காதல் 8
புருஷனா என்ற கேள்விக்கு ஆம் என தலையை ஆட்டினாள் சிவா. எப்படி என்று அவளை பார்க்க, பல வருடங்கள் முன் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.
பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் படிக்கும் பள்ளி ஜெயின் இன்டர்நேஷனல் ரெசிடென்ட்டில் ஸ்கூல், பெங்களூரு. மாலை வேளையில் தனது நண்பர்களுடன் football விளையாடிக்கொண்டு இருந்தான் பிரகாஷ், சக்தி பிரகாஷ் பத்தாம் வகுப்பு மாணவன். அனைவரையும் தன் அழகாலும் அன்பாலும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி.
“சக்தி! அங்க சிவா ஒரு சீனியரா அடிச்சிட்டா மச்சி சீக்கிரம் வாடா” என அவனின் உயிர்த்தோழன் வாசு அழைக்க,
சக்தி மனதில், ‘ஐயோ இந்த ஸ்ரீ குட்டி டெய்லி ஒரு சண்டை போடலானா துக்கம் வராது போல’ வேகமாக சிவா இருக்கும் இடத்திற்கு சென்றான்.
அங்கு அவன் பார்த்தது பிளஸ் டூ மாணவர்கள் பலருக்கு மத்தியில் ஒருவனை சரமாரியாக திட்டி கொண்டு இருந்தால் அவனது ஸ்ரீ. சிவாவை கட்டு படுத்த முடியாமல் அவள் அருகில் கைகளை பிசைந்து கொண்டு இருத்தல் சிவாவின் தோழி மலர். சக்தியை பார்த்த பின் தான் மலருக்கு மூச்சே வந்தது.
நேராக வந்தவன், ” ஸ்ரீ இங்க என்ன பண்ற” என அதற்கு அவளோ “அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் கிட்ட ப்ரொபோஸ் பண்ணுவான். என்னைவிட சீனியர்னா அவன் சொல்றதை நான் கேட்கணுமா அவனை…” என பிளஸ் டூ மாணவன் கோகுலை அடிக்க செல்ல,
சக்தி அவளை இழுத்து கொண்டு வந்தான். “ஏன் டி ஒரு நாள் கூட சண்டை போடாமல் உன்னால இருக்க முடியாதா. அவங்க நம்ப சீனியர். ப்ரொபோஸ் பண்ணா வேண்டாம்னு சொல்லிட்டு வர வேண்டியது தானே அதை விட்டிட்டு சண்டை போட்டுட்டு இருக்க”
“நான் எதுமே பண்ணல சக்தி அவன் தான் நான் நோ இன்ட்ரெஸ்ட் சொன்னதுக்கு அப்புறம் கூட என் கையை பிடிச்சி இழுத்தான். அதான் கோவத்தில் ஒரே ஒரு அடி தான் அடிச்சேன்” என பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொன்னாள்.
“சரி ஹாஸ்டல் போ நாளைக்கு பார்க்கலாம்” என அவளும் மறுவார்த்தை பேசாமல் மலருடன் ஹாஸ்டல் நோக்கி சென்றால்.
வாசு, “எப்படி மச்சி எல்லார் கூடவும் சண்டை போடுகிற யார் சொல்வதையும் கேட்க மாட்ட ஆனா நீ சொல்றதை மட்டும் அது என்னவா இருந்தாலும் கேட்கிறா. உங்க இரண்டு பெருக்கும் சம்திங் சம்திங் தானே” என தன் பல நாள் சந்தேகத்தை கேட்டான்.
“டேய், அவ என்னமோ சண்டைக்காரி மாதிரி சொல்ற. தப்பு பண்ணா தான் டா அவ அடிப்ப இல்ல சண்டை போடுவா. மத்தபடி அவ ரொம்ப நல்ல பொண்ண டா. அப்புறம் கேட்டியே சம்திங் சம்திங் அப்படி எல்லாம் எனக்கு எப்ப வரைக்கும் தோணல.பட் அவ மேல லவ் வந்த அடுத்த நிமிடம் அவ கிட்ட சொல்லிடுவேன். இது படிக்கச் வேண்டிய வயசு. இதை அப்புறம் பார்த்துக்கலாம் இப்ப வா போகலாம்” என தன் வயதுக்கு மீறிய பொறுமையுடன் யோசிப்பவனே சக்தி.
சிவாவிற்கு முதலில் கை பேசும் அனால் சக்தி அதற்கு நேரெதிர். யோசித்து அதனால் என்ன நடக்கும் என பல கோணங்களில் சிந்திப்பவன். அவன் தன் கனவை விட அதிகமாக நேசிக்கும் ஒன்று அவனோட ஸ்ரீ, ஷிவானிஸ்ரீ.
அங்கு மலரோ, “சிவா உன்னோட கோவம் தான் டி உன்னை பல பிரச்னையில் மாட்டிவிடுத்து. அப்படி தான் போன வாரம் அந்த மேத்ஸ் டீச்சரை அடிச்சு பிரின்சிபால் கிட்ட வார்னிங் வாங்கின. படிப்பில் முதலில் வரதுனால நீ தப்பிச்ச” என அவளை திட்டி கொண்டே தங்களது அறைக்கு சென்றார்.
“நான் ஒன்னும் வேண்டுமே அடிகளை டி அவன் தான் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட தப்பா நடந்துக்கிட்டான். அதே மாதிரி என் கிட்ட அவன் வேலைய கட்டினான். அதன் அடிச்சேன். அதுவும் லைட்டா கையை மட்டும் தான் ஓடைச்சேன்” என அப்பாவியா சொல்ல
“அடிப்பாவி… ஆனா எப்படி டி சக்தி என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்ற. அவன் மேல உனக்கு கோபமே வரலையா”
“இல்ல டி. அவனை பார்த்த நான் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் அப்படியே போயிடும். ஏன் தெரியலை பட் அவன் என்ன சொன்னாலும் அது என் நல்லதுக்கு மட்டும் தான் இருக்கும்”
ஒரு வாரம் கடந்த நிலையில், நண்பர்கள் நால்வரும் டின்னர்க்காக ஹோட்டல் பார்க் வந்தனர். கேலியும் கிண்டலுமாக இருக்க சிவாவின் பார்வை ஒரு இடத்தில் நின்றது. அவளின் வயதை ஒத்த ஒரு பெண் சக்தியை வைத்த கண் எடுக்காமல் பச்சையாக சைட் அடித்து கொண்டு இருந்தாள்.
எதற்கு தனக்கு கோபம் வருகிறது என்று யோசிக்காமல் சக்தி பார்த்து, “டேய் உனக்கு என்ன அழகன் என நினைப்பா. இன்னொரு முறை வெளிய வரும் போது இது மாறி வந்த கொன்னுடுவேன்” என இவ என்ன லூசா என்ற ரீதியில் மூவரும் பார்த்தனர்.
“சொன்னது புரியுதா?” சிவா கேட்க எதுக்கு இப்படி கேட்கிறாள் என்று கூட தெரியாமல் தலையை மட்டும் ஆடினான்.
இன்னும் அந்த பெண் போகாததால் எங்கே நாம் அவளை அடித்து விடுவோமோ என நினைத்து “நான் வெளிய பார்க்கிங் கிட்ட வெயிட் பண்றேன் நீங்க பில் செட்டில் பண்ணிட்டு வாங்க” என அவர்கள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வெளியே வந்தால்.
அவள் சென்ற பின் தான் அந்த பெண்ணை மூவரும் பார்த்தனர். தங்களுக்குள் புன்னைகைத்து கொண்டனர். வாசு, “உன்னோட வருங்காலம் ரொம்ப சிறப்பா இருக்கும்னு இதிலே தெரியுது” என கிண்டல் செய்ய “நீ மூடு” என்றான் சக்தி.
வெளியே நடப்பதை பார்த்த மூவரும் அதிர்ந்தனர். அங்கு கோகுல் மற்றும் அவனது நண்பர்கள் சிவாவிடம் சண்டை போடு கொண்டு இருந்தனர். சிவா ஒரே ஆளாக மூவரையும் அடி பின்னி எடுத்தால்.
“டேய் **** இவ பொண்ணு தானே என்ன பண்ண முடியும் நினைச்சியா. கொன்னுடுவேன் இன்னொரு முறை என் கிட்ட மட்டும் இல்ல வேற எந்த பொண்ணு கிட்டவும் தப்பா நடக்க கூடாது” என கோகுலை சரமாரியாக அடிக்க சக்தி வந்து சிவாவை பிடித்தான்.
“என்ன நடந்தது என்ன?” என மலர் கேட்க “ஒன்னும் இல்ல டி நான் தனியா இருக்கிறதா பார்த்துட்டு என் கிட்ட வம்பு பண்ணான். நானும் எவ்வளவு நேரம் தான் ஒதுங்கி போறது அதான் இரண்டு வெச்சேன்” என தனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி சிவா சொல்ல
“எவ்வளோ ரத்தம் வர மாதிரி அடிச்சிட்டு இரண்டு தான் வெச்சியா உன்னை..” என சக்தி சிவாவின் காதையை திருகினான். “சாரி டா. நான் வேணுமே பண்ணலை. வலிக்கிது விடுடா” என்று சிவா சொன்ன பின் தான் விட்டான்.
கோகுல், ” என்னை மன்னிச்சுடு ஷிவானி” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
நாட்களும் வேகமாக செல்ல, ஒரு நாள் சிவாவை பார்க்க அவளது அப்பா வந்துள்ளதாக தகவல் வர சிவா மலர் வாசு சக்தி நால்வரும் அவரை காண சென்றனர்.
சிவாவை பார்த்ததும், “ஏய் குட்டி பையா எப்படி இருக்க?” என கேட்க அவளது நட்புகள் இதை கேட்டு சிரித்தது.
“அப்பாஆஆ…. நான் பையன் இல்ல எப்ப பார்த்தாலும் என்னை இப்படியே சொல்றேங்க. அம்மாவும் குட்டிமாவும் எப்படி இருக்காங்க” முதல் பாதி கோபமாகவும் அடுத்த பாதி ஏக்கமாகவும் கேட்டாள்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க. உங்க அம்மா தான் உன்ன பார்க்கணும் சொன்ன ஆனால் எனக்கு இருந்த வேலையில் அவளை கூப்பிட்டு வர முடியல. நெஸ்ட் டைம் கூப்பிட்டு வர ட்ரை பண்றேன்” என
“இப்படி தான் சொல்லுவீங்க பட் கூப்பிட்டு வர மாட்டீங்க. அவங்களை எல்லாம் பார்த்து மூன்று வருஷம் ஆகுது. போ பா.. உனக்கு என் மேல பாசமே இல்ல” என வருத்தமா சொல்லும் சிவாவை பார்க்க முடியாமல் சக்தி “ஏன் அங்கிள் லீவ்க்கு கூட ஸ்ரீயை சென்னைக்கு வர கூடாது சொல்றேங்க. அவளுக்காக நாங்க யாரும் லீவு வீட்டா கூட போக மாட்டோம்”
வாசு, “நாங்க ரெண்டு பெரும் கூட வீட்டுக்கு போயிடுவோம் அங்கிள் பட் சக்தி போகவே மாட்டான். எப்பவும் சிவா கூட தான் இருப்பான்” என அவனை கோர்த்து விட சக்தியும் சிவாவும் வாசுவை முறைக்க, வாசு மனதில் ‘தப்பா சொல்லிட்டோமோ இப்படி முறைக்கிறாங்க’
சிவாவின் அப்பா சிரித்து கொண்டே இருவரை பார்க்க சக்தி “இல்ல அங்கிள் சும்மா சொல்றான். எனக்கு அங்க விளையாட யாரையும் தெரியாது அதான் போகல” என் சுய விளக்கம் தந்தவனின் மனதில் அவனின் அம்மா ஒரு ஒரு முறையும் கூப்பிடும் போதும் போகாமல் இருந்தது நியாபகத்துக்கு வந்தது.
இதே போல் பல முறை சிவாவின் அப்பா சக்தியிடம் நன்றாக பேச கொண்டனர்.
இப்படியே இரண்டு வருஷம் வேகமாக கடந்தது. இன்னும் இரண்டு நாளில் பிளஸ் டூ ரிசல்ட்காக அனைவரும் காத்திருக்க,
சக்தி சிவாவிடம் , ” ஸ்ரீ அடுத்தது என்ன பண்ண போற. ஏதாவது ஐடியா இருக்கா இல்ல உன் டாடி எதாவது படிக்கச் சொன்னாரா”
“இல்லடா அப்பா எதுமே சொல்லல. என்னோட விருப்பம் தான். நான் oxford யூனிவர்சிட்டீல் bba+mba இன்டெகிரெட் கோர்ஸ் பண்ணலாம் இருக்கேன். 5 வருடம் யூ கே லா தான் இருக்காரா மாதிரி வரும். அதுக்கு அப்புறம் வந்து அப்பாவோட சேர்த்து பிசினஸ் பண்ண போறேன். நீ என்னடா பண்ண போற ” என தன் எண்ணத்தை கூறினால்.
ஐந்து வருடம் ஸ்ரீ பார்க்காம இருக்க முடியாதே என யோசித்து கொண்டே, “எனக்கு கிரிமினாலஜி படிக்கணும் ஆசை. அதை ஆசை என்று சொல்லுவதை விட என்னோட ட்ரிம் கூட சொல்லலாம். பட் என்னோட டாடி பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கச் சொல்லறாரு. அதான் கொஞ்சும் குழப்பமா இருக்கு”
“உனக்கு என்ன படிக்கணும் தோணுதோ அதை படிடா. உன்னோட சந்தோசம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்” என்ற சிவாவை குறு குறு என பார்த்தான்.
அவன் பார்வையின் வேறுபாட்டை உணர்ந்து, “டேய் கேடி என்ன பார்வை மாறா மாதிரி இருக்கு. போ டா போய் தூங்குடா. நெஸ்ட் வீக் சென்னை போகணும். முழுசா பைவ் இயர் கழிச்சு போக போறேன்” என
“பேச்சை மாத்தாதை. ஏன் டி உனக்கு என்னை பார்த்த பாவமா தெரியலையா ஒரு வருசம் மேல உன்னோட பதிலுக்காக வெயிட் பண்றேன். என்னை இன்னும் எவளோ நாள் தான் அலைய விடுற ஐடியால இருக்க” இருவரின் மனதும் சக்தி ப்ரொபோஸ் பண்ண நாளை நோக்கி சென்றது.
நான்கு நாள் ஸ்கூல் டூர், பல இடங்கள் சுற்றி விட்டு கடைசியாக ஊட்டி வந்தனர்.இரண்டு நாள் இங்கு இருப்பதாக பிளான். எல்லாரும் ஊட்டியின் அழகை ரசிக்க ஆனால் சக்தியால் அதை எல்லாம் ரசிக்க முடியவில்லை. புதிதாக மலர்ந்த காதல் அவனின் கண்களை சிவாவை தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை. முதலில் கவனிக்காத சிவா பின் அவனின் நடவடிக்கையை பார்த்து குழம்பினாள்.
முதல் நாள் ஊட்டியில் இவ்வாறாக செல்ல அடுத்த நாள் நடந்த நிகழ்வில் சிவா ஸ்தம்பித்து நின்றாள். நடந்தது என்ன பொறுத்து இருந்து காணலாம்!
தொடரும்
நிலா