நெஞ்சம் நிறைந்துபோனது கௌரவ்விற்கு. ஆகர்ஷனும் தன் பெண்ணை புன்னகையுடன் பார்த்திருந்தான்.
“ஹாய், நான் பிரத்யூக்ஷா. கௌரவ் அத்தானோட அத்தை பொண்ணு…” என பிரத்யூக்ஷாவும் தன்னை அறிமுகம் செய்துகொள்ள,
“உங்களை பார்த்திருக்கேன். பேசினதில்லை…” என வெண்ணிலாவும் கூற, அடுத்ததாய் ஆகர்ஷனிடம் வந்தமர்ந்தாள் பிரத்யூக்ஷா.
“ஸீ மிஸ்டர் பிரத்யூக்ஷா…” என தன் கணவனை அறிமுகம் செய்துவைக்க,
“லவ்லி…” நிலா தலையசைத்து புன்னகைக்க,
“நானு…” என இடையில் நுழைந்த பெண்குழந்தை ஆகர்ஷனின் கழுத்தையும், பிரத்யூக்ஷாவின் கழுத்தையும் சேர்த்து கட்டிக்கொள்ள கவிதையாய் இருந்தது.
அதனை பார்க்கவுமே புகைப்படத்தில் தானும் தன் பெற்றோரோடு இப்படி இருந்த காட்சி தான் நினைவு வந்தது.
“மூன்…” என்று குழந்தை அழைக்க,
“சொல்லுங்க மேடம்…” என்றாள் வெண்ணிலா புன்னகையுடன்.
“கௌவாப்பா பாபம்…” மீண்டும் சோகமாய் கன்னத்தில் கை வைத்து கூற,
“ஆஹாங்…” என்ற வெண்ணிலா திரும்பி கௌரவ்வை பார்த்தாள்.
அடிக்கண்ணால் அவளை பார்த்தவன் விழிகள் மீண்டும் திரையில் பதிந்தது குழந்தையிடம்.
“கௌவாப்பா பத்திரம்…” என்றது குழந்தை.
அதையும் இரண்டு மூன்றுமுறை ‘பத்திரம் பத்திரம் சரியா?’ என்று தாய் தகப்பனிடம் கேட்டுவிட்டு நிலாவிடம் கூற,
“அழகு…” என்றாள் நிலா.
“தேங்க் யூ…” குழந்தை வெட்கத்துடன் கிளுக்கி சிரித்து கை தட்ட, கொள்ளை போனது பார்த்தவளின் மனது.
“அப்போ ரெண்டு கௌசிம்மா. நீங்க கொஞ்சம் க்யூட் அன்ட் நாட்டி கௌசிம்மாவா?…” என்று நிலா கேட்க, தோளை குலுக்கி ஒரு சிரிப்பு பிள்ளை.
“ஹவ் க்யூட்…” என கொஞ்சியவள்,
“அப்பறம் என்ன சொன்னீங்க? உங்க கௌவாப்பாவ நல்லா பாத்துக்கனுமா? ஏன்?…”
“கௌவாப்பா பாபம். நோ ஹேப்பி. நோ பூட். நாற் மேன் டிஷ்யூம் பண்ணி கௌவாப்பா ஹேப்பி பண்ணி, பாப்பா ஹேப்பி…” என்று பிள்ளை சொல்ல சொல்ல,
“போச்சுடா…” என மகளை பிடித்து வாயடைக்க பார்த்தாள் பிரத்யூக்ஷா.
“லீவ் மீ மம்மி…” என துள்ளிக்கொண்டிருந்தாள் குழந்தை.
“இங்க பாருங்க த்தான். இதை நான் சொல்லிக்குடுத்தேன்னு நீங்க நினைப்பீங்க. இருந்தாலும் இப்படி இவ சொல்லுவான்னு நானும் நினைக்கலை…” என தாய், மகள் இருவருக்கும் சிறு போர்.
“நாற் மேனை…” என கிடைத்த நேரத்தில் எல்லாம் பிள்ளை கூற,
“கௌசிம்மா…” என்ற ஆகர்ஷனின் ஒற்றை அழைப்பில் பிள்ளை முகத்தை சுருக்கிக்கொண்டு, கைகளை கட்டியபடி அமர்ந்துவிட்டது.
“அச்சோ, பாப்பா…” என்ற நிலா,
“ஆமா, உனக்கு எந்த கார்ட்டூன் சேனல் பிடிக்கும்?…” என்று பேச்சை மாற்றினாள்.
தனக்கு பிடித்ததை குழந்தை கூற, ஒவ்வொன்றிலும் ஒவ்வொர்டு விதமாய் வெண்ணிலாவும் அந்த குரலில் பேசி காண்பிக்க குண்டு கன்னத்துடன் விழிகளை உருட்டி ஆச்சர்யபாவம் காண்பித்தது குழந்தை.