தன் உயிரில் உறைந்திருப்பவளின் வயிற்றில் குழந்தையை உணர்ந்தவனின் கரத்தின் நடுக்கும் நொடிக்கு நொடி அதிகரிக்க கொண்ட அதீதஅதிர்ச்சியில் அவன் இதயத்துடிப்பு ஒருநொடிநின்றுதான் போனது..!!
அக்கணத்தின்கனம் அவனை வெகுவாக இறுக்கிபிடித்து மூச்சடைக்க செய்திருக்க தன்னிலை இழந்திருந்தவனின்உடல் முழுதும் பரவியிருந்த நடுக்கமும் சேர்ந்து அவனை அழுத்த அந்நொடிகளைகடக்கமுடியாமல் தொண்டைக்குழி அடைக்க திண்டாடிபோனான் சரண்.
”ஹாஆஆஅ..” என்று மூச்சை இழுத்துவிட்டவனின் உயிர் அப்போதுதான் அவன் வசம் திரும்பியிருக்க முகம் முற்றுமாக வியர்வையில் குளித்திருந்தது.காண்பது கனவாக இருந்து விடக்கூடாதா..! என்று மனம் ஒருபுறம் நப்பாசைக் கொண்டாலும் இல்லை என்று நெற்றிபொட்டில் அறைந்து கூறியது அவன்உணர்ந்த குழந்தையின் துடிப்பு.
இருள்சூழ்ந்த வனாந்திரத்தில் வழிபுலப்படாது சிக்கிகொண்டவனுக்கு கீர்த்தியின் மேடிட்ட வயிறே அகம் நிறைத்ததில் மெல்ல நிதானம்கொண்டான்.படபடத்த இதயத்தை அழுத்திபிடித்து மூச்சை இழுத்து விட்டவனுக்கு கடந்த நொடிவரை இருந்த சீற்றம், வெறுப்பு, வலி அனைத்தும் நீங்கியிருக்க கீர்த்தி மட்டுமே பிரதானமாகி போனாள்.
பல வருடங்களுக்கு பின்பு ‘பா..ப்..பு‘ என்று அவனிதழ்கள் முணுமுணுக்க அவனனுமதி இல்லாமலேகன்னங்களை தாண்டி வழிந்தது கண்ணீர். ‘என்ன ஆச்சுடா பாப்பு உனக்கு‘ என்று பின்னங்கழுத்தில் கரத்தை அழுத்தி நெரித்தவன் மனதினுள் அலைகடலின் ஆர்பரிப்பு..!!
ஏன் தன்னவளுக்கு இந்த நிலை ? யாரால், எதற்காக, எப்போது என்று கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக அவனை துரத்தி ஒருகட்டத்தில் சுற்றிவளைத்து சுருக்கு கயிராய் நெறிக்க முற்றிலுமாக உருக்குலைந்து போனான்.
“நான் தப்பு பண்ணிட்டேனா பாப்பு..?? என்ன நடந்திருந்தாலும் அன்னைக்கு உன்னை விட்டுட்டு போயிருக்க கூடாதோ..? அதனாலதான் என்னை தேடி வந்தியா..?? நீ என்கிட்டே வித்யாசமா நடந்துக்கும் போதே எவ்ளோமுறை கேட்டிருப்பேன் என்ன ஆச்சு ஏன் இப்படி பண்றன்னு ஆனா ஒருமுறைகூட நீ எதையும் சொல்லலையேடா.. ஏன்ஏன் அப்படி இருந்த ?உன் நிலைமையை சொல்லி இருந்தா வெறுத்துடுவேன்னு நெனச்சிட்டியா..?அவ்ளோதானா பாப்புஉனக்கு என் மேல இருக்க நம்பிக்கை..?” என்றுகுற்றஉணர்வு பிரவாகமாய் பொங்கிட கண்களை துடைத்தவன்,
“நீ என் பாப்புடா ! எந்த நிலைமையில இருந்தாலும் உன்னை நான் எப்படி விடுவேன்இனி உன்னை யாருக்காகவும் விட்டு கொடுக்கமாட்டேன் ஆனா உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவனை…’என்றவனுக்கு மனதில் பிரகாசத்தின் முகமும் இறுதியாய் அவனுடனான உரையாடலும் நினைவுவர சரணின் அகமும் புறமும் எரிமலையாய் தகித்தது.
சுமார் மூன்றுஆண்டுகளுக்கு முன்…..
சரணின் தந்தை இறந்த பின்னர் சிலவாரங்கள் கழித்து பணியில் சேர்ந்திருந்தவன் காலையில் அலுவலகம் வந்ததில் இருந்து “ப்ளீஸ்பிக்அப் பாப்பு..” என்று அவளுக்கு பதினைந்தாவது முறையாக முயற்சித்து கொண்டிருந்தான்.
ஆனால் மறுபக்கம் அழைப்பு ஏற்கபடாமல் போகவும், “ஸாரி கீர்த்தி அன்னைக்கு எமோஷனலா இருந்தேன் இப்போதான் இதுவும் அவனோட சதின்னு புரியுது, ப்ளீஸ்டா எனக்காக கால் அட்டென்ட் பண்ணு” என்று மனதோடு மருகியவனாக அழைப்புவிடுத்தே சோர்ந்து போனான்.
ஒருகட்டத்தில் அவனழைப்பு ஏற்கப்பட்டு “மா..ப்..பி..ள்..ளை” என்ற பிரகாசத்தின் எள்ளலில் ‘டேய்ஈஈஈ….‘ என்று கத்தியிருந்தான் சரண்.
கைப்பேசியை தள்ளி பிடித்து, “நம்ம பசங்க உன் வாட்ஸ்அப்க்கு வீடியோ அனுப்பி இருக்காங்க அதைபாரு மாப்…பிள்ளை…” என்ற பிரகாசத்தின் குரலே சரணுக்கு எச்சரிக்கை மணி அடிக்க, படபடக்கும் இதயத்தோடு கைபேசியை திறந்தவன் உச்சகட்ட அதிர்வில் மூச்சுபேச்சின்றி நின்று போனான்.
பின்னே அவன் அனுப்பிய வீடியோவில் வைதேகியின் பெண் சரண்யா ஆடைநெகிழ.., கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி இருக்க அவளை சுற்றி வாட்டசாட்டமான ரௌடிகள் நான்கு பேர் அமர்ந்திருந்தனர். கண்ணீர் அவன் விழித்திரையை மறைக்க புறங்கையால் துடைத்தவாறே “டேய்.. சா…சரண்.. யா”என்றவனுக்கு உணர்வுகளின் அழுத்தத்தில் தொண்டை அடைத்தது.
அதற்குள் அலுவலக வாயிலுக்கு ஓடி வந்திருந்தவன் முகம் வியர்த்துவழிய “டேய் அவ.. அவளை ஒன்னும் ப.. பண்ணிடாத.. சரண்யா எங்க இருக்கா அவளை விட்டுடு… உன்னை கெஞ்சி கேட்கிறேன்” என்று திணறியவனின் குரல் இப்போது உடைந்துபோக, “அவளை விட்டுட்டுடாஆஆ இல்லை உன்னை..” என்று கதறிவிட்டான்.
‘இல்லன்னா… இல்லைனாஆஅ என்னடா பெருசா கிழிக்கபோற ?ஓஒ ஒருவேளைஇப்பவே இந்த வீடியோவை என் பொண்ணுக்கு அனுப்பி என் முகத்திரையை கிழிக்கலாம்னு கணக்குபோடுறியா மா..ப்பி..ள்ளை ஆனா நீ அப்படி எல்லாம் செய்யமாட்டடா ஏன்னா நீதான் சுத்த ஆம்பிளையாச்சே என் பெண்ணை முன்னிறுத்தி என்கிட்டே மோதமாட்டஎன்ன அப்படி தானே..??’ என்றவனின் எச்சரிக்கையை உணர்ந்த சரண்,
பைக்கை எடுத்தவாறே ‘இல்லை நான் அப்படி செய்யமாட்டேன் என்னை நம்பு.. ப்ளீஸ் சரண்யா என்ன தப்பு பண்ணினா அவளைவிட்டுடு” என்றவனின் கதறலை ரசித்த பிரகாசம் “அது எப்படி மா..ப்பி..ள்ளை உன் அப்பனை காவு வாங்கின அப்புறமும் என் பொண்ணுக்கு ஃபோன்போட துணிஞ்சிருக்கன்னா உன்னை எப்படி சும்மாவிடறது”
“டேய்நான்தானேடா கால் பண்ணேன் வேணும்னா உன் ஆத்திரம் தீர என்னை அடிச்சு கொன்னு கூறுபோடு.. ஆனா அவ சின்னபொண்ணு… ப்ளீஸ் விட்டுடு” என்று திணறலுடன் சரண் மூச்செடுக்க..,
“ஏன்டா என்னை என்ன கூறுகெட்ட குப்பன்னு நெனச்சியா..?? உன்னை கொன்னு தியாகியாக்கி உன் நினைப்புல என் பொண்ணு காலம்பூரா தனியா இருந்தா என் மினிஸ்டர் கனவு என்னாகுறது ? இப்போ உன்னை வேண்டாம்னு சொன்ன என் பொண்ணு இன்னும் கொஞ்சநாளுலயே மினிஸ்டர் பையனை கட்டிக்க சம்மதிக்கதான் போறா..”என்ற பிரகாசம் உல்லாசமாய் சிரித்தவர்,
“எப்படின்னு பார்க்கிறியா என் பெர்பார்மன்ஸ் அப்படி மாப்பிள்ளை இப்ப ஒரு வீடியோ அனுப்புறேன் அதைபாரு புரியும்” என்றதில் பதட்டத்துடன் சரணும் சட்டென வண்டியை நடுரோட்டிலேயே நிறுத்த பின்னாடி வந்தவர்கள் அவனை வசைபாடியதில் சாலையின் ஓரத்திற்கு வந்தவன் கைபேசியை அவசரமாக எடுத்து பார்த்தான்.
“இப்ப புரியுதா..? என்ன ஒன்னு உனக்கு கொடுத்த அசைன்மெண்டை நீ ஒழுங்கா முடிச்சிருந்தேன்னா இந்நேரத்துக்கு நான் மினிஸ்டருக்கு சம்பந்தியாகி அடுத்த மாசம் மினிஸ்டரா பதவி ஏத்திருப்பேன் ஆனாபாரு மாப்பிள்ளை உன்னால எவ்வ்ளோ சிக்கல்.. இப்போஎன் பொண்ணு மனசு மாறும்வரை நான் காத்திருக்கணும்..” என்ற பிரகாசத்தின் குரலில் அழுத்தம் கூடிட,
‘அதுக்குள்ள நீ அவகிட்ட பேசி ஒன்னும் ……. முடியாது அடங்குடா..!’
‘ப்ளீஸ் சரண்யாவை விட்டுடுநான் இனி கீர்த்திகிட்ட பேசமாட்டேன் போதுமா..!!’
‘ஏன்டா ஏன் எனக்குன்னு இப்படி வந்து சேருறீங்க ? என் இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையில இதை மட்டும்தான் நான் செய்யாம இருந்தேன்ப்ச் இப்போ உன்னால செய்யவேண்டியதா போச்சு.. ஆனா சும்மா சொல்லக்கூடாது மா…ப்…பி..ள்ளை நிஜமாவே இவளுக்கு நல்ல ரேட் .. எப்படியும் இப்போ சென்னையை தாண்டி இருப்பாங்கன்னு நினைக்கறேன்’ என்று பின்னங்கழுத்தை வருட,
“டேய்ஈஈ.. எங்க கூட்டிட்டு போறீங்க சரண்யாவை அவளை விடுங்க.. விட்டுடுங்கடா” என்று சரண் சாலையிலேயே மடங்கி அமர்ந்திருந்தான்.
“ஏன்டா நான்தான் அவளுக்கு நல்ல ரேட்ன்னு சொன்னேனே, இன்னுமா எங்க போறான்னு உனக்கு புரியலை..??” என்று ஈவு இரக்கமின்றி கேட்க,
“ப்ளீஸ் அவளை விட்டுடுங்க.., என் காதலுக்காக இனி யாரையும் இழக்கற அளவு நான் சுயநலவாதி இல்லை.. உன்னை கெஞ்சி கேட்கிறேன் சத்… சத்தியமா நான் போயிடுறேன்.. வரமாட்டேன் அவளை மட்டும் விட்டுடு”
‘அக்காபொண்ணு மேல அவ்ளோ பாசமா மாப்..பிள்ளை அப்ப அவளையே கட்டிக்க வேண்டியதுதானே..! ஏன்டா வந்து என் உயிரை எடுக்குறீங்க..??’
“இல்லை இதுக்கு மேலயும் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.., நீங்க கீர்த்திக்கு அந்த மினிஸ்டர் பையனையே கட்டிவைங்க ஆனா சரண்யாவை விட்டுடுங்க” என்று சாலை என்பதையும் மறந்து கதறிக்கொண்டிருந்தான்.
தன்னை அடிப்பவனை எதிர்த்து நின்று காதலுக்காக போராடலாம் ஆனால் இங்கே தன் குடும்பத்தை முன்னிறுத்தி சொல்லி சொல்லி அடித்திருந்தவன் இன்று அதன் உச்சகட்டமாய் சரண்யாவை குறிவைத்து சரணை நிலைகுலை செய்திருக்க.., சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்தவனால் பிரகாசத்தின் பதவி, செல்வாக்கு, ஆட்பலத்தின் முன் எதிர்த்து நிற்க முடியாததில் குடும்பத்திற்காக வேரோடு தன் காதலை அறுத்து எறிந்திருந்தான்.
உயிரோடு இதயத்தை பிடுங்கி கொடுக்கும் நிலைதான் ஆனால் தன்வீட்டு பெண்களின் மானம் காக்க அதையும் துணிந்து செய்திருந்தான்.
அவனின் பலகட்ட கெஞ்சல்கள், உறுதிகள், சத்தியங்களுக்கு பின் இறங்கிவந்த பிரகாசம், “இனி ஒருமுறை என் பெண்ணை நெருங்கனும்னு நினைச்சேன்னா உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன் ஆனா மொத்த குடும்பத்தையும் கூண்டோட ஒழிச்சி கட்டிடுவேன்டா… ” என்றுகூற அதன்பின் சரண்யாவை மீட்டெடுத்தவன் வைதேகியிடம் ஒப்படைத்து அடுத்த ஒருமாதத்தில் வெளிநாட்டிற்கு சென்றிருந்தான்.
**************************
நினைவில் இருந்து மீண்டசரணுக்கு, ‘எங்கே பதவி வெறிக்கு பிரகாசம் பெற்றமகளை பலியாக்கி விட்டானோ..??’ என்று மொத்த ஆத்திரமும் பிரகாசத்தின் மீது திரும்பியது.
வெறிகொண்ட வேங்கையாய் அறையைவிட்டு வெளியேறியவன் அங்கு நாதனின்முன் மண்டியிட்டு இருந்த பிரகாசத்தை ஓங்கி நெஞ்சில் எட்டி உதைத்து தள்ளியிருந்தான்.
“டேய் என்ன ஆச்சுடாஎன் பாப்புக்கு?எதனால அவளுக்கு இந்த நிலைமை சொல்லுடா ஏன் இப்படி.. யார் காரணம்..??” என்று பிரகாசத்தை ஓங்கிஅறைய அதற்குள் எழில்தான் அவனை தடுத்து பிடித்திருந்தான்.
இத்தகைய அசாதாரண சூழலில் அங்கு வந்து சேர்ந்த கலைவாணி ஹாலில் கூடியிருந்த அனைவரையும் கண்கள் இடுங்க பார்த்தவர் விழிகளில் கண்ணீர்.
அவரை கண்ட பிரகாசம் உடனே ‘அம்மா..’ என்று ஓடி சென்று அவர் கால்களை பிடித்துகொண்டு ‘போதும்மா நான் ஏற்கனவே உள்ளுக்குள்ள செத்துட்டேன்இப்போ நடைபிணமா தான்திரியிறேன் அதுவும் என் பொண்ணுக்காக..! தப்பு பண்ணினவன் நான் நீங்களும் குட்டிமாவை தண்டிச்சிடாதீங்க தயவுசெய்து மாப்பிள்ளையை என் பெண்ணை ஏத்துக்க சொல்லுங்க’ என்று கண்ணீருடன் மன்றாடினார்.
எழிலின் பிடியில் முதலில் திமிறினாலும் பின் மெல்ல தன்னை கட்டுபடுத்தியசரணுக்கோ அப்போதுதான் குழந்தையின் நிலை மனதை பிசைய உடனே கீர்த்தியிடம் விரைந்தவன்‘என்னை மன்னிச்சிடு பாப்பு‘ என்று அவள் பாதங்களை பற்றமுயல பதறிய கீர்த்தி உடனே தன் கால்களை சேலைக்குள் இழுத்து கொண்டாள்.
‘ஸாரி.. ஸாரிடா பாப்பு.., ப்ளீஸ் எனக்கு நீ இப்படி இருக்கன்னு தெரியாது ரொம்ப வலிக்குதாடா..குழந்தை.. குழந்தைக்கு ஒன்னும் ஆகியிருக்காதுதானே’ என்று பதட்டத்துடன் கேட்கஅதற்குள்,
“டேய் பொறுக்கி என்னடா இது ? எதுக்குநடிக்கிற.. உன்கிட்ட இருந்து கூட்டிட்டு வந்த அப்புறம் ரெண்டு மாசத்துக்கும் மேல அவளை என் கண்பார்வையில பாதுகாத்து வச்சிருந்தேன்இப்போ அவளுக்கு ஏழு முடிஞ்சது நீ இங்க வந்து கிட்டத்தட்ட ஒன்பது மாசமாகுது.. பண்றதையும் பண்ணிட்டு தப்பை ஒத்துக்காம தெரியாதுன்னு சொல்லி நாடகமா ஆடிட்டு இருக்க…” என்ற நாதனின் கோபம் கரையை கடந்ததில் வார்த்தைகளும் வரம்பு மீறிபோனது.
“போதும் நிறுத்துங்க.. என்னவிட்டா உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க பேச்சுல ஒரு வரம்பு வேண்டாம்..அவன் கண்ணுல பொய்யில்லை கொஞ்சம் சொல்றதை பொறுமையா..” என்று எழில் முடிக்கும்முன்,
“அப்போ நான் பொய் சொல்றேனா? அந்த பொறுக்கிதான்..” என்று இருவருக்கிடையில் வார்த்தை தடிக்கவும்,
“அப்பா கொஞ்சம் பொறுமையா பேசுங்க ஏன் மாமாவை இப்படி..” என்று எழிலை பார்க்கஅவனோ அலரின் பேச்சை சட்டை செய்யாதவனாக அவளிடமிருந்து விலகமுனைய.., அவன் செயலில் நொடிபொழுது அதிர்ந்தாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டவளாக ‘மாமா ப்ளீஸ்..’ என்று அவன் கையைபிடிக்க முயன்றாள்.
முயன்றாள் ஆனால் முடிந்தால் தானே !
பின்னே எழிலன் அவளை பார்த்த பார்வையில் பின்வாங்கிய அலர்விழி கணவனின் புறக்கணிப்பில் பெரிதும் காயப்பட்டுபோனாள்.
இங்கே சரணுக்கோ நாதன் கூறும் எதுவும் மனதில் பதியவில்லை, தன்னவளின் நலனும் குழந்தையின் நலனும் முதன்மையாக இருக்க அவன் செவிகளில் இறுதியாய் ‘தாலி கட்டாம‘ என்ற நாதனின் வார்த்தை சென்றுசேர..உடனே பூஜையறைக்கு ஓடியவன் அங்கிருந்த மஞ்சள்கயிறை கொண்டுவந்து கீர்த்தியின் கழுத்தில் முடிச்சிட தொடங்கவுமே திகைத்துபோன கீர்த்தி ‘நோஓஒஓஒ..‘ என்று மறுப்பதற்குள் சரண் மூன்றுமுடிச்சு போட்டிருந்தான்.
இதில் மேலும் திகைத்த அலருக்கு பூமியே தட்டாமாலையாக சுழன்று போனது.
நடக்கும் எதையும் கணிக்க முடியாமல் போனவளுக்குள் ஆயிரம் கேள்விகள் முளைத்தாலும் இறுதியாய் சரண் அவளை ஏற்றுக்கொண்டதை எண்ணி எதற்கும் விடைகாண தோன்றாமல் எழிலை பார்க்க.. அவனோ கடும்பாறையாய் இறுகி போயிருந்தான்.
அதுவே அவன் ஏன் தன்னை பொறுமைகாக்க சொன்னான் என்பதை நினைவூட்ட விழிகளில் யாசிப்புடன் கணவனை பார்ப்பதைதவிர அலருக்கும் வேறு மார்க்கமில்லை.
இருவாரங்களை தவிர அதற்கு முன்பான நிகழ்வுகளை அறிந்திருந்தஎழிலோதற்போது நடக்கும் அனைத்தையும் ஒருவகையில் ஊகித்திருந்தாலும் கீர்த்தியின் நிலைக்கு காரணம் யார் என்பது மட்டும்தான் அவனுக்கு புலப்படாது போனது.
எதுவாகினும் இனி சரண் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கையுடன் சரணிடம் விடைபெற உடனே எழுந்து அவன்பின்னே சென்றாள் அலர்விழி.
ஆனால் ‘என்கூட கிளம்பு அமுலு’ என்று நாதன் சொல்லவும் முன்னே சென்றுகொண்டிருந்த எழிலின் நடை தடைபட்டது.., மெல்ல திரும்பியவன் மார்பின் குறுக்கே கரங்களை கோர்த்து தந்தை மகள் இருவரையும் தீர்க்கமாக பார்த்திருந்தான்.
‘எங்கே என்னை தாண்டி செல் பார்ப்போம்‘ என்ற அவன் பார்வையே தன் காதலின் மீதான உறுதியை சொல்லாமல் சொல்லியது.
இதை கண்ட அலரின் மனமோ பெரும் கலக்கம்கொள்ள மானசீகமாய் தலையில் கை வைத்துக்கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்தவள்., “இல்லைப்பா நான் மாமாகூட போறேன்..” என்று எழிலின் புறம் ஓரடி எடுத்து வைத்திருக்க நாதனோ,
“எவனோ ஒரு பொறுக்கிக்காக என் பெண்ணை அடிக்கவந்தவன் கிட்டஇனியும் உன்னை அனுப்ப நான் ஒன்னும் முட்டாள் இல்லை” என்றதில் அலர்விழி விக்கித்து போனாள்.
கணவனுக்கும் தந்தைக்கும் இடையே மீண்டும் ஒரு புரிதலின்மை !
நினைக்க நினைக்க இன்றைய சூழலை தானே முன்னெடுத்து விட்டோமோ என்ற பதட்டத்துடன், “அச்சோஓ ப்பா அப்படியெல்லாம் இல்லப்பா மாமா என்னை…” என்று கண்களில் மன்னிப்போடு எழிலை பார்க்க..
“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லைஎன் கண்முன்னவே என் பெண்ணை கைநீட்ட என்ன தைரியம் இருக்கணும் இப்போ நீ கிளம்ப போறியா இல்லையா..?”
ஒருபுறம் தந்தை மறுபுறம் கணவன் இருவரில் யார்புறம் சென்றாலும் மற்றவர் மனம் காயப்பட்டு போகும் என்பது உறுதி.. ஆனால் தந்தை முகத்தில் கொந்தளித்த கோபத்தை கண்டு அதற்குமேல் தன் மறுப்பை அழுத்தமாய் உரைக்கும் தைரியம் இல்லாதுபோனது அலரிடம்.
தந்தையுடன் செல்வதற்காக எழிலின் சம்மதம் வேண்டி அவனை பார்த்தாள்…..
ஆனால் அவன் பார்வையின் அழுத்தம் கூடியதே தவிர கொஞ்சமும் இளகவில்லை..அதை கண்டவளின் தவிப்பு கூடிட விழிகளில் இருந்து கரகரவென நீர் இறங்கியது.
“ப்ளீஸ் மாமா..” என்று அவன் விழியோடு கலந்தவள்மானசீகமாக யாசிப்பை தொடுக்க எழிலிடம் அது சரியாக சென்று சேர்ந்திருந்தது. அனைத்து கோபதாபங்களையும் ஒதுக்கியவனுக்குமாமனாரின் நிலையே தன்னவளை மன்றாட செய்கிறது என்பது புரிந்தாலும் காதல் கொண்ட மனம் அத்தனை எளிதாக ஏற்கமறுத்தது.
மனம் முழுக்க அவள் தன்னை சுமந்திருந்தாலும் இன்றுவரை பெற்றவனாகொண்டவனா..?? என்ற சூழல் வரும் போதெல்லாம் அவனை புறக்கணித்து தந்தையை தேர்ந்தெடுப்பதை கண்டு எழிலின் மனமும் வெதும்பத்தான் செய்தது.அதையும் தன்னவளுக்காக மென்று விழுங்கியவன்அமைதியாகஅவர்கள் வழியில் இருந்து அகன்று வெளியேறியிருந்தான்.