“இதெல்லாம் இனிமே நீ தான் டாக்கில் பண்ணிக்கனும் ரா தல்லி…” என முணுமுணுக்க,
“எப்போ திரும்பி வருவீங்க?…” குரல் லேசாய் கரகரத்தது போலிருந்தது.
“டோன்ட் க்னோ. பார்க்கலாம். ஒன் வீக்காகலாம். இல்ல டென் டேய்ஸ் கூட ஆகலாம். யாருக்கு தெரியும் ரெண்டே நாள்ல வந்தாலும் வரலாம்…” என்றவன் எழுந்தமர்ந்து,
“சமாளிச்சிடுவியா நிலா?…” என்றான்.
“டோன்ட் க்னோ…” அவனை போலவே சொல்ல,
“ப்ச்…” என்றவன் எழுந்து உள்ளே சென்றுவிட அங்கேயே படுத்துக்கொண்டாள் அவள்.
தனியே இங்கு எப்படி இருக்கமுடியும்? தனக்கு இங்கே எதையும் தெரியாதே? இந்த பில்டிங் தவிர வேறு என்ன தெரியும்?
அவனில்லாமல் இருக்க முடியுமா? சமாளிக்க முடியுமா? முகமெல்லாம் ஒருவித சஞ்சலம் சூழ்ந்தது.
காதல் என ஆரம்பித்து அதில் தொடங்கி திருமணத்தில் இருந்தே இப்படி பிரிந்து, சேர்ந்து, பிரிந்து சேர்ந்து என முழுமையாய் இணைந்திருக்க முடியாத சூழ்நிலைகள்.
மனதிற்கு சரியென்று தோன்றவில்லை. தாயிடம் கேட்கலாம் என்று வீட்டில் சொன்னால் இதை நினைத்து ஏதேனும் சுலோச்சனா வருந்துவாரே என்று அந்த யோசனையை கைவிட்டாள்.
இல்லை என்றால் இதற்கு ஏதேனும் கோவில், பூஜை எதையாவது அவர் சொல்ல கூடும்.
அதனை தொட்டு வீட்டில் மீண்டும் தகப்பன், தமக்கை என்று தேவையில்லாமல் பேச்சுக்கள் எழுந்தால் இன்னும் வம்பு என்று அதனை அடக்கினாள்.
இன்னும் ஒருவாரம் தானே? எல்லாவற்றையும் எதற்கோ ஏன் தொடர்பு படுத்தி பார்க்கவேண்டும் என யோசித்து தெளிந்துகொள்ள வம்சி போனுடன் வந்தான்.
“ப்ராப்ளம் சால்வ்ட்…” என்று அவளருகே அமர,
“என்ன? ட்ரிப் கேன்சலா? இல்லை நானும் உங்க கூட வரேனா? நான் வொர்க் ஃப்ரம் ஹோம் தானே? அங்க இருந்தும் நான் பார்த்துப்பேன். சூர்…” என்றாள் ஆர்வமாக.
“நிலா உன்னை அங்க கூட்டிட்டு போகமுடியாதுடா. நான் எங்க ஆர்மி கேம்பஸ்க்குள்ள தான் இருப்பேன். இது ஒன்னும் ஜாலி ட்ரிப் இல்லை…” என்றான் அவளின் ஆர்வத்தை கண்டு.
“அப்போ ட்ரிப் கன்பார்மா?…” என்றவள் குரல் உள்ளே சென்றுவிட்டது.
“ஓகே, லஞ்ச் என்ன செய்யட்டும்?…” என கேட்டு எழுந்துகொண்டாள்.
“ஒன்னும் செய்யவேண்டாம். இன்னைக்கு சமைக்கவும் வேண்டாம். என்னோட என் பக்கத்திலையே இரு. உன்னை விடறதா இல்லை…” என்றவன் இழுப்பிற்கு செல்லமுடியதென்பதை போல அசையாமல் நின்றாள்.
“படுத்தாத நிலா…” என்றவன் பலத்தின் முன் அவள் பிடிவாதம் எடுபடவில்லை.
“இதுக்குத்தான் பெரியவன் சொன்னா கேட்கனும்…” என நெற்றியில் முட்டி சொல்ல,
“சரிங்க தாத்தா…” என்றாள் கோபமாக.
“சொல்லிக்கோ, நோ இஷ்யூஸ். ஆனா இந்த தாத்தா தான் உன் ஹஸ்பன்ட். உனக்கு வேற வழி இல்லைம்மா..” என்று அவன் சிரிக்க,
“எப்படி சிரிக்கறீங்க? நான் எவ்வளோ ஃபீல் பன்றேன். இங்க தனியா என்ன பண்ணுவேனொன்னு இருக்கு…” என்றவள் அவனின் முகத்தின் அழுத்தத்தை கண்டு,
“சும்மா தான் சொன்னேன். நான் பார்த்துப்பேன். ஏன் எனக்கு தெரியாதா? இனி இங்க தானே குப்பை கொட்டனும்…” என உடனே பேச்சை மாற்றினாள்.
“கேடி, எப்படி என்னோட ஒரு பார்வையை வச்சே பேச்ச மாத்தற நீ? உன்னை…” என்று கன்னத்தை பிடித்து கிள்ள,
“நேத்தே சொன்னேனே? சகவாசதோஷம். எப்படித்தான் பார்த்தே என்னை சமாளிக்கறீங்கன்னு தெரியலை. நானும் ஆட்டோமேட்டிக்கா ப்ரோக்ராம் பண்ணின மாதிரி உங்களுக்கு பிடிச்ச ஆன்ஸரை சொல்லிடறேன்…”
“இல்லரா, ரிசப்ஷன் அவங்க ஏற்பாடு செஞ்சாலும் நான் அங்க இருக்கனும். இன்வைட் பண்ணனும். அது இல்லாம சரிவராது. இப்ப லீவ் போடற சுட்சுவேஷன் சுத்தமா இல்லை….”
“இன்னைக்கு லீவ் தானே?…”
“அறிவே, இன்னைக்குன்னா ஒரு நாள் லீவ்ல என்ன பன்றதாம்?…”
“ஹ்ம்ம், ஆமால. ஒன்னும் பண்ண முடியாதுதான்…”
“யார் சொன்னா ஒன்னும் பண்ண முடியாதுன்னு?…” என கேட்டவன் கண் சிமிட்ட,
“அடி அடி உங்களுக்கு எத்தனை வேணா அடிக்கலாம். வாய் கூடிருச்சு. பேச்சு கூடிருச்சு. கொழுப்பும் கூடிருச்சு…”
ஷ்ராவணி அவனை சரமாரியாக அடிக்க வகையாய் வாங்கிக்கொண்டவனின் பதிலடிகள் தான் ஷ்ராவணியை திக்குமுக்காட செய்தது.
“எவ்வளோ வேணா அசராம வாங்கிப்பேன். ஆனா ரிட்டர்ன் பண்ணிருவேன் எனக்கு தோணின மாதிரி. உனக்கு திரும்பி வாங்க ஸ்ட்ரெந்த் இருந்தா குடுத்துக்கோ…” என்றவனின் முணுமுணுப்பில் அவள் தான் வாயடைத்து போனாள்.
“நிஜங்கா? நிலா திண்டுந்தா?…” என்று சாந்தினி ஆச்சர்யமாக கேட்க ஷ்ராவணிக்கு ஒன்றும் புரியவில்லை.
“உன்னை தான் கேட்கறாங்க. உனக்கு வேணுமான்னு. வேண்டாமா நிலா?…” என்றான் அவளிடம் அந்து என்ன பதார்த்தம் என்று சொல்லாமலேயே.
“வேணும், வேணும் தான்…” ஷ்ராவணி வேகமாய் தலையாட்ட,
“சூடு பின்னி, நா கோசரம்…” என்று சொல்லியவன் முகமே தில்லாலங்கடி வேலையை காண்பித்துகொடுத்தது ஷ்ராவணிக்கு.
“என்னவோ சொல்றீங்க. என்ன அது?…” என்றாள் அதட்டி கூட சாந்தினியின் முன் கேட்கமுடியாமல் அமைதியாய் கேட்டாள்.
“உனக்கு என்னை ரொம்ப புடிக்கும்ன்னு சொன்னேன்டா. அர்த்தமாயிந்தா?…” என கேட்க நம்பமுடியாமல் தான் இப்போதும் பார்த்தாள்.
“நிலா ஆமாவா? இல்லையா?…”
“ஆமா தான், பின்ன இல்லாமலா உங்களை கல்யாணம் பண்ணியிருப்பேன். என்னவோ பன்றீங்க. என்னன்னு தெரியலையே?…” என சிரித்துக்கொண்டே பற்களை கடித்தபடி அவனை சாந்தினி அறியாமல் மிரட்ட,
“அம்மோவ் சந்திரமுகி…” வம்சி பயப்படுவதை போல ஒரு ஆக்டிங் கொடுத்தான்.
“அவ்வளவும் பொய் வதினா…” என உள்ளே பெட்டிகளை வைக்க சென்றிருந்த ஷைலஜா வந்துவிட்டாள்.
“அண்ணா நீ இருக்கியே?…” என்ற ஷைலஜா ஷ்ராவணியிடம் விளக்கி சொல்ல வம்சியை முறைக்க முயன்று சாந்திநியையும் பார்த்தவளுக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியவில்லை.
“ஓகே ஷைலு, நீ உள்ள கூட்டிட்டு போ. ப்ரஷப்பாகி வாங்க. லஞ்ச் ரெடி…” என்று சொல்லவும் இருவரும் உள்ளே சென்றுவிட்டனர்.
அதுவரை கண்கள் கலங்குவதா இல்லையா என்று அடங்கி இருக்க இருவரின் தலை மறைந்ததும் கண்ணீர் குபுக்கென்று வந்துவிட்டது ஷ்ராவணிக்கு.
“நிலா…” என்றவன் கையை பிடித்துக்கொண்டவள்,
“நீங்க இதை எதிர்பார்க்கறீங்களா? நான் சாப்பிடனுமா?…” என்றாள் பரிதவிக்கும் முகத்துடன்.
வம்சிக்கு விளையாட்டுக்கு செய்தது அவளை எங்கேயோ காயப்படுத்திவிட்டது என்று புரிய,