போகலாம்…” என சொல்லவும் அவனுடன் நடந்தாள்.
உண்டு முடித்து அங்கே மால் ஒன்றிற்கு அழைத்து சென்றான் வம்சி. ஒரே இடத்தில் எல்லாமிருக்க முதலில் வீட்டுக்கு தேவையானதை வாங்கலாம் என்று சென்றனர்.
“முதல்ல உனக்கு வெசல்ஸ் வாங்கிக்கோ ரா…” என்று பாத்திரங்கள் இருக்கும் பக்கம் அழைத்து சென்றான்.
“ஏன் வீட்டுல இருக்கே?…” என்றாள் ஷ்ராவணி.
“இருக்கு. ஆனா நான்வெஜ் யூஸ் பண்ணினது. அது வேண்டாம். நீ வேற புதுசா எடு…” என்று சொல்லியவன்,
“எனக்கு இதோட குவாலிட்டி பத்தியெல்லாம் தெரியாது. சோ நீயே செலெக்ட் பண்ணு. ஸ்வாய்ப் பன்ற போர்ஷன் மட்டும் தான் என்னோடது…” என அவளருகே நின்றுகொண்டான்.
ஷ்ராவணி இன்னும் திகைப்புடன் அவனை பார்த்துக்கொண்டே நிற்க அவளின் தலையை பிடித்து பாத்திரங்களின் பக்கம் திருப்பியவன்,
“நான் இங்க கூடவே தான் இருப்பேன். டைம் வேஸ்ட் பண்ணாத நிலா. அதுவும்…” என்று சொல்ல வந்தவன் பாதியில் பேச்சை நிறுத்தினான்.
முன்பென்றால் கூட சுள்ளென்று யோசிக்காமல் பேசியும் இருப்பான். ஆனால் இப்போதோ என்னவோ அவளின் மனதை நோகடிக்க மனதில்லை.
கூடவே இருந்தால் உடன் இருந்து சாமாதானம் செய்யலாம். நிச்சயம் இருக்கமாட்டாள் என்று தெரிந்திருந்தது வம்சிக்கு.
இந்த திருமணமே அத்தனை வேகத்தில் நடந்திருக்க அவளின் வேலை அங்கிருக்க தன்னாலும் சென்று இருக்க முடியாது.
அவளாலும் வேலை மாற்றுதல் கிடைக்கும் வரை இங்கே இருக்க முடியாது என புரிந்தது.
உணர்வுகளை விழுங்கிக்கொண்டு உள்ளூர ஒரு வலியை வெகு வருடங்களுக்கு பின் உணர்ந்தான் வம்சி.
தன் மனைவி தான். ஆனால் தன் கண் பார்வைக்கு எதிரேயே, கைகளுக்குள்ளேயே அவள் இருக்கவேண்டும் மனது பேராசை கொண்டது.
இந்த ஒருநாள் ஜென்மத்திற்கும் மறக்கமுடியாதனா நாளாக அமைந்திருக்க அவளில்லாமல் இனி தனிமை தன்னை எவ்வளவு நோக செய்யுமோ என்னும் நினைவே வம்சியை வாட்டியது.
இப்போது முழுமையாய் உணர்ந்தான் வம்சி. முதன் முறை டெல்லி வந்துவிட்டு ஷ்ராவணி கிளம்பிய பொழுதில் தன்னை தேடியதன் தாக்கம் இப்போதே அவனுள் பரவ தொடங்கியது.
அன்று அதனை சிறுபிள்ளைத்தனம் என எளிதாய் சொல்லியவன் மனதோ தனக்குள்ளும் அவ்வாறான ஏக்கங்கள் பெருமளவு கொட்டிக்கிடக்கிறது என இப்போதிருந்தே கடக்கும் ஒவ்வொரு நொடியும் உணர துவங்கியிருந்தான்.
“மில்டரி…” என ஷ்ராவணி அவனை பிடித்து உலுக்க கனவிலிருந்து விழிப்பதை போல அவன் பார்க்க,
“என்ன என்னை அப்படி பார்த்துட்டு நிக்கறீங்க? கேட்டா பதிலே சொல்லலை?…” என்றாள் அவள்.
“ஹ்ம்ம், உன்னோட இந்த ட்ரெஸ் சைஸ் என்னன்னு யோசிச்சேன். பார்த்தா தானே தெரியும்…” என்று சிரித்துக்கொண்டே சொல்ல,
“நிஜங்கா?…” என்றாள் ஷ்ராவணியும்.
“அவுனு ரா…” என்று வம்சியும் மனதை மறைத்து சிரித்து வைத்தான்.
“ஓகே எடுத்தாச்சா?…” என்றதும் அவள் எடுத்து வைத்ததை காண்பிக்க,
“போதுமா?…” என்றான் அவள் எடுத்து வைத்திருந்ததை கண்டு.
“ஹ்ம்ம், போதும். அதான் வீட்டுல இன்னும் இருக்கே…” என்றவளுக்கு அந்த நேரத்தில் தன் பெற்றோர் தன் அக்காவுக்கு செய்த சீர்கள் தான் ஞாபகம் வந்தது.
ஒரு கசந்த புன்னகையின் சாயல் முகத்தில் படர முகம் வெகுவாய் கசங்கியிருந்தது. தான் எடுத்தவற்றை தூக்கி ட்ராலியில் வைத்தாள்.
“நிலா என்ன யோசிக்கிற?…”
“நத்திங்…” என்று சொல்லியவள் தானாக அவனின் இடுப்பை சுற்றி கை போட்டுக்கொள்ள எதையோ நினைத்து வருந்துகிறாள் என்று விளங்கியது வம்சிக்கு.
அவளின் குடும்பத்தை தவிர எதை நினைத்து வருந்த கூடும் என்று புரிய அன்று காலை முதலே அவளுக்கு யாரும் அவளின் வீட்டிலிருந்து அழைத்திருக்கவில்லை என்பது ஞாபகத்தில் வந்தது.
“ராமேஸ்வரம் போகனுமா நிலா?…” என்றான் அவளிடம்.
“எதுக்கு?…”
“உனக்கு போகனும்னா சொல்லு. போய்ட்டு வரலாம். இந்த வீக் மட்டும் தான் எனக்கு லீவ்…” என்றவன்,
“போகனும்னா சொல்லுரா தல்லி. நான் என்ன யோசிப்பேன்னு நினைக்க கூடாது. இப்படி டல்லாவும் இருக்க கூடாது…” என்றான் அவளை ஆறுதலாய் பார்த்தபடி.
இது இன்னும் வியப்பே. வம்சியின் செயல்கள் ஒவ்வொன்றும் ஷ்ராவணி மனதை பூக்க செய்துகொண்டே தான் இருந்தது.
“நிலா ஓகே வா?…” என கேட்க,
“ம்ஹூம், போகவேண்டாம். இப்ப போற சூழ்நிலை இல்லை…” என்றாள் உடனே மறுத்து.
ஆனந்தின் வீட்டில் வைத்து அவர்கள் முன்னிலையில் மரியாதைக்காக கூட வீட்டிற்கு வா என்று அழைக்காமல் சென்ற தகப்பனின் அழைப்பின்றி அங்கே செல்ல மனம் வரவில்லை.
தன்னை என்னவும் பேசட்டும். நடந்த நிகழ்வு அப்படியானதாகவே இருக்கட்டும். ஆனால் திருமணம் வரை இருந்துவிட்டு மரியாதைக்கு கூட அழைக்காமல் சென்றிருக்க அங்கே வம்சியை கொண்டு நிறுத்த மனமில்லை.
அவனின் மரியாதை அந்தளவிற்கு முக்கியமாக பட்டது. அதிலும் அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு பெண்ணிற்கு சம்பந்தம் செய்திருக்க இப்போது இன்னொரு மருமகன்.
பிடித்தமில்லை, கோபம், விருப்பமில்லை என்றாலும் ராமனின் புறக்கணிப்பை மகளின் மனது ஏற்கவில்லை.
கோபத்தில் என்பது வேறு. ஆனால் ஆனந்தின் குடும்பத்தார், சாந்தினி குடும்பத்தார் முன்னிலையில் அப்படி சென்றது பெரும் தவறு.
ஷ்ராவணி மனது இப்போதே ரமேஷை விட வம்சி எந்தவிதத்தில் குறைந்து போனான் என அளவீடு செய்ய ஆரம்பித்துவிட்டது.
அதனால் அவர்களாக நன்முறையில் அழைக்காமல் அங்கே செல்ல போவதில்லை என்ற முடிவிற்கு முதல் நாளே வந்திருந்தாள்.
அதுவும் அழையா விருந்தாளியாக சென்றால் தனது அக்காவின் பேச்சுக்கள் எந்த விதத்தில் இருக்கும் என்றும் தெரியுமென்பதால் அதற்கு வாய்ப்பே தந்துவிட கூடாதென்பதில் அத்தனை ஸ்திரமாக இருந்தாள்.
“இப்ப நீ தான் கனவு கண்டுட்டு இருக்க நிலா…” என அவளை தோள் தட்டி எழுப்ப,
“ஹ்ம்ம், உங்க கூட தான் கனவு. உங்களுக்காகன்னு வச்சுக்கலாம்…” ஷ்ராவணி சொல்லியவிதத்தில் அவன் சிரித்து,
“இங்கயே கனவு கண்டா ப்ளாட்க்கு எப்ப போக? நெக்ஸ்ட் வா…” என்று சொல்லி நகர அவனை பார்த்தபடியே பின் தொடர்ந்தாள் ஷ்ராவணி.
கணவனாக அவனின் பரிமாணம் அத்தனை வசீகரித்தது ஷ்ராவணியை. இவன் தனக்காக இத்தனை கூட யோசிப்பானா என நினைக்க நினைக்க செல்களெல்லாம் பலாச்சுளை சுவையின் தித்திப்பு.
முன்பும் தனக்காக காத்திருந்தது ஒருபக்கம் என்றாலும் அவ்வப்போது அத்தனை கோபப்படுபவனிடத்தில் இந்த செயல்களும், புரிந்துணர்வும், கவனிக்கும் விதமும் அவளை அவன்பால் பெருமளவு ஈர்த்துக்கொண்டே தான் இருந்தது.
திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோ என எண்ணி ஒருகட்டத்தில் பயந்தும் இருக்க இப்போது தன்னை கொண்டான இவனின் யோசனைகள், பார்வைகள் எல்லாம் பெண்ணை அவனிடம் கனிய வைத்துக்கொண்டே இருந்தது.
தான் தான் அதிகமாய் யோசித்து, அதிகமாய் அச்சப்பட்டு அவனை இன்னும் சரிவர புரியாமல் இருக்கிறோமோ என்ற ஒரு பார்வை வட்டத்திற்குள் நுழைய ஆரம்பித்திருந்தாள் ஷ்ராவணி.
இப்போதும் வம்சி தான் அவளை யோசிக்க வைத்துக்கொண்டே தான் இருந்தான்.
ஆரம்பத்தில் அவனை எப்படி சமாளிப்பது என்பது போய், இப்போது அவனை எப்படி புரிந்துகொள்வது என்பதில் நின்று, கடைசியில் தன் பார்வை தான் வேறோ என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.