“மதி.. நீ இங்க உட்கார்ந்திரு அம்மா போய் இந்த மாத்திரைலாம் வாங்கி வந்திடுறேன்”
“சரி மா “
நேற்று முதல் சற்று மயக்கம் அதிகமாகியாதால் இன்று காலை நிறைமதியும் விஜயாவும் மருத்துவரை காண வந்திருந்தனர். மருத்துவர் ரத்தழுத்தம் சற்று கூடியிருப்பதாக கடிந்து கொண்டு மாத்திரை எழுதி கொடுத்திருக்க அதை வாங்க விஜயா மருந்தகம் நோக்கிச் செல்ல நிறைமதி அங்குள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“ஹாய் நிறைமதி ! எப்படி இருக்கறீங்க? என்ன ரெகுலர் செக்கப்பா? “
என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்தாள் நிறைமதி. அங்கே இளம்பரிதி பவமொழியை தூக்கிக் கொண்டு நின்றிருந்தான். நிறைமதி சட்டென்று எழுந்து கொண்டாள்.
“நான் நல்லாருக்கேன். சும்மா செக்கப்க்கு தான் வந்ததேன். நீங்க? பாப்பாக்கு உடம்பு முடியலையா?”
நிறைமதி இப்போது தயக்கத்துடன் அவனை நோக்கி கையை நீட்டினாள்.
“பாப்பாவ நான் தூக்கலாமா?”
“கண்டிப்பா.. இதோ பிடிங்க”
ஒரு பூங்கொத்தை கையில் ஏந்துவது போல் மிக மென்மையாக குழந்தை பவமொழியை தன் கைகளில் வாங்கி மார்போடு அணைத்துக்கொண்டாள். நிறைமதி வெகு நாட்களுக்கு பிறகு குழந்தையை பார்த்து மனதாற புன்னகைத்தாள். மீண்டும் இருக்கையில் அமர்ந்து பவியை தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
” பாப்பா ரொம்ப அழகா இருக்கா!! அன்னைக்கு என்னால சரியா பாக்க முடியல… நீங்க வீட்டுக்கு போன பின்னே நினைச்சேன்… பாப்பாவ பாக்கலயேனு … இன்னைக்கு இது சர்ப்ரைஸ்தான். எனக்கு குட்டி பேபிஸ்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா? “
என்று கேட்டு பதிலை எதிர்பாராமல் மடியில் இருந்த பிள்ளையிடம் மெதுவாக பேசினாள். பிள்ளையும் தன் மழலை மொழியில் தன் தாயாக போகும் நிறைமதிக்கு பதில் சொல்வது போல் அவளைப் பார்த்து சிரித்து சப்தமெழுப்பியது. இளம்பரிதி இவர்கள் இருவரையும் முகத்தில் மிக மெல்லிய புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்.
*****************************
” என்ன பரிதி நீ வந்தா நல்லாருக்கும்னு சொல்றேன் … வர மாட்டேனு சொல்றியே?”
” அம்மா!!! புடவை வாங்க நான் எதுக்கு மா? அதோட எனக்கு காலேஜ்ல முக்கியமான கிளாஸ் இருக்கு மா… செமஸ்டர் வரத்துக்குள்ள நான் சிலபஸ் முடிக்க வேண்டாமா?”
புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரே என்று சற்று ஆதங்கத்துடன் தன் தாயை பாரத்தான் இளம்பரிதி.
” கோமு விடு பரிதி காலேஜ் போகட்டும்… அதான் ரஞ்சனி வரன்னு சொன்னாளே அப்பறம் என்ன?. பரிதி நீ சாப்பிட்டு கிளம்புப்பா… கோமு டிபன் எடுத்து வை…”
மணிமாறனும் இளம்பரிதியும் சாப்பிட அமர்ந்தனர். அவர்களுக்கு பரிமாறிவிட்டு தனக்கும் பரமாறிக் கொண்டு சாப்பிட அமர்ந்தார் கோமளவள்ளி.
” நம்ம கடைக்கு போகிற வழியில் தான் நிறைமதி வீடும் இருக்கு… அதனால ரஞ்சனி வந்ததும் நாங்க கிளம்பி நிறைமதி வீட்டுக்கு போய் அவங்கள அழைச்சுட்டு நம்ம கார்லே கடைக்கு போய்டு வந்துடலாங்க”
” சரி கோமு”
” இல்ல பா வேண்டாம்…. தனி தனி கார்லயே போங்க… ஒரே கார் வேண்டாம்”
” இல்ல பரிதி… அவங்க வீட்டுக்கும் பக்கம் தான் கடை… அதான் எதுக்கு தனி தனியா?”
“மா…. நான் சொல்றேல்ல… தனி தனியா போங்க அவ்வளவுதான். நான் கிளம்புறேன். பவிக்குட்டிய பாத்துக்குங்க”
என்று பாதிச் சாப்பாட்டிலே எழுந்து கை கழுவி தன் இருச்சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டான் இளம்பரிதி.
“என்னங்க இவன் இன்னும் இப்படி இருக்கான்?” என்று வருந்தினார் கோமளவள்ளி.
“கோமு… நாம அவன எல்லா விஷயத்திலும் நெருக்க கூடாது… அவனுக்கான நேரத்தை குடுக்கனும். அவனா மனசுல ஏதோ முடிவடுத்து இவ்வுளவு சீக்கரம் இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கான். கல்யாணம் முடிஞ்சா கொஞ்சம் கொஞ்சமா மாறுவான். அதுவரை அவன் போக்குல விடு…”
“ஹம்ம் நீங்க சொல்றதும் சரிதாங்க…. சரி நீங்க சாப்பிடுங்க நாம கிளம்புவோம்…”
” அதெல்லாம் இருப்பா மா… பையனுக்கும் மருமகளுக்கும் லீவ் எடுக்க முடியல அதான் நாங்க மட்டும் தயாரா இருக்கோம். இவளும் வரமாட்றா…”
” பரவாயில்ல விடுங்க அத்தை… பவிக்குட்டிக்கும் கடையில ரொம்ப நேரம் இருக்க முடியாது அழ ஆரம்பிச்சுடுவா… நீங்க வீட்ல அவள தனியா பாத்துக்குவீங்களா அண்ணி? நாங்க கடைக்கு போய்ட்டு வந்துடுறோம்?”
” ஓ!! பாத்துக்கலாமே! நீங்க பாப்பாவ குடுங்க நான் பத்திரமா பாத்துப்பேன்.”
” பின்ன என்ன மா ? நாம கிளம்பலாம்… அண்ணியும் பவிக்குட்டியும் பழகிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்”
” அதுவும் சரிதான் ரஞ்சனி! நம்ம கிளம்பலாம்…. பவியோட பேக் எங்க எடுத்து நிறைமதிட்ட குடு”
“இதோ! அண்ணி இந்தாங்க இதுல பவிக்கு சிப்பர், பால் பவுடர், வெந்நீர் எல்லாம் இருக்கு… வரப்போ பால் குடுத்தோம் ஒரு ஒரு மணி நேரம் கழித்து பால் கலந்து குடுங்க… டையப்பர் , டிரஸ் எல்லாம் இருக்கு பார்த்துகுங்க”
” சரிங்க அண்ணி நான் பார்த்துக்றேன். நீங்க கிளம்புங்க…”
” அச்சோ குட்டிமாக்கு தூக்கம் வந்துடுச்சா? இதோ பால் குடிச்சுட்டு தூங்குங்க… “
பவமொழியை மடியில் கிடத்தி சிப்பரில் உள்ள பாலை புகட்டினாள். அதுவும் கண்களை தன் தாயாகிறவளை நோக்கி உருட்டியபடி பாலை பருகியது.
பால் குடித்ததும் பவியை தோளில் போட்டு தட்டி குடுத்து ஏப்பம் வர வைத்தாள். பின் கட்டிலில் கிடத்தி விட்டு நிறைமதி குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தவாறே அறையிலுள்ள வாஷ்பேசினில் சிப்பரைக் கழுவினாள்.
அதற்குள் குழந்தை தூக்கத்திற்கு சிணுங்க ஆரம்பித்தாள்.
” ஓகே நிறைமதி!! ஒரு நிமிஷம் …. பவிக்குட்டி இதோ அம்மா பாட போறாங்க… கேட்டுட்டே சமத்தா தூங்குவியாம் சரியா?”
என்றாவாறு பிள்ளையை கட்டிலில் படுக்க வைத்து அவள் பக்கத்தில் படுத்துக் கொண்டு அலைபேசியை தன் மகளும் கேட்க்குமாறு வைத்தான்.
“ஆல் செட் நிறைமதி …. இப்போ நீ பாடலாம்”
அவன் கூறிய பிறகுதான் பரிதியும் தன் பாடலை கேட்பான் என்பதை உணர்ந்து சில நொடிகள் அமைதியாய் இருந்தாள்.
” நிறைமதி!!!! லைன்ல இருக்கியா?”
” ஹம்ம் இதோ பாடுறேன்..”
“ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு…
மண்டலத்தை காட்டியதில்…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…”
பவமொழியோடு சேர்ந்து அவளது தந்தையும்நிறைமதியின் பாடலில் மயங்கி உறங்கிவிட்டனர். இருவரிடமும் எந்த சத்தமும் வராதால் அவர்கள் உறங்கியதை உணர்ந்து தன் அலைபேசியை அனைத்து மெல்லிய புன்னகையுடன் தானும் உறங்கினாள் நிறைமதி