“இவன் ஏன் எப்போதும் தன் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவனாகவே இருக்கிறான்..!! சரணை சந்தித்த நாளில் இருந்தே அவன் மீதான தன் கணிப்புகள் தவறாகவே முடிகிறதே” என்று அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
விழிகளை தழைத்து தன்நெஞ்சில் புதிதாக உறவாடிய கயிறை ஆராயந்தவளுக்கு, பொன் தாலியோ, மஞ்சள் கிழங்கோ கோர்க்கபடாத வெறும் மஞ்சள்கயிறு தூக்குகயிறாக மாறி அவளை மூச்சடைக்க செய்து நெஞ்சில் பெரும் பாரமேற்றி கொண்டிருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.
அதில் கலங்கமுற்பட்ட மனதை இறுக்கிபிடித்து மீண்டும் நிமிர்ந்தவளுக்கு மனம் கவர்ந்தவனாகவே இருந்தாலும் இப்போது அவன் தாலிக்கு அவள் தயாராக இல்லை.
பின்னே கீர்த்தி இங்குவந்தது தன் குழந்தைக்கு நீதி வேண்டியோ அல்லது தனக்கு வாழ்க்கை வேண்டியோ அல்ல..! சர்வ அலங்காரங்களுடன் இருப்பவளை கண்டு சற்றுமுன் அறையில் நடத்தியதை வீட்டு வாசலில் அனைவர் முன்னிலையில் அரங்கேற்றி அதற்கு மகுடம் சூட்டும் நிகழ்வாக தன்னை சரண் வாழ்வில் இருந்து அவனே தூக்கி எறியவேண்டும் என்று அவள் இன்றிய நிகழ்வை கட்டமைத்திருந்தால் அவனோ மஞ்சள்கயிறை கட்டி உறவை பலபடுத்தி அவள் திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டானே என்று கொதித்து போனாள்.
அவன் மீதான அவள் பார்வையில் இப்போது ஆக்ரோஷம் மிளிர்ந்தது.
“வா கீர்த்தி குழந்தை நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னாதான் என் மனசு ஆறும் ” என்று சரண் அவள் கையை பிடிக்க முயல அவனை மேலும் காயபடுத்தகூடாது என்ற இதுநாள்வரை அவள் கொண்டிருந்த உறுதி காற்றில் பறக்க சீற்றத்துடன் எழுந்தவள் மறுகணம் தாலிகயிரை உயர்த்தி,