ஏர்ப்போர்ட்டில் அவளின் வருகையைச் சத்யா எதிர்ப்பார்க்கவில்லை.அவள் எந்த நேரத்தில் என்னை நினை என்று சொன்னாளே அவளை நினைக்கக் கூடாதென அவன் நினைக்க , அவன் கெட்ட நேரம் எப்போதுமே அவள் நினைவுதான்.குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த கதை தான்..!!
இங்கே இந்தியாவில் அகல்யாவோ தனியாக இருந்த சத்யாவின் பெற்றோரோடு ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டாள்.பார்வதிக்கும் அகல்யாவை மிகவும் பிடித்துப் போனது.
ஆனால் இந்தியா வந்த பின் சத்யாவோ அவளுக்குத் தான் ஏற்றவனல்ல என்ற எண்ணத்தில் அவளிடம் கடுமைக் காட்டத் துவங்கினான் .அகல்யாவைப் பற்றி அவன் கொஞ்சம் அறிவான்.அவளுக்குச் சுயமரியாதை ஜாஸ்தி என்று.ஆதலாலே கிடைக்கும் நேரமெல்லாம் அவளை மதிக்காமல் நடந்து கொண்டான்.
இப்படியாகப் பழைய நினைவுகளில் உழன்றவன் , நேரமாகி விட்டதை உணர்ந்து தலையை உலுக்கிக் கிளம்பி நீரஜாவை சந்திக்கச் சென்றான்.
அகல்யாவும் சுந்தரம் சொன்னது போல் செல்ல , சத்யாவும் அவளும் ஒன்றாய் ஒரே நேரத்தில் அந்தக் காபி ஷாப்பில் சந்தித்தனர்.
அகல்யாவை அங்கே கண்டவன் திகைத்தான் என்றால் , அவள் அவன் அருகில் வந்து பேச இன்னும் அவனது திகைப்புக் கூடியது.
அகல்யாவைக் கண்டு சத்யா திகைத்து நிற்க ,
அவனருகில் வந்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு ,
“என்ன சத்யா….ஏன் நிக்கிறீங்க….முதல்ல…..உட்காருங்க….” எனச் சொல்ல
அவளை அங்கே எதிர்ப்பார்க்காதலால் முதலில் அதிர்ந்தவன் , மனதுக்குள் , “உனக்கு நான் செட் ஆக மாட்டேனா….கேட்கிறியாடி…..ஏன் படுத்துற…..முதல்ல…..இவள நீரஜா வரதுக்குள்ள துரத்தணும்……அய்யோ கடவுளே……..இவ இப்போன்னு பார்த்தா இங்க வரனும்….?” என்று நினைத்தவன் அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
“எப்படி இருக்கீங்க….?”
“நான் நல்லா இருக்கேன்……..எனக்கு வேலை இருக்கு….நீ கிளம்பு…..”
“ஹா ஹா….போதும் சத்யா……காமெடி பண்ணாதீங்க. காபி ஷாப்ல…காபி குடிக்கிறதைத் தவிர வேற வேலை என்ன….?”
“அதான்..என் வேலை….நீ போ…..” என்று சிடுசிடுத்தான்.
“ஏன் எங்கூடக் காபி ஷேர் பண்ணா என்ன…..?”
“ப்ச்….உனக்கு இப்போ என்ன வேணும்….?”
“சத்யா…..ப்ளீஸ்…எதும் தெரியாத மாதிரி நடக்காதீங்க…..எங்கம்மா எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுறாங்க….”
உடனே , “அதுக்கு நான் என்ன செய்ய …..நான் என்ன கல்யாண புரோக்கரா….?” என்றான் சுள்ளென்று.
“கல்யாண புரோக்கர் இல்ல…ஆனா நீங்க தான் கல்யாண மாப்பிள்ள…”
“ஆமா….. நான் கல்யாணம் தான் பண்ணிக்கப் போறேன்…ஆனா உன்ன இல்ல….உன் மேல எனக்கு எந்த ஆசையும் இல்லை…..போதுமா….போய் உங்கம்மா சொல்ற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கோ…”
“அதுக்கு நான் டூ இயர்ஸ் வெயிட் பண்ணனும்னு அவசியமில்ல……..உங்களுக்காகத் தான் நான் வெயிட் பண்ணினேன்…..”
“நான் ஒன்னும் உன்ன வெயிட் பண்ண சொல்லல…”
“சத்யா…..நானே வந்து என் விருப்பத்தைச் சொன்னதால…..உங்களுக்கு இளக்காரமா போய்ட்டேனா….” என்று அவள் கொஞ்சம் காட்டமாய்க் கேட்க ,
அவனோ பதில் பேசாது அவளை முறைத்தான்.
அவன் முறைக்கவும் ,
“எனக்கு ரீசன் சொல்லுங்க ஏன் பிடிக்கலன்னு..எங்க என் கண்ணைப் பார்த்து சொல்லுங்க…..உங்க கண்ணு பொய் சொல்லாது…” என்றவள் டேபிளில் நன்றாகக் கை ஊன்றி அவனைத் தீர்க்கமாகப் பார்க்க ,
ஏற்கனவே அவள் நினைவில் வாடியவன் , அவளை மறக்கத் துடித்தவன் , அவளுக்குத் தான் இணையில்லை, அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைய வேண்டும் என்று நினைப்பவனின் கண்களா பொய் பேசும்…?
ஆனால் அவனது சுய நலத்தை விட அவளது வாழ்வே பெரிதாய் பட, அவளை அடைய முடியாத இயலாமையும் எங்கே நீரஜா வந்து விடுவாளோ என்ற பதட்டமும் சேர நொடியில் தன்னிலை இழந்தவன் , வார்த்தைகளை விட்டான்.
அவனது இருக்கையில் இருந்து கோபமாக எழுந்தவன் , “ஏய்…..உன் மனசில என்ன நினைக்கிற……கொஞ்சம் கூட உனக்கு வெட்கமே இல்லை…..பொண்ணு தான டி நீ…….இப்படி என் பின்னாடி அலையுற……….அப்படி என்ன தான் இருக்கு….எங்கிட்ட……ஆங்……………….சொல்லு……..வேற எவனும் உன் கண்ணுக்குத் தெரியல….நான் தான் வேண்டாம்னு விலகிப் போறேன்ல…அப்புறமும்….இப்படி நான் தான் வேணும்னு அலையுற……? எனப் பேசிக்கொண்டே செல்ல ,
அகல்யாவால் தாங்கவே முடியவில்லை.அவள் கண்களில் வலியையும் தாண்டி கோபம் தான் அதிகமாய் இருந்தது.
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான்….அலையுற…அது இது என….’
அகல்யா போன்ற ஒருத்தியால் அவனின் வார்த்தைகளின் வீரியத்தை ஏற்கமுடியவில்லை.
கோபம் கண்ணை மறைக்க , சத்யாவை அடிக்கக் கை ஓங்க ,
அவள் கைகளைப் பிடித்தவன் ,
“இதான்…இந்த திமிருதான்……எனக்குப் பிடிக்கல….ஒரு ஆம்பிளையை இத்தன பேர் இருக்கும்போது கை நீட்டுற….நீ எப்படி எனக்குச் செட் ஆவ……?” எனக் கேட்க
அவள் கைகளை அவன் விடவும் , “போதும் இனிமே உனக்கும் எனக்கும் ஒன்னுமே இல்ல. நானே வந்து என் காதல உங்கிட்ட சொன்னேன்ல…..அதான்…நீ இப்படி என்னைப் பேசக் கூடாத வார்த்தையெல்லாம் பேசிட்ட சத்யா…உங்கிட்ட சத்தியமா நான் இதை எதிர்ப்பார்க்கல…குட் பை…” என்றவள் சிவந்த கண்களோடு அங்கிருந்து விருட்டென அகன்றாள்.
அகல்யா சென்றதும் தொப்பென இருக்கையில் அமர்ந்தவன் மனதில் சொல்லொண்ணா வலி.அவளுக்காக அவள் நலனுக்காக என்று எண்ணினால் கூடச் சுருக் சுருக்கென்று ஒரு வலி தோன்றுவதை மறைக்க முடியவில்லை.
‘அவள் தேவதை…அவளுக்கு நீ ஏற்றவனில்லை.ஏற்கனவே உனக்குத் திருமணமாகிற்று.அவளுக்கு நீ அவமானத்தைத் தான் தேடி தருவாய்..வேண்டாம்..அவளை நினைக்காதே…….’ என்று மனது அடித்துச் சொல்ல , அப்படியே கண் மூடி அமர்ந்தவனைக் கலைத்தது நீரஜாவின் குரல் ,
“ஹாய் மிஸ்டர்.சத்யா…..!”
அதில் விழித்தவன் அங்கிருந்த நீரஜாவைக் கண்டவன் முயன்று வரவழைத்த புன்னகையோடு ,
“ஹாய்……நீரஜா……சிட்….” எனச் சொல்ல
“எப்போ வந்தீங்க……?”
“நான் இப்போதான் வந்தேன்……….நீங்க”
“அந்தப் பொண்ணு உங்கள கை ஓங்கும்போதே வந்துட்டேன்….” என்று அமைதியாய் சொல்ல ,
“அ….அது………..அவ மேல தப்பில்ல……” எனத் திக்கித் திணறி சொல்ல ,
“ஆஹா……என்ன சார்…..லவ்வா……?” என அவள் சிரிப்போடு கேட்க
“ஆமா….அப்படி சொல்லித்தான் அவ வந்தா…அதான்….அவள நான் திட்டிட்டேன்………..அதான்….ரொம்பக் கோவம் வரும் அவளுக்கு…..”
“ஏன் பிடிக்கலயா…….?”
“ம்ம்…பிடிச்சித்தான் இருக்கு…..பட் லவ்லாம் இல்லங்க……..அவளுக்கு நான் செட் ஆக மாட்டேன்” என்றவன்
“ஏன்…..அவள நான் லவ் பண்றேன்னு நினைக்கிறீங்களா…….நான் என் மனைவிக்கு என்னைக்குமே உண்மையா இருப்பேன்…நீரஜா…” என்று கொஞ்சம் இறுக்கத்தோடு கூறவும் ,
“கூல் சார்….ஏன் இவ்வளவு டென்ஷன்…..சரி…லீவ் இட்……உங்களுக்கு ஏன் என்னைக் கல்யாணம் பண்ணனும்னு தோணிச்சு……? பீ ட்ரூ…..”
“டூ பீ ஃப்ரங்க்…….எங்கம்மாக்கு உங்கள பிடிச்சிருக்கு…….அண்ட் நான் என்னை மாறி ஏற்கனவே கல்யாணமானவங்களதான் கேட்டேன்……..நீங்களும் வீடோயர்….நானும்…சோ அதான்……….”
“ஆனா…..அப்படி இந்த ரீசனுக்காக நம்ம மேரேஜ் செஞ்சா இட் வில் பீ எக் காம்பரமைஸ் சத்யா…….என்னோட பாஸ்ட் லைஃப் எப்படி இருந்ததுன்னா…..என்னோட எக்ஸ்க்கு ஹார்ட் டீசிஸ்…அதை மறைச்சி எனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சாங்க……அவரோட வாரிசை நான் சுமக்கனும்னு ஆசைப்பட்டாங்க…..அவர் மூணே மாசத்துல இறந்துட்டார்…….ஆனா என்னமோ என்னோட ராசியால தான் அவர் இறந்த மாறி பேசி…..ரொம்பவே அனுபவிச்சிட்டேன் சார்…….”
“நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டா……..ஆறுதலா இருப்போமே ஒழிய…அன்பா இருக்க மாட்டோம்….ஏன்னா எனக்கு அன்பு தேவை.. நான் பார்க்காத அன்பை எனக்கு வரப்போறவர் தரணும்னு நான் எதிர்ப்பார்த்தேன்…..இப்போ உங்க கல்யாணம் பண்ணா மைனசும் மைனசும் சேரும்….அவ்வளவுதான்..அதான் உங்க லாஜிக்கா இருக்கு…..”
“மைனஸ் மைனஸ் ப்ள்ஸ்….”
“இல்ல….சத்யா……உனக்கும் குறை இருக்கு..எனக்கும் குறை இருக்கு……அப்படி நினைச்சீங்கனா லைஃப் நல்லா இருக்காது…….பாஸிட்டிவும் நெகட்டீவும் தான் ஒன்னுக்குன்னு அட்ராக்ட் பண்ணும்…இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி நடந்துச்சே…” என்று முறுவலோடு சொல்ல
“ஓஹ்….நீங்க அதையே மனசுல நினைச்சிட்டு இருக்கீங்களா….” என்றவன் அகல்யாவைப் பற்றி அனைத்தையும் கூறினான்.
“சீ…சீ…அப்படி இல்லவே இல்ல……நாட் அட் ஆல்…..அதான் சொல்றேனே நீரஜா……அவ அம்மா ஒரு டிவோர்சி…இப்போ இவளும் என்னை ரெண்டாந்தாரமா கல்யாணம் செஞ்சா ஊர் உலகம் என்ன சொல்லும்…அவளுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கை அமையனும்…அதான்..சொன்னா கேட்க மாட்டா…..அதான்..கொஞ்சம் கத்திட்டேன்….பாவம்…செம சூடா இருப்பா…..”
“அவங்கள பத்தி பேசும்போது உங்க கண்ணுல ஓளி வீசுது…..சத்யா….ஷீ இஸ் பார்ன் ஃபார் யூ…..”
“அப்போ…நான் கஷ்டப்பட மாட்டேனா…..?” என அவள் புருவம் உயர்த்திக் கேள்வியாய் நோக்கவும் ,
அவன் என்ன பேசுவதெனத் தெரியாமல் இருக்க ,
“இங்க பாருங்க சத்யா…….நான் விதவை….நீங்களும் அப்படிதான்….சோ ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கிட்டா……..நல்லா இருக்கும்…ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு குறை இருக்குன்னு நினைக்கிறீங்க……”
அவன் குறுக்கே பேச வர , “ப்ளீஸ்………………சத்யா………..நான் பேசி முடிச்சிடுறேன்…” என்று சொல்ல அவனும் தலையசைத்து ஒப்புதல் அளிக்கவும் அவள் மேலே தொடர்ந்தாள்.
“ஆனா அப்படி இல்ல லைஃப்ல…….அகல்யாக்கு உங்க மேல அன்பு இருக்கு…….உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சும்……அவங்க உங்கள விரும்புறாங்க……ஏன்….நீங்க சொன்னீங்களே……….ஊர் உலகம் பேசும்னு…அதெல்லாம் அவங்களுக்குத் தெரியாதா என்ன….?….இருந்தும் கூட ஷி இஸ் இன் லவ்…….பரிதாபத்தால காதல் எல்லாம் வராது சார்…….நீங்களே யோசிச்சு பாருங்க…நீங்க சொன்ன மாறி அவங்களுக்கு ஆம்பிளைங்களே பிடிக்காது……அப்படிபட்டவங்களுக்கு உங்கள பிடிச்சிருக்குன்னா…..இட்ஸ் சோ குட்…….அவங்க போகும்போது நான் பார்த்தேன்..அவங்க கண்ணுல அவ்வளவு வலி……”
“உங்க அம்மா எங்கிட்ட பேசினாங்க…வினிதா பத்தி….எல்லாத்தையும் சொன்னாங்க…..உங்களுக்கும் எனக்கும் நல்ல மேரேஜ் லைஃப் அமையல…………….இப்போ…உங்களுக்கு ஒரு நல்ல துணை தேவை….அது கண்டிப்பா நான் இல்லை…ஏன்னா….. நானே அன்பைத்தான் காதலைத்தான் எதிர்ப்பார்க்கிறேன்…நீங்களும் அதை எதிர்ப்பார்ப்பீங்க………..ஆனா நம்ம ரெண்டு பேர்க்கிட்டையும் இப்ப காதல் சுத்தமா இல்ல……..இப்போ நீங்க எனக்கு வாழ்க்கைக் கொடுக்க நினைக்கிறீங்க…..அது நமக்குச் சரிவராது…… நம்ம ரெண்டு பேரும் எதிர்ப்பார்க்கிறோம்…ஆனா கொடுக்க எதுவும் இல்ல….” என்று திட்டவட்டமாகச் சொல்ல ,
“ஓகே….நீங்க சொன்ன லாஜிக் எதுவும் எனக்குப் புரியல……பட் உங்களுக்கு நான் வேண்டாம்னு சொன்னது மட்டும் புரியுது…”
“சாரி…சார்…….”
“இதுக்கு எதுக்குங்க சாரி…….உங்க விருப்பம் நீங்க சொன்னீங்க…அதுல என்ன…?”
“ஆனா….ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன்…தப்பா நினைக்காதீங்க…ஆஸ் எ ப்ர்ண்ட்…..நான் சொல்றேன்……..சொல்லவா….?”
“ம்ம்ம்…சொல்லுங்க…..”
“அகல்யா தான் உங்களுக்கு ஏத்தவ சத்யா……”
“ப்ச்” என அவன் சலித்துக்கொள்ள ,
“நான் சொல்றதெல்லாம் கரெக்டான்னு நீங்களே உங்க மனசைக் கேளுங்க…….அகல்யாவைத் திட்டிட்டு நீங்க ஃபீல் பண்ணல……அது மாதிரி..நான் வந்து அகல்யா பத்திக் கேட்டதும்……..அவங்க மேல தப்பில்லன்னு உடனே சொல்றீங்க…..இப்போ..எல்லாம் மாறிடுச்சு…ஆனா நான் இங்க வரும்போது உங்க அம்மா பார்த்த பொண்ணா தானே வந்தேன்……ஆனா கூட உங்களுக்கு என்னைப் பார்க்கனும்னு ஆர்வம் இருந்ததா என்ன இல்லையே….?….அகல்யாவைப் பத்தி நான் தப்பா நினைக்கக் கூடாதுன்னு தானே……நீங்க நினைச்சீங்க….அந்த எண்ணம் தானே உங்களுக்குப் பிரதானமா இருந்தது……முதல் தடவையா பார்க்கிற நான் கூட அகல்யாவைத் தப்பா நினைக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்க…….”