உருக்கம் – 21
வழக்கம் போல விஜய் கல்லூரிக்கு கிளம்பி நிற்க பவித்ரா தான் தன்னுடையை பேக்கை எடுத்துவைத்தபடி யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.
“ஓகே, போலாம் வா…” என்றதும் பதில் சொல்லாமல் அவனை பார்க்க,
“என்ன பழனி, டைம் ஆகலையா?…”
“ஆகிடுச்சு தான்…” என சுவற்றில் மாட்டியிருந்த பெரிய கடிகாரத்தை பார்த்தபடி சொன்னாள்.
“அப்பறம் என்ன? இங்க இருந்து போக ரொம்ப நேரமாகும். ட்ராபிக் ஆகிடும் இந்த மார்னிங்ல. அதனால எப்பவும் நான் இந்த டைம்க்கே கிளம்பிருவேன். உன் பிஜி மாதிரியா? எடுத்தும் பத்து நிமிஷத்துல வந்து சேர?…” என்றான் அவசரமாய்.
“அப்போ நீங்க கிளம்புங்க…”
“ஏன் நீ என்ன பண்ண போற? உனக்கு பதிலா நானா எக்ஸாம் எழுத முடியும்? டென்ஷன் பண்ணாத. வந்து ஊருக்கு கிளம்பனும்…”
“நான் இங்க இருந்து பஸ், ஆட்டோ பிடிச்சு வரட்டுமா?…” என்றதும் அவளை கடுமையாக முறைத்தான்.
“என்ன விளையாடுறியா?…” என கடுப்புடன் கேட்க,
“இல்லை, எனக்கு ஒருமாதிரி இருக்கு காலேஜ் வர. அங்க என்ன நினைப்பாங்களோன்னு…”
“ஷட் அப் பவித்ரா…” என அதட்டியவன்,
“வா…” என்று அவளை கைபிடித்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
கதவை பூட்டிவிட்டு கீழே வர அவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. தன்னை வகுப்பிலும், கல்லூரியிலும் எப்படி பார்ப்பார்கள் என்ற தவிப்பில் அவனை கெஞ்சலுடன் பார்க்க,
“ஏறு…” என்றான் பொறுமையாக.
“இல்லைங்க…” என மறுக்க,
“நானே இறங்கி உன்னை பிடிச்சு உள்ள தள்ளனுமா? ஏறுன்றேன்ல…” என்றதும் படக்கென்று கதவை திறந்து ஏறி அமர்ந்தவளின் முகம் கோபத்தில் சிவந்தது.
தன்னை அதட்டி அதட்டியே வழிக்கு கொண்டுவருகிறானே? தன்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என்று ஆதங்கம் கூடியது.
அவளின் அந்த கோப முகத்தை பார்க்க சிரிப்பு தான் வந்தது விஜய்க்கு. சிறுபிள்ளைகள் பிடிவாதத்தில் முகத்தை தூக்கி வைப்பதை போல அவள் அமர்ந்திருக்க,
“என்ன கோவமா?…” என கேட்டான்.
“இல்லையே…”
“என்ன இல்லையே? உன் முகத்தை பார்த்தாலே தெரியாதா என்ன?…”
“நான் எதுக்கு சொல்றேன்னு நீங்க கன்ஸிடர் பண்ணவே இல்லை. அதான் ஒருமாதிரி இருக்கு…”
“ஓஹ், அப்போ கன்ஸிடர் பண்ணிடலாமே…” என்றவன்,
“நீ இந்த இயர் இப்படித்தான் கம்ப்ளீட் பண்ண போற. யாரும் எதுவும் பேசட்டும். அதை ஏன் மைண்ட்ல ஏத்திக்கற? சில்…” என்றான் காரை லாவகமாய் செலுத்தியபடி.
“காலேஜ்ல, க்ளாஸ் ரூம்ல நான் தான் பேஸ் பண்ணனும். ஏன் சொல்லலைன்னு கேட்பாங்க…”
“எல்லாரும் உன்கிட்ட வந்து எல்லாமே சொல்லிட்டா இருக்காங்க? இது ரொம்ப சைல்டிஷ். நமக்கு எதை சொல்லனும், சொல்ல கூடாதுன்னு இருக்கும். எல்லாரையும் ஒரு லிமிட்ல வை…”
“என்னால உங்களை மாதிரி இருக்க முடியாதே?…”
“என்னாலயும் உன்னை மாதிரி பீல் பண்ணிட்டு இருக்க முடியாது. இந்த காலேஜ் வரும் போதே நீ என்னோட வொய்பா தானே ஜாயின் பண்ணின?…”
“என்ன?…”
“என்ன என்ன? அப்பவும் நமக்குள்ள இருக்கற ரிலேஷன்ஷிப் அதானே? இல்லைன்னு சொல்லுவியா என்ன?…” என்றான் கேலியாய்.
“அப்படி எல்லாம் நான் நினைக்கலை….”
“ஓஹ், நான் தான் தப்பா நினைச்சுட்டேன் போல?…” என்றான் அவன்.
“ப்ச், இதான் இதான் என்னால உங்களை புரிஞ்சு பதில் சொல்ல முடியலை. என்னால உங்களை ஹேண்டில் பண்ண முடியலை…” என்றதுமே ஆச்சர்யம் பொதிந்த பார்வையுடன் அவளை திரும்பி பார்த்தவனின் இதழ்களில் ரகசிய புன்னகை.
“நான் கேள்வி கேட்டா மட்டும் ஒன்னு சிரிக்கிறது. இல்லைன்னா ஷோல்டரை ஷேக் பன்றது…” என்று முணங்க இப்போது சத்தமாக சிரித்தான் விஜய்.
“ஹேய் கேர்ள், அது அப்படியே பழகிருச்சு. இது உனக்கு கஷ்டமா இருக்கா?…” என்றான்.
“இல்லை, ஆனாலும்…” என்று முணுமுணுக்க அவளின் கையை பிடித்துக்கொண்டான்.
“சும்மா எல்லாத்துக்கும் பயந்துட்டும், யோசிச்சுட்டும் இருக்காத. அப்பறம் லைப் அதுக்கே போய்டும். அதை விடு, நாளைக்கு நம்ம மேரேஜ். ஓஹ், ஹ்ம்ம். ரீ-மேரேஜ். உனக்கு அதை பத்தி எந்த யோசனையும் இல்லையா?…” என்றான்.
“ரீ-மேரேஜ்?…”
“ஆமா, இதை செகெண்ட் மேரேஜ்ன்னு சொன்னா ஹ்ம்ம், அது பிடிக்கலை. அதான் இப்படி….” என்று சொல்ல அவனின் அந்த இலகுத்தன்மை கூட அவளுக்கு ஏற்கமுடியவில்லை.
இவனால் எப்படி இத்தனை இயல்பாக சட்டு சட்டென்று முடிவெடுத்து அந்த முடிவில் தன்னை அழகாய் பொருத்திக்கொள்ள முடிகிறது என வியந்து பார்த்தாள்.
“இப்போலாம் என்னை நிறையவே சைட்டடிக்க நீ…” என்று விஜய் சொல்லவுமே படக்கென்று பார்வையை திருப்பிக்கொள்ள,
“ஆனா இந்த லுக் இனி க்ளாஸ் ரூம்ல வர கூடாது. புரியுதா?…” என்றான் சற்று கண்டிப்புடன்.
“நான் ஒன்னும் வேணும்னு பார்க்கலை…”
“ஓஹ், அப்போ வேண்டாம்னு பார்த்தியா?…”
“அச்சோ, அப்படி இல்லை. முதல்ல பார்க்க பயமா இருக்கும். அப்பறம், நீங்க பாடம் எடுக்கும் போது ரொம்ப அமைதியா இருக்கறவங்க எப்படி அத்தனை கோபமா இருந்தாங்கன்னு தோணும். அப்படியே பார்த்து பார்த்து…”
“பார்த்து பார்த்து?…” என்றான் அவளை போலவே.
“காலேஜ் பக்கத்துல வந்துட்டோமா?…”
“ஆமா, அதுக்கென்ன? ரெண்டு நாள் நீ வரலைன்னா உடனே மாறிடுமா என்ன? அதே காலேஜ் தான்…” என்றான் கிண்டலுடன்.
“ப்ச், இனி பேசினேனா என்னன்னு கேளுங்க…” என வாயை மூடிக்கொள்ள விஜய்யின் முகத்தில் அட்டகாசமான புன்னகை.
எப்போதும் கல்லூரிக்கு வரும் பொழுது தான் மட்டுமே வருவான். காரில் கல்லூரியை நெருங்கும் வரை பாட்டு சத்தம் தான் எப்போதும். இன்று அப்படி அதை அவன் நினைக்கவே இல்லை.
“ஹ்ம்ம், ப்ளசன்ட் மார்னிங்…” என்று அனுபவித்து சொல்ல அப்போதும் அவள் அவனை ஆராயும் பார்வை தான். அதை பார்த்ததும் கடுப்பாகிவிட்டான்.
“இறங்கி போடி. எப்ப பார்த்தாலும் டவுட்டாவே பார்க்கறது…” என்று சொல்லிவிட இன்னும் அதிர்ந்து போனாள்.
“கோவமா?…”
“பின்ன? சும்மா இருக்கும் போது பார்த்துட்டே இருக்கறது. நான் ஒரு நல்ல மைண்ட்செட்ல பேசினா டவுட்டா பார்க்கறது. கோவம் வராம எப்படி?…” என்றான்.
“நான் ஒன்னும் வேணும்னு அப்படி பார்க்கலை…” என்றாள் மீண்டும்.
அவனின் கோபத்தினால் அவள் இன்னும் பதட்டத்துடன் இருக்க தன்னை சற்று ஆசுவாசப்படுத்தினான் விஜய்.
“ஓகே, நானும் கோவப்படல. சட்டுன்னு வந்திருச்சு…” என்றவன் லாக்கை எடுத்துவிட்டு,
“இறங்கு….” என்று சொல்லவும் வெளியே பார்த்தவளுக்கு எல்லோரும் தங்களையே பார்ப்பதை போல விஜய்யை திரும்பி பார்த்தாள்.
“நம்மளை தானே பார்க்கறாங்க….” என்று பாவமாய் சொல்லியவளை லேசான சிரிப்புடன் பார்த்தவன்,
“சோதிக்காத பழனி. இங்க வச்சு உன்னை ஆறுதலா கூட ஹக் பண்ணிக்க முடியாது. இறங்கு. ஒழுங்கா எக்ஸாம் முடிச்சுட்டு வா….” என்று சொல்லி அவளின் வலதுகையில் அழுத்தம் கொடுக்க தலையசைத்தாள்.
“ஹேய் கேர்ள்…” என அழைத்து,
“பெஸ்ட் ஆஃப் லக்…” என்றான்.
“பை…” என்று அவளும் இறங்கி சென்றதும் தானும் தனது பேக்குடன் கீழே இறங்கி காரை லாக் செய்துவிட்டு நடக்க அனைவருமே அவனையும், பவித்ராவையும் தான் பார்த்தார்கள்.
இதில் அவனருகே வந்து பேச யாருக்கும் தைரியமில்லை. ஆனால் பவித்ரா அப்படி அல்லவே. அவளின் தோழிகள் எல்லோரும் வந்து சூழ்ந்துகொள்ள திணறி போனாள்.
அத்தனை பேரும் அவளுக்கு வாழ்த்து சொல்வதும், மறைத்துவிட்டாயே என்று கேள்வி எழுப்புவதுமாக இருக்க அவள் பதில் சொல்லமுடியாமல் நடுவில் நின்றுகொண்டிருக்க விஜய்யோ விறுவிறுவென்று வந்தான்.
“எக்ஸாம் இருக்கு தானே? க்ளாஸ்க்கு போகாம இங்க என்ன பன்றீங்க?…” என்றான் வந்ததும் அந்த கும்பலை பார்த்து.
“கங்க்ராட்ஸ் ஸார்…” என விகாஷினி சொல்ல,
“ஹ்ம்ம்…” என்று மட்டும் தலையசைத்தவன்,
“கோ…” என்றான் அனைவரையும் பார்த்து.
அதன்பின்னர் அனைவரும் கலைந்து செல்ல அதற்கு எதிர்ப்பக்கமாய் இருந்த தன்னுடைய ஸ்டாஃப் ரூமிற்கு சென்றான்.
“வாங்க விஜய் ஸார். கல்யாணம் ஆனதையே சொல்லலையே…” என அவனுக்கு அங்கிருக்கும் சில நல்ல நட்புகள் கேட்க அனைவருக்கு ஒரு சின்ன சிரிப்பு தான்.
“எப்படி ஸார் வொய்பை பிஜில தங்கவச்சிருந்தீங்க? அதுவும் அவங்க உங்க கூடவும் இத்தனை வருஷமா இல்லை போல? உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு கூட அஷ்வினி மேம் சொல்லவும் தான் எங்களுக்கு தெரியும். அவங்கட்ட எல்லாம் சொல்லிருக்கீங்க…” என கணேஷ் நக்கலுடன் கேட்க,
“இந்தாளுக்கு எம்புட்டு பட்டாலும் புத்தி வராது. நல்லா விஜய் சார்க்கிட்ட வாங்க போறாரு…” என்று உடன் வேலை செய்யும் ஆசிரியை சொல்ல அதை போல தான் பேசினான் விஜய்யும்.
“ஏன் கணேஷ், மார்னிங் ப்ரேக்பாஸ்ட் எதுவும் எடுத்துக்கலையா? என்னோட குடும்ப விஷயத்தை வாங்கி காதுல போட்டு வயித்துக்கு அனுப்ப போறீங்க போல? நிறைஞ்சிருமா?…” என்ற விஜய்,
“இதுதான் உங்க லிமிட், நான் ஒவ்வொருதடவையும் வார்னிங்கோட போய்ட்டு இருக்கமாட்டேன்….” என்று கோபத்துடன் அவன் சொல்லிவிட,
“உங்களுக்கு ஏன் ஸார் இந்த வேலை எல்லாம்?…” என்று அனைவருமே கணேஷை பார்த்து கேட்டனர்.
“ஓகே, விஜய் ஸார் அவரை விடுங்க. கண்டுக்காதீங்க. எங்களுக்கு எப்போ ட்ரீட் குடுக்க போறீங்க?…” என்றார் இன்னொருவர்.
“குடுக்கலாமே. இந்த எக்ஸாம் முடியட்டும். ஒரு நாள் பிக்ஸ் பன்றேன்…” என்று சொல்லிவிட்டு சென்றான்.
அன்றும் அவனுக்கு பவித்ரா பரிட்சை எழுதும் அறையில் தான் பணி. ஆனால் அதை மாற்றிக்கொண்டு வேறு வகுப்பிற்கு சென்றுவிட்டான்.
ஒருவழியாய் வகுப்பு முடிந்து பவித்ரா வெளியே வர விஜய் அவளுக்கு அழைத்து தாளாளர் அறைக்கு வரும்படி சொல்லவும் தோழிகளிடம் சொல்லிவிட்டு அவள் அங்கே சென்றாள்.
“ஸார்…” என்று அவள் கதவை தட்டியதும்,
“உள்ள வா பவித்ரா…” என்றான் விஜய்.
“வெல்கம் மிஸஸ் விஜய்…” என்று தாளாளரும் சேர்ந்து சொல்ல சற்றே கூச்சத்துடன் அங்கே சென்றாள்.
“உட்கார்…” என விஜய் சொல்லவும் அவனருகே இருந்த இருக்கையில் அமர்ந்துகொள்ள,
“எக்ஸாம் எப்படி எழுதிருக்க? பாஸ் பண்ணிடுவ தான?…” என்றான் வேண்டுமென்றே சீண்டலாய்.
“டேய், இப்ப இதான் முக்கியமா? கேட்கறான் பாரு கேள்வி?…” என்று அவர் விஜய்யை அதட்ட இருவரையும் பார்த்து விழித்தாள் இவள்.
“இவர் எனக்கு அங்கிள் தான். அப்பாவோட க்ளாஸ்மேட், ப்ரென்ட், எங்க வெல்விஷர் இப்படி எல்லாம். நாளைக்கு நம்ம மேரேஜ்க்கு ஏற்பாடும் இவர் தான்…” என விஜய் சொல்லவும் அவளுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.
“ஹலோ சொல்லு, பேசு. ஏன் சைலன்ட்டா இருக்க?…” என்று அவன் சொல்ல,
“ஹலோ ஸார்…” என்றாள் அவள் கீ கொடுத்த பொம்மையாய்.