“இன்னும் இன்னும் என்னை நீ டெம்ப்ட் பன்ற சந்திரமுகி…” என்று காதருகே கிசுகிசுத்தவன் குரல் அடிவயிற்றில் கூச செய்ய சிலிர்த்து அவன் கைகளுக்குள் அசையாமல் அடங்கினாள்.
“புரிஞ்சுக்கோ நிலா. சேர்ந்து போறது வேற. ஆனா உன்னை பார்க்க வந்துட்டு உன்னை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறது அது எனக்கு சரியா படலை. மரியாதை இதுலயும் முக்கியம்ரா…” என்றான் மென்மையான குரலில்.
“ஆமாமா…” என்று வேண்டுமென்றே சொன்னவளுக்கு அவனின் பேச்சுக்கள் இனிக்கத்தான் செய்கிறது.
எவ்வளவு யோசிக்கிறான் இதில் கூட என்று அவனை கொஞ்ச தோன்றினாலும் வீம்பிற்கு திரும்பாமல் இருந்தாள்.
“அர்த்தமாயிந்தா நிலா, செப்புரா…”
“ஒன்னும் அர்த்தமாகலை. இப்ப மட்டும் என்ன? இதுவும் வெளில…” என சொன்னாலும் அவனை விலகவில்லை ஷ்ராவணி.
“இப்ப இங்க நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து வந்திருக்கோம். நேத்து சொன்ன ரீசன் நேத்தோட. இன்னைக்கு எல்லாம்…” என்றவன் இலகுவாக அவளை சுழற்றி தன் பக்கம் திருப்ப,
எங்கோ கனவில் கேட்பதை போலிருக்க அவற்றை விரட்டி மீண்டும் உறங்கவே பணித்தது அவளின் அயர்வு.
சுருங்கிய புருவமும் இமையும் அவளை விழி திறக்கவிடாமல் செய்ய வம்சி சட்டென எழுந்துவிட்டான்.
நன்றாக போர்த்திவிட்டவன் டிஷர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வேகமாய் வந்து கோபத்துடன் கதவை திறந்தான்.
அப்படி ஒரு எரிச்சல் கதவை உடைப்பதை போல தட்டுவதை கேட்டுவிட்டு. அதே எரிச்சலுடன் கதவை திறக்க அங்கே சிவரஞ்சனி நின்றிருந்தாள் முறைப்புடன்.
“கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு? இப்படித்தான் கதவை தட்டுவீங்களா?…” என்றதும் கோபமாய் பேச வந்தவள் அவனின் நிலையை கண்டு வாயடைத்து நின்றாள்.
கலைந்த தலையுடன், சிவப்பேறிய விழிகளும், அவன் அணிந்திருந்த டிஷர்ட் உள்பக்கமாய் மாற்றி இருப்பதும் என்று பார்த்ததும் புரிந்துவிட முகம் இன்னும் கடுகடுவென்று மாறியது.
“எனக்கு மேனர்ஸ் இல்லைன்னு சொல்றீங்க? நான் யார் தெரியலையா?…” என்றாள் அவளும்.
“யார் நீங்க? எனக்கு தெரியாது….” என்றான் பட்டென்று.
“என்ன?…”
“ப்ச், என்ன வேணும்? எதுக்காக கதவை இப்படி உடைச்சீங்க? இதுக்கே ந்யூசென்ஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்….” என வம்சி சொல்லவும்,
“நான் ந்யூசென்சா?…”
“அட யார் நீங்க? சும்மா சும்மா கேள்வியா கேட்டுட்டு நிக்கறீங்க?…”
“நான்…”
“யாரா இருந்தாலும் எனக்கென்ன? முதல்ல ஒரு வீட்டோட கதவை எப்படி தட்டனும்னு படிச்சுட்டு வாங்க…”
“ஹலோ…”
“என்ன ஹலோ? இதை பேச தான் டோர் நாக் பண்ணுனீங்களா? போங்க முதல்ல…”
“நான் சிவரஞ்சனி…”
“யாரா இருந்தா எனக்கென்ன? போங்க…”
“நான் வணியோட அக்கா…”
“அட இருந்துட்டு போங்க. இப்ப இங்க இருந்து போங்க….”
எதற்கும் அசருவதாக இல்லை வம்சி. அவளை பேசவும் விடவில்லை. பேசினாலும் அதனை அனுமதிக்கவில்லை.
“நான் வணியை பார்க்கனும்…” என்றாள் வம்சியிடம் செல்ல முடியாதென்பதை போல நின்றபடி.
“நாங்க இங்க உங்களை பார்க்க வரலை. நீங்க போகலாம்….”
“என் தங்கச்சியை பார்க்க கூடாதுன்னு நீங்க எப்படி சொல்லுவீங்க?…”
“ப்ச், அவளை இப்ப பார்க்க முடியாது…” என்றவன் கதவை சாற்றிவிட்டவன் மீண்டும் படக்கென்று திறந்து,
“திரும்ப கதவை தட்ட வேண்டாம். ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு. காட் இட்…” என்று சொல்லி கதவை மூடிவிட்டான்.
சிறுத்துவிட்ட முகத்தோடு நின்றவள் மெதுவாய் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள்.
உள்ளே வந்தவன் நேரத்தை பார்த்துவிட்டு சந்துருவுக்கு அழைத்து இருவருக்கும் உணவை வாங்கிவர சொன்னான். அதுவும் வெளியே ஹோட்டலில்.
தன் மனைவி, மாமியாருக்காக வேணும் அவர்கள் வீட்டில் வாங்கி பணம் கொடுத்து உண்டிருக்கலாம் என்றால் ராமனின் செயலில் அதையும் கைவிட்டான்.
இங்கே வந்தது இனி மனைவி எந்தவித சிரமமும் பட கூடாது என்ற காரணத்திற்காக.
அதை முடித்துவிட்டு கிளம்புவதில் தான் கவனமாக இருக்கவேண்டும் என நினைத்தபடி மீண்டும் அவனின் நிலவருகே சென்று அமர்ந்துகொண்டான்.
“நிலா எழுந்துக்கலையா?…” என மெல்லிய குரலில் கேட்டவாறு தனது மொபைலை பார்த்துக்கொண்டிருக்க,
“ஹ்ம்ம்…” என்றவள்,
“டைம் என்ன?…” என்றாள்.
“ரொம்ப எல்லாம் இல்லை…” என நேரத்தை சொல்லியவன், தான் சொல்லவும் அவள் வேகமாய் எழுந்தமர்ந்ததை பார்த்து,
“அட மெதுவா…”
“என்ன இப்படி பண்ணிட்டீங்க?…”
“என்ன பண்ணிட்டேன்? உனக்கு தெரியுமேரா. ஞாபகமில்லையா?…” என்றான் விஷமமாய். அவள் முறைக்கவும்,
“என்னவோ நான் எழுந்துக்காதன்னு சொன்ன மாதிரி. பாவமே, தூங்கட்டும்ன்னு விட்டேன்ல. நீ பேசுவ. இதுக்கு தான் நல்லதுக்கே காலமில்லை…”
“உன் வேலையாகனும்னா என்னலாம் சொல்லி கொஞ்சற நீ?…” என்றவன்,
“ஓகே, நானா எதுவும் பேசலை. உனக்காக பேசலை. போதுமா?…” என்றவன் வார்த்தையை ஷ்ராவணி மேலோட்டமாய் நம்பினாலும் உள்மனது அடித்து சொன்னது இவன் வாயை அடக்க முடியாது என்று.
அவள் நினைத்ததை போல தான் நடந்தது. வம்சியின் வாயை பிடுங்கி வகையாக மாட்டிக்கொண்டு திருதிருவென்று முழிக்கும் நிலைக்கு ராமனும், சிவரஞ்சனியும், ரமேஷும் தள்ளப்பட்டனர்.