தலை எல்லாம் கலைந்து உடுத்தியிருந்த உடை முழுவதும் வேர்வையில் நினைந்து அறைக்குள் வந்த அமிர்தாவை கண்ட பாரதி,
“ஏய் என்னடீ எங்க போய் விழுந்து எந்திரிச்சு வர….”என்று கேட்க,அவளோ பதில் சொல்லும் நிலையில் இல்லை அறையில் ஒரு குடுவையில் வைத்திருந்த தண்ணீரை முழுதாக தொண்டையில் சரிக்க அது பாதி வாயிற்கும் பாதி உடலுக்கும் போனது.பாரதி தான் அவளை ஏதோ விநோத ஜந்து போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
முழுவதுமாக அந்த குடுவை காலி செய்த பிறகே தனது பாயில் அமர்ந்தாள் அமிர்தா.ஓடி வந்ததில் மூச்சு அதிகமாவே வாங்கியது,நெஞ்சை தடவி தன்னை சமன் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.
“என்னடீ என்ன பிரச்சனை….”என்று பாரதி மெதுவாக ஆரம்பித்தாள்.அவளுக்கு புரிந்து போனது இவள் ஏதோ ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொண்டு ஓடி வந்திருக்கிறாள் என்று.அவளும் இது போல் எல்லாம் அனுபவித்தவள் தானே தோழியின் நிலை புரிந்து அவளின் அருகே அமர்ந்து தலையை மெல்ல தடவி விட,அமிர்தாவிற்கு கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.
பாரதியைவிட அமிர்தா சின்ன பெண் அதோடு யாரும் இல்லாமல் தனியாக அல்லாடும் பெண் என்று அவளிடம் எப்போதும் பாசம் உண்டு பாரதிக்கு.பாரதி கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக வந்தவள் அவளின் குடும்பம் பெரிது அதனால் இவள் ஓட வேண்டிய சூழ்நிலை.தனியாக ஒரு பெண் இந்த உலகில் போராடுவது அத்தனை எளிதல்ல தனக்கு ஏதாவது ஒன்று என்றால் தன் சுமையை அவ்வபோது தாயிடம் இறக்கி வைப்பதுண்டு ஆனால் அமிர்தாவிற்கு அதுவும் இல்லை.பாரதியின் மடியில் படுத்திருந்த அமிர்தாவிற்கு இன்று அளவுக்கு அதிகமாகவே அன்னையின் நினைப்பு தான்.
“இந்தா புள்ள….ஒண்ணுமில்ல எந்திரி….”என்று பாரதி அமிர்தாவை எழுப்ப,கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.முகமெல்லாம் வீங்கி போயிருந்தது.
“மூஞ்சியே வீங்கி போயிட்டு புள்ள….முதல்ல எந்திரி போய் முகத்தை கழுவிட்டு வா….போ….”என்று அவளை எழுப்ப அமிர்தாவும் பாரதி கூறியது போல் முகம் கழுவி வர,
“இந்தா சாப்பிடு….”
“இல்லக்கா இப்ப வேண்டாம்…”என்று அமிர்தா கூற அவளை இழுத்து அமர வைத்தவள் ஊட்டிவிட தொடங்கினாள்.அமிர்தாவின் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது இப்படி தானே அவளின் அன்னை செய்வார்.
“என்ன அம்மா நினைப்பா….”என்று பாரதி சரியாக கேட்க,வெறும் தலையாட்டல் மட்டுமே.முழுதாக சாப்பிட்டு முடித்தவுடன் அனைத்தையும் ஒதுங்க வைத்தவர்கள்,
“அமிர்தா இப்படி செத்த நேரம் உட்காரு….”என்று பாரதி கூற,அமிர்தா பாயில் சாய்வாக அமர்ந்தாள்.
“இப்ப சொல்லு என்ன ஆச்சு….ஏன் இப்படி ஓடி வந்த….”என்று பாரதி கேட்க அமிர்தா இன்று நடந்த அனைத்தையும் கூற,
“அடியே கிறுக்கு அந்த ஆளு உன் பின்னாடி தான் வரானு நீ எப்படி சொல்லுர….”
“க்கா….என் கூடவே இறங்கி வந்தாரே….”
“ஏய் லூசு….நீ தான் பயத்துல இரண்டு தெரு முன்னாடி இறங்கியிருக்க….அதோட இன்னைக்கு நீ வந்த நேரமும் வேற மறந்திட்டியா…”என்று பாரதி கேட்க அமிர்தா நாக்கை கடித்து தலையில் தட்டிக் கொண்டாள்.
“இங்க பாரு அமிர்தா நீ ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல எல்லாத்துக்கும் பயப்படுறதுக்கு….எனக்கு புரியுது உனக்கு யாரும் இல்ல அதனால யார் கூடவும் பழக யோசிக்கிற…ஆனா அதுவே இன்னைக்கு எப்படி பாதகமா முடிஞ்சிருக்கு பத்தியா….”
“என்னக்கா சொல்லுரீங்க….நான் என்ன பண்ணேன்….”
“என்ன நொண்ணபண்ண…..இங்க பாருடீ…..எப்போதும் உமை கொட்டான் மாதிரி யார் கூடவும் பேசாம இருந்தா இப்படி தான்….நமக்கு யாரும் இல்லைனு நாமளே ஒரு கூட்டுக்குள்ள போயிக்கிட்டு அப்புறம் தொட்டதுக்கெல்லாம் பயந்தா சரியாச்சா….உன் கூட எத்தனை பொம்பளைங்க வேலை பார்க்குறாங்க…..நீ ஏன் அவங்க கூட ஒரு பிரண்ஷிப் வச்சுக்குல….”
“அது அவங்க யாரும் என்கிட்ட பேசல…”என்றவளை கைநீட்டி தடுத்த பாரதி,
“நீ பேசலை சொல்லு….உன்னை பத்தி எனக்கு தெரியாது…நீ இங்க வந்த புதுசுல எத்தனை தடவை உன் கிட்ட நான் பேசிருக்கேன் நீ ஏதாவது பதிலுக்கு பேசியிருக்கியா….எது கேட்டாலும் என் முகத்தை முகத்தை பாரக்கவேண்டியது இல்லனா ஆமா இல்லைனு ஒத்த வரில பதில் சொல்லுட்டு ஓட வேண்டியது….அப்புறம் என்னாச்சு ஒரு இக்கட்டான சமயத்துல நான் உதவி செஞ்சேன் அதுக்கு அப்புறம் தான மேடம் என் கிட்ட பேசினீங்க….”என்று பாரதி கேட்க அமிர்தா தலை குனிந்தாள்.
ஒருமுறை கை பைய் எடுக்காமல் பேருந்தில் ஏறிவிட நடத்துனர் வந்து டிக்கெட் கேட்டவுடன் தான் அமிர்தாவிற்கு பையை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கே வந்தது.அவள் முழிப்பதை பார்த்த நடத்துனர்,
“இந்தாமா….அடுத்த ஸ்டாப்பிங்கல முதல்ல இறங்கு…..”என்று அவர் கத்த,
“ஒரு நிமிஷம்….நான் அந்த பொண்ணுக்கு டிக்கெட் எடுக்குறேன்….”என்றபடி வந்தாள் பாரதி.நடத்துனர் பாரதியை ஒருமாதிரி பார்த்துவிட்டு டிக்கெட்டை கையில் திணித்துவிட்டு சென்றுவிட்டார்.அன்று பாரதி செய்த உதவியை அமிர்தா என்றும் மறக்க மாட்டாள்.
“என்னடீயம்மா….பழைய நியாபகமா….”என்று பாரிதி அவளின் தோள் தொட்டு கேட்க ஆமாம் என்று தலையாட்டினாள் அமிர்தா.
“அதெல்லாம் இருக்கட்டும்…..இனி நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு….நாம பொண்ணுங்க எப்போதும் தனியா எல்லாத்தையும் சமாளிக்க முடியாது…..சில நேரம் நம்மல மீறி ஏதாவது நடக்கலாம் அப்ப நாம எப்படி அந்த சூழ்நிலையிலிருந்து வெளிவரனும் தான் யோசிக்கனுமே தவிர பயந்து ஓட கூடாது….அப்படி ஓடுனா ஓடிக்கிட்டே தான் இருக்கனும்….இப்ப என்னையவே எடுத்துக்க எனக்கு குடும்பம் எல்லாம் இருக்கு தான் ஆனா எனக்கு எதாவதுனா அவங்க என்ன உடனேவா வந்துடுவாங்க இல்லைல….அப்ப நாம தான் நமக்கு ஒரு பாதுகாப்பு வலையத்தை உருவாக்கிக்கனும்….அதுக்கு நம்ம கூட இருக்கவங்க கூட நாம கொஞ்சம் இனக்கமா இருக்கனும் அது தான் நமக்கு நல்லது….இங்க இருக்குறவங்க எல்லாரும் நல்லவங்களும் இல்ல அதே சமயம் எல்லாரும் கெட்டவங்களும் இல்ல….ஒரு ஆள் கூட பேசாம பழகாம நாம எப்படி அவங்களை பத்தி தெரிஞ்சிக்கிறது சொல்லு….அதனால தான் சொல்லுறேன் உன் கூட வேலை பார்க்குறவங்க கூட ஒரு நல்ல நட்பை உருவாக்கிக்க அது உனக்கு உதவும்….ஆங் அப்புறம் இதையும் சொல்லுறேன் கேட்டுக்கோ உன்னோட நட்பு வட்டத்துக்குள்ள எல்லாரும் நல்லவங்களா தான் இருப்பாங்கனு நாம சொல்ல முடியாது சிலர் நல்லவங்களா இருப்பாங்க,சிலர் பொறாமை படுறவங்களா இருப்பாங்க….அதனால அவங்வங்ககிட்ட அவங்களுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க….இப்ப ஒருத்தவங்க உன்கிட்ட நல்லா பேசிட்டு பின்னாடி கிண்டல் பண்ணுவாங்க அப்படி இருக்கவங்கிட்ட நீ அளவோட பேசு…சிலர் பொறமை படுறமாதிரி பேசுனா அவங்க கிட்ட ஏதாவது தேவை இருந்தா மட்டும் பேசு…..ஆக நீ உனக்குனு ஒரு நட்பு வட்டத்தை வச்சுக்க அப்ப தான் நீ தனியா இருக்குறனு மனசுல தோணாது…..”என்று பாரதி நீண்ட விளக்கம் தர அமிர்தா பாய்ந்து அவளை கட்டிக் கொண்டாள்.
“ரொம்ப தாங்க்ஸ் க்கா…..எனக்கு இதெல்லாம் தெரியலை அம்மா இருந்தவரை அம்மா பின்னாடியே சுத்தினேன் அவங்க போனதுக்கு அப்புறம் அவங்களோடவே எல்லாமே முடிஞ்சி போன மாதிரி இருந்தது….ஆனா இனி அப்படி இருக்கமாட்டேன்….நீங்க சொல்லுற மாதிரி இருக்கேன்…..”என்று சிறுபிள்ளை கூற சிரிப்புடன் பாரதி தலையாட்டிக் கொண்டாள்.
பாரதியிடம் பேசிய பிறகு மனதில் ஒரு தெளிவு கண்டாள் அமிர்தா நாம் இருக்கும் சமுதாயத்தில் தனியாக இருப்பதை விட கூட்டாக இருப்பதே நல்லது என்று புரிந்து கொண்டாள்.காலை எழும் போதே அமிர்தாவிற்கு தலை வின் வின் என்று வலித்தது அதோடே கிளம்பி வெளியில் வந்தவள் தனது கைபேசியை தேட அது பையில் இல்லை பதட்டமானவள் மீண்டும் தன் அறைக்கு வந்து தேட அங்கும் இல்லை.பாரதி அப்போது தான் கிளம்பிக் கொண்டிருந்தாள் இவள் மீண்டும் வந்ததை கண்டு,
“ஏய் என்ன தேடிக்கிட்டு இருக்க….”
“க்கா என் போனை காணும்…..”என்று தேடிக் கொண்டே கூற,
“என்னது போனை காணுமா…..நேத்து ஓடி வந்ததுல எங்காவது விழுந்திருக்குமா….”என்று கேட்க,
“அச்சோ…போச்சு….”என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் அமிர்தா.
“ஏய் சரி சரி டென்ஷன் ஆகாத…..முதல்ல கடையில எங்காவது இருக்கானு பாரு….”என்று அவளை தேற்றி அனுப்பி வைத்தாள்.அமிர்தாவிற்கு மனதே சரியில்லை இது போல் எந்த பொருளையும் துளைத்ததில்லை.கடைக்கு சென்றவுடன் தனது கைபேசியை தான் தேடினாள் ஆனால் அவள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.அதுவே அன்றைய நாள் முழுவதும் அவளை அழுத்திக் கொண்டே இருந்தது.அன்றைய இரவு விடுதியில் பாரதியிடம் கைபேசி துளைந்துவிட்டதாக அழுது கொண்டே கூற,
“சரி விடு அமிர்தா….ஏதோ தப்பு நடந்து போச்சு….இப்படி அழதா….”
“இல்லக்கா….நான் இது மாதிரி எல்லாம் பொருளையும் துளைச்சதில்லை… அம்மா கஷ்டபட்டு வாங்குனது நான் இப்படி அலட்சியமா துளைச்சிட்டேன்….அதான் மனசு கேட்க மாட்டேங்குது…..”என்று அழுது கொண்டே கூற பாரதிக்கும் மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது.தங்களை போல அன்றாடம் காட்சிகள் இது போல் பொருட்களை துளைத்துவிட்டால் எளிதில் வாங்க முடியாதே.
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் தன் விடுதிக்கு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு வந்திருந்தாள் அமிர்தா.அன்னை இருந்த போது தினமும் மாலை வந்துவிடுவாள் அன்னை இறந்த பிறகு ஞாயிறு மட்டுமே அவளால் வர முடிகிறது.
“நான் என்ன தப்பு செஞ்சேன் முருகா…..இப்படி என்னை சோதிக்கிற….என் போன் காணம போய் ஒரு வாரம் ஆச்சு…..எனக்கு எப்படியாவது கண்டுபிடிச்சு கொடு அதுல என்னோட அம்மா,அப்பா போட்டோ இருக்குனு உனக்கு தெரியும்தான….நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது என் போன் எனக்கு வேணும்….”என்று முருகனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் அமிர்தா.
“அது எப்போதும் இருக்கும் சாமி….என்ன இன்னைக்கு எனக்கும் அவருக்கும் கொஞ்சம் பேச்சு வார்த்தை காரசாரமா போகுது அவ்வளவு தான்…..அதுவும் நான் கேட்டது கிடைச்சிட்டா சமரசம் ஆகிடலாம்…..”என்று கூற அவளை பார்த்து மென்மையாக சிரித்தவர்,
“சரிம்மா எனக்கு நீ ஒரு உதவி பண்ணணும்….”
“சொல்லுங்க சாமி என்ன பண்ணணும்….”
“இன்னைக்கு இங்க ஒரு பெரியாளோட பூஜை இருக்கு எனக்கு கூட மாட இருந்து உதவுனும்….இந்த மாமிக்கு இன்னைக்குனு பார்த்து உடம்பு முடியலை அதான் உன்னால முடியுமா…..”என்று கேட்க,
“கண்டிப்பா செய்யுறேன்…..”என்று கூறினாள்.அவர் கூறியது போல் அந்த ஏரியாவின் கவுன்சிலர் தான் பூஜை கொடுத்திருந்தார்.குருக்கள் கூறியது போல் அவருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவள்,பூஜை முடிந்ததும் கிளம்ப,
“அட இரும்மா….ஒரு அரை மணிநேரம் இரு வந்துடுறேன்….”என்று விட்டு அவர் செல்ல கோவில் பரிகாரத்தில் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தாள்.அப்போது அவளை கடந்து ஒரு உருவம் செல்ல முதலில் அதை அசட்டை செய்தவள் பின் திடீர் என்று ஏதோ நினைவு வந்தவளாக அதனை தேட முருகனின் முன் மெய்மறந்து வேண்டிக் கொண்டிருந்தான் அவன்,அன்று அவளின் பின்னே வந்தவன்.
“இவனும் இங்க தான் இருக்கானா….”என்று பார்த்துக் கொண்டிருக்க அவன் திடீர் என்று இவளை திரும்பி பார்த்தான்.அதில் அதிர்ந்து திரும்பியவள்,
“ம்க்கும்…..உங்களை தான்…..”என்று கணீர் குரல் அவளின் பின் கேட்க,எச்சில் கூட்டிவிழுங்கியவாரே திரும்ப அவன் தான் நின்றிருந்தான்.நல்ல வாட்டசாட்டமான உடல் வாகு ஆறடி உயரம் அமிர்தா அவனை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டியிருந்தது.
“நீ….”என்று அவன் ஏதோ கேட்க,
“நான் நான் எதுவுமில்லை நான் வரேன்….”என்று படபடவென்று கூறிவிட்டு அவள் ஓட,
“ஏய்…இந்தா பொண்ணு….நில்லு….”என்று அவன் கத்த அமிர்தாவோ ஓட்டம் பிடிக்க,
“ஏய் உன் போன் வேண்டாமா…..”என்று அவன் கேட்கவும் அவளின் கால்கள் ஓட்டத்தை நிறுத்தியிருந்தது.அந்த இடத்திலிருந்தே அவனை பார்க்க,
“என்ன வேண்டாமா….”
“இல்ல வேணும் வேணும்…..”என்று வேகமாக அவனிடம் வந்துவிட்டாள்.
“ம்ம்ம்….அப்ப இங்கயே இரு….வரேன்….”என்று விட்டு செல்ல,அமிர்தா அவன் கூறியது போல் கோவிலில் இருக்க அடுத்த பத்து நிமிடத்தில் வந்தவன் அவளிடம் அவளின் கை பேசியை கொடுத்துவிட்டு அவள் பேசம் முன் சென்றிருந்தான்.