“மூச், அதுதான் வரலைன்னு சொன்னீங்களே?…” என்றுவேறு அவன் கேட்க, பதில் கூற முடியாமல் திகைத்து விழித்தார் ராம்நாத்.
“வந்து…”
“அதுதான் ஏன் வந்தீங்க?…” என்றவனிடம் எப்படி பதில் கூற?
“வராதவர் வந்திருக்கார். விடேன். நீ உள்ள வா…” என்று ஆகர்ஷன் கௌரவ்வை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவன், ராம்நாத்தை திரும்பி பார்த்து உள்நாக்கை மடித்துக்கொண்டு எச்சரித்தான் பார்வையாள.
“வெளிநாட்டுல படிச்ச பெரிய டாக்டர் இவன். ஆனா பார்வையும், நாக்கை மடக்கறதையும் பாரு?…” என சத்தமின்றி முனங்க மட்டுமே முடிந்தது.
“எக்ஸ்க்யூஸ் மீ…” என்ற சின்ன குரல்.
யார் என குனிந்து பார்க்க, ராம்நாத்தின் அருகில் நின்றது குழந்தை கௌசல்யா.
“கோ மேன். கோ சைட்…” என்று அவரை ஓரமாய் நிற்க சொல்லி பிள்ளை அதட்ட,
“ஏய் சில்வண்டு, என்ன?…” என்றவர் அவளருகில் நின்ற அனன்யாவை கண்டுவிட்டு,
“ஏன் இங்க வழி இல்லையா?…” என்றார் வீம்புக்கென்றே.
“யூ கோ தட் சைட்…” மீண்டும் கௌசல்யா இடுப்பில் கைவைத்து முறைத்தபடி பார்த்தது.
“என்ன ஒரு அகம்பாவம்? புள்ளையா வளத்திருக்கா உங்கம்மா?…” என ராம்நாத் பேச,
“ஹலோ, குழந்தைங்க சொல்ற அளவுக்கு நடந்துக்கற நீங்க மட்டும் எப்படி வளர்ந்திருக்கீங்கலாம்? பாதையை மறைச்சிட்டு நிக்கறீங்க. ஒன்னு உள்ள போகனும். இல்ல, வெளில போகனும்….” அனன்யாவும் கூற,
“நண்டுசிண்டு எல்லாம் என்னை பேசுது. இருக்கட்டும் வச்சிக்கறேன்…” என்றவர் மற்றவர்கள் காண கண்டு ஒதுங்கி வழிவிட்டு நின்றார்.
“கோ இன்ஸைட்…” என மீண்டும் அவரை திரும்பி பார்த்து உத்தரவிட்டு சென்றாள் குழந்தை கௌசல்யா.
“இவள…” என்றவரின் தோளை தொட்டு திருப்பிய கௌரவ்,
“குழந்தைட்ட என்ன பேசறீங்க?…” என்று கேட்க, ‘திரும்பவும் இவன் எப்போ வந்தான்?’ என்று விழிக்க,
“உங்ககிட்ட தான். கௌசல்யாம்மாட்ட கோவமா என்னவோ பேசினீங்களே?…” என்றான் மீண்டும்.
“நானா? எங்க பேசினேன்? அதுதான்…”
“என்ன?…” கௌரவ் நெற்றிக்கண் திறக்க,
“தப்புத்தான ப்பா. அவ தான் பேசினா. ஓரமா நிக்க சொல்லி…”
“அதுக்கு கோவமா பேசுவீங்களா? நீங்க கிளம்புங்க இங்க இருந்து…” என்று கௌரவ் விரட்டினான்.
அவன் சொல்லி சென்றதும் அத்தனை ரோஷம். வயிறெல்லாம் கபகபவென்று எரிந்தது தூரத்தில் சந்தோஷமாய் பேசி சிரித்துக்கொண்டிருந்தவர்களை பார்த்து.
பார்வை அப்படியே வலம் வந்து, அமர்ந்திருந்த கௌசல்யாவையும் காண பார்வையை திருப்ப முடியவில்லை.
“இந்தாள் வேற…” என வெறுத்து போய் அங்கிருந்து கிளம்ப வாசல்பக்கம் திரும்ப வந்துவிட்டான் ஆகர்ஷன்.
“எங்க போறீங்க?…”
“வீட்டுக்கு…”
“இதை சொல்லவா உங்களை வர சொன்னேன்?…” என்று அவன் கேட்கவும் பற்றிக்கொண்டு வந்தது.
“என்னை அவன் தான்டா போகவே சொன்னான். என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அவன் போன்னு சொல்றான். நீ இருன்னு சொல்ற….” என அடிக்குரலில் கொந்தளிக்க,
“ஓஹ் டென்ஷனா? இருக்கட்டும். ஆனா நீ போக முடியாதே…”
“டேய் மரியாதை…” விரல்நீட்டி எச்சரித்த ராம்நாத், எங்கே அதனை கௌரவ் பார்த்துவிடுவானோ என்று பயந்து கையை இறக்கிக்கொண்டார்.
“அது, இப்படி இப்படி இருக்கனும். இருக்கனும் அதுவும் இங்கயே. நாங்க கிளம்பற வரைக்கும் மாப்பிள்ளையோட அப்பாவா, சம்பந்தகாரங்களுக்கு மரியாதை குடுக்கறவங்களா இருக்கனும்….” என்ற ஆகர்ஷன்,
“இது ஒன்னும் உங்களுக்காக இல்லை. கௌரவ்க்காக. அவன் கல்யாணத்துல இதெல்லாம் இல்லைன்ற எந்த குறையும் வந்திட கூடாது. மரியாதை குறைவும் வந்திட கூடாது. இல்ல, கோலார்லையே போஸ்ட்மார்ட்டம் பண்ணிடுவேன். டாக்டர், கத்தி பிடிக்கிற கை. அவனுக்காக, என் அம்மாவுக்காக, கயல்விழி அம்மாவுக்காக செய்வேன்…” என்றான்.
எரிமலையின் சீற்றத்தை உள்ளடக்கியிருந்த விதமாய் வார்த்தைகள் பல்லிடுக்கில் கடிபட்டு வெளிவந்தது.
அத்தனையும் கேட்டுக்கொண்டு மௌனமாய் நிற்கவேண்டிய நிலைமை ராம்நாத்திற்கு.
‘எல்லாரும் ஆணவமா பேசறீங்க இல்ல? இந்த கல்யாணம் நடக்குதா பாக்கறேன். எப்ப நிப்பாட்டனுமோ அப்ப நிப்பாட்டறேன்’ என்று உள்மனத்தினுள் சூளுரைத்தபடி நின்றார்.
ஆகர்ஷன் அவரின் அமைதியில் இன்னும் ஆராயும் பார்வை பார்த்தான். நிச்சயம் அதிலிருந்த கயமையை கண்டுகொண்டவன் விழிகள் இன்னுமே இடுங்கியது.
“ப்பா…” என்று தன் மகளின் குரலில் திரும்பியவன் முகம் சட்டென்று பூவாய் மலர்ந்தது.
“குட்டிம்மா, கௌசிம்மா, தங்கம் தண்ணி குடிச்சிட்டு வந்தாச்சா?…” என்று பிள்ளையை தூக்கிக்கொண்டான்.
“நார் மேன் லுக்கிங் ஹாரிபிள்…” என்றாள் குழந்தை.
“அப்பா இருக்கேன்ல….” பிள்ளையை அணைத்துக்கொள்ள, குழந்தை ராம்நாத் தன்னை முறைக்க கண்டு தானும் முறைத்தாள்.
“வாட்?…” என்று அதட்டல் வேறு.
“கௌசி நோ…” அனன்யா தன் அண்ணன் மகளை அழைக்க,
“நார் மேன் நோ. கோ…” என வெளியே கை நீட்டியது குழந்தை.
“அனு பாப்பாவை கௌரவ்க்கிட்ட கூட்டிட்டு போ…” என்று சொல்லியவன்,