குழந்தை மீண்டும் பழையபடி துள்ளிக்கொண்டு சிரித்து விளையாட ஆரம்பிக்கவும் தான் நிம்மதியானது.
அதற்குமேல் தாமதிக்காமல் மற்ற உறவுகள் என்னவென்று வரும் முன்பே திருமண மேடைக்கு சம்பிரதாயம் என்று மணமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
கூட்டத்தில் ராம்நாத்தினை தேடி அனைவரும் கேட்க, உடல்நிலை சரியில்லை என்று கூறி சமாளித்தனர்.
“ஆமாமா, நேத்தே நெஞ்சை தடவிட்டே என்னவோ செய்யுதுன்னு இருந்தார். அவர் ஆசைப்படி கல்யாணம் நல்லவிதமா நடக்கட்டும்…” என்றனர் வந்திருந்தவர்கள்.
ராம்நாத் இல்லாததில் தம்பதிகளாய் நிற்க வைக்க யாரையேனும் அழைக்கும்படி ஒருவர் கூற,
“எனக்கு அப்பாவும் என் கௌசல்யாம்மா தான். அண்ணனா ஆகர்ஷன் இருக்கான். அப்பா மாதிரி தானே? அவங்க இருப்பாங்க…” என கணீரென்ற குரலில் அவன் கூறிவிட அனைவருக்கும் நெகிழ்ந்துவிட்டது.
இதைவிட பெரிய பேரு என்ன கிடைத்துவிட போகிறதென நெக்குருகி பார்த்திருந்தான் ஆகர்ஷன்.
கௌசல்யாவே தாய் தகப்பன் ஸ்தானத்தில் நின்று அனைத்தையும் செய்யும்படி கூறிவிட, அவருடன் ஆகர்ஷன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பிரத்யூக்ஷாவுடன் நின்றான்.
ஷ்யாமளாவும், கிருஷ்ணகுமாரும் மன நிறைவுடன் இதனை பார்த்திருக்க, சாருலதாவிற்கு புகைந்தது.
நெகிழ்ச்சியை தாண்டிய தன் ஆழ்மனத்தின் கேள்வி இன்னுமே வலுப்பெற்ற பார்வையுடன் தான் கனிவாய் பார்த்தான் விக்ரம்.
அனைத்தையும் கை தட்டி குதூகலத்துடன் பார்த்திருந்த குழந்தை கௌசல்யாவின் முன்னிலையில் கௌரவ், வெண்ணிலாவின் திருமணம் இனிதே நடந்தேறி இருந்தது.
காலை உணவு வரை கூட குழந்தைக்கு எதுவுமில்லை. நேரம் செல்ல செல்ல பிள்ளை துவண்டுவிட இதோ ஆழ்ந்த உறக்கத்தில் அவள்.
நேரம் சென்றிருக்க நெற்றியின் வீக்கம் இப்போது இன்னும் கூடியிருந்தது. இயல்புக்கு திரும்பியிருந்தவர்களின் மனநிலை மீண்டும் வருத்தம் தோய, அத்தனை கோபமும் ராம்நாத்தின் மீது தான்.
“இன்னும் பத்துநாளைக்கு ஹாஸ்பிட்டலை தாண்ட கூடாது அந்தாள்…” என தன் மருத்துவ பணியாளர்களுக்கு கட்டளை இட்டிருந்தான் ஆகர்ஷன்.
அவ்வளவு கோபம். பிஞ்சு குழந்தையை போய் இப்படி செய்ய எப்படி மனம் வந்ததோ? என்று தோன்றியபொழுதே, கௌசல்யாவின் அன்றைய வார்த்தைகள் ரணத்தை மேலும் கிளறியது.
பச்சை குழந்தைக்கு பசியமர்த்த கூட சத்தியம் கேட்டு நின்ற இரக்கமற்ற பிறவி தானே? இதையும் செய்ய கூடும் தான்.
அந்த குழந்தையை வைத்து எத்தனை எத்தனை ஆட்டம்? கயல்விழியில் ஆரம்பித்து கௌசல்யா வரை.
பெருமூச்சுடன் மீண்டும் அவர்களை அழைத்து செல்ல மேலே வந்தான் அவன். இப்போது குழந்தை எழுந்து அமர்ந்திருந்தாள்.
சற்றுநேரத்தில் மணமக்கள் முதலில் ஆகர்ஷனின் இல்லத்திற்கு மணமகனின் வீடு என்ற முறைக்கு சென்று பால் பழம் அருந்திவிட்டு, மீண்டும் வெண்ணிலாவின் வீடு வர மாலையாகி இருந்தது.
இரவு சடங்கும் அங்கே தான் ஏற்பாடாகி இருக்க குழந்தையை ஷ்யாமளாவின் பொறுப்பில் விட்ட ஆகர்ஷன், கௌசல்யாவையும் அங்கேயே இருக்கும்படி கூறியிருந்தான்.
சாருலதாவை ஒருவரும் மதிக்கவில்லை, நாத்தனார் முடிச்சையும் போட விடவில்லை என்று கூறி கோபித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் மண்டபத்தில் இருந்தேன்.
“கூடப்பிறந்த அண்ணன் கல்யாணம். ஆனா இங்க எல்லாம் உல்டாவா நடக்குது. எல்லாத்துக்கும் அந்த அனன்யா முன்னாடி நிக்கிறா தங்கச்சின்னு. அப்பா நான் யாராம்?…” என கௌசல்யா, விக்ரமிடம் சண்டையிட்டு கிளம்பியிருந்தாள் ஆகர்ஷனின் வீட்டுக்கு வரமுடியாதென கூறி.
“ஸ்டெயிலிஷ் ஐகான் சொல்ல மறந்துட்ட பாரு….” என அவளை வைத்து ஓட்ட,
“நான் பாவம்…” என்று சரணடைந்தாள் சுனந்தா.
நிலாவிற்கு இதில் கவனம் இருந்தாலும் பெரும்பான்மை எண்ணம் தன் அலங்காரத்தில் தான்.
கணவன் தன்னை அத்தனை கவனித்து பார்த்தானா இல்லையா என்றெல்லாம் எதுவும் தெரியவில்லை.
அவளின் ஆழ்மனம் அவன் கவனிப்பை, ரசிப்பை என ஒவ்வொன்றையும் எதிர்பார்த்தது.
“எல்லாம் ஓகே தானே?…” என நிலா கண்ணாடியை பார்த்துக்கொண்டே கேட்க,
“உள்ள போனதும் சொல்லுவார் அத்தான், இங்க யாரும் இவ்வளவு அழகை இவ்வளவு அழகாய் பார்த்ததில்லைன்னு. அவ்வளோ அழகு நீ…” என்று பிரத்யூக்ஷா கூற,
“இந்த டயலாக் எல்லாம் வேண்டாம். என்ன சொல்லுங்க, உங்க அத்தானுக்கு ரசனை கொஞ்சம் கம்மி தான்…” என பிரத்யூக்ஷாவிடம் கூறியபடி வெளியே வர,
“நீ வருத்தப்பட்டாலும் அதுதான் நெசம் போல. வேற வழியில்லை…” என்று பேசிக்கொண்டே நிலாவை அழைத்து சென்று அவளின் அறைவாசலில் விட்டுவிட்டு,
“ஓகே, நாங்களும் கிளம்பறோம். மார்னிங் பார்க்கலாம்…” என்று வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு கிளம்பினாள் பிரத்யூக்ஷா.
ஊஃப் என்ற மூச்செடுப்புடன் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல விழிகள் பெரிதாய் விரிந்தது அவன் செய்துவைத்திருந்ததில்.
என்னென்னவோ நினைத்தபடி உள்ளே வந்தவளின் மொத்த உணவுகளும் வேறாய் மாறியிருக்க, படபடப்பாய் வந்தாள்.
“ஹலோ, கௌரவம் இந்த போட்டோவை எப்படி எடுத்தீங்க? ஏன் எடுத்தீங்க?…” என்றவள் அவன் நிற்கும் விதம் பார்த்தாள்.
தனது சிறுவயது புகைப்படத்தினை முன்பே கழற்றி வைத்திருக்க, அதனை அந்த அறையில் தேடி எடுத்து மீண்டும் அதே இடத்தில் மாட்டியதோடு அதில் கைவைத்தபடி வேறு நின்றிருந்தான் கௌரவ்.
“போட்டோ இல்லாம இந்த பிளேஸ்ல என்னவோ மிஸ்ஸான பீல். அதான்…” என்றவன்,
“இப்பதான் அழகா இருக்கு…” என்றும் கூற அடிவயிற்றில் என்னவோ ஒரு உணர்வு.
“அதுவும் இந்த செயின்…” என அவன் விரல் செல்ல கண்டு,
“கையை எடுங்க முதல்ல…” என்றால் என்னவோ தன் மீதே அவ்விரல்கள் விளையாடுவதை போல.
“ஓஹ்…” என்றவன் அமர்த்தலான பார்வையுடன் அவளருகில் வந்து நின்றான்.
“பெஸ்ட் பர்ஸ்ட் நைட்…” என்று கூற, அவனை பார்த்துவிட்டு மீண்டும் தன்னை கவனித்தானா என்னும் ஆராய்ச்சியில் அவள் ஈடுபட,
“ஓகே, போய் முகம் கழுவிட்டு வா…” என்றான் அவளின் அலங்காரம் பார்த்துவிட்டு.
“வாட்?…”
“ப்ச், முகம் கழுவிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வான்னு சொன்னேன். இப்படி இல்லாம ஒரு நார்மல் அவுட்பிட்ல…” என்றவன்,
“இது உன்னை நிலாவா காமிக்கலை. எப்பவும் இருப்பியே கேஷுவலா. அப்படி இரு…”
“ஹலோ, இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு மிஸ்டர் கௌரவம்…” அவளுமே சற்றே கேலியாய் கூற,
“இந்த பெட் டைம் ஸ்டோரி எல்லாம் எனக்கு வேண்டாம்…” என கௌரவ் இப்போதும் தான் சொல்லியதில் நிற்க, நிலாவிற்கு ஆற்றாமை.
இத்தனை அழகாய் தன்னை பார்த்து பார்த்து தயார் செய்திருக்க, கொஞ்சமும் ரசிக்காது இப்படி பேசுகிறானே என்று முறைத்தபடி நின்றாள்.
“வாட்?…” என இப்போது கௌரவ் இரு கைகளையும் விரித்து கேட்க,
“இன்னைக்கான இந்த சிட்டிவேஷனுக்கான ஸ்பெஷல் மேக்கோவர். முகமெல்லாம் கழுவ முடியாது. இப்படியே பார்த்துக்கோங்க…” என வேண்டுமென்றே அலட்சியமாய் தோளை குலுக்க,
“வெல். அப்போ முகம் தவிர மத்த இடங்கள்ள முத்தம் குடுத்துக்கறேன்…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.