எழுந்துகொள்ள முடியாமல் தடுமாறியபடி எழுந்து சென்று வெந்நீரை வைத்து குடித்துக்கொண்டிருந்தார் சுலோச்சனா.
“ம்மா, நான் வரமாட்டேனா? இருங்க…” என சந்துரு உள்ளே வந்துவிட்டான்.
“இருக்கட்டும் ப்பா. நீ எவ்வளவு தான் பார்ப்ப?…” என்று நிற்கமுடியாமல் தள்ளாடியபடி வெளியே வந்தவர் மீண்டும் கீழே விரித்திருந்த படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டார்.
“இன்னும் கொஞ்சம் கஞ்சி குடிங்கம்மா….” அவரருகே அமர்ந்த சந்துரு சொல்ல,
தாய் கேட்டதை போல தூறலாய் விழுந்துகொண்டிருந்த பனிப்பொழிவை கையில் பிடித்தும் காண்பித்து, அதனை கைகொள்ளாமல் அள்ளியும் காண்பிக்க கன்னத்தில் கை வைத்து பார்த்தார் சிறு பிள்ளை போல.
“ம்மா, நான் வேலைக்கு போகவும் உன்னை அங்க கூட்டிட்டு போவேன்ம்மா…” என்றான் சந்துரு தாயின் ஆசை பொங்கும் முகத்தை பார்த்து.
“நீ சொன்னதே போதும்பா…” என மகனின் கன்னத்தை வருடி கொஞ்சியவர் மகளை பார்த்தார்.
“பத்தரமா இருடா. அம்மா நாளைக்கு பேசறேன்…” என்று சொல்ல,
“ம்மா நான் பேசறேன்…” என்று சந்துரு பேச வம்சியும் வந்து ஷ்ராவணி அருகே அமர்ந்துகொண்டான்.
அவளின் அருகே அணைவாய் அமர்ந்து சந்துருவிடம் சரிக்கு சரி பேசுவதும், சந்துருவோடு சேர்ந்து ஷ்ராவணியை கேலி செய்வதும் என சிறிது நேரம் கலாட்டாவை தான் சென்றது.
உள்ளே சென்ற சுலோச்சனா மகனுக்கு உணவை தயார் செய்துவிட்டு அழைக்க வர அவனின் பின்னே சிவரஞ்சனி நிற்பதை கண்டு திடுக்கிட்டார்.
“என்னம்மா அங்கயே தம்பி பின்னாடி நிக்கிற?…” என அழைத்தும்விட சந்துரு திரும்பி பார்த்துவிட்டு அதிரவெல்லாம் இல்லை.
‘நீயா?’ என்பதை போல ஒரு பார்வை. மீண்டும் தன் வம்சி, ஷ்ராவணியோடு பேச ஆரம்பிக்க,
“வேண்டாம்ன்னா? அப்ப நீ வேலைக்கு போய் இந்த கடனை அடைப்பியா?…” என்றார் அவரும் கோபத்தில்.
வீட்டை பார்க்காமல் படிக்கிறேன் என கிளம்பி சென்றவன் மீது அத்தனை கோபம்.
தன்னால் முடிந்தால் ஏன் இவர்களை நாடுகிறேன் நான் என நினைத்து பொருமிக்கொண்டிருந்தார்.
அதிலும் ஷ்ராவணி இப்போது பிடிக்காத திருமணத்தை செய்துகொண்டு இனி அவளின் வருமானத்தில் முறையை கழிக்கவேண்டுமே என நினைக்கவே கசந்து வந்தது.
ஆனாலும் வேறு வழியில்லையே என நினைத்தவர் மகனின் பேச்சில் மீண்டும் முருங்கைமரம் ஏறினார். தன்னை இப்படி அவமானப்படுத்திகிரானே என பேசினார்.
“ஏன் நான் படிக்கிறதால என்ன வந்துச்சு? இதுக்கு முன்னாடியும் கடன் கஷ்டம் இருந்துச்சு. சமாளிக்கலையா? அக்கா என்னை படிக்க வைக்கலைன்னாலும் நான் எப்படியும் வேலை பார்த்தாச்சும் படிச்சிருப்பேன்…” என்றவன்,
“அதுவரை கோவில் வேலையை நீங்க பார்க்கவேண்டியது தானே? வேலைக்கு வரலைன்னு நீங்களே சொன்னீங்களாம்?…” என்றான் எதிர்கேள்வி கேட்டு.
“என்னடா திமிரா? வீட்டுல கழுத்த முட்டும் கஷ்டம் இருக்கும் போதே அதை யோசிக்காம ஓடி போனவன் தானே நீ?…” என்று வார்த்தையை விட்டுவிட்டார்.
“ஏன் இந்த கஷ்டம் இருக்குன்னு தெரிஞ்சும் ஏன் வேலைக்கு போகமாட்டேன்னு நீங்க பிடிவாதம் பிடிக்கறீங்க?…” என்றவன்,
“ஆமா, அப்படியே வச்சுக்கோங்க. ஆனா எப்பவும் இந்த கஷ்டத்துல என்னால வாழ முடியாது. எங்கம்மாவை நான் நல்லா வச்சுக்கனும்னு நினைக்கறேன். அதுக்காகவாச்சும் நான் படிக்கனும். இந்த கஷ்டத்துல இருந்து வெளில வரனும்…”
“அப்ப இப்பவும் என் பேச்சை நீ கேட்கமாட்ட…” என்று கொந்தளித்து பார்த்தார்.
“ஆமா, என் படிப்பை என்னால விட முடியாது. உங்களுக்கு கஷ்டம்ன்னா சொல்லுங்க. நான் என் அம்மாவோட ஊருக்கு போறேன். அங்க பார்ட் டைம் ஜாப் கிடைச்சா செஞ்சு அதை வச்சு நாங்க நிம்மதியா இருப்போம்…”
அத்தனை பேச்சு சந்துரு பேசுவான் என்று ராமன் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. அதிலும் தன்னை விட்டுவிட்டு என்று சொல்லவும் அதிர்ந்து பார்த்தார்.
“ஏன் நீ பார்த்துக்கமாட்டியா? நீ தான் அப்பாவோட மானம், மரியாதையை காப்பாத்தறவளாச்சே? அப்பாவை கூட வச்சுக்கோ. உனக்கும் பேச்சுக்கு பேச்சா இருக்கும். அப்பாவையும் பார்த்துக்கிட்ட மாதிரி இருக்கும்…”
சந்துரு சொல்ல சுலோச்சனா அழுதபடி நிற்க, ராமன் இன்னும் திகைப்பிலிருந்து வெளிவரவில்லை.
ஆனால் சிவரஞ்சனி எதையும் யோசிக்கவில்லை. எங்கே தன் தலையில் கட்டிவிடுவார்களோ என்று சுதாரித்தவள்,
“என் வீட்டு கஷ்டமே பெரிய கஷ்டம். இதுல அப்பாவை கூட்டிட்டு போனா என் வீட்டாளுங்களுக்கு யார் பதில் சொல்ல? அப்பாவும் அப்படி பொண்ணு குடுத்த வீட்டுல கை நனைக்க மாட்டாங்க. அது அப்பாவுக்கு தான் மரியாதை குறை…” என்றாள்.
“அப்ப எப்படி நீ வணிக்கா செய்யறதை மட்டும் மரியாதைன்னு சொல்ற? கடமைன்னு சொல்ற?…” என்றான்.
“என்னடா, அவ சொல்லிக்குடுத்தாளா? செய்யமாட்டேன்னு சொன்னாளா?…” என சிவரஞ்சனி பதில் பேச முடியாமல் திணறி பார்க்க,
“நான் இல்லைன்னாலும் நீ அதான் சொல்ல போற. அப்படியே வச்சுக்கோ. வணிக்கா இதை சொல்லியிருந்தாலும் தப்பில்லையே?…”
“சந்துரு…”
“உன்னை மாதிரி ஒன்னும் வணிக்கா எதுவும் வேணும்னு கேட்கலை. வீட்டு கஷ்டம் தெரிஞ்சும் வழிச்சு துடைச்ச மாதிரி தானே ஒன்னொன்னும் வேணும்னு கேட்டு வாங்கிட்ட. இப்ப வரை வாங்கிட்டு தானே இருக்க?…”