பித்து பிடித்த நிலையில் அமர்ந்திருந்த பிரகாசத்திற்குமகள் கூறியதை அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. பூவாக இருந்த மகள்புயலாக மாறிஇத்தனை வருடங்களாக தன்னை சுழற்றி அடித்தது சரணிடம் இருந்து அவளை பிரித்ததற்காக என்றுஎண்ணி இருந்தவருக்கு தான் செய்த தவறுக்கு தானே பிராயச்சித்தம் தேடி மகளை எப்பாடுபட்டாவது சரணிடம் சேர்த்து விட்டால் போதும் என்று இருந்த மனிதருக்கு மகளின் தற்போதைய பேச்சும் நடவடிக்கையும் வேறு செய்தி உரைக்க அதை என்னவென்று புரிந்து கொள்ளமுடியாமல் தனக்குள் உழன்றவருக்குஒரு கட்டத்தில் பெரும் குழப்பமே மிஞ்சியது.
சரணிடம் இருந்து பிரித்து அழைத்து வந்தபோதும் பலமுறை மகளை பார்க்க வேண்டும் என்று நாதனிடம் கேட்ட பிரகாசத்திற்கு தடை விதித்த நாதன் அவரிடம் கீர்த்தியைமுழுமையாக மாற்றி ஒப்படைப்பதாக கூறி கிட்டதட்ட இரு மாதங்களுக்கு பின்னொரு நாள் மகளை அவரிடம் அழைத்து வந்திருந்தார்.
அவரோடு எந்தவித ஆர்பாட்டமும் செய்யாமல் வந்த கீர்த்தி நாதன் பிரகாசத்திடம் கையோடு கொண்டு வந்திருந்தவரன்களின் புகைப்படங்களையும் ஜாதகங்களையும் காண்பித்தார்.
அப்போது வாய் திறந்த கீர்த்தி மிக மெல்லிய குரலில், “ப்ளீஸ் பெரியப்பா நான் தான் நீங்கசொல்றபடி அவரை மறந்திடுறேன்னு சொல்லிட்டேனேஅப்புறம் எதுக்கு உடனே கல்யாணம் ஏற்பாடு பண்றீங்க..??” என்று உருக்கமாக கேட்டபடி அவர் கரங்களை பிடித்து கொண்டவள்,
“வாழ்க்கைன்னா என்னன்னு எனக்கு புரியவச்சிடீங்க உங்களை என்னால மறக்கவே முடியாதுஎன் வாழ்க்கையில அந்த அளவுக்கு முக்கியமான நபர் நீங்க…!!உங்களுக்கு தெரியாம இனி எதையும் செய்யமாட்டேன்… அதேபோல இனி எனக்கு என் அப்பா அம்மா தான் முக்கியம் வேறயாரும் எனக்கு தேவையில்லை” என்று நிறுத்தியவள் அவர் முகம் பார்த்துக்கொண்டே
“ஆனா ப்ளீஸ் எனக்கு பழசை எல்லாம் மறக்க கொஞ்சம் டைம் வேணும் புது வாழ்க்கையை ஏத்துக்க மனசை ஒருமுகப்படுத்தனும் அதனால இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாமே” என்று மிகவும் இறைஞ்சுதலாக கூறவும் பிரகாசத்திற்கே இது தன் மகள் தானா என்ற வியப்பு ..!!
நாதனிடம் இருந்த இரு மாதங்களில் இத்தனை மாற்றமா என்று குளிர்ந்து போனவர் உடனே நாதனின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி உரைக்க அவரும் கீர்த்தியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து கிளம்பி சென்றார்.
மகள் இத்தனை மாறியதே கடவுளின் கிருபை என்ற மகிழ்வுடன் நாதனை வழி அனுப்பிவிட்டு திரும்பிய பிரகாசத்தின் மகிழ்ச்சி சில நிமிடங்களுக்குகூட நிலைக்கவில்லை.
ஆம் அவர் உள்ளே வரவுமே வரவேற்பரையில் வீற்றிருந்த ஒற்றை குஷன் சோபாவில் நிமிர்வுடன் கால் மேல் கால் போட்டு தோரனையாய் அமர்ந்திருந்த கீர்த்தியிடம் இதுநேரம் வரை இருந்த இளகிய பாவம் முழுதாக துடைக்கபட்டு கூர்மையான பார்வையுடன் இறுகி போயிருந்தவள் அவர் வீட்டினுள் நுழையவுமே கட்டுகடங்காத வன்மத்துடன் அவரை பார்த்தவள் மிகவும் அழுத்தமான குரலில் “சந்..தோ..ஷமா இருக்கியா..??” என்று கேட்டு ஒற்றை புருவமுயர்த்தினாள்.
பிரகாசமோ உயிர் குடிக்கும் அவள் குரலில் முதுகுதண்டுவடம் சில்லிட, ‘கு…குட்.. குட்டிமா‘ என்றார்.
“இல்லை நான் திரும்ப இங்க வந்ததை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருந்த மாதிரி தெரிஞ்சது அதுதான் கேட்டேன்” என்றவாறே இருகரங்களையும் தட்டிக்கொண்டு சோபாவில் இருந்து எழுந்தவள் பிரகாசத்தின் அருகில் சென்று, அவர் விழிகளில் தெரிந்த அச்சத்தை சில நொடிகள் களிப்புடன் காண நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் முகத்தில் கண்ணுக்கே புலப்படாத மெல்லிய புன்னகை படலம் உற்பத்தியாகியது.
குரலை செருமியவள், “உன் சந்தோஷத்தை கெடுக்கறதுக்கான அஸ்திவாரத்தை போட்டுட்டுத் தான் வந்திருக்கேன்” என்றிட, பிரகாசமா மகள் திரும்ப வந்த நிம்மதியைகூட அனுபவிக்க முடியாதவாறு மகள் கேட்ட கேள்வியிலேயே அவர் வெலவெலத்து போயிருக்க அவள் வார்த்தைகளின் பொருளை கவனிக்க தவறினார்…
‘என்னம்மா சொல்ற..??’
“சொல்றேன் சொல்றேன், ஆனா அதுக்கு முன்ன நான் இதுக்குமேல இங்க இருக்கிறதும் இல்லாம போறதும் உன் கையில தான் இருக்கு”
“இல்லை இல்லல்ல குட்டிமா சத்தியமா நான் அவரை கூட்டிட்டு வரலை உ.. உங்க அம்.. அம்மா தான்…” என்று பதறியவரின் கண்கள் நீர்மணியை உகுக்க தயாராக அதை புறங்கையால் துடைத்துகொண்டே, “நீ சொல்றதை மீறி நான் இதுவரை நடக்கலை தானே குட்டிமா இனியும் அப்படியே நடந்துக்குறேன் என்ன பண்ணனும் சொல்லு செய்றேன் ” என்று மகள் முன் மண்டியிட்டார்.
அலட்சியமாக அவரை பார்த்தவள் மீண்டும் சோபாவில் தோரணையாக அமர்ந்து, “ஹ்ம்ம்இப்ப சொல்றதை நல்லா மனசுல பதிய வச்சிக்கோ..” எனவுமே பிரகாசத்தின் தலை வேகமாக அசைந்தது.
“இதோ இப்போ போறாரே உன் பாசமலர் அந்த ஆள் நிச்சயமா இதோட நிற்கமாட்டார் அடிக்கடி வந்து இம்சை கொடுப்பார், என்னை பத்தி விசாரிப்பார் மாப்பிள்ளையை கூட்டிட்டு வரேன்னு டார்ச்சர் பண்ணுவார் அப்படி வரும்போது அவர்கிட்ட நீ என்ன சொல்லணும் தெரியுமா..?” என்று முடிக்கும் முன்னமே…,
“என்ன சொல்லணும் சொல்லு குட்டிம்மா நான் சொல்றேன்.. எனக்கு நீ முக்கியம்” என்று பிரகாசம் தவிக்க அவளோ மிக நிதானமாக சோபாவில் பதிந்திருந்த கரத்தை அகற்றி அவர் முன் சற்று குனிந்தவள், “நான் இந்த வீட்ல இல்லை, மனசு மாறவேண்டிபெங்களுர்ல வேலை பார்த்துட்டு இருக்கேன் இன்னும் நாலஞ்சு மாசம் கழிச்சு கல்யாண ஏற்பாடு பண்ணலாம்னு சொல்லி அவரை சமாளிக்கிற… ஐ மீன் உனக்கு வேற ஆப்ஷன் இல்லை சமாளிச்சே ஆகணும்” என்றிட கடவுளின் கட்டளைக்கு அடிபணியும் பக்தனாக பிரகாசத்தின் தலை சரி என்று வேகமாக அசைந்தது.
அன்றைய தினம் தன் அறைகதவை தாழிட்டவள் தான், தினமும் கேட்கும் பிரகாசத்தின் கண்ணீருடனான வேண்டுதளுக்கோ தீபிகாவின் வேதனைக்கோ செவி சாய்க்காதவள் சில மாதங்கள் கழித்து அவளேமீண்டும் திறந்திருந்தாள். ஆனால் ஆறாம் மாத தொடக்கத்தில் இருந்தவளதுமேடிட்ட வயிறை கண்ட பிரகாசதிற்கும் தீபிகாவிற்கும் அவள் நிலை உச்சகட்ட அதிர்ச்சியை அளிக்க வார்த்தைகள் அற்று ஸ்தம்பித்து போயினர்…
சில நிமிடங்களில் தன்னை மீட்டு கொண்டு பதறி துடித்து மகளை நெருங்கிய தீபிகா மகளிடம் கேள்விகளை தொடுக்க பிரகாசமோ உணர்வுகள் தொலைத்த முகத்துடன் மகளை பார்த்தவர் தீபிகாவை அமைதியாக இருக்குமாறு கூறி மகளை அழைத்து கொண்டு அவளறைக்கு சென்றவர் சில நிமிடங்கள் கழித்து வெளியில் வந்து நேரே பூஜையறைக்கு சென்று நித்தமும் மகளின் மனம் இளகி சரணுடன் சேர வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஈசனின் பாதங்களை கெட்டியாக பிடித்து கொண்டார்.
தீர்க்கமான பார்வையோடு தன் குழந்தை பற்றிய அக்கறையோ வாழ்வு குறித்த அச்சமோ சிறிதும் இன்றி நிற்கும் மகளிடம் மீண்டும் பழைய கடுமையை கண்ட பிரகாசம் இன்று வரை அவரின் வேண்டுதலுக்கு இளகாத ஈசனையும் மகளையும் எண்ணி கதறியவர் தலையை இரு கரங்களாலும் அழுந்த பற்றி கொண்டு தன் வாழ்வின் பல நிகழ்வுகளை ஓட்டி பார்க்க பலகட்ட சுயஅலசலில்ஒன்றும் பிடிபடாமல் போக இறுதியில் எங்கே தான் செய்த பாவங்கள் மொத்தமாக மகளின் வாழ்வைசீரழிந்து விடுமோ என்ற எண்ணமேவிழிகளில் நீரை நிறைக்க வெறுமையான மனதுடன் கீர்த்தியையே பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது தான் நொடிக்கும் குறைவான நேரத்தில் தாலியை கழற்ற முற்பட்ட அவர் மகளின் கன்னத்தில் தன் கரத்தைஇறக்கியிருந்தான் சரண்.
மகள்மீது சிறு துரும்புபட்டாலும் துடித்துபோகும் பிரகாசத்திற்கு சரணின் செய்கை அதிர்ச்சி அளிக்க “மா..ப்பிள்..ளை” என்று பதறி ஓடிய மனிதர் சரணின் அனல் பார்வையில் தேங்கி நின்றுவிட்டார்.
அவன் அறைந்த கன்னத்தை பிடித்துகொண்டு நம்ப மாட்டாமல் திகைத்து போய் கீர்த்தி அவனை பார்க்க,
“எல்லாமே உனக்கு சாதாரணமா போயிடுச்சு இல்ல கீர்த்தி.. குழந்தை, தாலி, கௌரவம், குடும்பம்னு எதுக்குமே உன்கிட்ட மதிப்பு இல்லாம போயிடுச்சு அப்படிதானே..!! ” என்று கேள்வியாய் அவள் முகம் காண அப்போதும் கூர்மையான பார்வை அன்றி வேறு அசைவில்லை அவளிடம்..!!
அதை கண்டு ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை சமன்படுத்தியவன், “ஏன்..?? ஏன் கீர்த்தி இந்த அளவுக்கு மாறிட்ட..?? எதையும் வெளிப்படையா பேசாம எல்லாத்தையும்உனக்குள்ளேயே புதைச்சுகிட்டு நீயும் கஷ்டப்பட்டு குழந்தையையும்..” என்றவன் பார்வை ஆராய்ச்சியுடன் அவள் முகத்தில் படிந்து மீள அவன் முகத்திலும் சொல்லிலடங்கா வேதனை படர்ந்தது.
“இப்போ நீ இருக்கிற இந்த நிலையிலும் உன்னோட கண்ணுல தெரியிற ஆவேசம், துவேஷம், பழிவெறி எல்லாமேஎனக்கு வேற செய்தி சொல்லுது கீர்த்தி” என்றவன் அவள் நிமிர்த்து சரணை கேள்வியாக பார்ப்பதை கண்டு,
“ஆமா உன்னோட பழிவெறி நிச்சயம் உன்னை மட்டுமில்லாம் குழந்தையையும் அழிச்சிடும்… அதனால இப்போ நீ என்கூட இருக்கிறது அவசியம் அதேநேரம்உன்னை கட்டுபடுத்த எனக்கும் வேற வழி இல்லை அதான் அடிச்சேன் ஸாரி” என்றவாறு அவனறைந்த கன்னத்தை தொட முயலஅவன் கரத்தை தட்டி விட்டிருந்தாள் அவனவள்.
“ஒன்னு புரிஞ்சிக்க கீர்த்தி இனியும் உன்னை இந்த கேடுகெட்டவன்கூட அனுப்புற அளவுக்கு நான் முட்டாள் இல்லை… இனி இது தான் உன் வீடு, நான் உன் கணவன், இது நம்ம குழந்தை இதுதான் உன் மனசுல இருக்கணும்..இருத்தி தான் ஆகணும், உன்னால முடியுமா இல்லையாங்கிற கேள்விக்கே இடமில்லை நீ மாறிதான் ஆகணும்” என்றான் கட்டளையான குரலில்.
“மாற முயற்சி பண்ணு இதை தவிர வேற ஆப்ஷன் உனக்கு கிடையாது..!!” என்றபோது அவள் பார்வை பிரகாசத்தின் மீது படிவதை கண்டவன்,
லுக்! என்னை மீறி இந்த வீட்டை விட்டு போகணும்னு நெனச்சா.. என்று நிறுத்தி குரலில் கடுமையை கூட்டியவன்,
“உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும் தேவை இல்லாம ரிஸ்க் எடுக்காத.. இப்போ உன்னைவிட எனக்கு இந்த குழந்தை ரொம்ப முக்கியம் யாரோ பண்ணின தவறுக்கு ஒன்னும் அறியாத பச்ச குழந்தை தண்டிக்கபடுறது எந்த விதத்துல நியாயம்” என்று அவள் கரத்தை பிடித்திழுத்து சென்று தன் அறையில் விட்டு கதவை பூட்டிவிட்டு திரும்ப கண்களில் வழிந்த கண்ணீருடன் பிரகாசம் அவன் முன் நின்று கை கூப்பியவர் மனம் முழுக்க சஞ்சலத்துடன் மறுநொடியே அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அவர் செல்லவுமே பலவித யோசனையுடன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கூடத்தில் நடை பயின்றவன் நேரத்தை பார்க்க அது மதியம் இரண்டு என்று சொல்லியது. காலை எழில் கொடுத்த உணவை தவிர வேறு எதுவுமே அவள் எடுக்கவில்லை என்பது நினைவு வர உடனே வாயிற்கதவை பூட்டி கொண்டு சென்றவன் அடுத்த சில நிமிடங்களில் அவர்களுக்கான உணவுடன் திரும்பி இருந்தான்.
************************************************
தன் அறையை திறந்து கொண்டு உள்ளே செல்ல சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த கீர்த்தி என்றும் இல்லாத வழமையாக வயிற்றில் கரம் பதித்து குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தாள். ஆம் பிரகாசத்தை அணுஅணுவாக சித்ரவதை செய்து உயிரோடு கொல்லும் ஆயுதமாக குழந்தையை எண்ணி இருந்தவளுக்கு இன்று தான் அது உயிரும் உணர்வுமுள்ள ஜீவனாக தோன்ற இத்தனை நாட்கள் குழந்தையிடம் தான் கொண்டிருந்த விலகலுக்கும் புறக்கணிப்பிற்கும் மனதார அதனிடம் மன்னிப்பு கோரி இருந்தாள்.
சரண் உள்ளே நுழையவுமே சட்டென தன் முகபாவத்தை மாற்றிகொண்டவளின் முகத்தில் அதுகாறும் இருந்த இளக்கம் நொடியில் காணாமல் போக மீண்டும் அலட்சியம் வந்தமர்ந்தது. உணவு பொட்டலத்தை மேஜையில் வைத்தவன்அவளருகே சென்று அவள் கையை பிடிக்க உடனே வெடுக்கென தன் கரத்தை இழுத்து கொண்டாள் கீர்த்தி.
அப்போதும் விடாமல் ‘கீர்த்தி‘ என்ற அதட்டலுடன் அவள் கரத்தை பற்றியவன் அதை தன் கைகளில் பொத்திகொண்டு, “ஸாரி கீர்த்தி வேணும்னு நான் உன்னை அடிக்கலை நான் எவ்ளோ பொறுமையா அமைதியா எடுத்து சொன்னாலும் அதை கேட்கிற நிலையில நீ இல்லை, முதல்ல நீ இங்க வந்தபோ என்னை அசிங்க படுத்த வந்திருக்கன்னு நினச்சேன் அதான் உன்னை வீட்டை விட்டு போக சொன்னேன் ஆனா இப்போ எனக்கு நீயும் குழந்தையும் முக்கியம்” என்று பேசிக்கொண்டிருக்கையிலே சில நொடிகளில் அந்த மாற்றத்தை அவன் உணர்ந்தான்.
ஆம் எப்போதும் கீர்த்தி அவனருகில் அவன் தொடுகையில் நெகிழ்பவளுக்கு பதட்டத்தில் வியர்வை அரும்பி அவள் கரங்கள் சில்லிட்டு போகும் ஆனால் இப்போது அதற்கு மாறாக அவள் உள்ளங்கையின் வெம்மையையும் அவள் முகத்தில் இருந்த திடத்தையும் கண்டவன்,
‘ஆர் யு ஓகே கீர்த்தி‘ என்று கேட்க,
அவன் முகத்தில் இருந்து பார்வையை அகற்றாதவளிடம் இருந்து மெல்லிய தலையசைப்பு மட்டுமே.. அவள் முகம் தெளிவாக இருந்தாலும் பல்வேறு கேள்விகள் படையெடுக்க அவள்உள்ளம் மிகவும் குழம்பி போயிருக்க மதில் மேல் பூனையாகி போனவளுக்கு அவன் அன்பை ஏற்பதா வேண்டாமா..?? என்ற தவிப்பு.
ஆனால் அவள் தவிப்புகளை எல்லாம் ஆறுதல் வார்த்தைகள் கொண்டு மெல்ல போக்கியவன் அவளை சாப்பிட வைத்து சில நிமிடங்களுக்கு பின் உறங்கவைத்தான்.
நாட்கள் வாரங்களான போதும் கீர்த்தி சரணுடன் இருக்கிறாள் என்பதை தவிர அவர்கள் இருவரின் உறவில் எந்த மாற்றமும் இல்லை. ஆம் அன்று போலவே கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையான அனைத்தையும் சரண் அவன் அன்னையின் வழிகாட்டுதலுடன் செய்து கொண்டிருந்தாலும் அதில் கடமையும், மனிதாபிமானமுமே ஓங்கி இருப்பதை கீர்த்தி விரைவாகவே கண்டு கொண்டாள். அவள் எதிர்பார்த்த காதல் என்ற ஒன்று எத்தனைமுறை தேடி பார்த்தும் கண்களுக்கு புலப்படவில்லை.
இப்படியே கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த நிலையில் அன்று இரவு நேர ரயில் பயணத்தில் குளிர் காற்று முகத்தில் அறைய சென்னைக்கு தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று திரும்பி கொண்டிருந்த சரணின் மனதை குளிர் காற்றும் குளிர்விக்க முடியாமல் போக மீண்டும் மீண்டும் அன்றைய நிகழ்வை எண்ணி பார்த்தவனின் மனம் ஒருவித சுழற்சியில் சிக்கி கொண்டது போலானது.
“எனக்கு பயமா இருக்கு மாமா” என்று வியர்த்திருந்த உள்ளங்கையை ஷாலில் துடைத்துகொண்டு கூறியவளிடம்,
“இங்க பாரு பாப்பு உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கா இல்லையா..??” என்று மீண்டுமொருமுறை சரண் கேட்க
தன் கழுத்தில் இருந்த டாலரை இறுக்கமாக பற்றி கொண்டு கண்களை மூடி அவசர வேண்டுதல் வைத்தவள் “இருக்கு மாமா ஆனா…” என்று பயத்தில் வறண்ட தொண்டையில் எச்சில் கூட்டி விழுங்கியவாறே இழுக்க,
“என்ன ஆனா…” என்று முறைத்தவன், “பாப்பு முதல்ல இந்த பயத்தை விடுகண்டிப்பா உன்னால முடியும்… எங்கயும் விழமாட்ட அடியும் படாது அதுக்கு நான் பொறுப்பு புரியுதா..??” என்று கேட்கதெளிவற்ற முகத்துடன் பார்வையை ஸ்கூட்டியின் மீது பதித்திருந்தவளின் முகத்தை ஒற்றை விரல் கொண்டுதன்புறம் திருப்பியவன்…
“இங்க பாருடா அமுலுக்கு, கதிர்க்குசரண்யாக்குஇன்னும் இருக்கிற என்னோட அக்கா பசங்க எல்லாருக்குமே நான் தான் ஸ்கூட்டி ஓட்ட பழகி குடுத்தேன். எல்லாருக்குமே ஆரம்பத்துல கொஞ்சம் பயம் இருந்தாலும் புது விஷயத்தை கத்துக்க போற எக்சைட்மெண்ட்ல சீக்கிரமே கத்துகிட்டாங்க இத்தனைக்கும் சின்ன அடிகூட படாம” என்று கூறவும் அவள் விழிகளில் இதுநேரம் வரை அவன் கண்ட அச்சம் மெல்ல விலகவும் அவள் கரத்தை பிடித்து வருடியவாறே,
“பாப்பு பயந்தா எந்த விஷயத்தையும் கத்துக்க முடியாதுஉனக்கு வண்டி ஓட்டணும்னு ஆசை இருக்கா இல்லையா..??” என்று கேட்டதும் கீர்த்தி ‘ஆம்‘ என்று வேகமாக தலையசைத்தாள்.
“ஹ்ம்ம் வெரி குட்.. தட்ஸ் தி ஸ்பிரிட்” என்றவன் ஸ்கூட்டியில் நகர்ந்து பின்னே அமர கீர்த்தி அவன் முன்னே அமர்ந்தவள் சாவியை பொருத்தி க்ளட்சை பிடித்து ஸ்டார்ட் செய்துபிரேக்கை பிடித்து கொண்டே மெல்ல ஆக்சிலேட்டரை கொடுக்க வண்டி அசைய மறுத்தது.
“என்ன மாமா போகமாட்டேங்குது” என்றவாறே பின்புறம் திரும்ப அதற்குள் சரணும் அவளை நெருங்கி சற்று தலையை தாழ்த்தி முன்னே பார்க்க அதேநேரம் திரும்பிய கீர்த்தியின் இதழ்கள் அவன் கன்னத்தை உரச நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்துவிட்ட தொடுதலில்பதறி போனவள் குறுகுறுத்த இதழ்களை மடித்து கொண்டு சட்டென தலையை திருப்பிகொண்டாள்.
அவள் பிரேக்கை பிடித்து கொண்டிருப்பதை பார்த்த சரண், “பாப்பு ப்ரேக் மேல இருந்து கையை எடு அப்போதான் வண்டி நகரும்” என்றவாறு அவள் கரத்தை அகற்ற முற்பட இப்போது அவளை மேலும் ஒட்டி அமர்ந்தவனின் மூச்சுகாற்று அவள் செவி தீண்ட அவன் வாசம் அவள் நாசியை நிறைக்க அவன் அருகாமையில் மெல்ல நெகிழ்ந்துகொண்டிருந்தவளின் இதயத்துடிப்பு வேகமெடுக்க அதை கட்டுபடுத்தும் வழி தெரியாமல் தவித்து வேகமாக கரத்தை எடுத்தவள் அதேநேரம் வண்டியில் இருந்து சட்டென கீழே இறங்கி இருந்தாள்.
நிமிடத்திற்கும் குறைவான நேரமேயானாலும் அவன் அருகாமையில் தன்னை இழக்க தொடங்கி இருந்த கீர்த்தி இமைகள் படபடக்க விழிகள் அலைபாய ஷாலின் நுனியை திருகிக்கொண்டே சில்லிட்ட கரங்களை கோர்த்து பிரித்தவாறே தலை குனிந்து நின்றிருந்தாள்.
பாப்பு, பாப்பு என்று பலமுறை அவளை அழைத்தும் பதிலளிக்காமல் போக வண்டியை நிறுத்தியவன் அவள்முன் சொடக்கிட்டு, ‘பாப்பு என்ன ஆச்சு எதுக்கு இறங்கிட்ட?’ என்றான்.
நடுங்கிய இதழ்களை பற்களால் அழுந்த கடித்துக்கொண்டே ‘ஒண்ணுமில்லை‘ என்பதாக தலையசைத்தவளுக்கு அவனருகே அவள் சிந்தையை ஒருமுகப்படுத்த முடியாது என்பது நன்கு புரிபடவும் அதன் பின்பு வந்த நாட்களில் அவன் எத்தனை முறை வற்புறுத்தியும் வண்டி ஓட்டி பழக மறுத்துவிட்டாள்.
எண்ணம் முழுக்க இந்நிகழ்வே நிறைந்திருக்க அன்று அத்தனை படபடப்புடன் தான் வலியுறுத்தியும் “இல்லை ப்ளீஸ் மாமா வேண்டாமே..!!” என்று விழிகளால் இறஞ்சியவள் அவன் முகமாற்றத்தை கண்டு தாளமுடியாமல்,
“அதுதான் ஏன் பாப்பு..??” என்று அவன் புரியாமல் கேட்கவும்,
“ப்ளீஸ் மாமா புரிஞ்சிக்கோங்க” என்றவளுக்கு தன் உணர்வுகளை எவ்வாறு விளக்க என்று புரியாமல் போக “என்.. என்னால இப்போ..” என்று இதழ்களை கடித்து கொண்டேமுகத்தை சுருக்கியவள் ‘சரி நான் ப்ராமிஸ் பண்றேன்‘ என்று அவன் வலக்கரத்தை எடுத்து அதில் தன் கரத்தைபதித்தவள்,
“உங்களை தவிர வேற யார்கிட்டயும் ஸ்கூட்டி ஓட்ட கத்துக்கமாட்டேன் கல்யாணத்துக்கு அப்புறம் நீங்களே சொல்லி கொடுங்க போதுமா..??” என்று மறுத்து சென்றவள் எவ்வாறு இன்றுநிறைமாத வயிறுடன் அத்தனை லாவகமாக ஸ்கூட்டியை செலுத்தி கொண்டுஅவன் தமக்கை வான்மதியின் வீட்டிற்கு அவன் அன்னையை உடன் அழைத்து சென்றிருக்க முடியும் என்ற கேள்வி எழ பதிலை தேடி களைத்து போனவன் பெரும் குழப்பத்துடன் வீடு வந்து சேர்ந்தான்.
நேரம் இரவு பதினொன்றை நெருங்கி இருக்க அழைப்பு மணியை ஒலிக்கவிடாமல் கீர்த்தியின் எண்ணிற்கு அழைக்க சில நிமிடங்களில் அழைப்பை ஏற்கபடவும்,
‘கதவை திற கீர்த்தி‘ என்றான்.
அவளும் அருகே இருந்த கலைவாணி அம்மாவின் உறக்கம் கலையாத வண்ணம் மெல்ல இறங்கி வந்து கதவை திறக்க உள்ளே நுழைந்தவன்,
“காலையில அம்மா கால் பண்ணி இருந்தாங்க வான் அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போக ஆள் இல்லைன்னு அப்புறம் எப்படி போனாங்க” என்றான்.
“நான் தான் கூட்டிட்டு போனேன்”
“இந்த மாதிரி நேரத்துல நீ ஆட்டோல போறது ஸேஃப் இல்லையே ஏன் கீர்த்தி போன..?? அம்மாவை மட்டும் ஏத்தி விட்டிருக்கலாமே..!!”
“ஆட்டோ இல்லை ஸ்கூட்டியில் தான் கூட்டிட்டு போனேன், என்னோட சேஃப்ட்டி பத்தி எனக்கும் அக்கறை உண்டு” என்று அவனுடனான பேச்சை கத்தரித்துவிட்டு செல்ல,
“உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா..?”
திரும்பி அவனை பார்த்தவளின் முக பாவமே சொன்னது அவளது எள்ளலின் அளவை..!!
“எந்த காலத்துல இருக்கீங்க மிஸ்டர் சரண்..? இதுகூட தெரியாம யாராவது இருப்பாங்களா நான் புல்லட்டே ஓட்டுவேன்” என்று தான் பூண்டிருக்கும் வேடத்தின் தன்மை மறந்து சர்வ சாதாரணமாக கீர்த்தி கூறியவள் கலைவாணி அறைக்கு சென்று அவரருகே உறங்க தொடங்கினாள்.
ஆனால் அவள் வார்த்தைகளில் அவன்தான் அதிர்ந்து நின்றான்.