காதல் என்றாலே வலியும்வேதனையும்தடையும்அதை தொடர்ந்தபோராட்டமும் இயல்பு என்பதை அறியா சிறுவனல்ல சரண்..! ஆனால் இங்கு அவன் காதல் ஒட்டுமொத்த குடும்பத்தையே பலி கேட்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
அதுவும் முதல் சந்திப்பிலேயே தான் யார்..?? தன் பலம் என்ன..?? அவர் வழியில் குறுக்கிட்டால் என்னவெல்லாம் செய்ய கூடும் என்பதை தேர்ந்த அரசியல்வாதியாக காய் நகர்த்தி ஒற்றை காணொளியில் நிருபித்திருந்த அரசியல் சாணக்கியன் பிரகாசத்தை கண்டு சரணின் புலன்கள் அனைத்தும் ஒருங்கே வேலை நிறுத்தம் செய்திருந்தது.
இப்போது அவன்முன் இருக்கும் ஒரே வழி கீர்த்தியை விட்டு கொடுத்து குடும்பத்தை காப்பாற்றுவது மட்டுமே..!! காதலுக்காக, காதலிக்காக இறுதிவரை போராடிதன் உயிரை விலையாக கொடுக்க அவன் சித்தமாக இருக்கையில் இங்கு விலை பேச படுவது சிறுபிள்ளையின் உயிர் எனும்போது குழந்தையை காவு கொடுத்து தன் காதலை நிறைவேற்றும் அளவு சரண் இரக்கமற்றவன் இல்லை…
வருண் பிறந்த போது அவனை முதலில் கரங்களில் ஏந்தியது சரண் தான். அக்குழந்தையின் தற்போதைய நிலை சரணின் சிந்திக்கும் திறனை சிதறடித்திருக்க…, அவனை தவிர்த்து வேறு எதைபற்றியும் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை… இதுநேரம் வரை பிரகாசத்தின் பலவித நடிப்பை பார்த்தவன் குழந்தையை காக்க வேண்டி பிரகாசத்திடம் தழைந்து போக முடிவெடுத்தான்.
“அவ.. அவன் குழந்தை… அவனுக்கு ஏதாவது, வேண்டாம் குழந்தையை விட்டுடு ப்ளீஸ்”
“ஆமா குழந்தை தான் யார் இல்லைன்னு சொன்னா..?? இப்போதைக்கு அவனை ரயில் ரோடுல படுக்க மட்டும்தான் போட்டிருக்கேன்… ரயில் அவன் மேல ஏறுறதும் ஏறாம போறதும் உன்கையில தான் இருக்கு..!!இது மட்டுமா ஸ்கூலுக்கு போயிருக்க உன் ரெண்டாவது அக்கா பொண்ணு மேல எவனும் ஆசிட் அடிக்காம அவ முழுசா வீடு திரும்புறதும்…, கோயம்பத்தூருக்கு போயிட்டு பஸ்சுல வீடு திரும்பிட்டு இருக்க உன் மூணாவது அக்கா புருஷன் வீட்டுக்கு போற வழியில அவன் மேல லாரி ஏறாம இருக்கிறதும்.., நாலாவது அக்கா பொண்ணை ஸ்கூல் விட்டு வெளியே வரும்போது எவனும் கடத்தாம இருக்கிறதும் என்றவர் சிறு இடைவெளி விட்டு இடையில் கரம் பதித்து இவ்வளவு ஏன்டா காலேஜ்க்கு போயிருக்க உன் முதல் அக்கா பையன் கதிரை என் பசங்க சுத்துகட்டி போட்டு தள்ளாம இருக்கிறதும் உன் கையிலதான் இருக்குன்னு சொன்னா நம்புவியா..?? என்று அவனை குத்தி கிழிக்க,
அதை உணரும் நிலையில் இல்லாதவனின் இதயத்துடிப்பே ஒரு நொடி நின்று போனது. “என்னடா என் அண்ணன் பையனையும் சேர்த்து போட்டு தள்ளிடுவேன்னு சொன்னதுல ஷாக் ஆகிட்டியா மாப்பிள்ளை, ஷாக்க்க குறை… ஷாக்கை குறை” என்று அவன் கன்னத்தை தட்டியவர் தான் எத்தனை மோசமானவன் என்பதை மேலும் நிருபித்திருந்தார்.
“என் அரசியல் வாழ்க்கையில யார் குறுக்க வந்தாலும் போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன்… இதுல அண்ணன் என்ன தம்பி என்ன..?? அவன் மகன் என்ன..?? எல்லாரும் எனக்கு ஒண்ணு தான்டாஎன்ன புரியலையா..?, இவங்க எல்லோரும்என் முன்னேற்றத்துக்கான தடைகல், குறுக்க வந்தா சிதறடிச்சிடுவேன்“
“நான் சொன்னது நிஜம் மாப்பி உன் குடும்பம் எப்படி இருக்கணும்னு நீதான் முடிவு பண்ண போற”
சரணின் பார்வை அவரிடமே நிலைபெறவும் , “நம்புசெல்லம் அதுதான் நிஜம்..!!எல்லாமே உன் கையில இருக்கு…, அதாவது நீ என் பொண்ணு வாயாலேயே உன்னைவேண்டாம்னு சொல்ல வைக்க போற வார்த்தையில இருக்கு.. எல்லாத்துக்கும் மேல உனக்கு ஒரு வாழ்க்கை தத்துவம் சொல்றேன் கேளு”
“நம்மளோட இறப்பு நமக்கு அதிக வலியை கொடுக்காதாம் ஆனா நம்மை சார்ந்தவர்களின் இழப்பு ஒவ்வொருநாளும் நம்மளை தூங்கவிடாம சித்தரவதை பண்ணுமாம், சாதாரண இறப்பே அப்படின்னா உன்னால உன் சேர்ந்தவங்க எல்லாரும் ஏன் சாகுறோம் எதுக்கு சாகுறோம்னே தெரியாம கொடூரமா சித்ரவதை அனுபவிச்சி சாகும்போது அதை எல்லாம் எப்படி மாப்பிள்ளை நீ தாங்குவ..??” என்று கேள்வியாய் சரணை பார்க்க..,
“வ.. வருண் அவன் என்ன பாவம் பண்ணினான், குழந்தையை முதல்ல விடு, நீ சொல்றதை செய்றேன்” என்று அதற்கு மேலும் பேசும் திறனற்று சரண் தோய்ந்து அமரவும்..,
அவன் முகத்தை நிமிர்த்தியவர், “ஏன்டா உனக்கு அக்கா பையனா பிறந்திருக்கானே இதைவிட வேற பாவம் பண்ணனுமா..?? என்றவன் தன் ஆட்களுக்கு அழைத்து “அந்த பையனை அவன் வீட்டு முன்னாடி விட்டுடுங்கடா” என்று ஆணை பிறப்பித்தவர்,
“ஒன்னு மட்டும் மனசுல நல்லா பதியவச்சிக்கோ, உன் மொத்த குடும்பமுமே இப்போ என் கட்டுப்பாட்டுல.., நீ கொஞ்சம் மாத்தி நடக்க நினைச்சாலோஅதான்டா இந்த போலீஸ், கம்ப்ளைன்ட்ன்னோ இல்ல நாதன் கிட்டயோ என் பொண்ணு கிட்டயோஎல்லாத்தையும் சொல்ல முயற்சி பண்ணினாலோ…, இப்போ கொஞ்சம் முன்ன நான் சொன்னதையும் நடத்துவேன்சொல்லாததையும் நடத்தி காட்டுவேன்” என்று கூற சரணின் தலை தன்னிச்சையாக இல்லை என்று அசைந்தது.
“டேய் நான் கெட்டவனா இருக்கிறதும் கேடு கெட்டவனா மாறுறதும் உன் கையிலதான் மாப்பிள்ளை இருக்கு, சொல்லபோனா நான் ரொம்ப நல்லவன்டா..!! இப்பகூட பாரு நான் சொன்னதை நீ செய்றேன்னு சொன்னதும் உன் அக்கா பையனை வீடுவரை கொண்டுவிட சொல்லிட்டேன்” என்று நாற்காலியில் அமர்ந்தவர்,
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? நான் என்னவா இருக்கனும்னு முடிவு பண்றது நானில்லை என் எதிரே நிற்கிறவன் தான்! அதுக்குதான்டி செல்லம் சொன்னேன் சத்தமே இல்லாம என் பொண்ணு வாழ்க்கையில இருந்து விலகி என்னை நல்லவனா வாழவிடுன்னு….ஆனா எங்க கேட்கவே மாட்டேன்னு அடம், ஹ்ம்ம்”
“சரிடா நீ சொன்ன மாதிரியே உனக்கு ஒருவாரம் இல்லை மூணே நாள் தான் டைம் ஆனா அதுக்குள்ள என்ன பண்ணுவியோ எவ..” என்று தொடங்கியவர் நிதானித்து,
“நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வருவியா..??” என்று நெற்றியை நீவிக்கொண்டே அவனை மேலிருந்து கீழ் பார்த்தவர் சரணை நெருங்கி அவன் தோளை சுற்றி கரத்தை போட்டு, “சரி நீ என்ன பண்ணினா என் பொண்ணு உன்னை விட்டு விலகுவான்னு நானே சொல்லி தரேன் வா” என்றுஅவன் செவிகளில் ஏதோ கூற தொடங்கவுமே சரணின் முகம் அருவருப்பில் சுழிய தொடங்க, கண்களை அழுந்த மூடி கைமுஷ்டியைஇறுக்கி தன்னை கட்டுபடுத்த போராடியவன் ஒருகட்டத்தில் பிரகாசத்தின் பேச்சை சகிக்காது அவரிடம் இருந்து விலகி நின்றான்.
“என்ன புரிஞ்சதா..!! என் பெண்ணே உன்னை வேண்டாம்னு சொல்ல வைக்கதான் உனக்கு அந்த டைம்…., அப்படி நடக்கலைன்னா இந்த பிரகாசத்தோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்” என்று எச்சரித்து கிளம்பினார்.
***********************************
கடந்த காலத்தை அவளிடம் பகிர்ந்தவன் தன்னையே விழி அகலாமல் பார்த்த கீர்த்தியிடம், “அதுக்கு அப்புறமான நாட்கள் எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது கீர்த்தி.. என்னவெல்லாமோ நடந்துடுச்சு எதுவும் என் கட்டுபாட்டில் இல்லாமல், உங்கப்பன்….” என்று தொடங்கியவனின் குரல் கரகரக்க பேசமுடியாமல் தவித்தவனின்எண்ண அலைகளோ அவன் விருப்பத்திற்கு மாறாகதூரிதமாக செயல்பட்டு சரணின் வாழ்வின் அழியா கரும்பக்கங்களை புரட்டிட அதன் கணம் தாளாது இருகரங்களால் முகத்தை அழுந்த துடைத்தவனின்தொண்டைகுழி அடைக்கமேஜையில் இருந்த நீரை எடுத்து பருகி தன் நிலையை வெற்றிகரமாக அவளிடம் இருந்து மறைத்தான்.
‘ஒன்னு மட்டும் நிச்சயம் கீர்த்தி இதுக்கு மேல நாம ரெண்டு பேரும் திருமண பந்தத்தில் சேர்ந்தா அது காலம் முழுக்க நமக்கு வலியை மட்டுமே கொடுக்கும் என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுநான் சொல்ல வரது புரியுதா‘ என்று சோர்வுடன் கேட்டவன் நாற்காலியில் சாய்ந்தமர்ந்து இருகரங்களையும் பின்னந்தலையில் கோர்த்துக்கொண்டான்.
கீர்த்தி அமைதியாக பார்த்திருக்கவும், “உனக்கு ஏதோ பிரச்சனை ஆனா அதை என்கிட்ட பகிர்ந்துக்க உனக்கு விருப்பம் இல்லைன்னு புரியுது ஸோஉன்னோட பிரச்சனை, கோபம் எல்லாம் தீரும்வரை நீ இங்க இருக்கலாம்… ஆனால் ஒன்னு நேத்து மாதிரி எந்த கிறுக்குதனமும் பண்ணாம இருக்குறதா இருந்தா நீ இங்க இருக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை..” என்றவன் அவளுக்கு புரியவைக்கும் நோக்கத்துடன் பேசி முடித்து பதிலுக்காக அவள் முகத்தை பார்த்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேலாக தன்னை எதிரில் அமரவைத்துகதாகலாட்சேபம் நடத்திக்கொண்டு இருந்தவனை காதை குடைந்துகொண்டே சலிப்போடு பார்த்தவள்,
“இதெல்லாம் நீ சொல்லி எனக்கு தெரியணும்னு இல்லை… எல்லாம் தெரிஞ்சு தான் நான் வந்திருக்கேன் போதுமா?” எனவும் “வாட்ட்ட்” என்ற சரணின் முகம் உயரழுத்த மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து போனது.
“என்ன வாட்? நான் இங்க உன்கூட வாழத்தான் வந்திருக்கேனே தவிரஉன்னை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எனக்கு துளிகூட கிடையாது ” எனவும் சில நொடிகள் பிடித்தது சரணுக்கு அவள் வார்த்தைகளின் அர்த்தம் உணர..,
உணர்ந்த மறுநொடி ‘கீர்த்திதிஈஈஈ‘ என்று விழிகள் சிவக்க நாற்காலியை பின்னுக்கு தள்ளிக்கொண்டு எழுந்து நின்றவனின் உள்ளகொதிப்பு அடங்க மறுக்க.., ‘என்ன பேசுற நீ..!‘ என்று உறுமினான்.
எத்தனைமுறை தான் சொன்னாலும் புரியாதா உனக்கு இங்கபார் அப்போ சொன்னது தான் இப்பவும் எனக்கு நீ வேணும் புரிஞ்சதா.., ஐ வான்ட் யூ அட் எனி காஸ்ட் முக்கியமா உன்னோட குழந்தை..!! குழந்தை பெத்துக்க கல்யாணம் பண்ணனும்னு யார் சொன்னா..??” என்று கேட்டவளை அடுத்தநொடி பொளீரென அறைந்தவனின் கரம் சிவந்து போனது.
ஆனால் அதை கணக்கில் கொள்ளாதவள், “இதோ பாரு சும்மா தேவை இல்லாததை பேசி நேரத்தை கடத்தாத, நேத்து ரூம் டெகரேட் பண்ணி எல்லாம் வேஸ்ட்டா போச்சு.., இப்போ நான் போய் டெகரேட் பண்ண ஆரம்பிக்கிறேன் ஒழுங்கா வந்து என்னோடு வாழுற வழியை பாரு” என்றவளின் கழுத்தை ஆக்ரோஷத்துடன் பிடித்திருந்தான் சரண்.
“ஏன்டி அப்பனும் மகளும் சேர்ந்து என் வாழ்க்கையை பந்தாடுறீங்ககுழந்தை குழந்தைன்னு ஏன் வெறி பிடிச்சி போயிருக்க அப்படி என்ன நிர்பந்தம் உனக்கு அதையாவது சொல்லி தொலையேன்..” என்றுகேட்ட மறுநொடியே மீண்டும் இதழ்களை அழுந்த மூடிக்கொண்டு மௌன கவசத்தை கீர்த்தி அணிந்திட கசந்த புன்னகையுடன் அவளை விட்டவன்,
“உன்கிட்ட தான் பேசுறேன் கீர்த்தி கேட்குதா..?? என்றிட பதிலில்லை,
தன் கேள்விக்கு பதிலளிக்காதவளின் அலட்சியத்தில் சரணின் பொறுமை காற்றில் கலந்த பெருங்காயமாகிட “கீர்த்தி…. கீர்த்தி..” என்று சற்று அழுத்தமாக அழைக்கவும்,
விழிகள் சிவக்க சட்டென நிமிர்ந்தவள் உரத்த குரலில் “கீர்த்தி, கீர்த்தி, கீர்த்தி ஜஸ்ட் ஸ்டாப்இட்…” என்று செவிகளை அழுந்த மூடிகொண்டு “டோன்ட் கால் மீ கீர்த்தி” என்று ஆவேசத்துடன் கூறவுமே அவள் முகத்தில் என்றும் இல்லாமல் இன்று மிளிர்ந்த ஆக்ரோஷத்தில் அதிர்ந்துபோனான் சரண்.
இங்கு வந்ததில் இருந்தே கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு மாற்றத்தை தன்னவள்கொண்டிருப்பதை அவன் மனம் உணர்ந்தாலும் அதை கண்டறிய முடியாத அளவிலான கனமான திரையை கீர்த்தி அவர்களிருவருக்கும் இடையில் தோற்றுவித்திருப்பதையும் சரண் உணர்ந்தே இருந்தான்.
இதோ இப்போதுகூட அவர்களின் தனிப்பட்ட பொழுதுகளை தவிர்த்து வழக்கமாக அவன் அழைக்கும் பெயரை வேண்டாம் என்று கூறுகிறாளே இதுவே அவளியல்பு இல்லைஎன்பது புரிந்தாலும் ஏன், எதற்காக, இவ்வாறு..? என்ற கேள்வி மனதை வண்டாய் குடைய,
“ஏன் அதுதானே உன் பெயர்..?? அப்படிதானே கூப்பிட முடியும்” எனவும் ஆத்திரத்தில் அறிவிழந்து சரணிடம் கத்திவிட்டவள் அவன் கேள்வியில் தன்னிலை திரும்பிட மேஜையில் ஒருகரம் பதித்து தலையை அதில் தாங்கி சில நிமிடங்களுக்கு சரணை கூர்ந்து பார்த்தவளின் விழிகளில் ஒருவித வெறுமை படர்ந்திருந்தது.
மூச்சு காற்றை இழுத்துவிட்டு தன் உணர்வுகளை சமன் செய்தவன் தலையை அழுந்த கோதியவாறே, “சொல்லு கீர்த்தி ஏன் அப்படி கூப்பிட வேண்டாம்னு சொல்ற..???” என்று ஆராய்ச்சியாய் அவள் முகம் பார்க்க..,
கீர்த்தி மெல்ல தலையுயர்த்தி மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து உறிஞ்சிட அவள் முகத்தில் இதுநேரம் வரை இருந்த உணர்வுகள் துடைக்கப்பட்டுநொடிக்கும் குறைவான நேரத்தில் மீண்டும் பழைய நிமிர்வு வந்தமர்ந்திட… குவளையில் பதித்திருந்த இதழ்களை அகற்றாமல் ஓரவிழிகளால் அவனை பார்த்தவாறே “எப்படி கூப்பிடணும்னு நான் சொல்லிதான் உனக்கு தெரியனுமா…??”
எந்த கேள்விக்குமே நேரிடையாக பதிலளிக்காமல் புதிர் போடுபவளை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தவன் “என்ன சொல்ற புரியலை” என்றான்.
“ஃபைன்” என்றுகுவளையை மேஜை மீது வைத்து தன் அருகே அமர்ந்திருந்தவன்நாற்காலியில் கரம்பதிக்க சென்றவள்ஒரு நொடி நிதானித்துஇயல்பாக அவள் கரங்களை அவன் தோளை சுற்றி படரவிடவும் அவள் சுவாசம் அவன் முகத்தில் அறைய தோள்களை உரசிக்கொண்டு நெருங்கி அமர்ந்தாள்.
**************************************
சரண் விலகி அமர முற்படவும் அவன் தாடையை அழுந்த பற்றி அவன் விழிகளுக்குள் ஊடுருவியவாறே நெகிழ்ந்தகுரலில், “எப்பவும் பாப்பு.. பாப்புன்னு கொஞ்சிட்டு இருக்க இந்த.. என்று அவன் இதழை வருடியவள்இப்போ என்னவோ புதுசா கீர்த்தின்னு கூப்பிடுது” என்று விழிகளில் அப்பட்டமான அழைப்புடன் பேசிக்கொண்டேஅவன் இதழ்களை நெருங்கி இருந்தாள் கீர்த்தி.
அவள் நெருக்கத்தில் ஒருவித அன்னியத்தன்மையை இப்போது நன்கு உணர்ந்ததில் மூச்சை உள்ளிழுத்திருந்த சரண் சிறிது அசைந்தாலும் அவள் இதழ்களை உரசுமளவு அதீத நெருக்கத்தில் இருந்தவளை கண்டு விதிர்விதிர்த்து போனவன் மறுநொடியே கீர்த்தி என்ற கர்ஜனையுடன் அவளை விலக்கி, “என்ன நெனச்சிட்டு இருக்க..??” என்று ஓங்கி அறைந்திட அவன் அடித்த அடியில் நிலைதடுமாறி நாற்காலியில் இருந்து கீழே விழுந்திருந்தாள் கீர்த்தி.
அவளை அடித்த பின்னர்கூட அவள் செய்யவிருந்த செயலின் தாக்கத்தில் இருந்து சரணால் வெளி வரமுடியவில்லை. பின்னே விழிகளில் துளி காதலில்லாமல் ஏதோ நோக்கத்திற்காக தன்னை உபயோகபடுத்தி கொள்ளும் முனைப்புடன் அவள் நெருங்குகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாதஅளவு சரண் முட்டாள் அல்லவே..!!
இத்தனை நேரமாக அவள் நிலையில் இருந்து யோசித்து அவளுக்காகவே அவளிடம் போராடிகொண்டிருப்பவனின் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டுதானே..!காதலிக்கும் பெண் எத்தகைய இக்கட்டான சூழலாக இருந்தாலும் அதை தன்னிடம் விளக்கியிருந்தால் தன் உயிரை பணயம் வைத்தேனும் அவளை காப்பாற்றி இருப்பான். ஆனால் கீர்த்தியோ இங்கே வந்ததில் இருந்தே காரணத்தை கூறாமல் அவளின் எண்ணத்திற்கு ஏற்றார் போல தன்னை ஆட்டுவிக்க முயலும் முனைப்பில் வரைமுறை இன்றி இத்தனை தரம் தாழ்ந்து செல்பவளை காண்பவனுக்கு இதற்கு மேலும் அவளிடம் பொறுமையை கடைப்பிடிப்பதில் பிரயோஜனமே இல்லை என்பது புரிந்தது.
பின்னே நாளுக்கு நாள் அவளின் எண்ணம் ஈடேரவேண்டி மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருப்பவளை எப்படி தடுப்பது என்று புரியாத நிலையில் சரண் தவித்து போனான். திருமணத்திற்கு முன் காதலன்றி சரணை பகடைக்காயாக உபயோகித்து எல்லை மீற துடிக்கும் காதலியின் செயலுக்கு உடன்படுவது எத்தனை பெரிய அவமானம். என்றும் இல்லாமல் இன்று தன் தேர்வு தவறோ என்ற எண்ணம் சரணுக்கு வலுக்க தொடங்கியிருந்தது.
தனக்கென நியதிகளை வகுத்து ஆண்களும்ஒழுக்கத்தை உயிர்மூச்சாக கொண்டு வாழவேண்டும் என்ற கோட்பாடுடன்தன் அக்கா பிள்ளைகளுக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்து வருபவனிடம் காதலியே ஆனாலும்.., எத்தனை இக்கட்டான சூழலாக இருந்தாலும்.., பலவிதநியாயங்களை கொண்டிருந்தாலும்…, கீர்த்தி தரம் தாழ்த்து நெருங்க முற்படுகையில் அவன் தன்மானம் வெகுவாக சீண்டப்பட்டதெனில் காதல் மனமோ அவள் செய்கையில் பெரிதாக அடிவாங்கியது.
உடனே கீழே விழுந்திருந்தவளை நெருங்கியவன் “ஒருமுறை சொன்னா புரியாதா..?? அப்படி என்ன உனக்கு வெறிபிடிச்சு போயிருக்கு..!! ஏய் இப்போ நீ பண்றதுக்கு பேர் என்ன தெரியுமாடி..??” என்று பற்களை கடித்து கொண்டு கட்டுபடுத்த முடியாத சீற்றத்துடன் சரண் கேட்க..,
அவன் விழிகளில் தென்பட்ட ஆக்ரோஷத்தில் கீர்த்தியின் உடல் அன்னிச்சையாக அதிர்ந்தாலும்கரங்களை அழுத்தமாக தரையில் பதித்து தன்னை நிலைபடுத்தி கொண்டு மீண்டும் நிமிர்வுடன் அவனை பார்த்தவள் “நீ கேட்க ரெடின்னா சொல்றதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று சிறு பிசிறு தட்டாமல் அழுத்தமாக பதிலுரைக்க..,
“ச்ச்சீ இப்படி பேச அசிங்கமா இல்லை… பொண்ணாடி நீ எல்லாம்! பெண் இனத்துக்கே நீ ஒரு கரும்புள்ளிடி” என்று சரண் அருவருத்து போனவன் நெற்றியை பிடித்தவாறு “உன்னை போய் காதலிச்சேன்னு நினைக்கும் போதுஎனக்கே அசிங்கமா இருக்கு” என்று பார்வையை திருப்பிடஅவன் வார்த்தையில் கலங்க முற்பட்டமனதை அரும்பாடுபட்டு கட்டுபடுத்தினாள் கீர்த்தி.
பார்வையை திருப்பியவன் மனதில் பலநினைவுகள் ஊர்வலம் போக , “ஏய் இப்போ பாப்புன்னு கூப்பிடாததுதான் உனக்கு குறையா இருக்காடி” என்று கேட்டிட கீர்த்தியோ விழிகளை கூர்மையாக்கி அவனை பார்க்கவும்சரணின் விழிகள் வெறுப்பை உமிழ தொடங்கி அது அவன் வார்த்தைகளிலும் தெரித்தது,
“உன்னை நான் நேசிக்க ஆரம்பிச்சதே உன்முகத்துல இருந்த குழந்தை தனத்துலயும் அன்னைக்கு குழந்தையை காப்பாற்ற உன்னோட பயத்தை மறந்து ஓடின அந்த நல்ல மனசையும் பார்த்துதான்.., அன்னைக்கு என்னையும் அறியாம மனசுல இருந்து வந்த வார்த்தை தான் பாப்பு! நிஜமாவே அப்படிதான் என் மனசுல பதிஞ்சுபோன.., அதனால உன்னை அப்படி கூப்பிட பிடிக்கும்” என்று அன்றைய நினைவில் இளக தொடங்கிய அவன் முகம் மறுநொடியே கடும்பாறையென இறுகிட,
“ஆனா இப்போ..??” என்று அவள் முழங்கையை பிடித்திழுத்து கொண்டு அங்கிருந்த கண்ணாடியின் முன் நிறுத்தி “பாரு உன் மூஞ்சியை நல்லா உத்து பாரு இதுல எங்கயாவது பழைய குழந்தைத்தனம் இருக்கா..??” என்று கர்ஜிக்கவும் கீர்த்தியின் பார்வை நிலைகண்ணாடியில் பதிந்தது.
மருந்துக்கும் சிரிப்பின்றி முகம் முழுக்க துணிகொண்டு துடைத்தார் போல உணர்வுகளின்றி இறுகி போயிருந்தாலும் விழிகளில் மெல்லிய படலமாக வெஞ்சினமும், ஆவேசமும் போட்டி போட்டு கொண்டிருந்தது.
“உன் முகத்தை பார்க்கும் போது யாரோ மாதிரி இருக்கு.., நான் பார்த்துரசிச்சுபழகின குழந்தைதனம் உன்னோட முகத்துலையும் இல்ல உன்னோட செயல்லையும் இல்ல.. அப்புறம் எப்படிடி பாப்புன்னு சொல்லத்தோணும்..” என்றிட கீர்த்தி பதிலேதுமின்றி அமைதியாக அவனை பார்த்தாள்.
அவள் அழுத்தத்தை கண்டவனுக்கு நெஞ்சமே விண்டு போனது… “போதும் இதோட போதும்..!! இனியும் உன்னோட போராட நான் தயாரா இல்லை உன்னை காதலிச்ச பாவத்துக்கு மூணு வருஷத்துக்கு முன்ன உன் அப்பன் என்னை தொரத்தி தொரத்தி அடிச்சான்… இப்போ உன்னோட முறையா..??” என்று விரக்தியுடன் கேட்டவாறே நாற்காலியில் தோய்ந்து அமர்ந்தவன்,
“ஏன்டி என்னை நிம்மதியாவே வாழ விடமாட்டேங்கறீங்கஉங்களுக்கு நான் அப்படி என்ன பாவம் பண்ணேன்..?? ரெண்டு பேரும் சேர்ந்து இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கறதுக்கு என்னை ஒரேயடியா கொன்னுடலாமே” என்று உடைந்து போனவன் இருகரங்களையும் கோர்த்து தலைக்கு மேல் உயர்த்தி “போதும்டா சாமி இந்த ஜென்மத்துக்கு இந்த காதல் ஒன்னு போதும் இதனால நான் பட்டதெல்லாம் போதும் இனியும் என் வாழ்க்கையில இழக்க ஏதுமில்லை உனக்கு இடமுமில்லை போயிடு” என்று வெறுப்போடு சொன்னவனின் விழிகள் அவனையும் மீறி கலங்கிவிட்டிருக்க அதைகண்ட கீர்த்தியின் முகம் வெகுவாய் நிறமிழந்திட நெஞ்சமும் கனத்து போனது.
விரல்களை கொண்டு விழிகளின் ஈரத்தை ஒற்றி எடுத்தவன் “இதோபாரு உனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் அதுக்குள்ளே பெட்டி படுக்கையை எல்லாம் எடுத்துட்டு இங்க இருந்து கிளம்புற இல்லை…” என்று கடுமையான குரலில் எச்சரித்தவன் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் நேரே தன்னறைக்கு சென்று குளித்து முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி சென்றான்.
விழிகளில் என்றுமில்லா புது உணர்வுடன் செல்பவனையே பார்த்திருந்த கீர்த்தி எத்தனை நேரம் அதேநிலையில் அமர்ந்திருந்தாளோ அவளே அறியாள் ஆனால் சரண் அலுவலகத்திற்கு சென்ற அடுத்த ஒருமணி நேரத்தில் அவனை பதறியடித்து வீட்டிற்கு வர செய்திருந்தாள் நம் நாயகி.