“அந்த பாவந்தேன் இன்னும் எங்களயும் சுத்தி வச்சு வாட்டுது. அக்காவ கூட்டிட்டு வந்தது நாமதானன்னு இன்னிக்கு வரைக்கும் மனசுக்குள்ள நெனச்சு மருகாத நாளு இல்ல எங்க மீரா…” என தங்களின் குடும்பத்தின் பின்னணியை தரணிதரனிடம் சொல்லி மாய்ந்தார்.
இப்படி ஒரு பின்னணி அவர்களுக்கு இருக்கும் என தரணிதரன் நினைக்கவே இல்லை.
உறைந்து போய் அமர்ந்திருந்தான் பேச்சியின் பேச்சை கேட்டு. குற்றம் செய்தவர்கள் குடும்பத்தாரே என்றாலும் காப்பாற்றி இல்லை என்று மறுக்கும் காலம் இது.
ஆனால் அவர்கள் உறவும் வேண்டாம், சொத்தும் வேண்டாம், சுகவாழ்க்கையும் வேண்டாம் என எப்படி வந்திருப்பார்கள்!!
நினைக்கையில் பிரமிப்பாக இருந்தது தரணிதரனுக்கு. மீராவின் மீது மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தின் மீதும் அவனின் மதிப்பு கூடியது.
“எம்மவ புள்ள தான் ராகவி. எம்மகன கட்டின மகராசி மொத்தமா அத்துக்கிட்டு போயிட்டா. நல்லாருக்கட்டும். கொலைகார பாவிங்க நாளப்பின்ன என்ன வேணா செய்யுவானுங்க. தூர நிக்கிததுதேன் சேரி…” என்றார்.
“இப்ப எல்லாரும் ஜெயில்ல தான் இருக்காங்களா?…” என தரணிதரன் கேட்க,