மறுநாள் எப்போதும் போல் பள்ளி வந்த தர்ஷினி அனைவரின் பார்வையும் தன் மேல் படுவதை உணர்ந்தவள் என்ன என்று புரியாமல் விழித்தாள்.
கும்பலாக இருந்த மரணவர்களில் ஒருவன் அவள் கையை இழுத்து “நீ எல்லாருக்கும் நிறைய கம்பெனி கொடுப்பியமே எங்களுக்கும் கொஞ்ச நேரம் தரலாமே” என
“ஏய் கையை விடுடா. ஒரு பொண்ணு கிட்ட இப்படி தான் பெஹவே பண்ணுவியா” என
“மச்சி பொண்ணுடா… பொண்ணாம் டா” என பக்கத்தில் இருந்தவன் நக்கலாக சொல்ல அவளுக்கு புரிந்தது தன் நிலை அனைவருக்கும் தெரிந்து விட்டது. அனைவரும் அவளை தப்பாக பார்க்க தப்பாக கூப்பிட மனம் உடைந்த தர்ஷினி வேகமாக வெளியே வந்தாள்.
எதிரே வருவது எதுமே தெரியாமல் ரோட்டில் செல்ல வேகமாக வந்த லாரி அவள் மேல் மோதும் சமயம் ஒரு கரம் அவளை காப்பாற்றியது. அந்த கைகளுக்கு சொந்தக்காரர் பிரேம், அந்த ஏரியாவின் SI.
அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவன் சரமாரியாக திட்ட அவளோ “அண்ணா நான் சாகனும் ன்னா… என்னை பொண்ணா பார்த்தப்ப கூட எதோ பார்ப்பாங்க ஆனா நான் ஒரு திருநங்கை அப்படினு தெரிஞ்ச உடனே எல்லாரோட பார்வையும் வக்கிரமா இருக்கு. தப்ப பேசறாங்க…. ஏன்னா என்ன மாதிரி இருக்கிறவங்க எல்லாம் தப்பான தொழிலுக்கு தான் போகணுமா… இது மாதிரி பிறந்தது என் தப்பா… என்னை பெத்தவங்க கூட நான் இருக்கேனா இல்லையானு கவலை படல . நான் ஏன் பிறந்தேனு தோணுது அண்ணா….” என அழுதுகொண்டு சொல்ல, அன்னம்மாள் வாயை முடி கொண்டு அழுதாள்.
பிரேம், “ஏன் ஆதர்ஷினி இப்படி எல்லாம் பேசுகிற. உன்னை இவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைச்சாங்க. முதலில் அவங்க எல்லாம் யாரு உன்னை பத்தி தப்பாக பேச. உன் மனசில் எந்த தப்பும் இல்லாத வரைக்கும் நீ பயப்பட கூடாது. ஒன்று முதலில் உன் மனசில் நல்லா பதிய வைத்துக்கோ நீ பொண்ணு தான் பட் எல்லார் விடவும் ரொம்ப வித்தியாசம். உனக்கு என்று ஒரு ட்ரீம் வைத்துக் கொள். அதை மட்டும் போகஸ் பண்ணு. எனக்கு இதை தவிர வேற சொல்ல தெரியலை மா. பட் ஒரு அண்ணாவா கடைசி வரைக்கும் உன் கூட இருப்பேன்” என்றான்.
அன்னம்மாள், “நீ ஏன் கண்ணு கவலை படுகிற. உன் கிட்ட ஆண்கள் கிட்ட இருக்கிற வலிமையும் அதே மாதிரி பெண்கள் கிட்ட இருக்கிற மென்னையும் ஒண்ணா இருக்கு. அந்த தம்பி சொன்ன மாதிரி உன்னை மாற்றிக்கோ” என அவர்க்கு தெரிந்ததை சொல்லி விட்டு சென்றார்.
நன்றாக யோசித்தவள் தான் ஒரு போலீஸ் ஆகா வேண்டும் என முடிவு எடுத்தாள். அதனால் ஒரு முடிவோடு பப்ளிக் எக்ஸாம் எழுதினால், நல்ல மதிப்பெண் எடுத்து தன் பள்ளி முதல்வர் உதவியுடன் இங்கே படிக்க வந்தாள். ஆனால் அவள் எதிர் பார்க்காதது ஜெகதீஷின் நட்பு, அவனின் காதல் எல்லாம். பேருந்து நின்றதும் அன்னம்மாள் தற்போது இருக்கும் விழுப்புரம் அருகே உள்ள வளவனுர் சென்றால், தன் வீட்டுக்கு வந்தவள் கவலையை மறந்து சந்தோஷமாக இருந்தால். விடுமுறை முடிந்து திரும்பவும் ஹாஸ்டல் சென்றாள்.
வழக்கம் போல் கல்லூரி வாழ்க்கை செல்ல, ஜெகா தர்ஷினி உறவில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஜெகாவை கண்டாலே ஒதுங்கி செல்ல ஆரம்பித்தாள். ஒரு நாள் சத்யா ஜெகாவிடம்,
“மச்சி எனக்கு தெரிந்து தங்கச்சி உன்னை லவ் பண்ணல போல டா. உங்க அப்பா வேற ஏன் டா என் பையன் இப்படி இருக்கான் என்று கேள்வியை கேட்டு கொல்றாரு டா”
“அப்பா கிட்ட நான் பேசறேன் டா. எனக்கு என் லவ் மேல நம்பிக்கை இருக்கு. அவ என்னக்காக பிறந்தவள் டா” என
“எப்படியோ சந்தோஷமா இருந்த சரி. முதலில் அப்பா கிட்ட பேசு” என அன்று இரவே தந்தையிடம் பேசிவிட்டான்.
ஆதர்ஷினி எழும்பும் போதே எதோ தப்பாக நடப்பது போல் தோன்ற பல மாதங்கள் பின் தோன்றிய இந்த உணர்வால் பயந்து கொண்டே கடவுளிடம் ‘எதுவும் தப்பாக நடக்க கூடாது. உன் கிட்ட முதலும் கடைசியுமா என்னோட ஒரே வேண்டுதல் ஜெகா நல்லா இருக்கணும். எனக்கு அது மட்டும் செய்’ என தன் வாழ்க்கையை மாற்ற போகும் நாள் என தெரியாமல் காலேஜ்க்கு செல்ல தயாராகினாள்.
பிரீ ஹவர் என்பதால் லைப்ரரி புக்ஸ் ரிட்டன் பண்ண சென்றால், உள்ளே வரும் போதே லைப்ரரியன் பூபதி பார்வை சரி இல்லை என்பதை பார்த்து வேகமாக செல்ல வேண்டும் என மூளை கட்டளை இட்டது.
திரும்பி செல்ல நினைத்தவள் கைகள் வர மறுத்தது. என்ன என்று பார்த்து அதிர்ந்தாள். “சார் என்ன பண்றீங்க விடுங்க” என
“பெரிய உத்தமி மாதிரி பண்ணாத உன்னை மாதிரி இருக்கிறவங்க படிக்க எல்லாம் லாக்கி இல்ல” என சொல்லி கொண்டே கைகள் அத்துமீற நொடியும் தாமதிக்காமல் இடி என அவன் கன்னத்தில் அறைந்தாள்.
“ஏய் உன்னை…. என்ன பண்றேன் பாரு. போயும் போயும் என்ன அடிச்சது ஒரு திருநங்கை. ச்சை… உன்னை விட மாட்டேன் டி” என அவளும் கலங்கிய கண்களுடன் தன்னை விடமால் துரத்தும் விதியை நினைத்து மனம் பாரத்துடன் ஹாஸ்டல் சென்றாள்.
தர்ஷினியை காலெஜில் ஜல்லடை போட்டு தேடி கொண்டு இருந்த ஜெகா விடம் சத்யா “மச்சி தங்கச்சி காலேஜில் இல்லை போல கிளம்பலாம் டா நாளைக்கு சீக்கிரம் வந்து பார்த்துக்கலாம்” என வழக்கத்தை விட சீக்கிரமாக கிளம்பியது விதியின் விளையாட்டு போல.
அவர்கள் இருவரும் கிளம்பிய சிறிது நேரத்திலே பூபதி தான் நினைத்ததை செய்து முடித்தார். மறுநாள் சீக்கிரம் வந்த ஜெகா மற்றும் சத்யாவிற்கு அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது.
ஜெகா “மச்சான் என்னனு தெரியலை டா எதோ படபடப்பா இருக்கு டா”
“ஒன்றும் இல்ல மச்சி உன் ஆளை ரொம்ப நாள் கழித்து பார்க்க போகிற லா அதான்” என இருவரும் உள்ளே வர எதிரே தன்னுடன் பயிலும் விஷால் வந்தான்.
விஷால் “மச்சான்ஸ் உங்களுக்கு ஹாட் நியூஸ் தெரியுமா” என இருவரும் என்ன என்று பார்க்க அவனே மேலே தொடர்ந்தான்.
“நம்ம காலேஜ் கனவு கன்னி ஆதர்ஷினி ஒரு திருநங்கையாம் டா. பார்த்த தெரியவே இல்லைல. கேட்டவுடனே செம ஷாக்” என சரியாய் அவன் சொன்ன விஷயம் இருவரையும் அதிர்ச்சி அடைய அதே நேரம் அங்கு வந்த தர்ஷினியை பார்த்த ஜெகா கோபத்துடன் எதிர் பக்கம் செல்ல சத்யாவும் அவன் பின்னாடியே சென்றான். இருவரையும் புரியாமல் பார்த்த விஷால் தர்ஷினியை பார்த்ததும் அந்த இடத்தை விட்டு சென்றான்.
ஜெகாவிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என அவன் சென்ற திசை நோக்கி சென்றாள்.
“டேய் ஜெகா நில்லுடா” என சத்யாவின் குரல் கேட்டாலும் கோபத்தில் நிற்க முடியமால் பக்கத்தில் இருந்த கல்மேடையில் அமர்ந்தான். “ஏன் டா உனக்கு இவ்வளவு கோபம்” என சத்யா கேட்கவும் எதிரே வந்து நின்றாள், ஆதர்ஷினி.
எதிரே இருந்த தர்ஷினியை முறைத்து கொண்டே “உனக்கு என்னை பார்த்த எப்படி தெரியுது… எதோ பைத்தியகாரன் காதல் என்று உளறி கொண்டு இருக்கான் அப்படி தானே நினைச்ச. என் காதல் என்ன விளையாட்டாடி. எதோ அற்ப காரணத்துக்காக என்னை ஒதுக்கீட்டு போற” என சத்யா தன் நண்பனை புரியாமல் பார்க்க தர்ஷினியோ புரியாத மொழியில் பார்க்கும் படத்தை போல திரு திருவென முழித்தாள்.
“என்ன இரண்டு பெரும் இப்படி பேயை பார்த்த மாதிரி முழிக்கிறிங்க”
“சாரி ஜெகா நான் உன்னை ஏமார்த்த நினைக்கலை. என்னால முடியலை ஜெகா ஒவ்வொருத்தனோட பார்வையும் என்னால் சகிச்சிக்க முடியலவில்லை. படிக்கணும் நினைத்து இதற்கு முன்னாடி போன காலேஜில் சீட் தரலை. அதான் என் ஐடென்டிட்டி யாருக்கும் தெரியவேண்டாம் என்று தான் டீன் கிட்ட சொன்னேன் அவரும் ஒத்துக்கிட்டார். பட் நீ என்னை லவ் பண்ணுவ என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. என்னை மறந்துட்டு வேற வேலைய பாரு” என தன் வாழ்க்கையில் நடந்ததை நீண்ட விளக்கமாக கொடுக்க,
மெலிதாக சிரித்து கொண்டே, “இப்ப கூட வேற வேலையை பாருங்கள் என்று தான் சொல்கிற ஆனா வேற பெண்ணை பாருன்னு உன் வாயில் இருந்து வரலை. ஏன் வரலை?” என கேள்வியாக அவளை பார்க்க
பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு “நான் கிளம்புறேன்” என வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றாள்.
சத்யா, “மச்சான் இன்னுமா அவங்களை லவ் பண்ற” என
“இப்ப தாண்டா அதிகமா லவ் பண்ணனும் தோன்றியது” என்ற நண்பனை விசித்திரமாக பார்த்தான்.
‘காலேஜ் முழுக்க தெரிஞ்சிடுச்சு ஆனா ஏன் கிட்ட எல்லாரும் முன்ன மாதிரியே தான் பழகுறாங்க எப்படி’ என குழம்பி போய் இருந்தவள் அருகே வந்த பியூன் “ஆதர்ஷினி மா உன்னை டீன் வர சொன்னார்” என டீன் அறையை நோக்கி சென்றாள்.
“குட் மார்னிங் சார்” என குழம்பிய முகத்துடனே சொன்னாள்.
“என்ன தர்ஷினி உண்மை எல்லாருக்கும் தெரிந்த அப்புறம் கூட யாருமே அதுமே கேட்கவில்லை என்று பார்க்கிறயா” என அவளும் ஆம் என தலையை ஆடினாள்.
“எங்க வீட்டு பொண்ணு மா நீ. உன்னை தலை குனிய விடமாட்டேன். நிம்மதியா உன்னோட ட்ரீம் ips அதில் தான் உன்னோட முழு கவனமும் இருக்கணும். பயப்படாமல் லைப்ரரி போ. வேற லைப்ரரியன் போட்டிருக்கேன்” என
“உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும். என் ட்ரீம் கூட தெரிந்து இருக்கு”
“நீ ஜெகா கிட்ட சொன்னது அவன் என் கிட்ட சொன்னான். நீ யோசிக்கிறது புரியுது. ஜெகா என்னோட பையன் தான். ஜெகதீஷ் புருசோத்” என
“அப்ப உங்களுக்கு அவன் என்னை லவ் பண்கிறது தெரியும் தானே. ப்ளீஸ் சார் அவருக்கு புத்திமதி சொல்லுங்க. இது எல்லாம் செட் ஆகாது. ஒரு திருநங்கையை கல்யாணம் பண்ணிக்கிறது கேட்க வேண்டும் என்றால் நல்லா இருக்கலாம் பட் நடைமுறையில் சாத்தியம் இல்ல. அவங்க அம்மா கூட இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. எந்த அம்மாக்கு தன் மகன் ஒரு திருநங்கையை கல்யாணம் பண்ண சம்மதிப்பாங்க”
“நீ சொல்றது எல்லாம் உண்மை தான். பட் என் மனைவி வசுந்தரா தான் உன்னை பார்க்க ஆவலா இருக்காள். நானும் அவளும் ஒன்றாக தான் படிச்சோம். முதலில் நண்பர்களா இருந்த நாங்க அப்புறம் காதலர்களா மாறினோம். வீட்டில் எல்லார் சம்மதமும் கிடைத்தது. ஆனா அசோக் எங்க கூட படிச்ச பையன் வசுந்தராவை ஒரு தலையா காதலிச்சவன் இதை ஏற்றுக்க முடியல. அதனால வசு முகத்தில் ஆசிட் அடிச்சிட்டான்.அதில் இருந்து அவளை காப்பாற்றி அதற்கு அப்புறம் என்னை வேண்டாம் சொல்லிட்டா அவளுக்கு அந்த முகத்தோட வாழவே பிடிக்கலைனு சொல்லிட்டா. அதை எல்லாம் உடைச்சு கடைசியா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப ஒரு மறுவாழ்வு மையம் நடத்திட்டு இருக்காள் மா. எங்க பையன் மா ஜெகா. அவன் எதற்குமே ஆசை பட மாட்டான். பட் ஆசை பட்டத்துக்காக எவ்வளவு ரிஸ்க் வேண்டுமாலும் எடுப்பான். அவனை நீ ஏத்துக்கிட்ட எங்க வீடு மருமகள். இல்லனா மகள். நல்லா யோசிச்சு முடிவு எடு” என்று அவளை மேலும் குழப்பி விட்டார். குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்.
ரெண்டு நாள் இதை போலவே நகர,
இதுக்கு மேல முடியாது என தர்ஷினியை பார்த்து பேச பீச் வர சொன்னான் ஜெகா.
“எதற்கு என்னை வர சொன்னிங்க” என கோவமாக கேட்டால் தர்ஷினி.
‘ஆமாம் தெரியாத மாதிரியே நடிக்கிறது’ என முணுமுணுத்து விட்டு “எனக்கு இன்றைக்கு முடிவு தெரிந்து ஆகனும் என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கிற” என
“ஏன் ஜெகா புரியாமல் பேசுகிற என்னை கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இருக்காது. சரி கல்யாணமே ஆகிடுச்சு என்று வைத்துப்போம் அதுக்கு அப்புறம் நம்ப வெளியே போகும் போது உனக்கு தெரிஞ்சவங்க யாரவது வந்தாங்க என்றால் என் மனைவி ஒரு திருநங்கைனா அறிமுகம் பண்ணுவ உனக்கு தான் கஷ்டமா சங்கடமா இருக்கும் டா” என
“உன்னோட பிரச்சனையே இது தான். ஏன் உன் ஐடென்டியை மறைக்க பார்க்கிற. நீ ஒரு திருநங்கைனு சொல்வதில் எனக்கு எந்த கஷ்டமோ பிரச்சனையோ இல்ல. உன்னோட அழகை பார்த்து நான் லவ் பண்ணி இருந்தா முதல் நாளே ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன். ஆனா என்னை லவ் பண்ண வைத்தது உன்னோட கேரக்டர் டி. செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லடி. எனக்கு உன்னோட லைப் லோங் ட்ராவல் பண்ணனும். உன் முகத்தை பார்த்துட்டே இருக்கணும். உன் கையை பிடிச்சிட்டு போகணும் டி. உன்னோட சின்ன குறைக்காக உன்னை விட்டு போக நான் என்ன லூசாடி” என
‘என்ன சின்ன குறையா” என மனதில் நினைத்தால் தர்ஷினி.
“நீ பல பேருக்கு எடுத்துக்காட்ட வாழ பிறந்தவள் டி. உன்ன மாதிரி நிறைய பேர் அவங்களோட கனவை தொலைச்சிட்டு இருக்காங்க அவங்க எல்லாருக்கும் நீ ஒரு உதாரணம். தைரியமா ப்பேஸ் பண்ணுடி. உன் கூட நான் இருப்பேன். உன்னை பார்த்து சிரிச்சவங்க முன்னாடி கெத்தா வாழ்ந்து கட்டணும் தருக்குட்டி.உன் கையை பிடிச்சிட்டு கடைசி வரைக்கும் உன்னோட போராட நான் ரெடி. ப்ளீஸ் தருக்குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என கொஞ்சிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இருந்தான்.
‘ஐயோஓஓ அப்பனும் மகனும் பேசியே நம்பலை கவித்துவிட்டாங்களே’ என நினைக்க
“இந்த குட்டி மூளை என்னடி யோசிக்கிது” என கிண்டலாக கேட்க,
“ம்ம்ம்…. போலீஸ் ஆகிட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்கிலாமா இல்லா உன்னை கல்யாணம் பண்ணிட்டு போலீஸ் ஆகலாமா னு யோசிக்கிறேன்” என கிண்டல் போலவே தன் சம்மதத்தை சொன்னாள்.
“என் செல்லக்குட்டி… நம்ப இரண்டையும் ஒன்னாவே பண்ணலாம்” என அவளை அணைத்து கொண்டான்.
ஐந்து வருடங்கள் பிறகு,
“டேய் உன்னக்கு என்னை பார்த்த பாவமாவே தெரியலையா. நானே கேஸ் எல்லாம் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க ஒரு வாரம் லீவு போட்ட எங்கடா கூப்பிட்டு போகிற” என அந்த அதிகாலை வேளையில் கணவனுடன் காரில் சென்று கொண்டே கேட்டால் தர்ஷினி.
“ஆமா ப்பா… எங்க போறோம்” என தாயை பின்பற்றி கேட்டால் நான்கு வயது ஆருத்ரா.
“ஆருக்குட்டி நீயும் acp மேடமும் வாயை மூடிக்கொண்டு வாங்கம்மா” என்றான். தற்போது ஆதர்ஷினி மதுரை மாவட்ட அசிஸ்டன்ட் கமிஷனர். ஆருத்ராவை இருவரும் தத்தெடுத்தனர்.
கார் நின்ற இடம் ஆதர்ஷினியின் சொந்த ஊர் புண்ணை கிராமம்.
“இங்க எதுக்குடா வந்து இருக்கோம்” என
“உங்க அப்பா அம்மாவை பார்க்க தான். எனக்கு இப்படி ஒரு தேவதை கிடைக்க அவங்க தானே காரணம் அதான் பார்த்து நன்றி சொல்லத்தான்” என விருப்பமே இல்லாமல் எதிரே இருந்த மனைவியை பார்த்து “உனக்கு பார்க்க பிடிக்கலையா டா” என
“தெரியலை பட் உனக்காக வரேன்” என்ற மனையாளை காதலுடன் நோக்கினான். அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் ஜன்னல் பக்கம் திரும்பி தன் மகளிடம் பேசிக்கொண்டு வந்தாள்.
அந்த பெரிய வீட்டின் முன் கார் நிற்க இனம்புரியா உணர்வோடு உள்ளே சென்றாள். ஹாலில் அமர்ந்து இருந்த மருதுவும் வாசுகியும் ஆதர்ஷினியை பார்த்து ஒரு நிமிடம் தடுமாறினாலும் அடுத்த நொடியே தன் ரத்தத்தை கண்டுகொண்டார்.
அதிர்ச்சியோடு இருக்கும் பெற்றோரை பார்த்து “அம்மா… அப்பா…” என் ஓடி சென்று அனைத்து கொண்டாள்.
“உன் பெயர் என்னமா” என குரல் நடுங்க கேட்ட தந்தையை பார்த்து “ஆதர்ஷினி” என்றாள்.
“எங்களுக்கு சத்தியமா ஐயா இப்படி எல்லாம் யோசிப்பாங்க என்று தெரியாது மா. அநாதை மாதிரி இந்த வீட்டு வாரிசு வளரனும் என்று தலையெழுத்து போல மா. ஐயா கடைசி நிமிஷம் அவர் உயிர் போகும் முன்னாடி தான் அன்னம்மாள் உன்னை கூப்பிட்டு போனதை சொன்னார். உன்னை எங்க தேடுறது என்று தெரியலைமா. மன்னிச்சுடு மா” என
“பரவலா ப்பா… இவர் என்னோட கணவர் ஜெகதீஷ் என் பொண்ணு ஆருத்ரா” என அறிமுகம் படுத்தினாள் .
ஜெகா “அத்தை மாமா ரொம்ப நன்றி எனக்கு இப்படி ஒரு தேவதை கொடுத்ததுக்கு” என தர்ஷினி மனதில் ‘உன்னால நான் இழந்த எல்லாம் கிடைச்சிடுச்சு டா ஐ அம் வெரி லக்கி டு ஹவ் யு’ ஜெகா மனதில் ‘உன்னோட இந்த சந்தோஷத்தை சிரிப்பை தொலைக்காமல் நான் பார்த்துப்பேன் தருக்குட்டி உன்னை தோற்கவும் விடமாட்டேன்’ இனி இருவர் வாழ்க்கையில் என்றும் வசந்தமே…..
ஒரு பெண் தனியாக வாழ நினைக்கலாம். ஆனால் நடைமுறையில் பெண்ணை தனியாக ரோட்டில் கூட விடமுடியாது. இரண்டே உறவு அவளுக்கு சரியாக அமைந்தால் பிறந்த வீட்டில் ராஜகுமாரியாகவும் புகுந்த வீட்டில் ராணியாகவும் வாழ முடியும். ஆனால் இரண்டுமே அந்த இரண்டு உறவு தந்தை மற்றும் கணவன் கையில் தான் உள்ளது. கல்லை சிலையாக்கவும் முடியும் தூள்ளாக்கவும் முடியும் அது அந்த சிற்பியின் திறமை. பல பெண்கள் அடுப்படியில் ஒரு காலும் கணவனின் கனவை நினைவாக்க ஒரு காலிலும் ஓடுவாள். ஆனால் எத்தனை கணவன் மனைவின் கனவை நோக்கி செல்லுகிறார்கள். ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல் பெண்ணின் வெற்றிக்கும் ஆணின் துணை வேண்டும். ஒரு ஆண் நினைத்தால் பெண்ணை மட்டும் இல்ல திருநங்கையின் கனவை கூட நிறைவேத்த முடியும்.
சுபம்
அன்புடன்
நிலா ❤❤