“எவ்வளோ பெரிய வீடு? ரொம்ப பெருசு….” என சொல்லியவருக்கு மகள் காண்பித்த அடுக்களை சாமான்களும் ஞாபகம் வர,
“புது பாத்திரம் வாங்கிட்டு வந்தேன்னு சொன்னியே, உனக்குன்னு சமைக்கவா?…” என்றார் சிறு சங்கடத்துடன்.
“ஹ்ம்ம், ஆமாம்மா. அவங்க தான் கூட்டிட்டு போய் வாங்கி தந்தாங்க…” என்றவள் இன்னும் என்னென்ன வாங்கி குவித்தான் என்பதையும் மேலோட்டமாய் பகிர்ந்துகொள்ள,
“இது போதும்டி வணி. நிம்மதியா உறங்குவேன். பாஷை தெரியாத ஊர்ல யார் எவர்ன்னு ரொம்ப பரிட்சயமில்லாத மனுஷனோட என்னன்னு நீ வாழ போறியோன்னு பயந்துட்டே இருந்தேன்…”
“ம்மா, அதென்ன ரொம்ப பரிட்சயமில்லாத? அதெல்லாம் எனக்கு நல்லா தெரியும் அவரை…” என்று சொல்லுகையில் மகளின் முகத்தின் புன்னகை பெற்ற வயிற்றில் பாலை வார்த்தது.
அலங்காரங்கள் இன்றி இரவு உடையில் இருந்த பெண்ணின் முகத்தில் புன்னகையும், சந்தோஷமுமே ஆபரணமாக அலங்கரித்திருக்க சுற்றி போடவேண்டும் என கைகள் பரபரத்தது.
“என்னம்மா? அப்படி பார்த்துட்டு நிக்கிற?…” என்று உள்ளே சென்று தண்ணீரை குடித்துவிட்டு ஹாலுக்கு பேசிக்கொண்டே வந்தாள்.
“சரிம்மா, நீ போய் அவரை கவனி. இப்பத்தான் மனசு நிறைஞ்சு இருக்கு. நான் நாளைக்கு போய் உங்க ரெண்டுபேர் பேருக்கும் அர்ச்சனை பண்ணிட்டு வரேன். அப்பத்தான் நிம்மதியா இருக்கும்…” என்றார்.
“சரி…” என சிரித்துக்கொண்டே போனை வைத்துவிட்டு திரும்ப அந்த நொடி அவனின் கைகளில் தவழ்ந்திருந்தாள்.
“மில்டரி…” என்று தடுமாறியவள் பின் அவனின் கழுத்தில் மாலையாய் கைகளை போட்டுக்கொண்டாள்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கடா நிலா?…”
“அப்படியா?…”
“ஆமா…” என்றவன்,
“அம்மா பேசிட்டாங்கன்னா?…” என்றான் சிரிப்போடு.
“இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா அம்மாவும் பாவம். சூழ்நிலை கைதி மாதிரி. எதையும் வெளிப்படையா செய்யமுடியாது அவங்களால. அதோட சூழ்நிலை வேற அப்படி தான் இருக்கு…” என்று
“இந்த பொண்ணுங்களே இப்படித்தான். என்னதான் இருந்தாலும் அம்மா வீட்டை விட்டு குடுப்பாங்களா?….” என்று கிண்டல் பேச அவனை முறைத்தாள்.
“முறைச்சா? வாட் ரா?…” என்று இன்னும் சிரிக்க,
“பின்ன என்ன செய்ய?…”
“ஒன்னும் செய்ய வேண்டாம். நேத்து ரூம்க்குள்ள எப்படி வந்தோம்ன்னே ஞாபகம் வரலைன்னு மூளையை போட்டு பிழிஞ்சிட்டிருந்த. இப்ப நீ தெளிவு தானே? ஒன்னும் கன்ப்யூசன் இல்லையே?…”
“ரொம்பத்தான். நேத்து என்னவோ மனக்கஷ்டம். யோசிச்சிட்டிருந்ததுல அது தெரியலை…”
“அப்ப இப்போ தெரியும், ரைட்…” என்றான் அவளை தூக்கி போட்டு பிடித்தபடி.
“ஐயோ, என்ன பன்றீங்க?…” என பதறி அவனின் கழுத்தை கட்டினாள்.
மாலை அவனிருந்த விதமென்ன? இப்போது முகம்கொள்ளா புன்னகையுடன் மனதை இழுப்பதென்ன என அவனை ரசனையுடன் பார்த்தாள்.
“நீ என்னை சைட் தானே?…”
“அவ்வா? அதெல்லாமில்லை…”
“நிஜங்கா?…”
“நிஜங்கா நிஜங்கா மில்டரி…” என்று அவளும் அப்படியே சொல்ல,
“பொய் சொல்ற நிலா…” என்றவன் மீண்டும் கையிலிருந்தவளை தூக்கி போட்டு பிடிக்க அலறிக்கொண்டு அவனிடம் ஒண்டினாள்.
“நீங்க கீழே இறக்கிவிட்டாலே போதும். இப்படி பாலை தூக்கி போட்டு கேட்ச் பிடிக்கிற மாதிரி என்ன விளையாட்டு இது?…” என்றவள் சிணுக்கத்தில் மீண்டும் சிரித்துக்கொண்டே தூக்கி போட முயல,
“உங்களை…” என்று கழுத்தோடு புதைந்தவள் அவனின் கழுத்தில் லேசாய் கடித்தும் வைத்தாள்.
“வலிக்குது டா நிலா…” என்று கழுத்தை சுருக்கிக்கொண்டு சிரித்தான்.
“நல்லா வலிக்கட்டும்…” என்றவள் இன்னும் சிறுபிள்ளை போல பற்கள் பதியாமல் கடிக்க,
“இதையே திருப்பி நான் பண்ணேன். நீ நிஜங்கா ஸ்வாஹா நிலா…” செல்ல மிரட்டலில் ஷ்ராவணி சிரித்தபடி,
“கடிச்சு வச்சுட்டு இப்ப என்ன வெட்கம் வேற? எங்க என்னை பாரேன்…”
“ம்ஹூம்…”
“பாவா சொல்லு நிலா?…”
“ஷ்ராவணி சொல்லுங்க. சொல்றேன்…” என்று மீண்டும் அவன் முகம் பார்த்து சொல்ல,
“நீ பண்ணின வேலையை இப்ப நான் பண்ண போறேன்…”
“என்ன?…”
“அதான் கடிச்சு வைக்க…”
“அப்ப நான் மட்டும் நீங்க கேட்டதை செய்யனுமோ?…” என்றவள்,
“நம்ம மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணும் போது நிலான்னு பேர் தருவீங்களா? இல்லை சர்ட்டிபிகேட் நேமா? மெடிக்கல் ஐடிக்கு வேற பாரம் குடுக்கனுமே? அப்போ என்ன பண்ணுவீங்க?…” என்று வம்பிழுத்துக்கொண்டே இருக்க வம்சி மர்மமாய் புன்னகைத்தபடி விரல்களுக்கு அழுத்தத்தை தந்தான்.
“அப்ப என்ன பண்ணுவேன்னு இருக்கட்டும். இப்போ என்ன பன்றேன்னு பாரு. சமாளி…” என்று கண் சிமிட்டி சொல்ல,
“மில்டரி…”
“இப்ப ஹால்ல இருந்து ரூம்க்கு என்ட்ரியாகறோம்…”
“மில்டரி…”
“இத்தனை ஸ்டெப்ஸ் நான் நின்னிட்டிருந்த இடத்துல இருந்து ரூம் வரை…”
“நான் கேட்கவே இல்லையே?…” என்று ஷ்ராவணி அடுத்த அவனின் பேச்சுக்களுக்கு அணையிட்டு பார்க்க முயன்றாள்.
முன்பே நினைத்ததை முடிப்பவன். இப்போது வெகுவாய் சீண்டிவிட்டிருக்க ஷ்ராவணியை சில்லு சில்லாய் சிதறடித்தான் தன் முத்தங்களால்.
ஒவ்வொன்றாய் சொல்லி, கேட்டு, விளக்கி அவளை பேசாதே என்று கூச்சத்தில் அலற வைத்துக்கொண்டிருந்தான்.
முந்தைய நாள் அளவில் கூட பொறுத்தவளால் அன்றைய அடாவடிகளை சமாளிக்கும் முன் திண்டாடி போனாள்.