இத்தனை வருடங்களாகசேரவே முடியாதோ! கானல் நீரோ! என்று பிரிந்திருந்த நாட்களிலும் காதலியை எண்ணி தவித்த நொடிகள் அனைத்தையும் அவளின் செயல்கள் மூலம் அர்த்தமற்றதாக்கியிருந்தாள் அவன் உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண்.
பின்னே இந்த நிமிடம் வரை என்ன நடந்தது என்று கேட்காமல்அவள் வாழ்வில் இருந்து சரணை விலக்கிய செயலுக்காக வருத்தமும் தெரிவிக்காமல் சௌமியாவை பெண் பார்க்க சென்றதை வைத்து கேள்விகளை கட்டமைத்து அவனை திணற செய்பவள் இந்த நொடி வரைநடந்துகொள்ளும் முறை அத்துனையும் அவனை நிலைகொள்ள விடாமல் பதைபதைக்க செய்திருந்தது.
இப்போது அனைத்திற்கும் மகுடமாக தன்னை உரசிக்கொண்டு தன் சட்டை பொத்தான்களை அவிழ்க்கவும் ‘கீர்த்தி‘ என்ற கர்ஜனையுடன் தீயை தீண்டினார் போல பதறி விலகியவன் முகம் உணர்வுகளின் குவியலாய் மாறியிருக்க..,
“ச்சைபெண்ணாடி நீயெல்லாம் ? என்ன காரியம் பண்ண பார்க்கிற இதுக்கு தான் இங்க வந்தியா அசிங்கமா இல்லை உனக்கு..??” என்று சீரற்ற மூச்சுக்களை எடுத்தவாறே அவன் கேட்கவும் புருவங்கள் முடிச்சிட விசித்திரமாக பார்த்து கொண்டிருந்தவள் மீண்டும் நெருங்கி அவன் மார்பில் கரம் பதித்து நெஞ்சை நீவியவாறே,
“ஹே ஜஸ்ட் ரிலாக்ஸ் இப்போ என்ன நடந்துடுச்சின்னு இப்படி ரியாக்ட் பண்ற ? எதுக்கு அசிங்கப்படனும் ஏன் அப்படி சொல்ற? எனக்கு நிஜமா புரியலை‘ என்றுஅலட்சியமாக தோள்களை குலுக்கவும்,
“வேண்டாம் கீர்த்தி என்னை சீண்டி பார்க்காதே அது உனக்கு நல்லதில்லை அண்ட் லிசன் உனக்கு என்னதான் பிரச்சனை எதுக்கு வந்ததுல இருந்து எதையும்சொல்லாம என்னைபைத்தியக்காரனாக்குற மாதிரி நடந்துக்குற ? என்னடி வேஷம் இது” என்று கேட்டவனுக்கு எப்போதும் துளி ஒப்பனை இல்லாமல் இயற்கை அழகுடன் மழலை மனம்மாறாத சிரிப்புடன் இருக்கும் அவள் மதிமுகம் மனக்கண்ணில் தோன்றி மிளிர்ந்தது.
“கீர்த்தி உனக்கென்ன அறிவுகெட்டு போச்சா! நீ பண்றதுக்குஎன்னடிஅர்த்தம் ?ச்சை கொஞ்சமும் வெட்கமா இல்லை ஜஸ்ட் கெட் லாஸ்ட் ஃப்ரம் ஹியர்” என்று வெறுப்புடன்தன் அறை கதவை திறக்க அங்கே என்றுமில்லாத வழக்கமாக மலர்கள் மற்றும் வாசனை திரவியங்களின் நெடி முகத்தில் அறைந்து அவனை மூச்சடைக்க செய்ய கதவை மேலும் திறந்து உள்ளே சென்றவன் கண்டகாட்சியில் அதிர்ந்துபோனான்.
பின்னே அவன் படுக்கையை மலர்களை கொண்டு அலங்கரித்திருந்தவள் மெழுகுவர்த்திகள் ஏற்றிருப்பதை கண்டவன் உச்சகட்ட கொதிநிலையை அடைய மறுநொடியே ‘கீர்த்திஈஈஈ‘ என்று கர்ஜித்திருந்தான்.
அறையை நோக்கி சென்றவனையே விசித்திரமாக பார்த்து கொண்டிருந்தவளின் மனக்கண்ணில் சில ஆண்களின் முகம்மின்னி மறைய நினைவுகளின் படையெடுப்பில் மனம் கனத்துபோக கசந்த முறுவலை வெளியிட்டவள் முன்னைவிட பலமடங்கு உறுதியுடன் அவனை நெருங்கி இருந்தாள்.
“என்னடி இது..??”
கீர்த்தியோ அவன் ஆக்ரோஷத்தை கணக்கில் கொள்ளாமல் அறையினுள் செல்லும் வழியை அடைத்துகொண்டு நின்றிருந்தவனைஇடித்து கொண்டேநுழைந்து மெத்தையில் வாகாக அமர்ந்து, “ஏன் பார்த்தா தெரியலையா..?” என்றாள்.
“ஏய்இஈஈ… உன்னோட கிறுக்குதனத்துக்கு ஒரு அளவில்லையா..?என்ன நெனச்சிட்டு இப்படி பண்ற..? ஏன்டி கொஞ்சமும் கூசலையா உனக்கு ஆனா எனக்கு அசிங்கமா இருக்கு” என்று வெறுப்புடன் முகம் திருப்பவும்..,
‘ஹலோ அசிங்கமா..??‘ என்று சொடக்கிட்டவள்,
‘இப்ப அப்படி என்ன அசிங்கமா நடந்துடுச்சின்னு உன் முகத்தை திருப்புற..? நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ் அது நியாபகம் இருக்கா உனக்கு ? இவ்ளோ நாள் பிரிஞ்சிருந்தோம் இப்போ நமக்கே நமக்கான தனிமை கிடைச்சிருக்குபக்கத்துல நான்இதுக்கும் மேல என்ன வேணும்..?? என்னதான் உன் பிரச்சனை ?இல்லை எனக்கு புரியலை எதுக்கு இப்ப நான் உன்கிட்ட வெட்கபடனும் சொல்ற..’ என்று வளைகரத்தை குவித்து நெற்றியை தட்டியவள்,
“ஒஹ் புரிஞ்சிடுச்சி இவ்ளோ அலங்காரம் பண்ணினவ அதுக்கு ஏத்தமாதிரி வெட்கபட்டுட்டே ரூம்குள்ள வரணும்னு எதிர்பார்க்கிரியா..? ஒஹ் கம் ஆன் பேபி எந்த ஜெனெரேஷன்ல இருக்க நீ சுத்த பழைய பஞ்சாங்கம் வேணும்னா கிட்சென்ல பால் சொம்பை ரெடியா வச்சிருக்கேன் ஃபார் எ சேன்ஜ் நீ கொண்டு வாயேன் அதுவும் நீ ரொம்ப எதிர்பார்த்த அதே வெட்கத்தோட !” என்று இறுதி வாக்கியத்தில் அழுத்தத்தை கூட்ட..,
‘கீர்த்தி‘ என்று தன் புறங்கையை ஓங்கிய சரண்அடிப்பதற்காக கூட அவள் மீது தன் கரம் படுவதை விரும்பாதவனாக கீழே இறக்கி ‘அடச்சை‘ என்று வெறுத்து போய் அவ்வறையை விட்டு நீங்க முற்பட உடனே அவன் வழியை மறித்தவள்,
‘என்ன பதிலை காணோம் ஒருவேளை சாருக்கு வெட்கப்பட தெரியாதோ..?? அதான் கிளம்பிட்டீங்களோ..” என்று வார்த்தையால் வதைக்க, முகம் இறுக தன்னை கட்டுபடுத்தி சரண் பொறுமையாக நின்றான்.
அவன் மௌனித்திருக்கவும், “இங்க பாருங்க சரண் வீ ஆர் இன் ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி.. இங்க எல்லாமே மாறிடுச்சு இந்த கலாச்சாரம், வெட்கம், கூச்சம்ப்ளப்ளாப்ளா எல்லாம் சுத்த ஹம்பக்..!!நத்திங் இஸ் ராங் ஹியர்எவரிதிங் இஸ் ரைட்..!!காதலிக்கும் போதே இந்தமாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்குற ஆண்களுக்கு மத்தியில இதென்ன இப்படி முட்டாள் தனமா நடந்துக்குறீங்க மேக் யூஸ் ஆப் தி ஆபர்ச்சுனிட்டி மேன்..! என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள்,
“நமக்கு பிடிச்சவங்களோட சேர்ந்து இருக்க யாரோட அனுமதியும் தேவை இல்லைஅதுலயும் நாம ரெண்டு பேரும் லவ்வர்ஸ் இத்தனை வருஷம் கழிச்சு சந்திச்ச பிறகும் நீங்க இப்படியா இருப்பீங்க..??” என்று முன்னுச்சி முடியை கலைத்து விடவும் சரண் ஆவேசமாக அவள் கையை தட்டிவிட,
“ஒஹ் கம் ஆன் சரண் நான் என்ன பண்றேன்னு புரியாத அளவுக்கு நீங்க என்ன சின்ன குழந்தையா..? அட் எனி காஸ்ட் எனக்கு நீங்க வேணும் உங்ககூட வாழதான் வந்திருக்கேன் புரியுதா” என்று அவன் விழிகளை ஊடுருவியவாறே மார்பில் கரம் பதித்த நொடி சுருண்டு அறையின் மூலையில் விழுந்திருந்தாள்.
கட்டுகடங்காத சினத்துடன் அவளை தூக்கி நிறுத்தியவன் “இதோ பார் மரியாதையா இந்த இடத்தை விட்டு கிளம்புறது உனக்கு நல்லது இல்ல என்கிட்ட அடி வாங்கியே செத்துருவ..!!” என்று அவளை எச்சரித்தவன் அவள் அசராமல் பார்ப்பதை கண்டு,
“என்ன சொன்ன ட்வென்டி ஃபர்ஸ்ட் சென்சுரியா மை ஃபூட்!! இடியட் எந்த செஞ்சுரியாஇருந்தா என்ன..?? காலம் மாறிட்டதால பூமியின் சுழற்சியோ சூரியனின் உதயமோ திசை மாறிடாது அது மாதிரிதான் கலாச்சாரமும் உங்களோட அவசரத்துக்கு காலமாற்றத்தை பலி கொடுக்காதீங்க.. அதோட எந்த காலமா இருந்தாலும் தனிமனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அதுதான் நம்மை ஐந்தறிவு உயிரினங்களில் இருந்து ஒருபடி உயர்ந்த நிலையில நிறுத்தி இருக்குன்னு நினைக்கிறவன் நான் ! பகுத்தறியும் தன்மையே இல்லாம நினைச்ச இடத்துல நினைச்ச நேரத்துல நினைச்சதை செய்ய நாம ஒன்னும் ஜந்துக்கள் இல்லை”
‘நான் காதலிச்ச நீயும் அப்படி தான்னு நெனச்சேன் ஆனா…‘ என்றவனின் குரலில் வலிமிக முகமும் வெகுவாக கசங்கிட தன் ஏமாற்றத்தை மனதினுள் புதைத்தவன்,
“லிசன் ஐ ஹாவ் மை ஓன் ப்ரின்சிபல்ஸ்! நம்மோட உடலும் மனமும் நம்மோட கட்டுபாட்டில் இருக்கணும்நாம அதன் கட்டுபாட்டுக்கு போயிடகூடாது காலம் மாறிட்டதால உன்னோட ….” என்று ஆரம்பித்தவன் தன்னைகட்டுபடுத்தி கொண்டு,
“ஏய் இதோ பாரு உனக்கு ஏதோ பிரச்சனைன்னு புரியுதுஆனா என்னன்னுநீ சொன்னாதானே தெரியும் ! சொல்லு நீ எதுக்கு இங்க வந்திருக்க ? எப்படி உங்கப்பனே உன்னை கொண்டு வந்து விட்டுட்டு போறான் ? நான் இல்லாதப்போ என்ன நடந்தது எதையாவது வாய்திறந்து சொல்லு” என்று கேட்ட மறுநொடியே கீர்த்தி மௌன கவசத்தை அணிந்து கொள்ள அவள் பதிலுக்கு காத்திருந்த சரண் பொறுமை இழந்து..,
“லிசன் நானும் உன்னை காதலிச்சு தொலச்சிட்ட காரணத்தால உன்னை இவ்ளோ நேரம் பொறுத்துட்டு இருக்கேன்ஆனா உன் பேச்சு பார்வை நடவடிக்கை எதுவுமே அப்படி இல்லை… எல்லாமே படுகேவலமா இருக்கு ! சொல்லபோனா உன்னோட இந்த டர்ட்டி சைட் எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு.. இப்படி பட்ட ஒருத்தியையா நான் விரும்பினேன்னு என்னை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு.. ஆனா எனக்கு தெரிஞ்ச கீர்த்தி இப்படி எல்லாம் பண்ண மாட்டா திடீர்ன்னு அப்படி என்ன கட்டாயம் உனக்கு..!! என்று அவள் முகம் பார்க்க,
‘இவ்ளோ நேரம் தேவையில்லாம என்னென்னமோ உளறினஇப்ப கேள்வி கேட்கவும் ஏன் அமைதி ஆகிட்ட..? பதில் சொல்லு கீர்த்தி’
மீண்டும் அழுத்தத்துடன் மௌனத்தையே அவனுக்கு பரிசளிக்க.,
வெறுத்து போனவன் “ஏய் என்ன தான்டி வேணும் உனக்கு..??” என்று சீறிட…
“என்ன கேட்டாலும் கொடுப்பியா..??”
“அப்படி என்னதான் வேணும் உனக்கு சொல்லு என் உயிரை கொடுத்தாவது அதை செய்றேன் ஆனா நீ இங்க இருந்து போனா மட்டும் போதும்”
“பேச்சு மாறமாட்டியே..??”
“அம்மா தாயே ! நான் கொடுத்ததுக்கு அப்புறம் நீ இங்க இருந்து போயிடுவியா…? அதை சொல்லுடி”என்று உச்சகட்ட வெறுப்புடன் அவன் கேட்க..,
“அது கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா சொன்ன வாக்கை நீ காப்பாத்தினா நான் என்னோடதை காப்பாத்துறதை பத்தி யோசிப்பேன்”
“ஏய் எதுக்கு இப்போ புதிர்போட்டு பேசிட்டு இருக்கஎன்னதான் வேணும் சொல்லிதொலை” என்று தோய்ந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் இருகரங்களாலும் முகத்தை அழுத்த துடைக்க..,
“உன் உயிர் தான் வேணும்..!” என்று அவள் சட்டென இடியை இறக்க..,
‘எஸ் யூ ஹியேர்ட் இட் ரைட்…, உன்னோட உயிர் தான்..’ என்றவள் இரு கரங்களையும் கோர்த்தவாறே,
“உன்னோட உயிர் என் வயிற்றில் வேணும்..! நீ தான்என்ன கேட்டாலும் கொடுப்பேன்னு சொன்னியே இப்போ சொல்லுஉன் குழந்தையை நான் சுமக்கனும்கொடுப்பியா..??” என்றிட..,
சரணின் முகத்தில் சட்டென வியர்வை அரும்புகள் உற்பத்தியாக ‘வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் கீர்த்தி..’ என்று கையை ஓங்கியவன்,
‘ஏய் இதோ பாரு இதுவரை நான் எந்த பெண்ணையும் அடிச்சதில்லைமுதல் முறையா உன்னை அடிச்சிருக்கேன் ஆனா இதுக்குமேல ஒரு வார்த்தைபேசினாலும் நீ என்கிட்ட அடிவாங்கியே சாக போறது உறுதி ! மரியாதையா இங்கிருந்து கிளம்பு’என்ற எச்சரிக்கையுடன் கரத்தை இறக்கிட..,
ஓங்கிய கரத்தை கண்டவளின் மனம் ஒருநொடி அதிர்ந்தாலும் அதே திடத்துடன் நின்றிருந்தவளை கண்ட சரணுக்கு ஆயாசமாகி போனது.
இனியும் இவளுடன் போராட முடியாது என்பது புரிபடவும் உடனே பிரகாசத்திற்கு அழைத்து, “டடேய் …… நீதான் கேடுகெட்டவன்னு நெனச்சா இங்க உன் பொண்ணு உனக்கு மேல இருக்கா.. மரியாதையா வந்துஉன் பொண்ண கூட்டிட்டு போ இல்…” என்று அவன் முடிக்கும் முன்னமே…,
“இல்.. இல்லை மாப்பிள்ளை..எனக்கு என் பொண்ணு முக்கியம் அவ உங்க கூட தான் இருக்கணும் அப்போதான் அவ நல்லா இருப்ப.. அதான் சரி.. அதுதான் சரி.. அது.. அதுமட்டும் தான் சரி வரும் ..” என்று பித்து பிடித்தாற்போல பிதற்ற..,
‘என்னது என்கூட இருக்கறதுதான் சரியா ? அடச்ச்ச்சே வாயை மூடு! என்ன குடும்பம்டா நீங்க..? கொஞ்சமும்…. ” என்று ஆரம்பித்தவன் மூச்சை இழுத்துவிட்டு,
“டேய்.. டேய்.. இங்க பாருஅன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்எனக்கு உன் பொண்ணு வேணா ஆனா அவ இங்க வந்து உட்காந்துட்டு பைத்தியம் பிடிச்சமாதிரி என்னென்னவோ உளறிட்டு இருக்கா..” என்று அவளை பார்த்தவன் அவளின் அலட்சிய பார்வையில்,
“அடேய்என்னை சுத்தி என்ன நடக்குது ஒன்னும் புரியலை.. இன்னும் கொஞ்ச நாள் உன் பொண்ணு இங்க இருந்தா நான் கொலைகாரன் ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு.. தயவுசெய்து அவளை கூட்டிட்டு போஎனக்கு இனி காதலும் வேணாம் கல்யாணமும் வேணாம், கருமாதியும் வேணாம்என்னை நிம்மதியா வாழ விடுங்கடா அதுபோதும் ”
“இல்லை மாப்பிள்ளை இனி கீர்த்தியை உங்ககிட்ட இருந்து பிரிக்கமாட்டேன் அவ உங்ககூட வாழுறது தான் முறை..!!”
‘முறையா..?’ என்று பல்லை கடித்தவன் “டேய் உன் பொண்ணு இங்க என்கூட முறை இல்லாம வாழணும்னுசொல்லுறாடா பொறம்போக்கு ..!” என்றிட அதை கேட்ட பிரகாசத்தின்இதயம் ஒரு நொடி தன் இயக்கத்தை நிறுத்தி பின் சத்தமில்லாமல் நொறுங்க அவர் கண்களில் இருந்து வெளியேறிய சூடான நீர் இறங்கி தரையில் சிதறியது.
தந்தை மகள் இருவரின் செய்கைகளை தாளமுடியாத சரணுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது.
பிரகாசத்துடனான அவன் சம்பாஷணையை கேட்டு கொண்டிருந்தவள் சரணை நெருங்கி அவன் தோளில் கரம் பதிக்க வெறுமையாக கீர்த்தியை பார்த்தவனின் விழிகளில் கலவையான உணர்வுகள்.., அவன் கரத்துடன் தன் கரத்தை கோர்த்து கொண்டே ‘இனியும் யாருக்காவது கால் பண்ண வேண்டி இருந்தா நாளைக்கு பண்ணிகோங்க சரண் பட் நவ் ப்ளீஸ் டோன்ட் வேஸ்ட் டைம்..‘ என்ற நொடி தரையில் விழுந்திருந்தாள்.
அவள் கூந்தலை பிடித்து ஓங்கி அறைந்த சரண், “இப்படி ஒரு ஆணை நெருங்ககூடிய பெண்ணுக்கு பேர் என்னன்னுதெரியுமாடி ..??” என்றவன் பார்வையே இனியும் என்னை சீண்டினால் எதையும் செய்ய தயங்கமாட்டேன் என்ற உறுதியை வெளிபடுத்த அதில் கீர்த்தியின் உடல் அதிர்ந்து அடங்கியது.
தீயாய் எறிந்த கன்னத்தை பிடித்து கொண்டு அவனை பார்த்தவளின் விழிகள் கலங்க முற்பட அதை கட்டுபடுத்தியவளின் முகம் அவன் கேள்வியில் ஒரு நொடி வேதனையில் விம்மினாலும் கூந்தலை ஒதுக்கியவாறே..,
“அப்போ இதேபோல ஒரு பெண்ணை நெருங்ககூடிய ஆணுக்கு பேர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா..?? என்ற சாட்டை அடியாக வந்து விழுந்த அவள் கேள்வியில்திகைத்து நின்ற சரணுக்கு ஏன், எதனால் இக்கேள்வி என்று புரியாது போக பதிலின்றிஅவளை வெறித்து கொண்டு நின்றவன்…,
“சாரிஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் திருமணத்திற்கு முன்ன இப்படி அத்துமீறுவது தப்பு..ஆனா இந்த சமூகம் அப்படி நெருங்ககூடிய ஆணுக்கு இதுவரை எந்த பெயரையும் கொடுத்ததில்லை பெண்ணுக்கு தான்…” என்று இறுகிய முகத்துடன் கூற..,
“எஸ் யூ ஆர் ரைட் ! அப்படி பட்ட ஆணுக்கு இங்க இழிவான பேரும் கிடையாது அவனோட தப்புக்கு தண்டனையும் கிடையாது ரெண்டுமே பெண்ணுக்குதான் இல்லையா..??” என்று கசந்த குரலில் கேட்க அவளை யோசனையாக பார்த்தவன்,
‘யார் அப்படி நெருங்கினா..?? என்ன தப்பு எனக்கு புரியலை..! உன்னோட கேள்வியில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கா கீர்த்தி..??” என்று கேட்ககனத்த மௌனம் மட்டுமே அவளிடம்..
ஏதோ சரி இல்லை என்று நெற்றியை நீவியவன், “நீ இப்படி செய்யகூடிய ஆள் இல்லை எனக்கு தெரியும் ஆனா இப்போ திடீர்னு இப்படி நடந்துக்க ஏதோ காரணம் இருக்குன்னு புரியுது பட் ப்ளீஸ் என்னை கோபபடுத்தாம என்ன பிரச்சனைன்னு சொல்லுஐ வில் ஹெல்ப் யூ” என்றிட..,
“தட்ஸ் ஸோ ஸ்வீட் ஆப் யூ மிஸ்டர் சரண் !பட் தி ஒன்லி ஹெல்ப் தட் யு குட் டூ இஸ்ஸ்….” என்ற இழுத்தவாறு திரும்பி மஞ்சத்தை பார்க்க..,
“ச்சை மனுஷன் பேசுவானாடி உன்கூட..!!” என்று வெறுத்து கதவை அறைந்து சாற்றிவிட்டுஅங்கிருந்த சோபாவில் படுத்திட.., அவன் விழிகள் வெறித்திருக்க மனமோ மீண்டும் தங்களின் காதல் காலத்தையே சுற்றி வட்டமடிக்க தொடங்கி இருந்தது.
ஏனோ இன்று கீர்த்தி அருகே இருந்தாலும் மிகவும் அன்னியப்பட்டு நிற்பதாகவே அவனுக்கு தோன்ற அன்றைய காதலின் நினைவுகளோ அவளோடு அவனை பிணைத்திருப்பதை உணர்ந்தவனுக்கு ஏன் தன் மனம் இவ்வாறு நினைவுக்கும் நிஜத்திற்கும் இடையில் அல்லாடுகிறது என்று புரியவில்லை.
அதிலும் அவளின் ‘மிஸ்டர் சரண்‘ என்ற வார்த்தை அவனை கூறுபோட மனமெனும் குரங்கு மீண்டும் அன்றைய நாளிற்கு தாவ அவனும் சுகமாக அதனுடன் பயணித்தான்..
கீர்த்தி சரணின் கீழ் பணிபுரிய தொடங்கிய மூன்றாம் நாள் சைந்தவியுடன் அவன் அறையினுள் ஏதோ சந்தேகம் கேட்கவேண்டி வந்திருந்தாள். முக்கியமான அழைப்பில் இருந்தவன் எதிரே இருந்த நாற்காலியை கண்களாலேயே சுட்டி காட்டி அமருமாறு பணிக்க இருவரும் அமர்ந்திருந்தனர்.
அவன் பேசி முடிக்கவும், ‘சரண் கீர்த்திக்கு எதோ சந்தேகமாம் கொஞ்சம் தீர்த்து வைங்க’ என்றாள் சைந்தவி…
பதறிய கீர்த்தி சைந்தவியை முறைத்தவாறே, “அச்சச்சோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார்… இது.. இதை.. உங்ககிட்ட ஹான்டோவர் பண்ண வந்தேன் சார்” என்று கையோடு கொண்டுவந்த கோப்பை அவனிடம் அளிக்க..,
அவனோ கோப்பை கையில் வாங்கியவாறே, “இதென்ன புதுசா இருக்கு” என்றான்.
என்னது..???
‘சார்’ என்று தலை சாய்த்து சுட்டி காட்ட..,
“எஸ் அதான்.. அதேதான் சரண் மேடமோட சந்தேகமும்’ என்ற சைந்தவியின் கரத்தை அழுத்திய கீர்த்தி ‘நத்திங் சார்’ என்று எழமுற்பட,
“இங்க பாருங்க நான் ஒன்னும் உங்களோட டீச்சர் இல்லை என்னை சார்ன்னு கூப்பிட.. ஜஸ்ட் கால் மீ சரண்” என்றவன் இரு கரங்களையும் கோர்த்து பிரித்தவாறு பதட்டத்தோடு அமர்ந்தவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போக.., “இட்ஸ் ஓகே சரி சொல்லுங்க உங்களோட சந்தேகம் என்ன..? என்றான்.
“அது..”, என்றவளின் கரம் அவளையும் அறியாமல் கழுத்தில் இருந்த டாலரை பற்றுகோலாக பிடித்து கொண்டது..
“ஹ்ம்ம் சொல்லுங்க என்ன அது..!”
“அதுவந்து நீங்க என்னைவிட பெரியவங்க உங்களை எப்படி நான் பேர் சொல்லி கூப்பிடமுடியும்”
“அது இல்லை… இது வேற..” என்று சைந்தவி எடுத்துகொடுக்க..,
மீண்டும் அவளை முறைத்த கீர்த்தி, “அது வந்து எனக்கு அப்படி பெரியவங்களை பேர் சொல்லி பழக்கம் இல்லை அதுலயும் நீங்க அலரோட தாய்மாமா உங்களை நான் எப்படி மரியாதை இல்லாம பேர் சொல்லமுடியும்” என்று கடகடவென்று அவனை பார்க்காமல் கோர்த்திருந்த கரங்களை பார்த்துக்கொண்டே கூறி முடிக்க…
“நோ நோ சரண் இன்னும் இருக்கு” என்று சைந்தவி ..,
“இல்லை தட்ஸ் ஆல் சார்” என்று எழுந்தவள் சைந்தவியையும் தன்னோடு இழுக்க..,
“ஒன் செக்கன்ட் கீர்த்தி! உங்களுக்கு என்ன கேட்கனுமோ தயங்காம கேளுங்க” என்றான் சரண்.
‘நான் சொல்றேன் சரண்’ என்று கீர்த்தியிடமிருந்து கரத்தை விடுவித்த சைந்தவி அவன்முன் செல்லவும், அதை தடுக்க முடியாமல் படபடத்த மனதுடன் நின்றிருந்தாள் கீர்த்தி.
“சரண் நீங்க அவளோட பெரியப்பா பொண்ணுக்கு தாய்மாமான்னா இவளுக்கும அதே முறைதானே வரும்..! சோ உங்களை மாமான்னு கூப்பிட மேடம் ரொம்ப ஆசைபடுறாங்க” என்று சைந்தவி கூற அதற்கு மேலும் அங்கே நிற்கமுடியாத கீர்த்தி உடனே வெளியேறியிருந்தாள்.
ஆம் அன்று முதல் தன்னை அலுவலகத்தில் டி.எல் என்று அழைக்க தொடங்கிருந்தவள் மற்றபொழுதுகளில் ‘மாமா’ என்ற வார்த்தையையோ மரியாதை விளிப்பையோ எந்த நிலையிலும் மாற்றியதில்லை. ஆனால் இன்று அவளின் ‘சரண், மிஸ்டர் சரண், நீ’ என்ற அனைத்தும் ஏன் ஆராய்ந்து கொண்டிருந்தவன் மெல்ல கண்ணயர்ந்தான்.