“தெரியலைம்மா. நான் போன் பன்றேன். இல்லைன்னா எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம். நீ எப்பவும் போல போய்ட்டு வா…” என்று சொல்ல மகளை விட்டு தன் வீட்டை நோக்கி நடக்க அவரை பார்த்துக்கொண்டே உள்ளே வந்துவிட்டாள் ஷ்ராவணி.
“ஓகே சந்துரு, நீயும் போய் தூங்கு…” என சேரில் அமர்ந்திருந்த வம்சி எழுந்து நின்றுவிட்டான்.
உடலை முறுக்கிக்கொண்டு கைகளை உயர்த்தி நெட்டி முறித்தவனை முறைத்து பார்த்த ஷ்ராவணி,
“எல்லாம் உன்னால. பாரு அம்மா எவ்வளோ வருத்தப்படறாங்க. அழறாங்க….” என அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிக்க,
“ப்ச், உங்க சண்டையை காலையில வச்சுகோங்க. இப்ப அவன் தூங்கட்டும் என்றான் வம்சி.
“அங்கிள் நான் வேணும்னா உங்களுக்கு பேச்சுத்துணைக்கு உங்க கூட இருக்கட்டுமா இன்னைக்கு நைட்?…” என கேட்க படக்கென்று வம்சி திரும்பி பார்த்தான் சந்துருவை.
“நைட்டெல்லாம் உன்கிட்ட பேசி என்ன செய்ய? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் தூங்க போறேன்…” என சொல்ல ஷ்ராவணிக்கு கோபம் மறந்து சிரிப்பு வந்துவிட்டது.
“இல்ல இது புது ஊர், லோன்லியா ஃபீல் பண்ணுவீங்கன்னு நினச்சேன்…”
“ஏன்டா உங்கக்காவை கூட்டிட்டு வந்துட்டு நான் ஏன் ஃபீல் பண்ண போறேன்? ஒன்னும் வேண்டாம். நாளைக்கு விடிஞ்சதும் நான் போன் பண்ணின பின்னாடி வா….”
“அப்ப சரி, அக்கா அலாரம் வச்சுக்கோ. ரொம்ப நாள் ஆச்சு நாம சேர்ந்து கோவிலுக்கு போய். ரெடியா இரு. நாம போறோம்…” என ஷ்ராவணியிடம் சந்துரு சொல்ல,
“அவ விரதம். கோவிலுக்கு வரமாட்டா. நீ கிளம்புடா…” என்றான் மிரட்டலாய் வம்சி.
“விரதம்ன்னா தான் நாங்க கோவிலுக்கு போவோம்…” சந்துருவும் மல்லுக்கு நிற்க,
“இவன் தெரிஞ்சு பேசறானா? இல்லை தெரியாமலா?…” என இதழ்களுக்குள் முணுமுணுத்தவன்,
“இது எங்க நெல்லூர் விரதம். அப்படித்தான். சொன்னா நீ என்ன பேசிட்டே இருக்க?…” என்றவன் ஷ்ராவணியை பார்த்து அனுப்புமாறு கண்களால் கெஞ்சினான்.
‘என்னை கேட்டா வீடு புக் பண்ணின? என்னவும் பண்ணு’ என பார்வையால் பதில் தந்தவள் கண்டுகொள்ளாததை போல நிற்க,
“அங்கிள்…” என சந்துரு சிரித்துவிட ஷ்ராவணி திகைத்து பின் வயிற்றை பிடித்தபடி அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
“சொல்லிக்கிட்டே இருக்கேன், லோன்லி, லோக்கேஷன்னு ஓவர் ஃபீலிங் காமிக்கிற? நான் பார்க்காத ஃபீலிங்காடா? என்கிட்டயேவா?…” என்று அவனை இரு கைகளில் தூக்கியபடி வெளியே வந்தான்.
“போட்டுடாதீங்க அங்கிள். சின்ன பையன். வாழவேண்டிய வயசு…”
“பேசறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்…”
“ம்க்கும், இப்படி வாடகைக்கு எடுத்த வீட்டுலையே ஒருநாளைக்கு அடைக்கலம் தரமாட்டேன்னு சொல்றீங்க. இதுல உங்க வீட்டு வாசப்படி என்னை ஏற விடுவீங்களா? இப்பவே தெரிஞ்சு போச்சு…”
“அதை அன்னைக்கு பார்த்துப்போம். ஒழுங்கா படிச்சு முடி. இப்ப உன் வீட்டுக்கு போ…”
“போ போன்னா? முதல்ல என்னை இறக்கி விடனும். இப்படி பச்சைப்பிள்ளையை தூக்கி வச்சிருக்கறது மாதிரி தூக்கி வச்சா எங்க வீட்டுக்கு போக?…”
“இன்னும் குறையுதா பார் உன் பேச்சு. இங்க இருந்து வீசினா அங்க போய் விழுவ…” என்று வீசுவதை போல போக்கு காண்பிக்க சந்துரு அலற,
“ஐயோ என் பிள்ளை…” என்ற ஒரு பதட்டமான சத்தம்.
யார் என திரும்பி பார்த்தால் ராமன் நின்றிருந்தார் அவர் வீட்டு வாசலில். அப்போது தான் வந்திருப்பார் என தெரிந்தது அவர் நின்ற விதத்திலேயே.
இவர்களின் விளையாட்டை பார்த்தபடி வெளியே வந்த ஷ்ராவணி திகைத்து நின்றுவிட்டாள் தகப்பனை கண்டதும்.
“அங்கிள் அப்பா…”
“நான் இல்லன்னா சொன்னேன். இறங்குடா…”
“நீங்க தான் விடனும்…”
இருவரும் மாற்றி மாற்றி சொல்ல ஷ்ராவணிக்கு ஐயோ என்றானது இருவரின் அலும்பில்.
இதில் வீதியில் அனைவரும் வேறு இதனை வேடிக்கையாய் பார்த்து திகைப்புடன் இருக்க,
“முதல்ல இறங்கி போடா நீ…”என்றாள் ஷ்ராவணி.
“ப்ச்…” என்ற சலிப்புடன் சந்துரு இறங்க,
“உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை…” என ஷ்ராவணி சொல்ல,
“ஆமா, எப்பப்ப பரு விளையாட்டு…” என வம்சி அவனின் தலையில் தட்டினான் சிரித்தபடி.
இதனை அங்கிருந்து ராமன் பார்த்தபடி அசையாமல் செய்வதறியாமல் நிற்க சந்துரு இறங்கி அவனின் வீட்டை நோக்கி சென்றான்.
அப்போதாவது தன்னிடம் ராமன் ஏதேனும் பேசுவார், கேட்பார் என ஷ்ராவணி பார்த்தாள்.
சந்துரு அவரை தாண்டிக்கொண்டு வீட்டினுள் செல்லவும் தானும் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று கதவை அடைத்ததும் முகத்திலடித்ததை போலிருந்தது ஷ்ராவணிக்கு.
முகமே கறுத்துவிட அங்கேயே நின்றவள் பார்வை அங்கே வீதியில் வேடிக்கை பார்த்தவர்கள் மேல் கீழ்க்கண்ணால் படிந்து மீள,
“ஓகே ஓகே வா. இதையெல்லாம் நீ எக்ஸ்பெக்ட் பன்றதே தப்பு ரா…” என உள்ளே அழைக்க,
“இதுக்கு தான் இங்க தங்க வேண்டாம்ன்னு சொன்னேன்…” என மெல்லிய விசும்பலுடன்.
“நிலா, இப்ப அழாம வரியா? இல்லை உன்னையும் உள்ள தூக்கிட்டு போகனுமா?…” என்றதும் அவனை முறைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் சென்றதும் சிரித்தபடி தானும் உள்ளே செல்ல போனவன் வாசலருகே பின்னால் கையை கட்டியபடி தீவிரமாய் என்ன நடக்கிறது என பார்த்த இருவரை கண்டு திரும்பினான்.
“எனித்திங் எல்ஸ்?…” என்று அவர்களை பார்த்து கேட்டதும் திகைத்தவர்கள் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து உதறிக்கொண்டு உள்ளே சென்றனர்.
“அது…” என்றபடி வம்சி கதவை அடைத்துக்கொண்டு உள்ளே செல்ல அங்கே ஷ்ராவணி அமர்ந்திருந்த விதத்தில் மூச்சை இழுத்துவிட்டான்.
“இவளை…” என்று அருகே வர பெரிதாய் எதுவும் நடக்காது என சாதாரணமாய் பார்த்தவள்,
“உங்களுக்கு தூக்கம் வந்தா தூங்குங்க. எனக்கு நேரமாகும்…” என்றாள்.
“ஏன்? எதுக்கு தூங்கனும்?…”
“அதான் சொன்னீங்களே? டயர்ட்ன்னு…”
“ஆமா அதுக்கென்ன?…”
“அதுக்கென்னவா?…” என்று பார்த்தவள்,
“அப்ப வேணும்னு அவங்களை கிளப்பிவிட தான் அப்படி சொன்னீங்களா?…”
“கைன்ட் ஆஃப்…” என்று கள்ள புன்னகையுடன் அந்த இருக்கையை இரு கைகளாலும் பற்றியபடி அவளை நோக்கி குனிந்தான்.
“ப்ச், விளையாடாதீங்க மில்டரி. நானே சோகமா இருக்கேன்…” என்று அவனின் கையை பற்றி சாய்ந்துகொண்டாள்.
“ஓகே, சோகமெல்லாம் போகட்டும். இப்ப எழுந்து வா…” என்று கையை பிடித்து எழுப்பியவன் அறைக்குள் அழைத்து செல்ல அங்கே கீழே விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்தாள்.