“சொல்லுங்க மாலதிக்கா. எப்படி இருக்கீங்க? குழந்தை நல்லாயிருக்கா?…” என வீட்டில் அனைவரையும் நலம் விசாரிக்க,
“நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம். ஒரு போன் பண்ண கூடவா உனக்கு நேரமில்லை?…” என்றாள்.
“அக்கா அதான் டெய்லி பார்க்கறோமே? என்ன கால் பண்ணனும்?…” ஷ்ராவணி சிரிக்க,
“அதுசரி. அதைவிட்டு நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணேன்…”
“சொல்லுங்கக்கா…” என சொல்லியவள் வம்சியை பார்க்க அவன் எதையும் கவனிக்கவில்லை.
உணவிலேயே கவனமாக இருந்தான். காது கொடுத்து கேட்பதை போல இல்லை என்றாலும் அவனுக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும் என புரிந்துகொண்டாள்.
“நாளைக்கு இங்க உனக்கும் அண்ணாவுக்கும் விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கோம் வணி. நாளைக்கு கண்டிப்பா வந்திடனும். அண்ணாகிட்ட சொல்லியாச்சு…”
“அப்படியா? கண்டிப்பா வந்திடுவோம் க்கா…” என்றாள்.
“இன்னைக்கு நீ ட்யூஷன் வந்திருந்தா சொல்லியிருப்பேன்…”
“நேத்தே சொன்னேனேக்கா அஞ்சு நாள் அவங்க எங்கையோ டூர் போறாங்கன்னு. இன்னைக்கு வரமாட்டேன்னு நேத்து நைட் சொன்னேனே?…”
“ஹ்ம்ம், ஆமா மறந்துட்டேன்…” என்றவள்,
“சரி நீங்க அப்படியே வீட்டுக்கு கிளம்பி வாங்க. இங்க வச்சு பேசிக்கலாம்….”
“இப்பவா? இப்ப எப்படி? அக்கா அவங்க இப்ப தான் வந்திருக்காங்க…”
“நான் சொல்றது புரியுதா? இன்னைக்கு இங்க வந்து தங்குங்கன்னு சொல்றேன். நீ ஹாஸ்டல் போய் நாளைக்கு உனக்கு ட்ரெஸ் எடுத்து வச்சுட்டு வந்திரு…” என சொல்லவுமே ஷ்ராவணி பார்வை வம்சியை தீண்ட அவனும் அவளை தான் பார்த்தான் இப்போது.
“வணி அண்ணா ஹோட்டல்ல ரூம் போட்டிருக்காங்க. எங்களுக்கு கஷ்டமா இருக்கு. இங்க நம்ம வீடு இருக்கும் போது இப்படி ஹோட்டல்ல…” மாலதி சொல்லிக்கொண்டிருக்க,
“நிலா போனை குடு…” என கை நீட்டவும் அவனிடம் தந்தாள்.
“மாலதி…” என்றவன் அழைப்பில்,
“அண்ணா நீங்க வணியோட…”
“நாளைக்கு வரோம்மா. நாளைக்கு பார்க்கலாம்…” என சொல்லி வைத்துவிட்டான்.
“சாப்பிடு…” என்று ஷ்ராவணியை பார்த்து சொல்ல,
“ஹ்ம்ம், நீங்க?…”
“நான் முடிச்சாச்சு. நீ தான் ஆரம்பிக்கவே இல்லை. சாப்பிடு…” என்றான்.
உண்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை. பில்லை தந்துவிட்டு அவளுடன் வெளியே வந்தான்.
“எங்க போகலாம்?…” என கேட்க,
“நீங்களே சொல்லுங்க. எங்கனாலும் ஓகே…” என்றதும் பீச்சிற்கு அழைத்து வந்தான்.
ஷ்ராவணி மனதிற்குள் தன்னை ஹோட்டலுக்கு அழைத்து செல்வானோ? அதற்கு தான் ஆனந்த் வீட்டிற்கு வேண்டாம் என்றானோ என யோசனை சென்றவண்ணம் இருந்தது.
முகம் பார்த்து என்ன முடிவில் இருக்கிறான் என கணிக்கவே முடியவில்லை. அதில் ஒருபக்கம் கடுப்பு.
“கொஞ்சமாச்சும் கெஸ் பன்ற மாதிரி முகத்தை வைக்கனும். இப்படியா உர்ருன்னு ஆர்ட் கேலரில இருக்கற படம் மாதிரி. அதுல கூட கண்டுபிடிச்சிடலாம் போல….” என்று சொல்லியே விட வம்சி முகத்தில் மென்னகை.
“சரி, எதுக்காக இப்ப வந்தீங்கன்னு எதுவும் கேட்கவே இல்லை நீ?…” என்றான் பேச்சை மாற்றி.
“என்னை பார்க்க தானே? இல்லை இப்படி விருந்து இருக்குன்னு கிளம்பி வந்தீங்களா?…” என்று ஓரிடத்தில் சென்று அமர்ந்தாள் வம்சியோடு.
“நான் சென்னை வரவும் தான் ஆனந்துக்கே தெரியும். அதுவும் ஹோட்டலுக்கு போய் செக்கின் பண்ணின பின்னாடி தான் கால் பண்ணேன். விருந்து ப்ரோக்ராம் அதுக்கப்பறம் தான்…”
“ஓஹ்…” என்றவள் வேறு என்ன கேட்க என பார்க்க,
“பேசு நிலா…” என்றான்.
“என்ன பேச? என்ன கேட்கன்னு கூட தெரியலை…” முகம் பாவமாக இருந்தது.
“டேய்…” என அவளின் முகபாவனையில் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.
“சிரிக்காதீங்க, கட்டுப்பா இருக்கு. இதுல நாம லவ் மேரேஜ்…”
“அவுனா நிலா?…” என கேட்டு அவளை வெறுப்பேற்ற,
“அவுனும் இல்லை. பவுனும் இல்லை….” என்று அவனின் கையில் அடிக்க,
“ஓகே ஓகே…” என்று அதனை பற்றிக்கொண்டான்.
“ஒரு ரெண்டு நாள் கேப் கிடைச்சது. அதான் அவசரமா கிளம்பி வந்தேன்…”
“அவசரமாவா? என்ன விஷயம்?…” என்றாள் வேறு ஏதேனும் முக்கியமான விஷயமோ என்று.
“நாம ஏற்கனவே பேசினது தான். நாளைக்கு ராமேஸ்வரம் போறோம்….”
“நாளைக்கேவா?…”
“ஹ்ம்ம், ஆமா. இந்த வேலையை முடிச்சா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். அதான் இழுக்காம முடிக்கலாமேன்னு…” என்றதும் ஷ்ராவணி முகத்தில் யோசனை.
“அதான் ரெடி பண்ணிட்டோமே, யார் யார்க்கு எவ்வளோ குடுக்கனும்னு. நேர்ல போய் செட்டில் பண்ணிவிட்டா போதும். நாளைக்கு அவங்களுக்கு எல்லாம் பேசிட்டு சண்டே முடிச்சுட்டு கிளம்பி வந்திடலாம்…”
“அதெல்லாம் ஓகே, ஆனா…”
“நாளைக்கு சந்துருட்ட கூட சொல்லியாச்சு. அவனும் தான் வரான் நம்மோட…”
“ஹ்ம்ம், ஓகே…” என்றாள் மறுக்க முடியாமல்.
“என்னவாம்? எதுக்கு டல்லா இருக்க? ஏற்கனவே முடிவு பண்ணினது தானே?…”
“ஆமா தான். ஆனாலும் என்னவோ…” என்று யோசிக்க,
“ம்ஹூம், இந்த தயக்கம் வேண்டவே வேண்டாம்…” என்றவன்,
“நான் சந்துருட்ட சொல்லி அங்கயே ஒரு வீடு ஒரு நாள் வாடகைக்கு பிடிக்க சொல்லிட்டேன். நாளைக்கு நைட் அங்க ரீச்சாகற மாதிரி தான் முடிவு பண்ணியிருக்கேன்…”
“அப்போ எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் கிளம்பியிருக்கீங்க?…” என்றதும் தலையசைத்தான். மீண்டும் மாலதி ஷ்ராவணிக்கு அழைக்க,
“மாலதி அக்கா…” என்றாள் போனை காண்பித்து.
“நிலா, புரிஞ்சுக்கோ. அங்க போனா அவங்க வீட்டுல வச்சு. ம்ஹூம். என்னால தள்ளி இருக்கமுடியாது. அதுக்காக அங்கயும் போக முடியாது. அதான் அவாய்ட் பன்றேன். இப்பவும் கூட உன்னோட பப்ளிக் ப்ளேஸ்ல ஏன் சுத்தறேன்?…”
“ரொம்ப கஷ்டபடுத்தறேனா?…” ஷ்ராவணிக்கு வம்சியை எண்ணி வருத்தமாக,
“ச்சே, ச்சே. அப்படியெல்லாம் இல்லை. இது ஒரு கஷ்டமா?…” என்றவன்,
“ஆனா ரொம்ப கஷ்டம். என்னன்னு உன்னை விட்டு இத்தனை நாள் இருந்தேனோ? இன்னும் எவ்வளவு நாள் இருக்க போறேனோ?…” என தலையை கோதியபடி உண்மையை சொல்லிவிட அதனை எதிர்கொள்ள ஷ்ராவணிக்கு தான் அத்தனை கஷ்டமாக இருந்தது.
அதன் பின் பேச்சுக்களை வேறு திசைக்கு மாற்றிவிட்டான். ராமேஸ்வரம் செல்லவும் அங்கே என்ன சொல்ல வேண்டும் என்று பேச ஷ்ராவணி அதிர்ந்து பார்த்தாள்.
“ஏன்? ஏன் அப்படி? பணம் நீங்க தானே குடுக்கறீங்க? அதை சொல்ல வேண்டாம்ன்னா?…” என கேட்க,
“சொல்ல வேண்டாம். அதுதான் உனக்கு நல்லது. நமக்கு நல்லது…”
“என்னங்க?…”
“நிலா, புரிஞ்சுக்கோ. கடனை அடைச்சாச்சுன்னு ஒரு எண்ணம் வந்திட கூடாது. இந்த அமௌன்ட் மொத்தமா இரு இடத்துல வாங்கி தான் இந்த கடன்களை அடைக்கிறோம்ன்னு சொல்லு. சொல்ற…” என்றான் கட்டளை போல.
ஷ்ராவணிக்கு அவன் சொல்லுவதன் காரணம் புரிய முகம் சிறுத்துவிட்டது அதன் அர்த்தத்தில். ஆனால் அதில் உண்மையும் இருக்க சரி என்று தலையசைத்தாள்.
“சரி கிளம்புவோம். நாளைக்கு நானே வந்து ஹாஸ்ட்டல்ல பிக்கப் பண்ணிக்கறேன்….” என்றதும் அவனை இன்னும் திகைத்து பார்க்க,
“ஹேய் என்ன நிலா?…” என்று தோளோடு அணைத்துக்கொண்டவன்,
“ஹோட்டலுக்கு வேண்டாம்டா நிலா….” என சொல்ல,
“புரிஞ்சு போச்சு. ஆனந்த் அண்ணா வீட்டுக்கு சொல்ற அதே ரீசன்…” என சொல்ல வம்சியும் தலையசைத்து சிரித்தான்.
“அப்போ மணாலிளையும் மில்டரி அப்படியே இருந்திருக்க வேண்டியது தானே? அது மட்டும் ரெசார்ட் இல்லையாமா? அப்ப சாமி கண்ணை குத்தலையா?…” என பேசவும் வெடித்து சிரித்துவிட்டான் வம்சி.