“மேரேஜ் ஆகிடுச்சா?…” என்ற முனுமுனுத்ததும்,
“என்ன? என்ன சொன்னீங்க?…” என்றான் அவரை.
“இல்லை ஒண்ணுமில்லை. நீங்க பழனியப்பனா?…” என்றார் மீண்டும் தனக்கு தெளிவுபடுத்திக்கொள்ள.
“விஜயநெடுமாறன்…” என்றான் அவன் பொறுமையை இழுத்து பிடித்தபடி.
“ஆனா…” என இப்போதும் அப்பெண் யோசனையுடன் ஆர்க்க,
“ஏன் மேம்? பொண்ணுங்க மேரேஜ்க்கு பின்னால அப்பா பேரை வச்சுக்க கூடாதுன்னு எதுவும் சட்டம் இருக்கா?…” என்றான் சுள்ளென்று.
“இல்லை ஸார். அதுக்கில்ல…” என்று அவர் அவனின் கோபத்தில் மிரள,
“ப்ச், கூப்பிடுங்க மேம்…” என்றான் கடுப்புடன்.
அவன் அத்தனை அதிகாரமாய் பவித்ராவை அழைக்க சொல்லியது கோபம் வந்தாலும் அவளை அழைக்கவும் மறுக்கவில்லை. அவ கிளம்பவும் அவளிடம் பேசிக்கொள்ளலாம் என்று அழைத்துவிட்டார்.
“இப்போ வந்திரும் அந்த பொண்ணு…” என சொல்லி அவனை அமர சொல்ல,
“இல்ல வெளில அந்த கார்டன்ல நிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு அங்கே சென்று நின்றுகொண்டான்.
வேலைநாள், மதிய நேரம் என்பதால் பிஜியில் ஆள் இன்றி அமைதியாக இருந்தது.
பவித்ராவிற்காக காத்திருக்க அவள் வந்தாள் அவனை தேடி. அழுதிருப்பாள் போலும் முகம் சிவந்து கண்ணெல்லாம் வீங்கி தடித்திருந்தது.
பார்க்கவும் அத்தனை கஷ்டமாக இருக்க அவள் அருகே வரும் வரை காத்திருந்தான்.
“சொல்லுங்க ஸார்…” என்றாள் அவனிடம்.
“அழுதியா நீ?…” என கேட்க,
“இல்லையே ஏன் அழனும்? தலை வலி. அவ்வளோ தான். அழலை…” என்றாள்.
“காலேஜ்ல இருந்து மெசேஜ் வந்துச்சா?…” என அடுத்ததாக கேட்க விகாஷினி அவளுக்கு அனுப்பியிருந்தாள் சற்று முன்னர் தாம்.
இப்படி காலேஜ் முழுவதும் பேசுகிறார்கள் என்று சொல்ல இருக்கும் தலைவேதனையில் இதுவேறா? என்று இன்னும் அழுத்தம் கூடியது அவளுக்கு.
உடயப்பட்டவனே ஏற்றுக்கொள்ளாத நேரத்தில் இப்படி பரப்பியுள்ளனரே என்று ஆயாசமாய் போயிற்று.
அதையும் விட இது வீட்டிற்கு தெரிந்தால் தன்னை இங்கிருந்து முதல் வேலையாக அழைத்து செல்லத்தான் பார்ப்பார்கள் என்று நினைத்தவளுக்கு அந்த சூழ்நிலையை கையாள முடியவில்லை.
“பவித்ரா…” என்று விஜய் அழைத்ததும்,
“எனக்கு இங்க இருந்து போக வேண்டாம். வீட்டுக்கு தெரிஞ்சா என்ன செய்வாங்களோன்னு இருக்குது…” என்று அவள் சொல்ல,
“ஏன் இந்த போட்டோவால என்ன வந்துச்சு? நாம ரெண்டுபேரும் யாருன்னு கேட்கறவங்களுக்கு சொல்லிடு. சிம்பிள்…” என்றான் ஒற்றை தோள் குலுக்களில்.
சத்தியமாய் அவனிடத்தில் அவள் இதை எதிர்பார்க்கவில்லை. கோபப்படுவான், உன்னால தான் இது என்று பேசுவான் என்று பார்த்தால் அவன் அழிக்க நினைத்த உறவிற்கு அங்கீகாரம் கொடு என்கிறானே என வியப்புடன் இன்னும் சிலையாய் நின்றாள்.
அவளின் அந்த திகைப்பும், அந்த ஸ்தம்பித்த நிலையம் எதனால் என்று புரிந்தவனுக்கு ஒரு ஆழ்ந்த மூச்செடுப்பு. ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் தானே அவளிடம் இதை பேசுவோம் என்று அவன் நினைக்கவில்லையே.
“எனக்கு புரியுது நீ ஏன் இப்படி இருக்கன்னு. வேண்டாம்ன்னு சொன்னவனே தேடி வந்து பேசறேன்னு தானே?…” என்று அவன் சொல்லும் போதே அவன் முடிவோடு வந்திருப்பதை அவள் உணர்ந்தாள்.
“இப்பவும் நான் உனக்காக தான் வந்திருக்கேன். எந்தவித நிர்பந்தமும் இல்லாம உன்னை என்னோட வொய்ப்னு சொல்லிருக்கேன்…” என்றவனின் பேச்சில் பவித்ரா எந்த பாவனையையும் காண்பிக்கவில்லை.
இப்போது இப்படி பேசுபவன் தன்னை மீண்டும் வேண்டாம் என்பான் என்பதால் அமைதியாக நின்றாள். அவள் அப்படி இருப்பதே அவனுக்கு பெரும் உளைச்சலை கொடுக்க பத்து நிமிடங்கள் யோசித்தவன்,
“ஓகே கல்யாணம் பண்ணிக்கலாம். இப்பவும் சொல்றேன். என்னால உன் வீட்டோட ஒத்துப்போக முடியாது. என்னால முடிஞ்சது நீ போறியா போய்க்கோ, வந்துக்கோ. என்னை கூப்பிடாத. அவ்வளோ தான். இதுவுமே என் அம்மாவோட ஒரு ஆசைன்றதால தான் என்னால உன்னை ஏத்துக்க முடிஞ்சது…” என்றவன்,
“என்ன சைலன்ட்டா இருக்க? உனக்கு சம்மதமா சொல்லு. நாளைக்கே பண்ணிக்கலாம்…”
“நான் என்ன யாருமில்லாத அனாதையா?…” என்றாள் அவள்.
திடீரென விஜய் திருமணம் என்றதும் பதற்றம் தொற்றியது. முதல் முதலில் நடந்தேறிய சம்பவங்கள் எல்லாம் மொத்த தைரியத்தையும் வடிய செய்ய பதட்டம் உடலெங்கும் நடுக்கத்தை விதைத்தது.
“நீ என்னை அநாதைன்னு சொல்ற மாதிரி இருக்குது. ஆனா நான் அநாதை இல்லை. இப்பவும் அம்மா என் உணர்வோட இருக்காங்க. கூட இல்லைன்னாலும் அப்பா இருக்காங்க…”
“அச்சோ இல்லை, இல்லை. நான் அப்படி சொல்லலை…” என்றவள் கண்கள் கலங்க உதட்டை கடித்து அழுகையை அடக்கி நின்றாள். அவளை அழுத்தத்துடன் பார்த்தவனுக்கு அரைநொடி தாளவில்லை.
பவித்ராவின் கண்ணீரை விரல்நீட்டி துடைத்தவன் பின்னங்கழுத்துக்குள் கைகொடுத்து தன் தோளில் அவளின் முகத்தை புதைத்துக்கொண்டான்.
நிமிடங்கள் கடக்கும் முன் இருவருமே சுதாரித்து விலகி நிற்க விஜய்க்கு அந்த நிமிடங்களை கடக்க சற்று சிரமமாக இருந்தது.
தன் வைராக்கியத்திற்கும், எதிரே நிற்பவளின் வாழ்க்கைக்கும் இடையில் சிக்கி திணறிக்கொண்டு இருந்தான்.
“இப்போ என்னமோ ஆகுது நீ அழறது. இதுக்கு முன்னாடியும் என்னால நீ அழுதிருக்க. ஆனா இப்போ என்னமோ செய்யுது. ஆனா இதுவே லாஸ்ட் என் முன்னாடி நீ அழறது. நானும் நிறையவே உன்னை படுத்திட்டேன்…” என்று மிரட்டலாக சொல்ல அவனை எந்தவகையிலும் அவளால் அணுகமுடியவில்லை.
“கல்யாணம் பண்ணிப்போம். பார்ப்போம் லைப் எந்தளவுக்கு ஸ்மூத்தா போகுதுன்னு. ஆனாலும் இது நம்ம ரெண்டுபேருக்காக தான். அதை நீ மனசுல வச்சுக்கோ. அதே நேரம் நான் முடிஞ்சளவு உன்னை ஹர்ட் பண்ணாம இருக்க முயற்சி பன்றேன். சரியா?…” என்றான்.
இன்னும் அவளோடு தன் கையை கோர்த்திருந்த அவனின் கையை அழுத்தமாய் பற்றியவள் இப்படி தன் உணர்வுகளை மறைத்து அவனுக்காகவே இருந்து மறைந்துவிடுவோமோ என்று பயந்துபோனாள். மனது உருக்குலைந்து கிடந்தது.
தன்னை சொன்னவன் இப்போது தன் மீதான அக்கரையில் திருமணம் என்கிறான் என்று புரிந்தது அவளுக்கு. காதலில்லை. அடிப்பைடையான ஒரு பிடித்தம் இருக்கிறதா என்றால் எங்கேயும் அதுவும் தெரியவில்லை. ஆனாலும் விட்டுப்போக முடியாத ஒரு சூழ்நிலை.
“சரி சொல்லு, நீ என்ன நினைக்கிற?…” என்றவனிடம் பதில் பேசாமல் நிற்க எரிச்சலானவன் ஜெகனுக்கு அழைத்துவிட்டான்.
“எனக்கு பவியை கல்யாணம் செஞ்சுக்க தோணுது. அவ என்ன நினைக்கிறான்னு தெரியலை. ஆனா அவ சம்பந்தப்பட்டவங்க ஒருத்தரும் என்னோட இண்ட்ராப் பண்ணகூடாது அவ்வளோ தான். எனக்கு அவ மட்டும் போதும். நான் கிளம்பறேன். நீங்க அவக்கிட்ட பேசுங்க…” என்று சொல்லிவிட்டு,
“இங்க பாரு…” என்று நிமிர்த்தியவன்,
“நான் கிளம்பறேன். உன் மாமா பேசுவார். பேசிட்டு கூப்பிடு. இல்லைன்னா நான் அவர்க்கிட்டையே பேசிக்கறேன்…” என சொல்லி கிளம்பிவிட்டான்.
சப்பென்று ஆனது பவித்ராவிற்கு. இப்படி ஒரு திருமணம். இப்படி ஒரு வாழ்க்கை. கொஞ்சமும் காதலின்றி, எதற்காகவோ, யாருக்ககாவோ என்று நடக்க இருக்கிறது.
இதில் அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் தன் கண்ணீர் அவனை பாதிப்பது மட்டும் தான்.
அவளின் அம்னத்தின் முரண்பாடு அவளுக்கே புரியவில்லை. வேண்டாமா என்று இருந்தவன் இன்று திருமணம் வர வந்திருக்கிறான்.
அவனை நினைத்தே வாழ்க்கையை ஓட்டிவிடும் என்றிருந்தவள் இப்போது இப்படி ஒரு திருமணம் என்று அவன் வாயிலிருந்து கேட்டும் அவளால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை.
அங்கேயே கல் பெஞ்சில் அமர்ந்துவிட்டாள். ஜெகன் எப்படியும் அழைப்பான் என்று தெரியும். ஆனாலும் மேலே அறைக்கு செல்ல மனதில்லை.
தைரியமாக வீட்டை எதிர்த்து இருப்பதாய் அவள் நினைத்திருக்க இப்போதோ வெடவெடத்தது.
இப்போது வீட்டில் தெரிந்ததும் என்ன பேசுவார்கள் என்ற எண்ணமே அவளை சுற்றிக்கொண்டிருக்க நேரம் சென்றது.
இங்கே காரில் சென்றுகொண்டிருந்தவனின் மனதில் தான் எடுத்த முடிவு சரியா தவறா என்றே யோசிக்கவில்லை. ஏற்கனவே எடுத்திருந்தது தானே?
மதுவந்திக்காக எத்தனை யோசித்திருந்தான். அதில் பவித்ராவின் நலனும் அடங்கி இருந்ததே. ஏதோ ஒரு அழுத்தம். ஆனாலும் பவித்ராவை இப்படியே விடவும் மனதில்லை. எடுத்த முடிவு எடுத்தது தான் என்று இருந்தான்.
பாதி வழியிலேயே ஜெகன் அழைத்துவிட்டான் விஜய்க்கு. காரை ஓரம்கட்டி நிறுத்தியவன் அவனிடத்தில் பேச,
“இங்க நான் விஷயத்தை சொல்லவும் பிரச்சனை ஆகிருச்சுடா விஜய். நீ சொல்லும் போது பழனில தான் இருந்தேன். ரஞ்சனி அவ தாத்தாவை பார்க்கனும்னான்னு கூப்பிட்டு போயிருந்தேன். நீ பேசவும் நானும் மெல்ல போட்டுவச்சா இங்க குடும்பமே கிளம்பறாங்க அப்புவை இங்க கூட்டிட்டு வர…”
ஜெகன் சொல்லவும் விஜயின் மனதிற்கு என்னவோ சரியாக படவில்லை என்றே தோன்றியது. ப்ளூடூத்தில் காலை கனெக்ட் செய்தவன் காரை எடுத்தான்.
“அங்க கூட்டிட்டு போய் என்ன பண்ண போறாங்களாம்?…” என்றான் அமைதியாக.
“என்னடா பதட்டமே இல்லாம பேசற? அப்போ உனக்கு இது ஒரு விஷயமே இல்லையா?…” என கேட்க,
“எனக்கு புரியுது. நீங்க என்ன சொன்னீங்க? நான் இங்க தான் இருக்கேன்னு சொன்னீங்களா?…” என்றான் விஜய்.
“ஹ்ம்ம், அது ரஞ்சனி உளறிட்டா…” என மெதுவாய் சொல்ல,
“ஓஹ், ஓகே. இருக்கட்டும்…” என்றான்.
“என்னடா என்ன நினைக்கிற நீ?…” என ஜெகன் பதறினான்.
“நினைக்க என்ன இருக்கு? கிளம்பி வரீங்களா? வாங்க. வாங்க…” என்று அவன் சொல்லியவிதமே ஏடாகூடமாய் இருக்க,
“விஜய், என்ன சொல்ல வர?…” என்றான்.
“சொல்லும் போது கேட்டுக்கோங்க. இப்போ போனை வைக்கறேன். நைட் பேசறேன்…” என்று சொல்லி கட் செய்தவன் மீண்டும் பிஜிக்கு வா பவித்ரா தாங்கள் சற்று முன் பேசிய இடத்திலேயே தான் அமர்ந்திருந்தாள்.
உள்ளே செல்ல போனவன் தற்செயலாக திரும்பி பார்க்க அவள் அங்கேயே காலியா மடக்கி முகம் சாய்ந்து அமர்ந்திருப்பதை பார்த்ததுமே என்னவோ போல் ஆகிவிட்டது.
அவனுக்கு புரிந்தது முதல்நாள் ஜெகனிடம் பேசி என்னவென்று முழுவதும் தெரிந்துகொண்டதில் வசந்தி தன்னிடம் சிக்கட்டும் என இருந்தான்.
அவளுக்கே நெருங்கியவனின் கால் தடத்தின் சத்தத்தில் அவள் நிமிர்ந்து பார்த்தவள் காலை இறக்கிவிட்டு எழுந்தாள்.
“இன்னும் நீ உள்ள போகலை?…” என கேட்க,
“நீங்க என்ன திரும்ப?…” என்றவளுக்கு மீண்டும் என்ன பேசுவானோ என்றிருந்தது.
“உன்னை அழைச்சுட்டு போகலாம்ன்னு வந்தேன். வா போகலாம்…” என்றான் சட்டென்று.
“எங்க? எதுக்கு?…” என கேட்டவளுக்கு குழப்பமானது.
“ஏன் என்னோட வரமுடியாத?…” என்று கேட்டதுமே காரணமின்றி அவன் சொல்லமாட்டான் என்று தோன்ற,
“ஹ்ம்ம், சொல்லிட்டு வரேன்…” என்றவள் உள்ளே சென்று அறையை பூட்டிக்கொண்டு தனது போனுடன் வந்தாள்.
“கார்ல ஏறு…” என்றதும் யோசியாமல் அவள் அமர்ந்து கதவை சாற்றியதும் அவளையே அசையாத பார்வை பார்த்திருந்தவன் பார்வை சாலையின் பக்கம் திரும்பியது.
“எங்க போறோம்ன்னு கேட்கலை நீ?…” என்றான் காரை கிளப்பிக்கொண்டே.
“ஹ்ம்ம், போனா தெரிஞ்சிரும்…” என்று பவித்ராவும் சொல்ல,
“ஓஹ், உன்னை ஹவுஸ் அரஸ்ட் பண்ணலாம்ன்னு இருக்கேன். அதனால வீட்டுக்கு போறோம்…” என்றான்.
அவன் சொல்லவும் அவனை திகைப்புடன் பார்த்தாள் பவித்ரா. இன்று என்னாகிற்று இவனுக்கு என்னும் விதமாய்.
“உண்மை தான். இனி நீ என்னோட தான்…” என்று அவன் சொல்லவும் ஜெகன் அழைத்துவிட்டான் பவித்ராவிற்கு.
“சொல்லுங்க மாமா…” என்று அவள் பேசவுமே விஜய் வாய்க்குள் சிரித்தபடி காரின் வேகத்தை அதிகப்படுத்தினான் அவன்.
“என்ன சொல்றீங்க? நான் அவங்க வீட்டுக்கு போய்ட்டிருக்கேன். அவர் கூட்டிட்டு போறார்…” எனவும் ஜெகனுக்கு தலைசுற்றியது.
“அவன்கிட்ட போனை குடு அப்பு…” என்று சொல்ல,
“மாமா, உங்ககிட்ட…” என்று பவித்ரா மொபைலை நீட்ட,
“ஸ்பீக்கர்ல போடு…” என்றான்.
“ண்ணா…” என்று சிரிப்போடு விஜய் கேட்டதும்,
“அடேய் அடேய் இங்க ஏற்கனவே பிரச்சனை பெருசா ஆகிருச்சு. நீவேற ஏன்டா? என்னடா இது?…” என்று கேட்க,
“அதான் வரீங்களே? அப்பறம் என்ன? அவ சொன்னது காதுல விழுந்துச்சா? நாங்க எங்க வீட்டுக்கு போறோம். முடிஞ்சா அந்த எருமையை என்கிட்டே பேச சொல்லுங்க…” என்று சொல்லியவன் முகத்தை திருப்பவும் பவித்ராவின் முகம் கலவரமானது.
“பயமா இருக்கா?…” என்றான் போனை அவள் வைத்ததும்.
“ஹ்ம்ம்…” என்று அவனிடம் சொல்ல அவளின் கையை எடுத்து அழுத்திக்கொடுத்தவன்,
“நான் இருக்கேன். சில்…” என்றான்.