உருக்கம் – 9
பவித்ரா இன்னும் திகைப்பிலிருந்து வெளிவராதவளாக அவனையே பார்த்திருக்க தன் பார்வையை அவளிடமிருந்து மீட்டுக்கொண்டான் விஜய்.
காரில் ஒளிர்ந்த விளக்கை அணைத்துவிட்டு கிளப்பியவன் மெல்ல மெல்ல ஊர்ந்து வீடு வந்து சேரவே நேரம்பிடித்தது.
மழை முன்னைவிட இன்னும் பலமாக பெய்ய நிச்சயம் இது குறைய வாய்ப்பில்லையோ என்ற என்னத்ததை தான் விதைத்தது.
காரை வீட்டில் பார்க் செய்தவன் விளக்கை போட்டுவிட்டு பவித்ராவை பார்க்க ஒடுங்கிப்போய் குளிரில் நடுங்கியபடி உறங்கி இருந்தாள்.
எழுப்பவே பாவமாக இருக்க அதற்கு அங்கேயும் இருக்கமுடியாதே என்று மெல்ல அவளின் தோளில் தட்டினான்.
“ஹ்ம்ம், ம்மா…” என்று முழித்தவள் விஜயை பார்த்ததும் சுற்றிலும் பார்த்தாள்.
முதல்முறை அவனின் வீடு வருகிறாள். ஆனால் இருள் சூழ்ந்து தெருவிளக்கு கூட இல்லாத இந்த பேய்மழையில் காரைவிட்டு இறங்கவே அச்சமாக இருந்தது.
“இறங்குன்னா சுத்தி சுத்தி பார்த்துட்டு இருக்க? கீழே தண்ணி இருக்கும். பார்த்து காலை நல்லா ஊன்று…” என்று தன் மொபைல் டார்ச்சை காண்பித்தான்.
கீழே கால் வைக்க போனவள் அந்த டார்ச் வெளிச்சத்தில் ஒரு தவளை துள்ளி ஓட அலறிக்கொண்டு உள்ளே மீண்டும் கதவை சாற்றிவிட்டு அமர்ந்துகொண்டாள்.
“என்ன?…” என்று விஜய் பதறிவிட,
“தவளை, தவளை ஓடுது…” என்று அவனுக்கும் சொல்ல அவளின் பயத்திலும், அலறலிலும் வாய்விட்டு சிரித்தவன்,
“பேச்செல்லாம் சும்மா சவடாலுக்கு தான். கொஞ்சமும் தைரியமில்ல இல்லையா?…” என்று சிரிக்க,
“எங்க நீங்க தவளையோட இறங்குங்க பார்ப்போம்…” என்று பவித்ராவும் துடுக்காய் சொல்ல,
“வொய் நாட் கேர்ள்?…” என்று தன் பக்க கதவை திறந்து இறங்கிவிட்டவன் மறுபக்கம் வந்து பவித்ராவின் பக்க கதவையும் திறந்து அவளை இறங்க சொன்னான்.
“மழை பெருசா பெய்யுதும்மா. கீழே இறங்கு. கொஞ்சம் நேரத்துல இந்த தண்ணியும் இன்னும் மேல ஏறலாம். காருக்குல்லையே இருக்க முடியாது. சொன்னா புரிஞ்சுக்கனும்…” என்றான் தன்மையுடன்.
கோபம், நக்கல், திமிர், கிண்டல், தெனாவெட்டு என்று அவனின் பலபரிமாணங்களை பார்த்தவள் இந்த பேச்சு புதிதாய் இருந்தது.
“ப்ச்…” என்று சலித்தவன்,
“அப்படியே உன் பெரியப்பன் புத்தி. ஏன் எதுக்கு சொல்றேன்னு கேட்கறதே இல்லை. தப்பாம வந்து வாய்ச்சிருக்க…” என கடுகடுத்துக்கொண்டே அவளின் கையை வலிக்க பிடித்து கீழே இறக்கிவிட்டான்.
பாதம் மூழ்கும் அளவிற்கான அந்த நீரில் மரத்தின் சருகுகளோடு ஏதேதோ ஒராய அதில் காலில் பட்டதும் இன்னும் பயத்தில் துள்ளி அவனின் சட்டையை பிடித்துக்கொண்டாள்.
“ஆடாம நில்லு பழனி….” என்று அவளை இடையோடு பிடித்து நிறுத்தியவன்,
“காரை லாக் செய்யனும். மொபைலும் கீழே விழுந்துரும்….” என்று அவளை லேசாய் அதட்டிவிட்டு காரை லாக் செய்தவன் டார்ச்சை படி இருக்கும் திசைக்கு திருப்பினான்.
“மெல்ல காலை எடுத்து வை, அங்கங்க மேடும் பள்ளமுமா இருக்கும். ஒரு ஈவனா இல்லை இந்த தரை….” என்று சொல்லி சொல்லி படியில் அவளை ஏற்றியதும் தான் நிம்மதியானான்.
“வந்தாச்சு. இந்த போனை பிடி…” என்று அவளிடம் தந்துவிட்டு குடையை மடக்க இன்னும் ஷர்ட்டை அவள் பிடித்திருந்தாள்.
“என் ஷர்ட்டை விட்டுட்டு அப்படியே மாடிக்கு போ…” என்று சொல்லவும்,
“இல்ல நீங்க முதல்ல போங்க…” என்றாள் பவித்ரா.
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் குடையை உதறிக்கொண்டு மொபைலை வாங்கிவிட்டு உள்ளே நடந்தவன்,
“இந்த குடையை பிடிச்சு கூடவே வா. படி வழுக்கும்…” என சொல்லி சொல்லி வாசலுக்கு அழைத்து வந்து கதவை திறந்தவன்,
“உள்ள வா…” என்று அழைத்தான்.
அசையாமல் அங்கேயே நிற்க அவளை கண்டு இப்போது கோபம் வந்தது. ஒன்றொன்றிற்கும் தன்னை பேசவைத்து வேடிக்கை பார்க்கிறாளே என எரிச்சலாக பார்த்தான்.
ஏற்கனவே பயந்து போயிருக்கிறவள், ஜெகன் வேறு வீட்டில் ஏதோ பிரச்சனை என்று சொல்லிய ஞபாகம் வர தன்னை முயன்று நிதானித்தவன்,
“இங்க உனக்கு ஆரத்தியா எடுக்க முடியும்? மழை தண்ணி வீடெல்லாம் ஆக போகுது. உள்ள வான்னு சொல்றேன்ல…” என்று அவளை தானே உள்ளே இழுத்து கதவையும் பூட்டினான்.
“இன்வெட்டர்க்கு என்னாச்சுன்னு தெரியலையே. இப்போ இந்த நேரத்துல பார்க்கவும் முடியாது. ஒரு நிமிஷம் இரு…” என்றவன் மெழுகுவர்த்தியை எடுக்க செல்ல அங்கேயே நின்று வீட்டை சுற்றி பார்த்தாள்.
ஓரளவிற்கு அந்த இருள் அவளின் கண்களுக்கு பழக்கப்படிருக்க அனுமானமாக பொருட்கள் எல்லாம் கண்ணில் பட்டது.
“வா, ரூம்க்கு…” என்று மெழுகுவர்த்தியுடன் பக்கவாட்டில் இருந்த அறைக்குள் நுழைந்தவன் அவளையும் பார்த்துக்கொண்டே உள்ளே வந்து ட்ரெஸ்ஸிங் டேபிளில் மெழுகுவர்த்தியை வைத்துவிட்டு,
“இந்த ரூம் நீ யூஸ் பண்ணிக்கோ. நாளைக்கு மழை குறையவும் உன்னை பிஜில கொண்டுபோய் சேர்த்திடறேன். ஓகே…” என்றவன் அந்த அறையில் இருந்த பிரெஞ்ச் விண்டோவை திறந்து வைத்தான்.
“இந்த மழையில குளிர்ல ஃபேன் இல்லைன்னே தோணாது. இந்த ரூம் சும்மாவே கூலிங்கா தான் இருக்கும். அதனால வெளி காத்தே போதும். பால்கனில ஃபுல்லா கவர் பண்ணி தான் இருக்குது. நீ இதை திறந்து வச்சுட்டு தூங்கலாம். உனக்கு பயமா இருந்தா பூட்டிக்கோ…”
“தேங்க்ஸ்…” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“இட்ஸ் ஓகே…” என்று சொல்லி அவன் வெளியேறிவிட தன்னிடம் இத்தனை பொறுமையாகவும் அவன் இருக்க கூடுமா என்று யோசித்தபடியே அவள் இருக்க அப்போது தான் தன்னுடைய பேக்கை எடுத்து வராதது ஞாபகம் வந்தது.
“அச்சோ பேக்?…” என தலையில் கை வைத்தவள் வெளியே செல்ல போக விஜய்யும் உள்ளே நுழைய அவனை மோதி தடுமாறி பின்னால் நகர்ந்ததில் பதறிப்போனாள்.
“ஹேய் ரிலாக்ஸ் கேர்ள்….” என்றவனின் குரலே வித்தியாசமாய் இருக்க அவளை விழாமல் ஒரு கையால் அவன் நிறுத்தியிருந்ததில் வியர்க்க ஆரம்பித்தது.
“விடுங்க, விடுங்க…” என்று அவனின் கையை பதட்டத்துடன் தட்டிவிட்டவள் பின்னால் நகர்ந்தாள்.
“என்ன? என்னாச்சு?…” என அவன் இன்னும் முன்னேற அந்த அரையிருளில் அவனின் முகத்தையும் கவனியாமல் மனதிற்கு ஏதேதோ எண்ணங்கள் சுருள ஒருநொடி அவனை ஏதோவென்று சிந்தித்துவிட,
“வேணாம், வேணாம். என்னை பிஜில கொண்டுபோய் விடுங்க. நான் இருக்கமாட்டேன். வேணாம். பக்கத்துல வராதீங்க…” என்றபடி முகத்தை மூடிக்கொண்டு அப்படியே மறைந்து அமர்ந்துவிட விஜய் திகைத்து போனான்.
ஒருநிமிடம் அவள் தன்னை என்ன என்று நினைத்துவிட்டாள் என்பதில் சுறுசுறுவென கோபம் மூண்டாலும் இன்னும் கோழிகுஞ்சாய் நடுங்கியபடி அவள் மடங்கி அமர்ந்து அவள் உளறிக்கொண்டிருந்ததை பார்த்தவனுக்கு புன்னகை மலர்ந்தது.
“அட அறிவே, உனக்கு கொஞ்சமும் சென்ஸ் இல்லையா?…” என காலை மடக்கி அவளின் உயரத்திற்கு அமர்ந்து அவன் கேட்கவும் இன்னும் நிமிராமலே அவள் இருக்க,
“உனக்கு டவல் எடுத்து குடுக்கத்தான் வந்தேன். இப்போ திரும்ப கீழே போய் உன் பேக் எடுத்துட்டு வரமுடியாது. காலையில தான் எடுத்துக்கனும். நீ எதாச்சும் என்னோடதை எடுத்து யூஸ் பண்ணிட கூடாது பாரு. அதான்…” என்று சொல்லவும் தான் மெல்ல நிமிர்ந்தாள்.
அவளை தாண்டி சென்று வாட்ரோப்பில் இருந்த புது டவல் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“யூஸ் பண்ணிட்டு போகும் போது கொண்டு போய்டு…” என்ற சொல்லி மீண்டும் அறையின் கதவை நெருங்கியவன்,
“ஆனா உன் குடும்பத்துக்கே ஒருசில புத்தி இருக்கும்ல. அது எந்த காலத்துலயும் போகாதுன்னு நீயும் ப்ரூவ் பண்ணிட்ட இந்த நிமிஷம்…” என நக்கலாக சொல்ல,
“ஸாரி, நான் ஏதோ பதட்டத்துல…” என்று பவித்ரா விளக்கம் கொடுக்க பார்க்க,
“உன்னோட ஸாரிய நாளைக்கு நீ கிளம்பும் போதே கொண்டு போய்டு. மன்னிப்பால எதுவுமே இல்லைன்னு ஆகிடாது. ஓகே…” என்றான் அழுத்தமாய்.
“இனிமே இப்படி நடக்காது…”
“இனிமே இப்படியும் நடக்காது. ஐ மீன், உன்னை இப்படி கூட்டிட்டு வந்து பாதுகாக்கறது…” என்று சொல்லவும் பவித்ராவிற்கும் தன்மானம் பொங்கியது.
“இவ்வளவு வெறுப்போட என்னை நீங்க கூட்டிட்டே வந்திருக்கவேண்டாம். எங்கயுமே என்னை யாருமே புரிஞ்சுக்கறதில்லை. இப்போ நான் பண்ணினது என்னையறியாம ஏதோ ஒரு வேகத்துல. தப்புதான். அதுக்காக…”
“எல்லாருக்குமே தன்னையறியாமன்னு ஒரு வேகம் வரத்தான் செய்யும். அப்படி ஒரு சூழ்நிலையை கொஞ்சமாவது யோசிச்சு பார்க்கனும். உன் பெரிய்ய்ய அப்பன்?…” என்றதும் பவித்ரா முறைக்க,
“என்ன? என்ன? அப்பன்னு சொன்னதும் சுர்ருன்னு ஏறுது போல? ர்ர்ர்ர விட்டுட்டேன்னு முறைச்சு பார்க்கற? அந்த பெருமைக்கு அப்பர்லாம் இல்லை. லோயர் தான். என்கிட்டே அதை எதிர்பார்க்காத…” என்று சீறிக்கொண்டு வர,
“இப்ப எதுக்கு இதை எல்லாம் பேசறீங்க? நான்தான் ஒன்னும் கேட்கலையே?…”
“ஆனா முறைச்சுட்டு நிக்கிற?…” என்று கடுப்புடன் பார்த்தான் அவன்.
“நீங்க என் பெரியப்பாவை அப்படி பேசறது ஒன்னும் புதுசில்லையே…” என பவித்ரா சொல்ல,
“ஞாபகம் இருந்தா சரி…” என்றவன்,
“உன்கிட்ட போய் ஆர்க்யூ பன்றேன் பாரு…” என தன் தலையிலடித்துக்கொண்டான்.
“படுத்து தூங்கு. காலையில பார்க்கலாம்…” என்று சொல்லி அறை கதவை அடித்து சாற்றிவிட்டு செல்ல கட்டிலில் அமர போனவள் பின் ரோஷத்துடன் பெட்ஷீட்டை கீழே விரித்து படுத்துகொண்டாள்.
நேரம் போக போக குளிர் அதிகமாக தாங்கமுடியாமல் எழுந்து மீண்டும் கட்டிலில் வந்து படுத்துவிட்டாள்.
‘இந்த ரோஷம் தேவையா உனக்கு? முதல்லையே இங்கயே படுத்திருந்திருக்கலாம்’ என தன்னையே நொந்துகொண்டு உறங்கி போனாள்.
காலை அந்த குரலில் பதறியடித்து கண்விழித்தவள் எழுந்தமர பால்கனி பிரெஞ்ச் விண்டோ போட்டப்பட்டு ஸ்க்ரீன் இழுத்திவிடபட்டிருந்தது.
மிதமான வேகத்தில் ஃபேன் ஓடிக்கொண்டிருக்க விஜய் தான் வந்து கதவை பூட்டியிருப்பான் என்று நினைத்தபடி முகத்தை துடைத்துக்கொண்டாள்.
“மாறா டைம் ஆச்சு. சாப்பிட வாப்பா…” என மீண்டும் அதே குரல்.
பவித்ராவிற்கு தொண்டை வறண்டது. தனக்கு தான் கேட்கிறதா? தனக்கு மட்டுமா? இது எப்படி சாத்தியம்? என்ற பயத்துடன் அந்த அறையை ஒருமுறை சுற்றிலும் பார்த்தாள்.
“மாறா…” என மீண்டும் குரல் கேட்க அடித்துபிடித்து எழுந்தவள் உடல் சலசலவென்று வியர்க்க கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவள்,
“என்னங்க, என்னங்க எங்க இருக்கீங்க?…” என கத்தியதில் கிட்சனில் இருந்து எட்டி பார்த்தான் விஜய்.
“என்ன என்னாச்சு?…” என அங்கிருந்தே கேட்க,
“மாறா காலேஜ் கிளம்பனும்…” என்ற குரலில்,
“ம்மா இன்னைக்கு மழை. காலேஜ் மட்டுமில்ல மொத்த சென்னையும் லீவ்…” என்று விஜய்யும் பதில் சொல்ல அவனையும் மிரண்டு பார்த்தாள்.
“காபியா? டீயா?…” என்றான் இன்னும் பீதியுடன் இருந்தவளை பார்த்து.
“ஓகே, ஆனா நான் இன்னைக்கு என்ன போட்டிருக்கேனோ அதுதான். டீ தான் போட்டிருக்கேன். ப்ரெஷ் பண்ணிட்டு வா. பாத்ரூம்ல எல்லாமே புதுசு எடுத்து வச்சுட்டேன். இப்ப வெளில போகவோ உன் பேக் எடுக்கவோ முடியாது. எல்லா பக்கமும் வெள்ளம்….” என சொல்ல,
“ஸார்…” என்றாள்.
“முதல்ல போய் ப்ரெஷ் பண்ணாம நீ குடிப்பியா? நோ ப்ராப்ளம்…” என்று அவன் சொல்லவும் வேகமாய் சென்றுவிட்டாள்.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. முணுக்குன்னா கோபம் வந்திரும். போவியா…” என்று விஜய்யும் அவளின் கோபத்தை விமர்சிக்க அறைக்குள் வந்தவள் வேகமாய் முகம் கழுவி பல்துலக்கிவிட்டு வந்தாள்.
ஹாலிலேயே அமர்ந்திருந்தான் விஜய். டீப்பாயில் ஒரு ப்ளாஸ்க்கும் டீ கப்பும் இருந்தது.
“ஹ்ம்ம், வா…” என்று அவள் வந்ததும் சாய்ந்திருந்தவன் எழுந்தமர்ந்து அவளுக்கு டீயை ஊற்றி நீட்டினான்.
“காலேஜ் போற நேரம் டைம் இருந்தா டீ. இல்லைன்னா அவசரத்துக்கு இன்ஸ்டன்ட் காபி தான். பிடிக்காது. ஆனாலும் வேற வழியில்லையே. இன்னைக்கு வீட்டுல. அதான் டீ…” என பேசிக்கொண்டே குடிக்க பவித்ரா அவன் பேச்சை காதில் வாங்கினாலும் பார்வை அந்த வீட்டை சுற்றியே வலம் வந்தது.
“வாய்ஸ் கேட்டதும் பயந்துட்டியா?…” என்றான் நேரடியாக அவன்.
“ஹ்ம்ம், என்ன?…”
“அம்மா வாய்ஸ் கேட்டதும் பயந்துட்டியான்னு கேட்டேன்…” என்றான் இப்போது தெளிவாய்.
“இல்லை இல்லை. ஹ்ம்ம், ஆமா. கொஞ்சம்…” என்று முதலில் மறுத்து பின் ஒப்புக்கொள்ள டீயை குடித்துவிட்டு ரிமோட்டால் ஒரு பட்டனை அழுத்தினான்.
“மாறா, காலேஜ் கிளம்பிட்டியா?…” என்று அந்த குரல் கேட்க பவித்ரா நிமிர்ந்து விஜய் காட்டிய பக்கம் பார்த்தாள்.
சிறிய அளவிலான ஒரு ஸ்பீக்கர். இதையே விஜய்யின் அறையிலும் பார்த்தோமா என்று யோசிக்க,
“மாறா, காலேஜ் விட்டு இப்பத்தான் வரியா? மாறா, டின்னருக்கு நேரமாகலையா? என்ன பண்ண போற?…” இப்படி அந்த குரல் அத்தனை கேள்விகளும் சில கண்டிப்புகளும், அங்காங்கே கொஞ்சல்களும் என்று இருக்க பவித்ராவிற்கு விழிகள் கலங்கிவிட்டது.
“அம்மா வாய்ஸ், எப்பவோ ஒரு விளையாட்டா ரெக்கார்ட் பண்ணினது. இப்போ அதுதான் துணைன்னு ஆகிடுச்சு…” என்றவன் குரலில் அத்தனை வெறுமை.
பவித்ராவும் விஜய்யின் துக்கத்தில் ஒருநொடி கலங்கி போனவள் அப்போதுதான் ஞாபகம் வர,
“அவங்க, அவங்க இல்லையா?…” என்றாள் மெல்ல.
“எவங்க?…” என்றான் பின்னால் சாய்ந்துகொண்டு.
“உங்க அப்பா. அவங்க, அவங்களுக்கு எதுவும்…” என்று வார்த்தைகளை அடக்கிக்கொள்ள,
“இல்லை எனக்கு தெரியலை…”
“ஏன் என்னோட அப்பாவும் செத்துட்டார்ன்னு நினைச்சிட்ட போல?…” என்றான் அதே பாவனையில் அவளை பாராது.
“இல்லை அப்படி இல்லை…” என்றவளின் தயக்கமே அவள் நினைத்ததை நிரூபித்தது.
“இருக்கார், எங்கையோ…” என்றான் விஜய்.
“எப்படி இருக்காங்க? ஏன் உங்க கூட இல்லை?…” என கேட்டவளை பார்த்து உறுத்து விழித்தவன்,
“என்ன கேட்ட? ஏன் இல்லையா? ஏன் உனக்கு தெரியாதா? எங்கப்பா இப்ப இப்படி இருக்க காரணமே உன் பெரியப்பா தான்னு உனக்கு தெரியாதா? கொஞ்சம் கூட மனுஷதன்மையே இல்லாம துக்கம் விசாரிக்க வந்த மனுஷங்களை அடிச்சு விரட்டினாரே?…” என்று அவளின் கழுத்தை நெறிப்பதை போல ஆக்ரோஷமாக வந்தவன்,
“உன் பெரியப்பன் கண்ணுல விழாதவரைக்கும் நல்லா சந்தோஷமா தான் இருந்தோம். வேணாம். இந்த பேச்சை விட்டுட்டு போ. என் கண்ணுமுன்னாடியே நிக்காத. என் குடும்பத்தை நாசம் பண்ணினவன் பொண்ணையே நான் பார்த்துக்கற கொடுமை ச்சை…” என்று கோபத்துடன் எழுந்து இன்னொரு அறைக்குள் நுழைந்துவிட்டான் விஜய்.
————————————————-
சில வருடங்களுக்கு முன்….
கோவை மருதமலை முருகன் கோவில் வளாகத்தில் தரிசனத்திற்காக காத்திருந்தான் விஜய் தன் குடும்பத்துடன்.
“ஹ்ம்ம், சும்மா ஒரு ட்ரிப் போலாம்ன்னா கோவில் கோவிலா கூட்டிட்டு போய்ட்டிருக்கீங்க மதும்மா…” என்று தாயிடம் சலிப்புடன் விஜய் பேச,
“ஹ்ம்ம், நாலு வருஷத்துக்கு ஒருதடவை தமிழ்நாட்டுல உள்ள எல்லா கோவிலுக்கும் போகலைன்னா மதுவுக்கு அந்த வருஷம் முடிஞ்சமாதிரியே இருக்காதே விஜய்…” என்றார் மாதவக்குட்டன்.
அப்பட்டமான மலையாளவாசம் அவரின் பேச்சில் தெறிக்க இருவரையும் சிரிப்போடு பார்த்தார் மதுவந்தி.
“இதுல அப்படியே அம்மாவுக்கான சப்போர்ட் தான் தெரியுது. அதுவும் எக்கச்சக்க லவ்வோட. ஹ்ம்ம், நல்லா பன்றீங்க…” என்று சிரித்தான்.
“இன்னும் எவ்வளவு நேரம் இங்க இருக்கனும் மது?…”
“வந்தது இப்படி உடனே கூட்டத்தோட சாமி கும்பிடவா? கொஞ்சம் கூட்டம் குறையட்டும். உள்ளே நெரிசல் அதிகமா இருக்கும். போயிருக்கறவங்க எல்லாம் இப்ப வெளில வந்திருவாங்க தானே? பொறுமையா போவோம்…” என்றார் மதுவந்தி.
அவரின் எண்ணங்கள் எப்போதும் வேறுவிதமானவை. தெய்வங்கள் மீது அலாதி பற்றுடையவர்.
அதேநேரம் விசேஷநாட்களில் கூட்டத்துடன் போய் சாமிகும்பிட என்றுமே விருப்பமில்லாதவர்.
அமைதியாக கூட்டமின்றி நிம்மதியாக, அவசரமின்றி நிதானமாக தெய்வத்தை கண்குளிர பார்த்து ரசித்து கண்களில் நிறைத்து மனமுருகி வேண்டி கும்பிடவேண்டும் என நினைப்பவர்.
மாதவனும் மனைவியின் மனதறிந்தவர். பில்லையும் அப்படியே அவரின் விருப்பம் என்றே வந்திருக்க முழுமையாக உணர்ந்தார் தன் வாழ்க்கையை.
படித்து முடித்து வேலைக்கு செல்லும் இடத்தில் மனதிற்கு பிடித்த மாதவனை விரும்பி கைபிடித்துக்கொண்டவர்.
குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர்களை உதறி மாதவனோடு கேரளா சென்றுவிட்டவர்.
இன்றளவும் தன் குடும்பத்தின் கோபம் தான். காதலிக்க கூடாது என்று சொல்லும் வரை சரி.
ஆனால் கௌரவத்திற்காக, அந்தஸ்திற்காக என்று கொஞ்சமும் ஒழுக்கமில்லாத ஒருவனுக்கு மணமுடிக்க குடும்பத்தினர் முயல அத்தனையையும் உதறிவிட்டு வந்துவிட்டார்.
‘வீட்டோடையே இருன்னு விட்டிருந்தா கூட காலத்துக்கும் கல்யாணம் செஞ்சுக்காம இருந்திருப்பேன். அவங்க நினைச்சதை சாதிக்க என்னை பலியாக்க நினைக்கிறாங்க’ என எப்போதும் மாதவனிடம் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்.
“ம்மா…” என்று விஜய் அவரின் தோளை தட்ட,
“ஹ்ம்ம்…” என்று திரும்பியவரின் பார்வை இப்போது கோவிலில் இருந்து வெளியே வந்தவர்களிடம் நிலைத்தது.
“ஹப்பா ஒரு பெரிய கும்பல் கிளம்பிட்டாங்க…” என்று விஜய் சொல்ல,
“மாறா அங்க பாரேன்…” என மாதவன் காட்டிய திசையில் ஒரு பெண் தண்ணீர் பைப் அருகே வந்தாள்.
கோவிலில் அனைவருக்கும் பிரசாதத்தை கொண்டுவந்து அமர்ந்திருந்தவர்களுக்கு எல்லாம் கொடுத்துக்கொண்டு இருந்தாள்.
“பார்க்க குட்டி பொண்ணா இருக்குது…” என்று சொல்லும் பொழுதே அவள் இவர்களை நோக்கி வந்துவிட்டாள்.
ஒரு வாளியின் மூடியில் குட்டி குட்டி தொன்னே கிண்ணங்களில் சர்க்கரை பொங்கலும், வெண்பொங்கலும் வைத்து நின்றவள்,
“எடுத்துக்கோங்க…” என சிரிப்புடன் நீட்டினாள்.
“தேங்க் யூ…” என்று எடுத்துக்கொண்டவன் மதுவிற்கு வெண்பொங்கலை மட்டும் எடுத்து கொடுக்க அவள் கேள்வியாய் பார்த்தாள்.
“போதும்…” என்று சொல்லிவிட்டான் விஜய்.
“ஏன்டா எங்க போனாலும் தான் ஸ்வீட் எடுக்க விடமாட்டேன்ற? கோவில் பிரசாதமுமா?…” என்று மது முறைக்க,
“இருக்கற சுகர்க்கு இது போதும். வேண்டாம்ன்னா வச்சிருங்க…” என்று சொன்னான் சிரித்தபடி.
“ஹ்ம்ம், அதை விடு. அந்த பொண்ணை பாரேன். க்யூட்ல…” என்றார் மது.
“ஹ்ம்ம், குட்டியா டால் மாதிரி இருக்கா. ஆனா படிக்கிற பொண்ணுக்கு இப்படியா புடவை சுத்தி விடுவாங்க. கொஞ்சமும் சென்ஸ் இல்லாத பேரன்ட்ஸ்…” என்றான் அவன்.
“ஏன்டா அழகா தானே இருக்குது?…” என மாதவன் சொல்ல,
“ப்பா, பார்த்தாலே தெரியுது ஸ்கூல் பொண்ணுன்னு. ஒரு ஏஜ்க்கு மேல தான் அவன்கால ஈஸியா மேனேஜ் பண்ணிக்க முடியும். இந்த மாதிரி பேமிலி பங்க்ஷன்ல நல்லா விளையாடி, என்ஜாய் பன்ற நேரத்துல அவங்களோட மொத்த கான்சன்ட்ரேஷனும் புடவையில தான் இருக்கும்…” என்றவன்,
“டீன் ஏஜ் பொண்ணு. ஒன்னு புடவை கட்டினமாதிரியே இருக்கனுமேன்ற டென்ஷன். இன்னொன்னு எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு விளையாட்டா விட்டா? அதான் சொல்றேன். ட்ரெஸ்ஸிங் எல்லாம் அந்தந்த ஏஜ்க்கு எதை போடனும்னு தெரிஞ்சு போடனும். அந்த பொண்ணு முகத்துல டென்ஷன் பார்த்தீங்க தானே?…” என்றான்.
“ஹ்ம்ம், காலேஜ்ல பாடம் எடுத்தது போதாதுன்னு இங்க? அவங்கவங்க பசங்களுக்கு போட்டு பார்த்து அழகு பார்க்கிறது தப்பாடா?…” என மது கிண்டல் பேச,
“அதை வீட்டுக்குள்ள வச்சுக்கனும். பார்த்தீங்க தானே, ஒரு கையில அந்த ட்ரேயை பிடிச்சுட்டு இன்னொரு கையாள புடவையை பிடிச்சுட்டு நடந்து போகும் போதும் சுத்தி தன்னையே பார்த்துட்டு போகுது. பாவமில்ல…” என்றான்.
“இவன்கிட்ட பேசி தப்பிக்க முடியுமா? இவன் சொல்றதை தான் சொல்லுவான். சரி எழுந்து வா. கூட்டம் எல்லாம் போய்டுச்சு. அவ்வளவா ஆளுங்க இல்லை. போய் சாமியை கும்பிடுவோம். அடுத்த கோவிலுக்கு போக வேண்டாமா?…” என மாதவன் எழுந்துகொண்டார்.
“வாங்க கை கழுவிட்டு உள்ள போவோம்…” என நடக்க மாதவனும் விஜய்யும் பேசிக்கொண்டே முன்னே நடந்தனர்.
மெதுவாக நடந்து செல்ல அவரின் கையை பிடித்தார் ஒரு பெண்மணி. யாரென திரும்பி பார்த்து புருவம் சுருக்க,
“மது தானே நீ?…” என்ற பெண்,
“நான் சரோஜா, காஜா டெய்லர் பொண்ணு…” என்றார் அவர்.
“சரோஜா, நீங்களா? எப்படி இருக்கீங்க?…” என்று அவரின் கையை பிடித்துக்கொண்டார் மது.
“நான் நல்லா இருக்கேன். இத்தனை வருஷம் கழிச்சு உன்னை இப்ப தான் பாத்திருக்கேன்….” என்றவர்,
“நீயும் கல்யாணத்துக்கு தான் வந்திருக்கியா?…” என்றார்.
“என்ன கல்யாணம்? யாருக்கு?…” என புரியாமல் பார்க்க,
“உன்னோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும்? காலையிலையே முடிஞ்சது…” என்று சொல்ல மதுவந்தியின் மனது அடித்துக்கொண்டது.
“எங்க? அம்மா அப்பா வந்திருக்காங்களா? நான் பார்க்கலையே? நான் கவனிக்கலையேக்கா…” என்றவரின் விழிகள் நாற்புறமும் தவிப்புடன் சுழன்றது.
இத்தனை நாட்கள் தள்ளி இருந்தபோது கூட ஒரு வைராக்கியத்தில் இருந்துவிட்டவரால் ஒரே இடத்தில் இருந்தும் பார்க்கமுடியவில்லையே என்ற ஆற்றாமையில் கண்கள் கலங்க,
“பார்க்காம போய்ட்டேனே? இங்க தான்க்கா நான் இருந்தேன். இங்க தான் உட்கார்ந்திருந்தேன்…” என்று சொல்லி எங்கே என்று தேட,
“இப்ப தான் கிளம்பினாங்க. நான் கூட நீயும் வந்திருக்க போலன்னு நினைச்சுட்டேன். ஏன் இத்தனை தேடனும்? வாயேன் வீட்டுக்கே வா. இப்போவுமா ஏத்துக்காம போய்டுவாங்க?…” என்ற சரோஜாவிற்கு தெரியாதே அருமைநாயகம் இன்னும் அந்த வன்மைத்தினோடே தான் இருக்கிறார் என்று.
“ஹ்ம்ம், இல்ல. வேண்டாம். எல்லாரும் நல்லா இருக்காங்க தானே? அது போதும்க்கா…” என்று மதுவந்தி சொல்ல,
“நானும் என் தங்கச்சி வீட்டுல இருந்து வராங்கன்னு தான இங்கயே இருக்கேன். ரெண்டு நாள் கழிச்சு தான் பழனி போவேன்…” என்ற சரோஜா மதுவுடன் ஒரு போட்டோவும் எடுத்துக்கொண்டு போன் நம்பரையும் வாங்கிவிட்டு சென்றார்.
அந்த தொடர்பு தான் மதுவந்தியை மீண்டும் பழனியில் கால் பதிக்கவைத்து விஜய் தாயை இழக்க வைத்தது.