உயிரென்பதும் நீயடா……❤ உறவென்பதும் நீயடா…….❤
சென்னை நகரின் பிரபலமான கல்லூரி,பொறியியல், மருத்துவம் கலை மற்றும் அறிவியல் என அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனம் jvp இன்ஸ்டிட்யூட். கல்லூரியின் முதல் நாள் என்பதால் பரபரப்பாக இருந்தது. விடுமுறைக்கு பின் சந்திக்கும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பவர் ஒரு பக்கமாக இருக்க, புதிதாக வந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வது ஒருபுறம் என சிறப்பாக இருந்தது.
அந்த இடத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் பாவாடை தாவணியில் கண்ணில் பயத்தையும் தாண்டி சாதிக்கும் ஆசையோடு கல்லூரியை நோக்கி முதல் அடி எடுத்து வைத்தாள். அனைவரது பார்வையும் அவள் மேல் தான். ஆளை அசர அடிக்கும் அழகோடு பார்வையை சுற்றிலும் சுழல விட்டு சிறிது பதட்டமாக நடந்து வந்தாள், ஆதர்ஷினி.
ஜெகதீஷ், இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவன். தன் நண்பர்களை எங்க தேடியும் கிடைக்காமல் ‘எங்க போய்டாங்க இந்த வானரங்கள்’ என திட்டிக்கொண்டு இருந்தவன் கண்ணில் பட்டாள் ஆதர்சினி. ‘ப்பா…. யார்டா இந்த தேவதை’ அவளிடம் செல்ல துடித்த கால்களை தரையில் உதைத்தவாறு போனில் தன் நண்பனை அழைத்தான்.
“டேய் பரதேசி எங்கடா போனீங்க” என சத்யாவிடம் கேட்க
“ஏன் டா இவ்வளவு டென்ஷன் ஆகிற நாங்க எல்லாம் கான்டீன்ல தான் இருக்கோம் வா டா” என ‘ச்சை.. கேன்டீனை மறந்துட்டேனே’ என போனினை வைத்து விட்டு பின் தன் தேவதையை பார்க்க, அவளோ ஆர்ட்ஸ் என்பதால் உள்பக்கம் இருக்கும் தனது வகுப்பை தேடி சென்றாள்.
‘ச்சை.. இவன் கூட பேசியதற்க்கு அவங்க கிட்ட போய் பெயரையாவது கேட்டு இருக்கலாம். எல்லாம் என் நேரம்’ என சலித்து கொண்டே தன் நண்பர்களை தேடி கான்டீன் சென்றான்.
ஆதர்சினி வந்த சில வாரங்களிலே அனைவரின் கனவு கன்னியாக மாறி இருந்தாள். நிறைய பேர் அவளிடம் பேச முயற்சி செய்வார்கள். ஆனால் அனைவரையும் தன் பார்வையாலே தள்ளி வைப்பாள்.
ஜெகதீஸ் அவளை பெரும்பாலும் லைப்ரரியில் தான் பார்ப்பான் ஆனால் இன்று வரை பேச நினைத்தது இல்லை. அவள் லைப்ரரி செல்வதை பார்த்து சத்யாவிடம்,
“மச்சி நீங்க கிளம்புங்க எனக்கு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்” என
“டேய் ஜெகா உன்னோட முக்கியமான வேலை என்னனு எனக்கு தெரியும். அந்த பொண்ண பார்த்த கொஞ்சம் பயந்த சுபவம் மாதிரி தெரியுது டா. பத்திரம் மச்சான் இவங்களை நான் கூட்டிட்டு போறேன்” என ஜெகாவின் காதில் ரகசியமாக பேசிவிட்டு மற்ற நண்பர்களுடன் கிளம்பினான்.
அவர்கள் கிளம்பிய பின் லைப்ரரி சென்று அவன் தேவதையை தேட, அவளோ காரியமே கண்ணாக ஒரு முலையில் படித்து கொண்டு இருந்தாள். அவளின் அருகில் அமர்ந்தவன் முதலில் மெலிதாக சிரிக்க, அவளும் சினேகமாக புன்னகைத்தாள்.
பின் அவளிடம் பேச்சு கொடுக்க, அவளின் பெயர் ஆதர்சினி என்பதையும் பி.எ எகனாமிக்ஸ் படிப்பதையும் தெரிந்து கொண்டான். அதை தவிர வேற எதையும் அவளிடம் இருந்து வாங்க முடியவில்லை.
அவளை பற்றி மேனேஜ்மென்டில் விசாரிக்க அவனுக்கு கிடைத்ததோ ஒரே தகவல் ‘அவளின் மொத்த செலவும் யாரோ ஒரு ஸ்கூல் பிரின்சிபால் ஸ்பான்ஸர் செய்கிறார்கள்’ மட்டுமே வேற ஒரு தகவலையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆறு மாதம் வேகமாக ஓடியது. ஆதர்சினி, ஜெகா இருவரும் லைப்ரரியில் பல முறை சந்தித்தப் பின் சிறிதாக பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். காலேஜில் அவள் பேசும் ஒரே ஆண் ஜெகா மட்டுமே. அது ஏன் என்று அவளுக்கே தெரியாத ஒன்று. ஜெகாவின் மூலம் சத்யாவிடம் பேசுவாள்.
செமஸ்டர் எக்ஸாம் முடிந்து லீவுக்கு ஊருக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தால் ஆதர்சினி. பல காயங்களை தந்த ஊருக்கு செல்ல வேண்டுமா என்று கூட தோன்றும். ஆனால் அவளுக்கு என்று ஒரு ஜீவன் அங்கு உள்ளதால் மனதை தேற்றி கொண்டு செல்ல தயாரானாள்.
இங்கு சத்யா, “டேய் ஜெகா எப்போ டா ப்ரொபோஸ் பண்ண போற” என்றதும்
“நாளைக்கு மச்சி. நாளை மறுநாள் அவ ஊருக்கு போவதாக சொன்னாள். சோ நாளைக்கு சொல்ல போகிறேன். அது வரைக்கும் இது யாருக்கும் தெரிய கூடாது” என்று சொல்லி விட்டு நிலாவை பார்த்து ரசிக்க தொடங்கினான்.
ஆதர்சினி ஹாஸ்டல் பக்கத்தில் உள்ள பார்க்கில் இருந்தாள். சிறிது நேரம் முன் ஜெகா அவளுக்கு போன் செய்து “தர்ஷினி கொஞ்சம் பக்கத்தில் இருக்கிற பார்க் வரைக்கும் வர முடியுமா” என அவளும் வருவதாக சொல்லி அவனுக்காக இப்போது பார்க்கில் கால்மணி நேரமாக காத்துக் கொண்டு இருக்கிறாள்.
அவளை மேலும் சோதிக்க விடாமல் ஜெகா பார்க்கில் வாசலில் வந்தான். வந்தவனை பார்த்து தர்சினி சிலையானாள்.
வைட் ஷர்ட் பிளாக் ஜீன்ஸ் யில் கையால் தலையை கோதிக் கொண்டே வர தர்ஷினி வாழ்வில் முதல் முறையாக ஒருவனை ரசித்து பார்த்தாள். அவளின் பார்வையை புரிந்து கொண்டே அவளிடம், “என்ன தர்ஷினி மேடம் பாஸ் பண்ற அளவாது மார்க் போடுவீங்களா இல்ல பையில் தானா” என
முதலில் புரியாமல் முழித்து பின் புரிந்த பின் அவனை முறைப்பதாக ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி கொண்டாள். சிறிது நேரம் கழித்து “எதற்கு ஜெகா வர சொன்னிங்க” என தயக்கத்தை விட்டு கேட்டாள்.
அதற்காகவே காத்து இருந்தவன் போல் அவள் முன் வந்து நின்றான். அவள் கண்ணை பார்த்து கொண்டே “நான் உங்க கிட்ட சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம் பட் தப்பாக மட்டும் நினைக்காதீங்க. உங்களை முதல் முறையாக காலேஜில் பார்க்கும் போது தேவதையா தெரிஞ்சிங்க அப்பெல்லாம் இல்லாத ஒன்று, நீங்க உங்க கிட்ட ஹெல்ப் என்று வர எல்லாருக்கும் உதவி பண்றதா இல்ல யார் என்று கூட தெரியாதவங்க மேல எல்லாம் அக்கறை காட்டும் உங்க குணமோ இல்ல கோபமே வந்தாலும் முடிந்த வரைக்கும் எதிரில் இருக்கிறவங்க மனதை புரிஞ்சிக்கிற உங்க மனதோ இதை எல்லாத்தையும் விட வார்த்தையில் கூட யாருமே கஷ்ட பட கூடாதுனு தேடி தேடி பேசுகிற உங்க நிதானமா எதுன்னு தெரியலை பட் உங்க கிட்ட திரும்ப திரும்ப விழ வைக்கிறது. ஐ லவ் யு தர்ஷினி. உன்னை பற்றி எதுமே தெரியாது. பட் நீ இல்லாமல் என் எதிர் காலம் இல்ல. என்னை கல்யாணம் பண்ணிக்கிறிய” என
அதுவரை அவன் பேசுவது கேட்டு பிரம்மித்தது போய் இருந்தவள், அவனின் கடைசி கேள்வியில் பதறி கொண்டு “அய்யோ…. சாரி ஜெகதீஷ். உன்னோட ஆசை கண்டிப்பா நடக்காது. என்னை மறந்துட்டு வேற வேலை இருந்த பாருங்க” என அவனிடம் பேசிவிட்டு வேகமாக கண்களில் கண்ணீரோடு பார்க்கை விட்டு வெளியே பொன்னாள்.
அவள் போகும் திசையே பார்த்த ஜெகா “உன் மனசில் நான் இல்லாமல்லா உன் கண்ணு கலங்குது பேபி. உன்னோட பாஸ்ட் எனக்கு வேண்டாம். அது எப்படி இருந்தாலும் ஓகே பேபி பட் நீ இல்லமால் என்னால முடியாது பேபி. என் லவ் கண்டிப்பா உனக்கு புரியும். வெயிட் பாரேன்” என கிளம்பினான்.
‘சாரி ஜெகா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். பட் எனக்கு உங்க கூட வாழ கொடுத்து வைக்கல. எனக்கு என்னோட ட்ரீம் ips எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு உன்னை பிடிக்கும். ஆனா நீ நல்ல வாழ வேண்டியவன். நான் உனக்கு வேண்டாம் ஜெகா ” என அழுதுகொண்டே பஸ்ஸில் தன் ஊரை நோக்கி செல்ல கூடவே கடந்த கால நினைவுகளுடன் சென்றாள்.
இருபது வருடங்களுக்கு முன்,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சிறிய கிராமம் புண்ணை. அந்த கிராமத்தின் பெரிய குடும்பம் பணத்திலும் சரி அதிகாரத்திலும் சரி கிராமத்தை தன் கட்டுக்குள் வைத்திருந்தார் சேதுபதி, அறுபதை நெருங்கும் குடும்பத்தின் ஆணிவேர் . புது வரவால், சந்தோச கடலில் மிதந்தது. சேதுபதியின் மகன் மருதுவிற்கு மகன் பிறந்து இருந்தது.
“ஏல மருது என்ன சொல்ற உன் பொஞ்சாதி” என
“அவளுக்கு என்ன ஐயா சந்தோஷமா இருக்க. இப்பவே என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கிற” என சொல்லி சிரிக்க
அவரும் உரக்க சிரித்து “ம்ம்ம் பிள்ளை கிட்ட சொல்லி நல்ல புது பெயரை வைக்கணும் தம்பி”
“கண்டிப்பா ஐயா” என சில நாட்களில் தங்கள் வீட்டு ராஜகுமாரனுக்கு ‘தர்ஷன்’ என பெயர் சூட்ட அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரை போல் செல்ல அதை கெடுப்பதை போல் வந்தது தர்ஷனின் பத்தாம் பிறந்தநாள்.
மருதுவும் அவன் மனைவியும் மகனின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டு கவலை அடைந்தனர். ஒரு நாள் வெளியே சென்று வந்தவர் மகனின் கோலத்தை கண்டு கோவம் கொண்டு அவனை அடி பின்னிவிட்டார்.
கோபத்தோடு மனைவியை அடித்து “வீட்டுல தானே இருக்க இவன் என்ன பன்றான் கூட பார்க்க மாட்டிய. பொட்ட பிள்ளை மாதிரி வளையல் போடுகிறான் பொட்டு வைச்சிக்கிறான்” என இது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போகும் என தன் தந்தையிடம் புலம்பினான்.
எவ்வளவு அடித்தும் தர்ஷன் மாறாததால் சேதுபதி குடும்ப கௌரவத்துக்காக அவனை கொல்ல நினைத்தார் அதனை மகனிடமும் மருமகளிடம் சொல்லாமல் அடியாளிடம் பேசியதை வீட்டில் வேலை செய்யும் அன்னம்மாள் கேட்டு விட்டாள். எதிர்க்க தைரியம் இல்லாமல் யாரிடமும் சொல்லாமல் அவனின் உயிரை காக்க தர்ஷனை தன் சொந்த ஊருக்கு கூட்டி வந்தாள்.
பெற்றோருக்கே புரியாத அவனின் நிலைய புரிந்து கொண்டு அவனை பெண் பிள்ளையாக வளர்க்க நினைத்து பெயரை ‘ஆதர்ஷினி’ என மாற்றினார். கால போக்கில் தான் ஒரு திருநங்கை என்பதை மறக்கும் அளவுக்கு அன்னம்மாள் அவளை வளர்த்தார். பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து விட்டார், அவளின் நிலை அந்த பள்ளி முதல்வரை தவிர யாருக்கும் அன்னம்மாள் சொல்லவில்லை.
மற்ற பெண் பிள்ளையை விட அழகாக இருக்கும் ஆதர்ஷினி, ஒரு திருநங்கை என யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளிவந்தது.
காவ்யா ஆதர்ஷினி உடன் படிக்கும் சக மாணவி. ஆதர்ஷினியின் அழகை பார்த்து பொறாமை கொண்டவள். அவளை அவமானப்படுத்த நினைத்தாள், லட்டு போல் அவளுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.
பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு அனைவரும் தயாராக, அவளுடன் படிக்கும் கார்த்தி தனியாக பேசவேண்டும் என அவளை வெளியே இருக்கும் மரத்திற்கு அழைத்து வந்தான்.
“என்ன கார்த்தி எதற்கு வர சொன்ன” என தர்ஷினி கேட்க
“ஆதர்ஷினி உங்க கிட்ட சொல்லணும் தைரியமா வந்தேன் பட் இப்ப கொஞ்சம் நெர்வோஸா இருக்கு.ம்ம் உங்களை ரொம்ப பிடிக்கும் ஐ திங்க்…… ஐ லவ் யூ” என பயந்து கொண்டே சொல்ல
இதை முற்றிலும் எதிர்பார்க்காத தர்ஷினி முதலில் திகைத்து பின், “சாரி கார்த்தி உனக்கு என்னை பத்தி தெரியாது” என
“எனக்கு எதுமே வேண்டாம். நீ ஒகே மட்டும் சொல்லு” என பிடிவாதமாக இருக்க
“ஐயோ கார்த்தி உனக்கு சொல்றது புரியல…. சரி இதை சொல்றதை தவிர வேற வழி இல்ல. நான் பொன்னே இல்ல கார்த்தி. நா… நான்… நான் ஒரு திருநங்கை” என
கார்த்தி “ஏய்… பிடிக்கலைனா ஓகே தான் டி. அதுக்கு இப்படி எல்லாம் சொல்லாத” என கடுப்பாக சொல்ல
“சீரியஸ் ஆ சொல்றேன் இது மாதிரி ஒரு விஷயத்தில் யாரவது பொய் சொல்லுவாங்களா. ப்ளீஸ் யார் கிட்டவும் சொல்லாதீங்க” என
“கண்டிப்பாங்க எனக்கு தெரியாது உங்களை பத்தி சாரி” என அவன் வேகமாக சென்று விட்டான். அவளும் அவன் சொல்லமாட்டான் என்ற நிம்மதியுடன் சென்றாள். ஆனால் இவர்கள் பேசியதை கேட்ட காவ்யா விஷம புன்னகையுடன் தன் திட்டத்தை செயல் படுத்த தொடங்கினாள்.