சரணின் படுக்கையறை கதவின் மீது சாய்ந்திருந்த கீர்த்திக்கு “ப்ளீஸ் என் பெண்ணை பார்த்துக்கோங்க நாங்க போயிடுறோம்” என்று பிரகாசம் கூனிகுறுகி கண்ணீரோடு வெளியேறுவதை கண்டதும் இதழ்களில் வெற்றி புன்னகை தாண்டவமாடியது. கதவை சாற்றிவிட்டு உரிமையாக அவனறையினுள் செல்ல அவளையேவெறித்து கொண்டு அமர்ந்திருந்த சரணுக்கு, ‘என்ன பெண் இவள்..!! என்ற கேள்வி எழ அதற்கான விடையை தேட தொடங்கினான்.
என்றுமே தவறான வார்த்தை பிரயோகத்தைகீர்த்தியால் எளிதில் மன்னிக்க முடியாது… ‘ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும்‘ என்பதால் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுபவள்அன்று உணர்ச்சி மிகுதியில் சரண் பேசியதற்கும் நடந்துகொண்ட விதத்திற்கும் கடுமையான எதிர்வினை புரிந்தவள் இன்று எளிதாக கடப்பதை கண்டு அவனுக்கு குழப்பம் அதிகரித்தது என்றால் அவன் நிலையை மோசமாக்குவதுபோல அமைந்திருந்தது கீர்த்தியின் செயல்கள்.
அறையில் இருந்து வெளியில் வந்தவள் வெகு இயல்பாக சமையலறைக்குள் நுழைந்து தண்ணீர் பாட்டிலோடு அவனை அழுத்தமாக பார்த்தவாறு செல்லவும் அவள் விழிகளில் தென்பட்டஉணர்வுகளுக்கு அர்த்தம் நிச்சயம் சரணுக்கு புரிபடவில்லை.
ஆம் திருமணம் ஆகாமல் தனக்காக காத்திருப்பவள் ஏன் இத்தனை வருட பிரிவில் ஒருமுறைகூட தன்னை தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லை என்ற கேள்வி மனதை அரிக்க விலுக்கென்று நிமிர்ந்தவன் மனமோ இதை எப்படி மறந்தாய்..??? என்று சில நினைவுகளை எடுத்து கொடுக்க அவனும் அதையே யோசித்தவன் உடனே அவளை தேடிசெல்ல படுக்கையில் ஒய்யாரமாக சாய்ந்து கால்களை ஒன்றன் மேல் ஒன்று போட்டு கொண்டு கீர்த்தி செல்ஃபி எடுத்து கொண்டிருப்பதை கண்டவன் அதிர்ந்து போனான்.
“கீர்த்தீஈஈ என்ன பண்றே, முதல்ல எந்திரி” என்றவனை எதிர்பாராதவள் முதலில் திடுக்கிட்டாலும்பின் தலைக்கு அணைவாய் கரம்வைத்து ‘எதுக்கு‘ என்று அலட்சியமாக புருவம் உயர்த்தியிருந்தாள்.
“இதோ பாரு கீர்த்திநீ பண்ற எதுவுமே சரி இல்லை..எதுவா இருந்தாலும் நாம பேசலாம் ஆனா இப்போ, இங்க இல்லை… காரணம் என்னவா இருந்தாலும் இது தப்பு மொதல்ல இங்கிருந்து கிளம்பு.. நானும் ஊருக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன் வா நானே உன்னை விட்டுடறேன்!” என்று உயர்ந்த அவன் கரம்….
“ஆனா என்னால உன்னை விடமுடியாதே” என்ற அவள் வார்த்தைகளில் அந்தரத்தில் அசைவற்று நின்றது.
‘முடியாது‘ என்று மேலும் நெருங்க இருவரின் தேகமும் ஒன்றை ஒன்று உரச மில்லிமீட்டர் இடைவெளியே இருந்தது. தடாலடியான அவளின் செய்கையை எதிர்பாராதுசட்டென விலகியவன், “என்னாச்சு கீர்த்திமுட்டாளா நீ..!! என்ன பண்ணிட்டிருக்க ?” என்றவனுக்கு அவர்களின் காதல் காலங்களின் போதுகூட அவனுடனான தனித்திருக்கும் பொழுதுகளை நான்கு சுவர்களுக்குள் அமைவதை என்றுமே அவள் விரும்பியதும் இல்லை அனுமதித்ததும் இல்லை.
காதலிலும் கண்ணியம் வேண்டும் என்ற கொள்கையோடிருப்பவளுக்கு இன்றைய சில காதலர்களை போல உணர்வுகளுக்கு வடிகாலாக காதலை கொள்வதில் ஏற்பில்லை.அதிலும் சரண் அவளுடன் கண்ணியமான இடைவெளியை பின்பற்றுபவன் என்றாலும் கீர்த்தி அவனுடன் தனித்திருக்கும் பொழுதுகளை பீச், காபிடேரியா, பார்க், மால், திரையரங்கம் என்று பொதுஇடங்களில் அமையுமாறு பார்த்துகொள்வாள்.
சில மாதங்களுக்கு பிறகே கீர்த்தியின் மாற்றத்தை உணர்ந்த சரணுமே அவளின் இந்த குணத்தால் பெரிதும் அவள் பால் ஈர்க்கபட்டான். காதலை நிருபிக்க அணைப்போ முத்தமோ அதையும் மீறிய நிலைகளோ கட்டாயம் என்பதில் இருவருக்கும் உடன்பாடு இல்லை… இருவருமே உணர்வுகளின் ஆளுகைக்கு உடன்படும் அளவு பலவீனமானவர்களும் இல்லை மிகுந்த மனஉறுதி மிக்கவர்கள்.
ஒழுக்கத்தை உயிராக போதித்து வளர்த்த அன்னை தமக்கைகளில் இருந்து வழிநடத்திய நாதன் வரையிலான உன்னத உறவுகளுக்கிடையில் வாழ்பவனுக்கு தான் கைபிடிக்க போகும் பெண்ணை அவளுக்குரிய மரியாதையுடன் புனிதமேடை ஏற்றி அவள்கரம் பிடிப்பதே அவளுக்கு தான் அளிக்கும் மரியாதை..!! அதுமட்டுமின்றி தன் மீது அவள் வைத்திருக்கும் அளவற்றநம்பிக்கைக்கும் கெளரவம் சேர்க்கும் என்று நம்புபவன்.
“சோஷியல் ஹக்” என்பது இவர்கள் துறையில் சர்வசாதாரணமாக இருக்கும் நிலையில் இருவருமே அவர்களுடனும் மற்றவர்களுடன் நாகரீகமான கைகுலுக்கலுடன் விலகிவிடுவர். சிலர் இவர்களின் நடவடிக்கைகளை பிற்போக்குதனம் என்று கேலி செய்தாலும் அத்தருணங்களை மெல்லிய புன்னகையுடன் கடந்து விடுவர். அதிகபட்சமாக ஒன்றாக நடக்கும் தருணங்களில் கைகோர்த்து கொள்வதும் சோர்வுறும் சமயங்களில் தோள் சாய்வதைதவிர பெரிதான தொடுகை அவர்களுக்குள் இருந்ததில்லை. ஆனால் இப்போது..?? என்று அவன் திணறி நிற்க..,
“உனக்காக இங்க நான்குத்துகல்லாட்டம்காத்துட்டு இருக்கும் போது எப்படி உன்னால சௌமியாவை பெண் பார்க்க முடிஞ்சது?” என்ற சீற்றத்துடன் நம் நாயகி.
அவளின் பேச்சும் செய்கையும் கண்டு கீர்த்தியா இது..?? என்று அசந்துதான் போனான் சரண்..,
பின்னே காதலிக்க தொடங்கிய நாளில் இருந்து என்றுமே தன்னிடம் ஒருமையில் பேசியிறாதவள் இன்று சரளமாக அவனை அழைப்பதே அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கையில்..அன்று தந்தைக்காக தன்னை வேண்டாம் என்று மறுத்தவளின் கேள்வி அதிர்ச்சி அளிக்காமல் வேறென்ன செய்யும்..?
“ஹ்ம்ம் சொல்லுஎப்படி உன்னால என்னை விட்டுட்டு அவளை பார்க்கபோக முடிஞ்சது” என்று அவன் முகத்தை பற்றமுயல,
‘கீர்த்திஈஈஈஈ..’ என்று கரத்தை தட்டி விட்டவன்..,
“என்ன நெனச்சிட்டு இருக்க நீ..?? எதுக்கு இப்படி பீஹேவ் பண்ற..!! உன்னோட முட்டாள்தனத்துக்கு அளவில்லாம இருக்கலாம் ஆனா என்னோட பொறுமைக்கு அளவிருக்கு முதல்ல வெளியே வா...” என்றழைத்தவனுக்கு ஆற்றாமை பெருக தலையை அழுந்த கோதியவாறே,
“உனக்கு என்ன கோபம் கீர்த்தி நான் இல்லாதப்ப என்ன நடந்தது..?? எதுவா இருந்தாலும் சொல்லு இல்லை என்மேல கோபமா என்னை கேள்வி கேளு விளக்கம் கொடுக்குறேன்.. ஆனா நீஇங்க இருக்கறது தப்புசொன்னா கேளுவா நானே உன்னை உங்கவீட்ல விட்டுடறேன்” என்றவன் அவள் பெட்டியை எடுக்க..,
அவளோ அழுத்தமாக கால்களைவேரூன்றி நின்றுகொண்டு, “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலை”
‘சரி உனக்குஎன்ன பதில் வேணும் சொல்லு சொல்றேன் ஆனா அதுக்கப்புறம் ஒரு நிமிஷம்கூட இங்க இருக்ககூடாது புரியுதா?’
“எதுக்கு சௌமியாவை பெண் பார்க்க போன..?”
‘சௌமியாவா யார் அது..? என்று யோசித்தவனுக்கு அவள் ஏன் திரும்பவும் யாரோ ஒருசௌமியாவை பற்றி பேசுகிறாள் என்று புரியாது அவளிடமே கேட்க.,
கீர்த்தியின் இதழ்கடையோரம் வளைய, “பொண்ணு பேருகூட தெரியாம தான் மாப்பிள்ளை அவ்ளோ ஜோரா பெண் பார்க்க கிளம்பி போனீங்களோ..??” என்று ஆச்சர்யமாக கேட்க..,
“ஓஒ அந்த பொண்ணு பேரு சௌமியாவா எனக்கு தெரியாது.. அக்கா மாமா எல்லாம் திடீர்னு கிளம்பி வரவும் எவ்ளோ பேசியும் அவங்களுக்கு புரியவைக்க முடியலை அதான் அவங்களை அவமதிக்க கூடாதுன்னு போயிருந்தேன் ஆனா அந்த பெண்ணை நான் மறுத்துட்டேனே”
“ஒஹ் உங்க அக்கா மாமா சொன்னதால தான் நீங்க சௌமியாவை பெண்பார்க்க போனீங்க அப்போ உங்களுக்கா எந்த விருப்பு வெறுப்பும் இல்லை அப்படிதானே..? யார் என்ன சொல்றாங்களோ அதை செய்வீங்க அப்படிதானே..!”
திடீரென்ற அவளின் மரியாதை பன்மையின் எள்ளல்லை அறிந்தவன் அவள் உடல்மொழி மாற்றத்தில் கொண்ட நெருடலோடு ‘ஆம்’ என்றான்.
“ஃபைன் ! அதேபோல நாட்டைவிட்டு ஓடினதும் உங்க விருப்பத்தோட இல்லை அப்படிதானே மிஸ்டர் சரண்..??” என்றவள் கேள்வி எதற்காக என்று புரியாவிட்டாலும் ‘ஆம்’ என்று தலையசைக்க கீர்த்தியின் முகத்தில் கசந்த புன்னகை.
“கீர்த்தி நான் இங்க இருந்து போனது என் விருப்பம் இல்லாமதான் ஆனா என்னோட சூழ்நிலை அப்..” என்றவனை இடையிட்டவள்,
“அப்போ உன் வாழ்க்கையில நடக்கற எதையும் தடுக்க நீ எந்தவிதத்துலையும் முயற்சிக்கலை அப்படிதானே..?” என்றவள் அவன் பதிலளிக்கவும் வாய்ப்பளிக்காமல் தொடர்ந்து,
“அப்புறம் ஏன் என்னை இங்க இருந்து துரத்த பார்க்கிற அடுத்தவங்க உன் வாழ்க்கையை தீர்மானிக்கிற அளவு இடம் கொடுத்து வச்சிருக்க உங்களுக்கு என் வாழ்க்கை எப்படி இருக்கனும்னு தீர்மானிக்கிற உரிமை கிடையாது மிஸ்டர் சரண்..!! ஸோ பெட்டர் என்னை இங்கிருந்து அனுப்ப முயற்சிக்காம இருக்கிறது உங்களுக்கு நல்லது.. என் வார்த்தையை மீறினா விளைவு விபரீதமா இருக்கும்.. ” என்று குரலை உயர்த்தாமல் எச்சரிக்க வியந்து பார்த்திருந்தான் சரண்.
“நான் முடிவு பண்ணிட்டேன் இனி இதுதான் என் இடம்! இதுல உங்களோட விருப்பு வெறுப்பு பத்தி ஐ டோன்ட் கேர் ! நெவெர் எவர்” என்று நெற்றியில் புரண்ட கூந்தல் கற்றையை ஒதுக்கிக்கொண்டே அலட்சியமாக கூற.,
“என்ன உளறல் கீர்த்தி இது..??”
‘ஓஒ நான் சொன்னது புரியலையா சரி புரியிற மாதிரி சொல்றேன்..” என்றவள் அவனை நெருங்கிகொண்டே,
“அம்மா, அக்கா, மாமா, அவங்க பொண்ணுன்னு எல்லாரோட மனசையும் புரிஞ்சு உங்களோட விருப்பு வெறுப்பை ஒதுக்கிட்டு அவங்களுக்கு ஏத்தமாதிரி நடந்துக்குற உங்களுக்கு என் மனசு புரியலையா..?? இல்லை நான் ஏன் இங்க வந்திருக்கேன்னு தெரியலையா..??” என்றவள் இப்போது இருவருக்கிடையிலான இடைவெளியை குறைத்து சரணை உரசி நிற்க அவனோ அன்னிச்சையாக உடலை குறுக்கிகொண்டான்.
“இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா மிஸ்டர் சரண்” என்று அவன் கன்னத்தில் சுட்டுவிரல் கொண்டு கோலம் போட்டுக்கொண்டே கேட்டவளின் குரல் குழைந்திருக்க..,
அவள் கரத்தை தட்டிவிட்டவன் அவளை விலக்க முயற்சிக்க அவளோ சரணை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.
“மத்தவங்க விருப்பத்தை நிறைவேத்தறவருக்கு என் விருப்பத்தை நிறைவேத்தனும்னு தோணலையா..??” என்ற கீர்த்தி புதிதாக மிக புதிதாக தெரிந்தாள்..!!
அதிலும் அவள் பார்வை, நடை, பேச்சு என்று அனைத்திலும் இருக்கும் வேறுபாடு அவனை திகைக்க செய்திருக்க யாரால், எதனால் தன்னவளிடம் இம்மாற்றம் என்று புரியாமல் திகைத்தவனுக்கு உலகமே தட்டாமாலையாக சுழன்றது. நொடியில் சுதாரித்தவன் அவளை பிரித்து நிறுத்தி, “வாட் தி ஹெல் இஸ் திஸ் கீர்த்தி ஆர் யூ கிரேஸீ…?? என்ன பண்ற, என்ன பேசிட்டு இருக்க..? இடியட் ஹாவ் யு லாஸ்ட் யுவர் மைன்ட்..? ஜஸ்ட் கெட் அவுட் ஆப் திஸ் பிளேஸ்’ என்று உச்சகட்ட வெறுப்புடன் கூற,
“ஸோ ஈவன் நவ் யூ ஆர் ஃப்ரூவிங் தட் ஐ ஆம் நாட் யுவர்ஸ் ரைட் ! உன்னை நம்பி இருக்க பெண்ணை பத்தின எந்த கவலையும் உனக்கு இல்லை” என்று விழிகளில் முட்டி நின்ற நீருடன் கேட்க அவள் கேள்விக்கான அர்த்தம் புரியாத சரணின் சிந்திக்கும் திறனையே வந்து சேர்ந்த சில மணிநேரங்களுக்குள் கீர்த்தி சிதறடித்திருந்தாள் என்றுதான் கூறவேண்டும்.
“உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் லவ் பண்ணலைன்னு யார் அழுதா..? எப்படி ஒரு பெண்ணோட மனசுல ஆசையை வளர்த்துட்டு அவளை பத்தின நெனப்பே இல்லாம இருக்கமுடியுது உங்க….” என்றவளின் பேச்சு சரணுக்கு ஆத்திரத்தை கிளப்ப..,
“ஸ்டாப் இட் கீர்த்தி.. ஜஸ்ட் ஸ்டாப் இட் என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டு போற..?? அன்னைக்கு உன்னை என்கூடவான்னு கூப்பிட்டப்போ அந்த கேடுகெட்டவனுக்காக நீ தானேடி வரமுடியாதுன்னு சொன்ன இப்போ எதோ நான் உன்னை ஏமாத்திட்டு ஓடிட்ட மாதிரி பேசுற..?” என்று கேட்கவும் அவள் பார்வை கூர்மையானது.
‘அன்னைக்கு உங்கப்பனுக்கு அப்புறம்தான் நான்னு சொன்னவதானடி நீ…!! அப்படி அந்த கேவலமானவன் முக்கியம்னு இருக்கிற உனக்கு மட்டும் எதுக்குடி லவ் ? சொல்லபோனா உன்னை லவ் பண்ணின பாவத்துக்கு இங்க நூலறுந்த பட்டமா அல்லடுறவன் நான்! அதைபத்தி உனக்கென்ன கவலை இருந்திட போகுது.. இவ்ளோ நாள் என்னை தேடனும் என்கூட பேசனும்னுகூட தோணாதவளுக்கு இன்னிக்கு என்னை கேள்வி கேட்கிற உரிமையில்ல புரிஞ்சதா..?’ என்று சீற,
இதற்கெல்லாம் அசரும் ஆளா நம் நாயகி !!
“இஸ் இட் ஸோ..!! ஆனா அல்லாடுற பட்டம் எப்படி சார் சௌமியா வீட்டுக்குள்ள ஜம்பமா போய் தரை இறங்குச்சி” என்று புருவமேற்றிட,
“சௌமியா, சௌமியா, சௌமியா.. யாருடி அவ? இப்போ எதுக்கு நமக்கு நடுவுல அவளை கொண்டுவர நான் தான் ஏற்கனவே அந்த பெண்ணை வேண்டாம்னு சொல்லிட்டேனே ஆனா நீ அதை விடறமாதிரி தெரியல.. நான் பொண்ணு பார்க்க போனதையே உன்னால தாங்கிக்க முடியலையே அன்னைக்கு எவனோ ஒருத்தன்கூட உனக்கு நிச்சயம்னு உங்க வீட்டுக்கு வந்தப்போ நீ அவன்கூட ஜோடியா நிற்கிற அவன் உன் முந்தானையை பிடிச்சி இழுக்குறான் ..” என்றவனின் கைமுஷ்டி இறுக.,
‘ஆனா அதுவும் உங்கப்பனோட பிளான்னு எனக்கு அப்புறம்தான் தெரியவந்தது லிசன் ஏதோ நீ எனக்காகவே இத்தனை வருஷம் காத்திருந்ததா உங்கம்மா சொன்னாங்க ஆனா உன்னோட பேச்சும் நடவடிக்கையும் அப்படியில்லை நான் சொல்ல வருவதையும் கேட்கிற நிலைமையில நீயில்லை.. தயவுசெய்து உனக்கு என்னதான் பிரச்சனை எதுக்கு இங்க வந்திருக்க அதையாவது சொல்லித்தொலை” என்று கேட்கவும் இரு கரங்களையும் ஒன்றாக சேர்த்து ஓசை எழுப்பியவள்,
“வாவ் தட்ஸ் ரியலி எ பிரில்லியண்ட் குவஸ்டின் ஃப்ரம் யூ.. சொல்லபோனா எப்போ இந்த கேள்வி உன்கிட்ட இருந்து வரும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அட்லாஸ்ட் இவ்ளோ பெரிய ஆர்கியூமென்ட்க்கு அப்புறமாவது கேட்கணும்னு தோனுச்சே”
ஏற்கனவே அவளால் ஏற்பட்ட தலைவலியில் தலையை பிடித்திருந்தவன் அவள் பரிகாசத்தில் எரிச்சலுற்று, “ப்ச் திஸ் இஸ் யுவர் லிமிட் கம் டூ தி பாய்ன்ட் இடியட்” என்று சீற,
“கூல்.. கூல்.. எதுக்கு இவ்ளோ டென்ஷன்” என்றவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவனையும் அமரசொல்ல அவனோ அவளுக்கு எதிரே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றநொடி அவன் கைபேசி ஒலிக்கவும் எடுத்து பார்த்தவன் அதில் ஒளிர்ந்த எண்ணை கண்டதும் உடனே அழைப்பை ஏற்க மறுபுறம் திலக்கின் அழுகுரல்…
“ஹலோ திலக்..” என்றதும் மறுபுறம் அவன் கூறிய செய்தியில் விதிர்விதிர்த்து மறுநொடியே தன் பைக்கீயோடு வாசலுக்கு ஓடியிருந்தவன் ஒருநொடி நிதானித்து,
“லிசன் சந்தியாவா சௌமியாவா..? ஹூஎவர் எனக்கு அவன்னு கிடையாது எந்த பொண்ணு மேலயும் இண்டரெஸ்ட் இல்லை நீ இங்க எதுக்காக வந்திருந்தாலும் சரி அதை பத்தி ஐ டோன்ட் கேர்.., அவசரமா வெளில போறேன் பட் நான் இங்க திரும்பி வரவரை தான் உனக்கு டைம் அதுக்குள்ள உன் மனசை மாத்திட்டு இங்கிருந்து கிளம்புற வழியை பாரு இல்லை இதுவரை நீ பார்க்காத சரணை பார்ப்ப..” என்று அழுத்தமாக கூறி வெளியேறினான்.
அவன் பார்வையும் குரலும் அவளை உள்ளுக்குள் சில்லட செய்தாலும் கொண்ட முடிவில் மாற்றம் இல்லை என்ற உறுதியில் திடம் கொண்டவளின் பார்வை செல்லும் அவன் முதுகையே துளைத்திருந்தது.
************************************
இரவு சரண் அழைப்புமணியை ஒலிக்கவிட சிலமணித்துளிகள் அவனை காக்கவைத்த பின்பே கீர்த்தி கதவை திறந்தாள். தன்முன் நின்றவளை நம்ப முடியாமல் அவன் கண்களை கசக்கி கொண்டு பார்க்க அங்கே அவனெதிரே பட்டுபுடவையில் பூச்சூடி அதீத ஒப்பனையுடன் தலை முதல் கால் வரை சர்வஅலங்காரத்துடன் மயக்கும் புன்னகையோடு நின்றிருந்தவளை கண்டு தூக்கிவாரி போட்டது சரணுக்கு !!
காண்பது நிஜம் தானா..?? என்பது புரியாமல் மீண்டும் அவளை பார்க்க எத்தனை முறை பார்த்தாலும் அவள் தான் என்பது ஆணி அடித்தார் போல நெஞ்சில் பதிய அவளை என்ன செய்வது என்று புரியாமல் அலமலந்து போனான்.
காலையில் காஃபி குடித்தவன் அதன்பின் இவர்கள் வரவில் காலை உணவு இல்லாமல் போக திலக் மற்றும் அவன் மனைவியால் மதிய உணவும் எடுத்துக்கொள்ள முடியாது இடையில் ஒரு சண்ட்விச் மட்டுமே உண்டிருந்தவனுக்கு இப்போது பசித்தாலும் இரவு உணவைவிட தூக்கமே அதிமுக்கிய தேவையாக இருந்தது.
ஆனால் கீர்த்தியின் கோலம் அவனது மொத்த தூக்கத்தையும் விரட்டியடிக்க மனம் அவளை இங்கிருந்து அனுப்புமாறு கட்டளையிட்டு அவனை நெட்டி தள்ளியபோதும் எதிர்பாரா அதீத அதிர்ச்சியில் அவளிடம் என்ன பேசுவது என்று புரிபடாமல் ஸ்தம்பித்து நின்றிருந்தவன் அவளின் தொடுகையிலே சமரன் பெற்றான்.
“எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருப்பீங்க ? பார்த்த வரைக்கும் போதும் இப்போ போய் குளிச்சிட்டு வாங்க” என்று ஏதோ கட்டிய மனைவிபோல கைபிடித்திழுத்து கதவை சாற்றியவள்,
“நான் எங்க ஓடிட போறேன், மெதுவா வந்து என்னை பார்க்கலாம்’ என்றவளின் கரங்கள் அவன் சட்டை பொத்தானை விடுவிக்க தன்போக்கில், ‘ஃபூட் ஆர்டர் பண்ணி இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து….” என்ற போதுதான் அவள் செய்கையை உணர்ந்தவன் சட்டென பதறி விலகி,
“ச்சேய் பொண்ணாடி நீ ! என்ன காரியம் பண்ற என்ன வேஷம் இதெல்லாம்..!! உன்ன இங்க இருந்து போக சொல்லி சொன்னேன் ஆனா நீ இங்க இருந்தேன்னா கண்டிப்பா கொன்..” என்றவனின் மீசை துடிக்க அவள் முகத்தைகூட பார்க்காமல்,
“கெட் லாஸ்ட்” என்று சீறி தன்னறைக்குள் நுழைந்த மறுநொடி ‘கீர்த்திஈஈஈ’ என்று கர்ஜித்திருந்தான்.
*********************************************
சரண் வீட்டின் வாயிற் கதவோரம் உணர்வுகளை தொலைத்த விழிகளோடு விட்டத்தை வெறித்திருந்த பிரகாசத்தின் கண்களில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் மௌனமாய் வெளியேறி கொண்டிருந்தது.
பல வருடங்களாக அவர் காத்திருந்த நாள் என்றாலும் எப்படி நிகழ்த்தி இருக்கவேண்டிய மகளின் திருமணம் இப்போது இங்கே, இந்த நிலையில் அதுவும் தன்னால் என்பதில் இதயம் உள்ளுக்குள் சத்தமில்லாமல் சுக்கு நூறாக வெடிக்கும் நிலை.., அதிலும் இத்தனை மாதங்கள் மகளின் நிலையை கண்டு அனுதினமும் அவள் வாழ்வு குறித்த அச்சத்தில் துடித்து கொண்டிருந்தவருக்கு இந்நாள் எத்தனை நிம்மதி அளிக்க கூடியது என்பதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
பெற்றவர்களின் பாவ புண்ணியம் பிள்ளைகளை சென்று சேரும் என்பது எத்தனை நிஜம் என்பதை கண்ணார காண்பவருக்கு வேதனையில் நெஞ்சைடைக்க வேக மூச்சுக்களை வெளியிட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
முகத்தில் என்றும் தவழும் புன்சிரிப்புடன் விழிகளில் உயிர்ப்புடன் தன்னையே சுற்றிவந்த மகளின் இன்றைய உயிர்ப்பற்ற, வெறுமையை சுமந்த விழிகளும்கூடத்தின் ஒரு ஓரத்தில் கட்டாந்தரையில் அமர்ந்திருந்தவலின் கோலம் கண்டவருக்கு இப்போதே தன்னுயிர் போய் விடாதா ?? என்று கண்களின் நீரின் பெருக்கு அதிகரித்தது..,
அதிலும் சீராட்டி வளர்த்த ஒரே பெண்ணின் வாழ்வு தடம்பிறழ தானே காரணமாகி போனோமே என்ற குற்றஉணர்வு அவரை குத்தி கிழிக்க மூச்சு விடமுடியாது திணறிப்போனார். இதோ இப்போது மகளின் கழுத்தில் தாலி ஏறிவிட்ட நிம்மதி மனதினுள் பரவினாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று ஆர்பரிக்க அவரால் இந்நிலையிலும் முழுமையான ஆனந்தம் கொள்ள முடியவில்லை.
மகளே தன் ஒரே பலகீனம் எனும்போது தன் மனிதமற்ற செயல்களுக்கு மகள் தன்னையே ஆயுதமாக கொண்டு அவரை வீழ்த்தியிருப்பது தான் அவர் கனவிலும் எண்ணிப் பார்க்காதது. அதிலும் ஒவ்வொரு நாளும் தன்னை உயிருடன் மரிக்க செய்யும் வார்த்தைகள் மகள் வாய்மொழியாக அமிலமாய் அவர் செவிவழி உளம் தீண்டி அவரை பொசுக்க மனிதரின் மனம் ரணம் தாளாது துடித்து கொண்டிருந்தது.
“அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்பர் ஆனால் இங்கு தெய்வமே மகள் ரூபத்தில் வந்து அவரை கொலையாய் கொன்றுகொண்டிருக்கிறது… அதுவும் அவர் பின்பற்றிய வழியை அவருக்கே கையாண்டு..!!
செய்த பாவத்திற்கு மேலாகவே இத்தனை நாட்கள் அனுபவித்துவிட்டவருக்கு வாழ்க்கையே சூனியமாகியிருக்க அவை அனைத்துமே மறக்கவே முடியாத கருப்புபக்கங்கள்.., அதிலும்தன் தவறை திருத்தும் வாய்ப்பைகூட அளிக்காமல் மகள் அடுத்தடுத்து தன்னை எழவிடாமல் அடித்ததில், மனிதர் உருக்குலைந்து போனார்.
எந்த தந்தையும் கேட்க முடியாதகேட்க கூடாத வார்த்தைகளைகீர்த்திஎய்தபோது அவர் துடித்த துடிப்பு சொல்லில் அடங்காதது.மகளின் ஆக்ரோஷத்தில் தான் அவர் செய்த மாபாவத்தின் வீரியமே அவருக்கு புரிந்தது.
ஆக்க சக்தியும் அழிக்கும் சக்தியும் ஒருங்கே அமைய பெற்றவள் பெண் என்பதையும் அவளை ஒருவர் கையாளும் விதத்தில் அவள் எவ்வாறு ருத்ரகாளியாக அவதரித்து சம்ஹாரம் செய்யகூடும் என்பதைநெற்றி பொட்டில் அறைந்தார் போல அவருக்கு அவர் பெற்ற மகளே உணர்த்தி இருந்தாள்.
ஆம் தீப்பெட்டி கொண்டு தீபமும் ஏற்ற முடியும் வீட்டையும் எரிக்கவும்முடியும் இரண்டுமே ஒரே நெருப்பு தான்.. ஆனால் அந்நெருப்பு வீட்டை அலங்கரிப்பதோ அழிப்பதோஅது சென்று சேரும் கரங்களை பொறுத்தே அமைய பெறுகிறது.
இதே நம் நாயகி நாதனுக்கு மகளாக இருந்திருந்தால் அலரை போலவே தீபமாக சுடர்விட்டு வீட்டை அலங்கரித்திருப்பாள் ஆனால் பிரகாசத்தின் மகளாக இருக்கையில் எங்கனம் அவள் வாழ்வு அலங்கரித்து சிறக்கும்..?
வற்றாத ஜீவநதியானவள் பெண்..! என்ற ஆன்றோர்களின் கூற்று எத்தனை நிஜம்.. தெளிந்த நீரோடையாக பயணிக்கும் நீர் மனிதர்களின் அன்றாட தேவையை தீர்க்கும் ஆனால் அதே நீர் ஆக்ரோஷம் கொண்டு வெள்ளமாக பெருக்கெடுத்து சீறினால் பேரழிவு நிச்சயம்..!
ஜீவனுக்கு ஆதாரமாக இருப்பவளே இங்கு இன்று ஜீவனை எடுக்கும் முயற்சியில் !! தென்றலாக ஒருவனின் வாழ்வில் வசந்தம் வீசுபவளும் பெண்தான் அதேநேரம் அவள் சீண்டபட்டால் புயலாக உருமாறி அதே ஆடவனை உருத்தெரியாமல் அழிக்க வல்லவளும் பெண் தான்…!!
பெண் எனும் மாபெரும் சக்தியின் கீழ் ஆண்ட சராசரமே இயங்குகையில் சாதாரண பிரகாசம் அச்சக்தியின் முன் எம்மாத்திரம்…!!
நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட பஞ்சபூதங்களின் மறுவடிவமாக இருந்து அகிலத்தின் ஆதாரமாக அடிநாதமாக திகழும் பெண் அவள் சேரும் இடம் பொறுத்து புயலாக, நெருப்பாக, பெருவெள்ளமாக உருமாருகிறாள்.
உருமாருகிறாள் என்பதை விட சென்று சேரும் கரங்களை பொறுத்து உருமாற்றம் பெறுகிறாள் என்பதே பொருத்தம்.
இதில் பெண்ணின் தவறு என்ன..???
அதுபோலவே இங்கு நம் நாயகியும் சேர்ந்திருக்கும் இடத்தை பொறுத்து உருமாறி தன்னையும் அழித்து அதற்கு காரணமானவனையும் அழித்து கொண்டிருக்கிறாள்.
அமைதியின் உருவமாக, அன்பின் மறுவடிவமாக, அன்னையாக அனைத்துயிரையும் அரவணைக்கும் பெண்ணின் அருமை தெரியாமல் நடக்க முற்பட்டால் அவள் எந்த எல்லைக்கு சென்று வாழும்போதே ஒருவனுக்கு நரகம் என்றால் என்ன என்பதைவலிக்க வலிக்கஉணர்த்துவாள் என்பதை பெற்றமகளே பிரகாசத்திற்கு செயலில் காட்டிக்கொண்டிருந்தாள்.
அதிலும் அன்று மகளை சரண் வீட்டில் அவரே கொண்டு சென்று விட்டது மகள் அவருக்கு அளித்த உச்சபட்ச தண்டனை..!! அதன் நீட்சியாக கடந்த ஏழு மாதங்களாக குழந்தையை சுமந்துகொண்டுபெற்றோரின் முன் வளைய வந்து அவரை தினமும் கதறவைத்து அவர் உயிரை சிறுக சிறுக பருகிய போதும்இன்னும்அவள் தாகம் தணியவில்லை.