மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டாலும் மீராவால் உண்ண உறங்க முடியவில்லை.
மகாலட்சுமிக்கு என்ன நடந்தது என்று இப்போது வரை முழுதாய் விளங்கவில்லை.
ஆனால் அவள் உயிருடன் இல்லை. இல்லை என்பதை விட அவளின் ஆன்மா நிம்மதியடையவில்லை என்பதே மீராவின் நிம்மதியை இழக்க செய்திருந்தது.
தன்னை பார்த்த அந்த சாதுவான பெண்ணின் உருவமும், தன்னிடம் எதையோ உணர்த்த துடிக்கும் உருக்குலைந்த உருவமும் என மாற்றி மாற்றி அவளின் கண்ணிற்குள் இருந்து இமை மூட விடுவதில்லை.
உண்ணும் உணவுகள் சென்ற வழியிலேயே வெளியே வந்துகொண்டே இருந்தது மீராவிற்கு.
உடலில் என்ன ஒவ்வாமையோ என்று வீட்டினர் நினைக்க மனதின் ஒவ்வாமையும், பயமும் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவித்து போனாள் மீரா.
ஒருவாய் உண்ணும் பொழுதே தன் மீது தெறித்து விழுந்த சதைத்துணுக்குகள் தான் அவளின் நினைவுக்கு வந்து நிகழ்வில் நிலைகுலைய செய்தது.
சுருண்டு படுத்துக்கொண்டாள் மீரா. அவளால் அன்றைய நாளையே கடக்க முடியாமல் பரிதவிக்க அன்றைய இரவு கண்ணை மூடிய நொடி அலறிக்கொண்டு எழுந்தமர்ந்தாள் மீரா.
“என்னம்மா என்னாச்சு? என்னன்னு சொல்லு மீரா?…” என மீண்டும் பயந்துவிட்டனர் வீட்டினர்.
“இந்த நேரத்துல நான் என்ன செய்வேன்? என் பொண்ணுக்கு என்னாச்சுன்னு தெரியலையே?…” என பேச்சியும், நாச்சியாரும் அழுதபடி மகளை அணைக்க அவள் உடல் நடுங்கியது.
“என்னடா?…” என அவளை அணைத்து பிடித்தபடி பேச்சி கதற ராகவி எழுந்து சென்று கோகிலாவின் வீட்டை தட்டினாள்.
அந்த சத்தத்தில் இன்னும் உறங்காமல் இருந்த தரணிதரன் வெளியே வர கோகிலாவும் வந்துவிட,
“இப்ப என்ன இல்லாததையா சொல்றோம்? அந்த புள்ள கீழ விழாவும் பொம்பளைங்க அம்புட்டு பேர் இருந்தும் ஒத்தாசைக்கா கூப்பிட்ட? நீ தான் தொட்டு தூக்கிட்டு போன?…” என்று வார்த்தையை விட,
“நாளைக்கு உம்பொண்டாட்டி கீழ விழுந்து உனக்கு அவங்கள தூக்க சத்தில்லைன்னாலும் நான் ஒத்தாசை செஞ்சிருப்பேன். என்ன சொன்ன? தொட்டு. ஆமா தொட்டு தூக்கிருப்பேன். பேசுவியா நீ?…” என்றவன் பேச்சில் அவர்கள் கொதித்து போக,
“அடுத்த வீட்டு பொண்ணை பேசினா அப்பா மட்டும் குளுகுளுன்னு இருந்துச்சா? என் வாய புடுங்கின உன் குடலை உருவிருவேன்…” என்று வார்த்தைகள் தடிக்க,
“பேசாம இருங்க. அவன் என்னமும் கூத்தடிச்சுட்டு போகட்டும். நமக்கெதுக்கு? அவன் பாடு. அந்த டாக்டர் பாடு. அவ மினுக்கிட்டு திரியும் போதே…”
“ஏய்…” என அடிக்கவே கையை ஓங்கிவிட்டான் தரணிதரன்.
இதனை பார்த்தபடி நின்ற கோகிலாவின் கணவர் வந்து அவனை பிடித்து நிறுத்திவிட்டார்.
“என்னப்பா பன்ற நீ? இவங்க தான் மனசாட்சி இல்லாம பேசறாங்கன்னா நீயும் அடிக்க போற?…” என்று அவர் சொல்ல,
“மனசாட்சியா? இந்தா பேசுதே இந்தம்மா, இது புள்ளைக்கு டைபாய்ட் காய்ச்சலால மேலுக்கு முடியலன்னு இந்த மீராக்கிட்ட தான வந்து சொல்லி நேரங்காலம் பார்க்காம அது வைத்தியம் பார்த்துச்சு. ஒத்த பைசா வாங்கிருக்குமா?…” என்றவன்,
“அட காச விடுங்கண்ணே, இது வீட்டுக்கு நடையா நடந்துச்சே. சின்ன பிள்ளை, எப்படி இருக்குதோன்னு பார்த்து பார்த்து கவனிச்சதே. எங்க ஹாஸ்பிட்டல் போய் இப்படி பார்க்க சொல்லுங்க. இல்ல அங்க தான் வீடு தேடி வந்து வைத்தியம் பார்ப்பாங்களா? அந்த நன்றி வேண்டாமா? பொம்பளையா இது?…”
தரணிதரன் கொதித்து போய் பேச பேச வீதியில் இருந்த மற்றவர்கள் வாயே திறக்கவில்லை.
எங்கே தங்களையும் தரணிதரன் பேசிவிடுவானோ என வாயை மூடிக்கொண்டு நின்றனர்.
“விடப்பா, இவங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சது தானே? நல்லதுபொல்லது பேசிட்டா மழை வந்திடாது. விடு. முதல்ல நீ போய் அங்க என்னாச்சுன்னு பாரு. வீட்டுல பிள்ளைங்க இருக்காங்க. சொல்லிட்டு நானும் வரேன்…” என கோகிலாவின் கணவர் உள்ளே செல்ல,
“கொஞ்சம் இங்க இரு. நான் ஒரு போன் பண்ணிட்டு வரேன்…” என்று எழுந்து சென்றார் கோகிலா.
“ஏதாவது சாப்பிட்டாங்கலாம்மா?…” என்று தரணிதரன் கேட்க,
“எங்க தம்பி, தண்ணிய குடிச்சா கூட குடம் குடமா வாந்தி எடுக்கா. எனக்கு இதென்னமோ மருந்துக்கு சரியாகற மாதிரி தெரியலையே….” என பேச்சி சொல்ல தரணிதரன் தலையை பிடித்தபடி திரும்ப மீராவின் வீட்டு வாசலில் மகாலட்சுமி நின்றிருந்தாள்.
பேச்சி சொன்னதை இரண்டு நாட்களுக்கு முன் கேட்டிருந்தால் நிச்சயம் தரணிதரன் நம்பியிருக்கமாட்டான்.
இப்போது அவனும் அந்த அமானுஷ்யத்தை உணர்ந்தானே. நம்பாமல் எப்படி இருப்ப முடியும்?
மகாலட்சுமியை தான் பார்த்தபடி நின்றான். செய்வதறியாமல் அவன் நிற்க அவளின் தலை அசைந்தது. அவனை அழைத்தது.
“இப்ப இப்ப வந்திடறேன். இருங்க…” என்று வாசலுக்கு செல்ல மகாவின் பார்வை அந்த வீதியின் முனையை பார்த்தது. எதையோ காண்பித்தது.
“என்னம்மா சொல்ற? என்ன வேணும் உனக்கு? அந்த பொண்ணு படும்பாடு போதாதா? என்ன மகா?…” என்று ஆற்றமாட்டாமல் கேட்க மீண்டும் மீண்டும் மகாவின் பார்வை அந்த இடத்தில் தான்.
“என்ன சொல்ற? என்னன்னு சொல்லு…” என்று அவளை நெருங்க மகாவின் தலை மறுப்பாய் அசைந்து பின்னே சென்றது.
“ஆஆஆ…” என பேச முயற்சி செய்து வாயை திறந்தவள் கண்கள் வெளிறி வெண்மை பூச அவள் உருவம் நொடியில் பனிசிற்பமாகி துகள்களாய் உடைந்து சிதறிவிட்டது.
சிதறிய துகள்கள் நீராய் உருமாறி அவளின் வீட்டு திண்ணைக்கு சென்று அமர்ந்துவிட்டது.
என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் அவன் நிற்க கோகிலா போனுடன் வந்துவிட்டாள்.
“தாரணி ஒன்னும் பிரச்சனை இல்லை. துளசி தண்ணீரை சாமிக்கிட்ட வச்சு மீராவுக்கு குடுக்க சொல்றாங்க. நாளைக்கு காலையில கோவிலுக்கு கூட்டிட்டு வர சொல்றாங்க….”
“யாரக்கா சொன்னா? துளசி தண்ணியா?…” என்றவன்,
“என்கிட்ட கோவில் தீர்த்தம் இருக்கு. இன்னைக்கு போய்ட்டு வந்தப்போ துளசியும் குடுத்தாங்க. அதான் எடுத்துட்டு வந்திருக்கேன். நான் சொன்னேன்ல கோவில்ல ஒரு சாமியார். அவருக்கு தான் பேசினேன்…” என்ற கோகிலா உள்ளே செல்ல தரணிதரன் திரும்பி மகாவை பார்த்தான்.