எத்தனை நேரம்தான் இப்படியே பார்வையில் பரிபாஷை வளர்ப்பது?
தங்கவெண்ணிலா தங்கமாய் தகதகக்க, விழியோரம் தீயாய் இரு துளி நீர் கசிந்ததன் அடையாளம்.
ஒற்றை தோளில் மொத்தமாய் சரிந்திருந்த எழில் கூந்தல் காற்றிலாட அவளின் முகத்தில் பட்டு முத்தமிட்டபடி விலகி சென்றதை கவனித்தவன் விரல்கள் சட்டையின் அடுத்த பட்டனில் கை வைக்க, அவசரமாய் வெண்ணிலாவின் குரல் அதனை நிறுத்தியது.
“தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?…” என்றாள் அவனிடம்.
“பர்டன்?…” கௌரவ் எவ்வுணர்வையும் காண்பிக்காத சாதாரண பார்வையுடன் கேட்க,
“நத்திங்….” என்றவள், சிறிதுநேர அமைதிக்கு பின்,
“தேங்க்ஸ்…” என்றாள் புன்னகையுடன்.
“ஓஹ், ஹ்ம்ம்…” என புருவம் உயர்த்தி தலையை அசைத்து பார்த்தவன்,
“தென்?…” என்றான் கைப்பேசியை கையில் எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் சாய்ந்தபடி.
அவனின் செயல்கள் ஒவ்வொன்றிலும் கவரப்பட்டவளாய் மனம் தொலைந்துபோய் அவனை முறைத்து,
“இப்பவும் நத்திங். வெர்ரி பேட் நைட் அன்ட் ஹாரர் ட்ரீம்ஸ்…” என்று பல்லை கடித்துவிட்டு பார்க்க, மெல்லிய புன்னகை அவனிடம்.
“உன் பாட்டி இப்போ ஓகே வா?…” என்றான் கௌரவ்.
“அச்சோ போச்சு போச்சு…” என்று எதையோ பதறி தேடுவதை போல அவள் பாவனை செய்ய, கள்ளன் கண்டுகொண்டான்.
கீழிதழ்கள் உள்ளே மடங்கிக்கொள்ள, தலை சாய்த்து அடிக்கண்ணால் ஒரு சீண்டல் பார்வை கௌரவ்விடம்.
“ஹப்பா, முத்து உதிர்ந்திருச்சே…” கேலி பார்வையுடன் பேசியவள், அவனின் பார்வையில்,
“ஹலோ ஒன்னு பேசனும். இல்லையா கால் கட் பண்ணனும். அதை விட்டுட்டு இதென்ன பார்வை?…” என்று கூறவும் அவனின் பார்வை அவளை தாண்டி சுழன்றது.
“எதுவும் போக்கஸ்ல இல்லை. தேறாது…” என்றாள் அவன் தனது சிறுவயது புகைப்படத்தை தேடுவது தெரிந்து.