தீபிகா பிரகாசத்தின் மூலம் தங்கள் வீட்டுபெண் முறையற்று இத்தனை நாட்கள்சரணுடன் ஒன்றாக இருந்திருக்கிறாள் என்ற செய்தியேநாதனை இடியென தாக்கி நிலைகுலைய செய்திருக்க இருவாரங்கள் கழிந்த நிலையிலும் இது குறித்து சரண் அவருக்குதெரிவிக்காதது அவரை மேலும் கொதிப்படைய செய்ய இப்போது நாதனின் மொத்த சீற்றமும் பிரகாசத்திடம் இருந்து சரண் மீது நிலை கொள்ள தொடங்கியது.
கட்டுக்கடங்கா கோபத்துடன் வளர்மதியை நெருங்கியவர் தம்பியின் தவறுக்கு தமக்கையை வார்த்தை எனும் கூர்வாள் கொண்டு சுழற்றி அடித்து அவர் மனதை கூறுபோட தொடங்கினார்.
கடந்த சில வருடங்களாக கோபத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் தன்னை மதித்து தன்னுடன் இணக்கமாக இருக்கும் நாதன் இன்று பிரகாசம் மற்றும் தீபிகாவின் வரவில் மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளமாகி போயிருப்பதை கண்ட வளர்மதிக்கு அவரின் வார்த்தைகளும் ஆவேசமும்உள்ளுக்குள் குளிர் பரவ செய்தது.
பின்னே அவரின் அதீத கோபம் அவர் உடல் நிலைக்கு உகந்தது இல்லை என்பதால் நாதனை கட்டுபடுத்த முயன்ற வளர்மதியின்தாடையை இறுக்கி பிடித்து “எனக்கு என் குடும்ப கௌரவம் தான்டி முக்கியம்..!! ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை அந்த பொறுக்கிக்காக பேசின பொண்டாட்டின்னுகூட பார்க்க மாட்டேன் வெட்டி போட்டுருவேன் ஜாக்கிரதை” சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவர்,
“என்ன குடும்பம்டி நீங்க எல்லாம், ச்சை என்ன தான் பாம்புக்கு பால் வார்த்தாலும் அதோட இயல்பு போயிடுமா..?? இதோ சரியான நேரத்துல என்னையே கொத்திடுச்சி” என்று வெறுப்புடன் வளரை பார்த்தவர்..,
“இப்படி ஒரு காரியத்தை பண்ண கூசலையாடி அவனுக்கு? பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடணும் கோத்திரம் அறிஞ்சி பொண்ணு எடுக்கணும்னு சொல்லுவாங்கஆனா இப்போநான் தான் அவசரபட்டுடேனோன்னு தோணுது” என்று கூறவும்.., தங்களின் இத்தனை வருட வாழ்வை ஒற்றை வாக்கியத்தில் கலங்கபடுத்தும் கணவனை நெஞ்சம் விம்ம கண்ணீருடன் பார்த்திருந்தார் வளர்மதி.
அப்போதும் நாதனின் மனம் சமன்படவில்லை தங்கள்பெண் வீட்டுப்படி தாண்டி மற்றொருவனுடன் இரு வாரங்கள் இருப்பதற்கு தன் மச்சானே காரணம் என்ற உண்மை அவரை மொத்தமாக சுட்டெரிக்க அவர் மனதில் மூண்ட கனல் சரணை பொசுக்கும் நொடிக்காக காத்திருந்தது.
“ஏன்டி உன் குடும்பத்துல அந்த கழிசடை மட்டும் தான் இப்படியா இல்லை மொத்த குடும்பமுமே இப்படி தானா…?” என்று கேட்க வளர்மதியிடம் மௌனக்கண்ணீர்!
“உன் தம்பிக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா ரெண்டு வாரமா ஒரு பெண்ணைஅதுவும் என் தம்பி பெண்ணை யாருக்கும் தெரியாம அவன் கூடவேவச்சிருந்திருக்கான் அப்படி என்னடி திமிரெடுத்து திரியறான் அந்த பரதேசி” என்று பல்லை கடித்தவர்,
“அவனோட ……… என் பொண்ணு பலிகடாவா…??”என்றவர் மீண்டும் வளர்மதியை நெருங்கி அவர் கூந்தலை பற்றி இழுத்து, “ என் குடும்ப மானத்தை வாங்கனும்னு எத்தனை நாள் திட்டம்டி இது எனக்கு இப்போ தெரிஞ்சாகனும் உண்மையை சொல்லு” என்று சீறியவர்,
அப்படி உங்க குடும்பத்துக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன் கூடவே இருந்து கழுத்தறுத்து என் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சிருக்கீங்க…” என்றுகேட்கவும் அதுவரை பொறுமையாக இருந்த வளரும் அதே கோபத்துடன்,
“உங்க தம்பி கொண்டு விட்டுட்டு வந்ததுக்கு சரண் என்னங்க பண்ணுவான்..? எதுக்கு விட்டாருன்னு அவரை கேளுங்க அதுவும் கீர்த்தி சொல்லி தான் விட்டுட்டு வந்திருக்கார் தப்பு எல்லாம் உங்க பக்கம் இருக்க தேவையில்லாம என் தம்பியை குற்றவாளி ஆக்காதிங்க” என்று ஆற்றாமையுடன் சரண் பக்கத்து நியாயத்தை எடுத்து வைக்க அதெல்லாம் நம் நாதனிடம் எடுபடுமா என்ன..!
“ஓஒ உங்க பக்கமா..??” என்று தாடையை நீவியவாறே வளர்மதியை பார்த்தவர், “அப்போ நீ உன் தம்பி பக்கம் அப்படி தானே…!”! என்றார்.
அவர் குரலே வளரை கலவரபடுத்த, “அது அப்படி, நான் அப்படி சொல்லலைங்க..” என்றவரை கண்டுகொள்ளாத நாதன்,
“என் பொண்ணு குழந்தை மாதிரிடி அவளுக்கு இந்த சூதுவாதுஎல்லாம் தெரியாது அந்த கேடுகெட்டவன்என்ன சொல்லி என் பெண்ணை மயக்கி வச்சானோ அவ புத்தி கெட்டுபோய் அவனை தேடி அங்க போயிருக்கா..???” என்று கூறும் போதே அவர் குரலில் இருந்த மாறுபாட்டை வளரால் உணர முடிந்தது.
எப்போதும் குடும்பகௌரவம், மானம், மரியாதை என்று பேசிக்கொண்டிருக்கும் மனிதருக்கு மனைவி மக்கள் எல்லாம் அதற்கு பின்னே எனும்போது சரண் மட்டும் எம்மாத்திரம்…!! அவரின் மனநிலை நன்கு புரிபட இதற்கு மேலும் தம்பிக்கு பரிந்து பேசி அவரின் கோபத்தை கிளறாமல் இருப்பதே சிறந்தது என்பதால் அமைதியாகி போனார் வளர்மதி.
“ஒரு பொண்ணு அவனை தேடி போனா அதுதான் சாக்குன்னு அவளைவளைச்சி போட்டுப்பானா..??” என்றவருக்குசரண் அவரிடம் இருந்து மறைத்ததை ஏற்க முடியவில்லை.
“சரி கீர்த்தி தேடி போனது தப்புன்னே வச்சிகிட்டாலும் அந்த பரதேசி அவ வந்த விஷயத்தை எதுக்கு என்கிட்டே இருந்துமறைக்கணும்… சொல்லு மடியில கணம் இல்லாதப்போ எதுக்குடி அவனுக்கு பயம்” என்று சீறியவர்,
‘இத்தனை நாளா இந்த விஷயத்தை நம்மகிட்ட இருந்து மறைக்க என்ன தைரியம் இருந்திருக்கணும்… என்ன வளர்ப்புடி இவன் எல்லாம்…! ஒரு பொண்ணு வீட்டு படி தாண்டி போனா அந்த குடும்ப மானமே போகும்னு தெரியாதா?’ என்றவர் ஒரு நொடி நிதானித்து வளர்மதியை கூர்மையாக பார்த்து,
“நிஜத்தை சொல்லுடி அவன் பண்ணின இந்த கேவலமான காரியத்துல நீயும் கூட்டு தானே.??”என்று சந்தேகமாக பார்க்க..,
வளர்மதியோ விதிர்விதிர்த்து போனார் “இல்லைங்க.. எனக்கு சத்தியமா எதுவும் தெரியாது சரண் கீர்த்தியை காதலிக்கிற விஷயமே இப்போ தீபா சொல்லிதான் தெரியும் அவன் என்கிட்டே எதையும் சொல்லல எனக்கு நிஜமா தெரியாது நம்புங்க” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“என் தம்பியை நான் அப்படி வளர்க்கலை பெண்களை மதிக்க கத்து கொடுத்திருக்கேன்… அவன் நம்மகிட்ட இருந்து மறைச்சிருக்கான்னா ஏதோ பெரிய காரணம் இருக்கணும் எதுக்கும் நீங்க கொஞ்சம் தீர விசாரிச்சிட்டு” என்றவரை சட்டென கை ஓங்கிவிட்டார் நாதன்.
ஒரு நொடி அதிர்ந்து வளர் பின்வாங்கவும் அதற்குள் ‘நாதாஆஆஆ‘ என்றவாறே தாயம்மாள் அவர்களிடையே வந்து வளர்மதியை அணைத்துகொண்டவர்,
“என்ன காரியம் பண்ண பார்க்கிற..?? முதல்ல கையை இறக்கு … ஏதோ கொஞ்ச நாளா திருந்தி இவகூட நல்லபடியா குடும்பம் நடத்துறியேன்னு கொஞ்சம் சந்தோசபட்டுடேன் இப்போ திரும்ப ஆரம்பிச்சுட்டியா?” என்று ஆற்றாமையுடன் கூறியவர், “கையை இறக்குன்னு சொன்னேன் ” என்றதும் வளர்மதியை முறைத்து கொண்டே கையை இறக்கியவர்,
“இன்னொரு வார்த்தை.., ஒரே ஒரு வார்த்தை அந்த கழிசடைக்காக பேசின பெண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன் தொலைச்சி கட்டிடுவேன்டி… ச்சை என்ன குடும்பம்டி நீங்க எல்லாம்..?? இவன் மட்டும் தான் இப்படியா இல்ல மொத்த பேருமே இப்படியா..?” என்று அவர்கள் குடும்பத்தையே கேள்விக்குள்ளாக்கியவர்..,
“இப்படி ஒரு ஈன பிறவிகூட பிறந்ததை நினைச்சி வெட்கப்படுடி என்றவர் அதன் பின் கலைவாணியை தேடி சென்று அவரின் வயதைகூட கருத்தில் கொள்ளாமல் வார்த்தைகளால் வதைத்தவர் அனைவருடன் சென்னைக்கு கிளம்பினார் .
******************************************
கீர்த்தியை பேசிவிட்டு சரண் வெளியேறவும் மனமெங்கும் பரவிய வலியோடு முழங்கால்களை கட்டிக்கொண்டு முகத்தை புதைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டோடியது. பின்னே சரணுக்கு வலிக்கும் என்று தெரிந்தே அவனை வதைப்பவளின் வலி வார்த்தைக்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இத்தனை தூரம் வந்தபின் அவள் பின்வாங்குவதாக இல்லை நிச்சயம் நினைத்ததை நிறைவேற்றியே தீருவது என்ற முடிவெடுத்தவள் அதன் பின் வந்த நாட்களில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக இருக்கவும் சரணும் நிம்மதியாக அலுவலகம் சென்று வந்தான்.
கீர்த்தி அங்கே வந்து பத்து நாட்கள் கடந்திருக்க அன்று மாலை வீட்டிற்கு வந்தவன் வீட்டில் கீர்த்தி இல்லாது போகவும் உடனே அவளுக்கு அழைத்தான் ஆனால் அவள் அழைப்பை ஏற்காமல் போகவும் அருகே எங்கேனும் சென்றிருப்பாள் என்றெண்ணி தன் வேலையை தொடர இரவு மணி பத்தை கடந்தும் அவள் வீட்டிற்கு வராது போக உடனே பிரகாசத்திற்கு அழைத்தவன் கீர்த்தி அங்கே வந்திருக்கிறாளா என்று விசாரிக்கவும் மறுபுறம் இல்லை என்ற பதிலே வர உடனே திலக்கின் வீடு தொடங்கி தன் அப்பார்மென்ட் வளாகம் முழுக்க அவள் எங்கெல்லாம் சென்றிருக்க கூடுமோ அத்தனை இடங்களிலும் அவளை தேடி சோர்ந்து போனவன் இறுதியாக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டி வண்டியை நிறுத்தி விட்டு காவல் நிலையத்திற்குள் நுழைந்தவேளை கீர்த்தியிடம் இருந்து அழைப்பு,
‘ஹலோ கீர்த்தி எங்க இருக்க? ஏன் கால் எடுக்கல ஆர் யூ ஆல்ரைட் உனக்கு ஒன்னுமில்லையே’ என்று சரண் பதட்டத்தோடு கேட்க,
மறுபுறம் இருந்த கீர்த்தி தான் இன்னும் மூன்று நாட்களில் வீடு திரும்புவதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறி உடனே வைத்துவிட்டாள். சொன்னது போலவே நான்காம் நாள் அதே அழுத்தத்துடன் வெகு அலட்சியமாக வீடு திரும்பி தன் அறையினுள் செல்ல முயன்றவளை கண்ட சரணின் கோபம் ஏகத்திற்கும் எகிறி போனது.
அவளை தடுத்து நிறுத்தியவன், “கீர்த்தி உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க ஒரு வார்த்தை கூட சொல்லாம இத்தனை நாளா எங்க போயிருந்த..?? ஏன் ஃபோனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருந்த..??” என்று கேட்க,
“என்னை கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லை மிஸ்டர் சரண்” என்று தொடங்கியவள் மீண்டும் அலட்சியமாக அறையினுள் செல்ல பார்க்க,
‘ஏய் நில்லு! இங்க நீ என் பொறுப்புல இருக்க அதனால எனக்கு பதில் சொல்லிதான் ஆகணும்.. சொல்லு இத்தனை நாள் எங்க இருந்த?’
‘ஓஒ அப்படியா! நான் உங்க பொறுப்பா..’ என்று புருவமுயர்த்தியவள் எள்ளலோடு பேசிக்கொண்டே செல்ல ஒருகட்டத்தில் ‘கீர்த்தி’ என்ற கர்ஜனையோடு சரண் அடித்த அடியில் சுழன்ற கீர்த்தி வீட்டினுள் நுழைந்த நாதனின் கரங்களில் தஞ்சம் புகுந்திருந்தாள்.
ஏற்கனவே சரணால் தங்கள்குடும்ப கௌரவமும்வீட்டு பெண்ணின்கௌரவமும்கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் அவர் வீட்டினுள் நுழையும் முதலே சரண் கடுமையாக பேசி கீர்த்தியை அடிப்பதைகண்ட நாதனின் நிலையை வார்த்தை கொண்டு வடிக்கவும் வேண்டுமா..???
தன் கரங்களில் தஞ்சம் புகுந்த கீர்த்தியை ஆதரவாக தோள் தாங்கியவர் விழிகளால் சரணை எரித்துக்கொண்டே கீர்த்தியை வளர்மதியின் பொறுப்பில் நிறுத்திவிட்டு தன் எதிரே அவன் செயலுக்கான வருத்தம் சிறிதும் இன்றி இறுகிய முகத்துடன் கீர்த்தியை அழுத்தமாக பார்த்து கொண்டிருந்த சரணின் சட்டையை ஆவேசத்துடன் பிடித்த மறுநொடியே அவனை ஓங்கி அறைந்திருந்தார்.
‘என்னங்க’ என்று வளர் அவரை நோக்கி நகர மற்றவர்களும் அவரை பின்தொடர்ந்தனர். ஆனால் நாதனின் கோபப்பார்வையால் அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரை நெருங்க முடியவில்லை.
“ராஸ்கல் என்ன தைரியம் இருந்தா இப்படி ஒரு கேடுகெட்ட காரியத்தை செஞ்சிட்டு என் எதிர்ல நெஞ்சைநிமிர்த்திட்டு நிற்ப்ப..?? என்று சரணின் சட்டையை இறுக்கி பிடித்தவர், எனக்கே இப்படி ஒரு பச்சதுரோகம் செய்யஎப்படிடா மனசு வந்தது…??” என்றுகாரி உமிழ்ந்தவர் தொடர்ந்து உள்ளகொதிப்பை எல்லாம் வார்த்தை கொண்டு வடிக்க,
அங்கிருந்தவர்களுக்கு நெஞ்சம் பதறி போனது நாதனின் கட்டுப்பாடு இல்லாத வார்த்தைகளால்..!!
அதிலும் கலைவாணி அவர் பேசுவதை கேட்க முடியாமல் காதை பொத்தி கொண்டு ‘சிவா.. சிவா‘ என்று உச்சரிக்க அவர் கண்களில் இருந்து நீர் கரகரவென இறங்கதொடங்கியது.
“மாமா தம்பி மேல எந்த தப்பும் இல்லைஎன் பொண்ணு தான் இவரை தேடி வந்தா…??” என்று தீபிகா அவருக்கு புரியவைக்க முயல அதை எல்லாம் உணரும் நிலையில் நாதன் இல்லை.
‘வாயை மூடு! பெண்ணை நீ அப்படிதான் வளர்த்தியா..??” என்று உறுமவும் தீபிகா இல்லை என்றார்.
“அடுத்தவனை தேடி போற வழக்கம் எங்க குடும்பத்துலயே இல்லை இந்த பொறுக்கிதான் என் பெண்ணை மயக்கி அவனை தேடி வரவச்சிருக்கான்” என்றிட வளர்மதிக்கு கண்களில் நீர் பெருகியது.
நாதனின் வருகையை எதிர்பார்க்காத சரண் அவரின் ஆவேசத்தை கண்டு திகைத்து போனான்… சில வருடங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திரும்பி இருப்பதும் அவரின் உடல் நிலைக்கு அதீத கோபம் நல்லதில்லை என்பதையும் அப்போது வளர்மதி அனுபவித்த வேதனையும் நன்கு அறிந்தவனுக்கு இப்போது அவரிடம் எது பேசினாலும் அது எதிர்விளைவை மட்டுமே ஏற்படுத்தும் என்பதால் அமைதி காத்தான்.
அதிலும் பதட்டத்துடன் கலங்கி விழிகளுடன் நாதனையும் தன்னையும் பார்த்துகொண்டிருந்த தமக்கையின் கண்ணீர் முகமே அவர் தன்னை நம்புவதை உணர்த்த இப்போது நாதனின் பார்வையில் அவன் தவறு செய்தவனாக இருந்தாலும் வளர்மதிக்காக நாதனை தடுக்காமல் நின்றான்.
“இப்படி என் குடும்பத்தை அசிங்கபடுத்தவா உன்னை நான் என் பிள்ளை மாதிரி நடத்தினேன். காதல்ங்கிற பேருல என் பெண்ணை ரெண்டு வாரமாகூட வச்சிருக்கியே இதுக்கு பேர் தான் காதலா…?? என்றவாறு அவனை மீண்டும் அறைய முற்பட பாதியிலேயே அவர் கரம் தடுக்க பட்டிருந்தது.
சீற்றத்துடன் நாதன் திரும்ப அங்கே கீர்த்தி தான் அவர் கரத்தை அழுத்தமாக பிடித்து கொண்டிருந்தாள்.
ஒரே உதறலில் அவள் கரத்தில் இருந்து தன் கரத்தை நாதன் விடுவித்து கொள்ள கீர்த்தியோ “அவரை எதுக்கு இப்போ அடிக்கிறீங்க..நீங்க யார் அவரை அடிக்க..?”என்று கேட்டு முடிக்கும்முன் கீர்த்தியின் கன்னம் சிவந்துபோனது நாதன் அடித்த அடியில்.
சிவந்த விழிகளில் குறையாத ஆத்திரத்துடன், “மூச்..” என்று வாய் மீது விரல் வைத்து அவளை அடக்கியவர் “பொட்டை பிள்ளையை அடிக்க கூடாதேன்னு இருந்தேன், இதுக்கு மேல ஏதாவது பேசின கொன்னு பொதைச்சிடுவேன் ஒழுங்கா எங்க கூட கிளம்புற வழியை பாரு” என்று எச்சரிக்க கீர்த்தியின் வாய் அன்னிச்சையாக மூடிக்கொண்டது ஆனால் விழிகளோ ஒருவித வெஞ்சினத்துடன் நாதனையே பார்த்திருந்தது.
தீபிகாவின் புறம் திரும்பியவர் “போ இவளை கூட்டிட்டு போய் துணிமணி பெட்டி படுக்கை ஒன்னுவிடாம எல்லாத்தையும் மூட்டை கட்டு இனி ஒருநிமிஷம் இவ இங்க இருக்க கூடாது ” என்று ஆணை பிறப்பிக்க கண்ணீரில் நன்றியை தெரிவித்ததீபிகா அறையினுள் சென்று கீர்த்தியின் பெட்டியை அடுக்க தொடங்கினார்.
“நான் இங்க இருந்து வரமாட்டேன்இவர் கூட தான் என் வாழ்க்கை …, அப்படியே ஒருவேளை என்னை இந்த வீட்டை விட்டு என்னை கூட்டிட்டு போகணும்னு நெனச்சா..” என்று நாதனை வெறித்தவாறு இறுகிய குரலில் கூறிக்கொண்டு சென்றவள் இடைநிறுத்தி ஒற்றை புருவம் உயர்த்தியவாறே பிரகாசத்தை பார்க்க…,
அதுநேரம் வரை உடல் கூசவார்த்தைகள் இன்றிநாதனை ஒருவித பிரம்மிப்புடன் பார்த்துகொண்டிருந்த பிரகாசம்மகளின் வார்த்தையில் பதறிக்கொண்டு நாதனின் கால்களை பிடித்துகொண்டவர்,
“அண்ணா வேண்டாம் மாப்பிள்ளையை அடிக்காதீங்க அவர் எந்த தப்பும் செய்யலை, என் பொண்ணு இங்க இருந்து வரவேண்டாம் எனக்கு என் பொண்ணு எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்தா போதும்..!!” என்றவர் தன் சட்டைபையில் இருந்த தாலி கோர்க்கபட்ட மஞ்சள் கயிறை நாதனிடம் நீட்டி,
‘இவங்களை பிரிக்காதீங்க தயவுசெய்து மாப்பிள்ளையைஎன் பொண்ணு கழுத்துல தாலி மட்டும் கட்ட சொல்லுங்க போதும்! அது போதும் எனக்கு” என்று கதற….
நாதனோ குறையாத கோபத்துடன் கீர்த்தியை பார்த்தவர்ஆழ்ந்த யோசனைக்கு பிறகு பிரகாசத்திடம் இருந்து தாலிக்கயிறை பெற்று சரணிடம் கொடுத்து உணர்வுகளற்ற குரலில் ‘கட்டு‘ என்றார்.
ஆம் தங்கள் பெண்ணின் கௌரவம் காக்கவேண்டி விருப்பம் இல்லை என்றாலும் இம்முடிவை நாதன் ஆதரிக்க வேண்டிய சூழல்.
ஆனால் அவர் ‘கட்டு‘ என்ற மறுவினாடியே ‘முடியாது‘ என்று அழுத்தம் திருத்தமாக சரண் அவரின் கட்டளையை மறுத்தான்.
சரண் மறுப்பில் அவன் மீதான பார்வையை அகற்றாத நாதன், “இப்போ என் பொண்ணு கழுத்துல தாலி ஏறலை உங்க அக்கா கழுத்துல…” என்றிட “மாமாஆஆஅ என்ன பேசுறீங்க..??”என்று குறையாத திகைப்புடன் அவரிடம் குரல் உயர்த்தி இருந்தான் சரண்.
“நிறுத்துங்க என்ன பேசுறீங்க நீங்க? யாருக்காகவோ எங்க அக்காவை…” என்றவனை அலட்சியமாக பார்த்தவர்,
“இதோபார் எனக்கு என் குடும்பகௌரவம் தான் முக்கியம் என் பொண்ணு கழுத்துல தாலி ஏறலைன்னா நான் சொன்னதை செய்வேன்” என்று உறுதியாக கூற..,
இத்தனை வருட வாழ்விற்கு பின் தன் கணவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் வளர்மதியை உயிருடன் மரிக்க செய்திருக்க, அதை கண்ட சரணோ கலங்கிய மனதை திடப்படுத்திகொண்டே ‘முடியாது‘ என்று கூடுதல் அழுத்தத்துடன் கூற,
“என்னடா சொன்ன…???” என்றவாறே நாதன் அவனை அறைய கைஒங்க சடுதியில் அவர் கரத்தை பற்றி தடுத்திருந்தான் சரண்.
“என்ன பேசுறீங்கன்னு உணர்ந்து தான் பேசுறீங்களா..? எங்க அக்காகூட வாழ்ந்தஇத்தனை வருஷ வாழ்க்கைக்கு அப்புறம் இந்த மாதிரி சொல்றது உங்களுக்கே அசிங்கமா இல்லை.., இவ..” என்று கீர்த்தியை பார்த்தவன்
“இவ இங்க இருந்ததால போன உங்க குடும்பகௌரவம் எங்க அக்காவை ஒதுக்கி வைக்கும்போது மட்டும் உயர்ந்திடுமா என்ன..?? சுத்த அறிவுகெட்டதனமா இருக்கு..” என்றதும்
‘என்னடா சொன்ன?’ என்று நாதன் மீண்டும் கையை ஒங்க உடனே அதை தடுத்த சரணின் வலிய பிடியில் நாதனின் கரம் சிக்கியிருந்தது.
****************************************
அதேநேரம் “சரண் என்ன பேசுற? அவர் உன் மாமா அது நினைப்பில் இருக்கட்டும்… எப்போ இருந்து இப்படி அவரை எதிர்த்து பேச கத்துக்கிட்ட ஒழுங்கா மாமாகிட்ட மன்னிப்பு கேளு” என்று அவனருகே வந்தார்கலைவாணி.
சரணின் வீட்டிற்குவந்ததில் இருந்தே முழுதாக உடைந்து பார்வை முழுக்க சரண் மீதேநிலைத்திருக்க சிலையாய் சமைந்து போயிருந்தவரின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே ஊற்றாய் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. அதை கொண்டு தான் அவர்ஜீவன் பிரியாது இருப்பதை வளர்மதி உறுதிசெய்தார்.
ஏற்கனவே சென்னைக்கு வரும் வழியில் மகனின் தரம் தாழ்ந்த செயலையும் அதை தொடர்ந்து தன் குடும்பம், வளர்ப்பு என்று அனைத்தையும்விமர்சித்துநாதன் பேசியதில் கூனி குறுகி உள்ளுக்குள் மறித்து போயிருந்த கலைவாணி இப்போது நாதன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சக்தியற்றவராக மௌனமாய் கண்ணீரே பாஷையாக நடப்பவைகளை பார்த்துகொண்டிருந்த அம்மூதாட்டி அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து போயிருந்தார்.
தன் மகனா இது..?? எப்பேர்பட்ட மாபாதகத்தை செய்து விட்டு அதற்காக துளியும் அச்சமோ வெட்கமோ இல்லாமல் நாதனிடம் நெஞ்சுரத்துடன்பேசுபவனை கண்டு அதிர்ந்து போனார்.
செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்ய சொல்லும் மருமகனின் வார்த்தைகளையும் அலட்சியபடுத்தி அவரையே எதிர்ப்பவனை கண்டவருக்கு அதற்கு மேலும் பொறுக்கவில்லை…
இறுதியாய் நாதன் சரணை அடிக்க பாய்வதையும் அவன் அவர் கரத்தை பற்றி தடுத்து பேசியதையும் கண்டு அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட கலைவாணியின்கால்கள் ஒத்துழைக்க மறுக்க உடலின் மொத்த சக்தியையும் திரட்டி தள்ளாடியவாறே எழுந்து நின்று வளர்மதியின் உதவியுடன் மகனை சென்றடைந்தவரின் விழிகள் கலங்கி கண்ணீர் மறைக்க அதை துடைக்கவும் மறந்தவராய், “மாப்பிள்ளையோட கையை விடு” என்று மெல்லிய குரலில் கூறவும்,
அப்போது தான் அன்னையும் அவர்களுடன் வந்திருப்பதையே சரண் உணர்ந்தான். அவரது திகைத்த முகமும் வெற்று பார்வையுமே இங்கு நடப்பவை அவருக்கு எத்தகைய அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பது புரிபட தன்னையே நொந்துகொண்டான்.
என்னதான் அவன் தன் நிலையை விளக்கினாலும் அவனின் நியாயங்கள் அவர் கண்களுக்கு புலப்படாதுதந்தையை இழந்திருப்பவனுக்கு தாயையும் இழக்கும் சக்தி இல்லை.. அதனாலேயே அவருக்கு உண்மையை கூறமுடியாமல் தவிப்பவன் நாதனை பற்றியிருந்த கரத்தை விட்டு ‘அம்மா‘ என்று அழைத்த மறுநொடி சுருங்கி ஒடுங்கியிருந்த நடுங்கும் அவர் கரங்கள் சரணின் கன்னத்தில் ஓங்கி அறைந்த அவர் கரங்களோ தீயாய் தகிக்க தொடங்கியது…
நெற்றி சுருங்க ‘ச்சை‘, என்றவரின் முகத்தில் அவ்வளவு வெறுப்பு மண்டி இருந்தது.
அதை கண்ட சரண் பதறி அவரை நெருங்க முற்பட, சிறு தள்ளாட்டத்துடன் ஈரெட்டு பின்னெடுத்து வைத்தவர் ஈனஸ்வரத்தில் அருகே இருந்த வளர்மதியிடம் “இனி எனக்கு என் பொண்ணுங்க மட்டும்தான் பிள்ளைன்னு யாரும் கிடையாது மொதல்ல என்னை இந்த பாவப்பட்ட இடத்துல இருந்து கூட்டிட்டு போ” என்றார்.
“ம்மா அப்படி பேசாதிங்க நான் சொல்ல வருவதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்” என்று சரண் அவர் கையை பிடிக்க,
“ச்சீ” என்று அனலை தொட்டது போல் கையை உதறியவர், மீண்டும் அவனை அறைய ஓங்கிய கரத்தை இழுத்துக்கொண்டு தாரை தாரையாக வழிந்த கண்ணீரோடு,
“ம்ஹும் உன்னை எல்லாம் அடிக்கிறதுக்காககூட தொடறது பாவம்டா.., நாலு பொண்ணுங்களை பெத்திருக்கேன் அவங்களை கட்டி கொடுக்கிறவரை நெருப்பை கட்டிட்டு இருக்கனும்னு எல்லாம் சொல்லுவாங்க ஆனாநான் பெத்த நாலுமே ரத்தினங்கள்டா இப்போவரை எங்களை கௌரவமா தலை நிமிர்ந்து நடக்க வச்சிட்டு இருக்காங்க… ஆனா நீ..”என்றவரின் கண்கள் மீண்டும் குளமாக,
“நீ அசிங்கம்டா! உன்னைபெத்ததுக்காக இந்த பாழும் உசுரு இங்கயே இப்போவே போயிடாதானு இருக்கு’ என்றவர் நெஞ்சம் விம்ம, “மாப்பிள்ளை நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம் இவனை இங்கயே கண்டந்துண்டமா வெட்டி போட்டாலும் நான் என்னன்னு கேட்கமாட்டேன்..,” என்றவரின் முகத்தில் என்றும் காணாத ஆக்ரோஷத்தை கண்டான் சரண்.
அவரை அணுக முடியாமல் சரண் தவித்துகொண்டிருக்க, வளர்மதியை பிடிமானாமாய் கொண்டு நின்றவர் திடிரென “ஐயோ என் வளர்ப்பு தப்பாகிடுச்சே” என்று பெருங்குரலெடுத்து மார்பில் அடித்துகொள்ள நாதனே அதிர்ந்து பதறிக்கொண்டு ‘அத்தை‘ என்றவர் தண்ணீர் எடுத்து புகட்டி ஆசுவாசபடுத்தி வளர்மதியிடம் ‘அத்தையை கூட்டிட்டு போய் உள்ள படுக்கவை’ என்றார்.
சரணோ இவற்றையெல்லாம் வெறும் பார்வையாளனாக ஓரமாய் நின்று பார்த்துகொண்டிருந்தான். அவன் மனமோ “அம்மா இல்லைம்மா.. சில நேரம் கண்ணாடி கல்லுக்கும் வைரத்துக்கும் வித்யாசம் தெரியாம போய்டும் இப்போ அப்படிதான் நான் இருக்கேன்நம்புங்க!நான் உங்க பையன்ம்மா” என்று உள்ளுக்குள் தாயிடம் மன்றாடி கொண்டிருந்தது.
வளர்மதி அவரை அறைக்கு அழைத்து செல்ல அதை மறுத்தவர் “இல்லை இந்த பாவப்பட்ட இடத்துல நான் இருக்கமாட்டேன்” என்றவர் தன் முன் நின்றிருந்த கீர்த்திக்காக இறுதியாக ஒருமுறை சரணிடம், “கடைசியா கேட்கிறேன் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டமுடியுமாமுடியாதா..? என்று கேட்க,
தன்னிடம் தாய் கேட்டு மறுக்கும் நிலையின் கொடுமையை சகிக்காதுஇதழ்களை அழுந்த மடித்து உணர்வுகளை கட்டுபடுத்தியவனாய் கண்களில் கண்ணீருடன் ‘இல்லை’ என்று தலையாட்டினான்.
“இனி தப்பி தவறிகூட என் கண்முன்ன வந்துடாத அப்படி நடந்தா அதுதான் என்னோட கடைசி நாள்.., பெத்த பிள்ளையே தாய்க்கு எமனாகிற கொடுப்பினையை எனக்கு கொடுத்திடாத” என்று விசும்பியவர் சரண் முகத்தைகூட பார்க்காது வெளியேறினார்.
அதேநேரம் சரண் முன்னே வந்த நாதன், “நீ இல்லைன்னா என் பொண்ணுக்குவாழ்க்கையே இல்லைன்னு நெனச்சிட்டியா..??உன் கண்ணு முன்னாடியே என் பொண்ணுக்கு ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் பண்ணி காட்டுறேன்டா.., ஆனா இனி என் முன்னாடி வந்த அதுதான் உனக்கு கடைசி நாள்” என்று எச்சரித்தவர் அங்கிருந்த அனைவரிடமும்,
உங்க எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்றேன்.. என்று சுட்டுவிரலை நீட்டியவர் ‘கீர்த்தி இங்க வந்ததோ இவன் கூட இருந்ததோ யாருக்கும் தெரிய கூடாது இவன் இல்லைன்னா என்ன ஊருல வேற மாப்பிள்ளையே இல்லையா..? நான் கூட்டிட்டு வரேன் என் பொண்ணுக்கு ஆயிரம் மாப்பிள்ளையை’ என்று சரணைமுறைத்தவர்.
“இந்த விஷயம் இங்கயே நம்மோட பொதைஞ்சி போயிடனும் என் வார்த்தையையும் மீறி அப்படி மட்டும் வேற யாருக்காவது தெரிஞ்சது ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன், இது பெண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்டதுபுரிஞ்சதா..?? என்றவர், உடன்வர மறுத்த கீர்த்தியின் கரத்தை அழுத்தமாக பிடித்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்.