காலிங் பெல் சத்தத்தில் கண் விழித்தவருக்கு இந்த நேரத்தில் யார் என்னும் யோசனை.
அதனுடனே வந்து கதவை திறக்கவும் அவர்களை பார்த்ததும் திகைத்து போனார் சாவித்ரி.
“குட்மார்னிங் சாவி…” என அவரின் கன்னம் தட்டிவிட்டு அந்த நள்ளிரவிலும் கூட உற்சாகத்துடன் வரும் பேத்தியை கண்டு தலையசைத்தவர்,
“என்ன நந்தா?…” என்றார் நிலாவுடன் பின்னோடு வந்த சுனந்தாவிடம்.
“அட போங்க பாட்டி, நீங்களே அவக்கிட்ட கேட்டுக்கோங்க…” என்று கோபமாகவும், அலுப்புடனும் சொல்லிவிட்டு உறக்கம் கண்களை சுழற்ற தள்ளாட்டத்துடன் நடந்து சென்று விருந்தினர் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
“என்ன நந்தா இங்கயே தூங்கிட்ட? ட்ரெஸ் கூட மாத்திக்கலையே?…” சாவித்ரி கேட்க,
“எல்லாம் உங்க பேத்தி வந்து மாத்தி விடுவா. போய் என்னன்னு அங்க கதை பேசுங்க….” என்றவள்,
“எல்லாம் என் வாய், சும்மா இருக்கிறவள வான்ட்டாடா வண்டில ஏத்தினதும் இல்லாம நானும் திமிரா பேசி, இப்ப பாரு சுத்தல்ல விட்டுட்டா…” என உறக்கத்திலும் எரிச்சலோடு புலம்பல்.
அதற்குமேல் அவளை ஒன்றும் கேட்காமல் நிலாவை தேடி கிட்சனுக்குள் நுழைந்தார் சாவித்ரி.
“இந்தநேரம் என்ன உனக்கு ப்ளாக் டீ?…” என பேத்தியிடம் வர,
“தூக்கம் போயே போச்சு சாவி. என்ன பன்றது நான்?…” என்று டீ கப்பை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தமர்ந்தவள் கைப்பேசியில் விமான பயணத்திற்கான முன் பதிவினை பார்வையிட ஆரம்பித்தாள்.
“கோலார் போறதா இருந்தீங்களே? திடீர்ன்னு என்ன நிலா?…” என்று சாவித்ரியும் வந்துவிட,
“போறதா இருந்து கேன்சல் பன்ற சூழ்நிலை…” என்றவள் ஒன்றுவிடாமல் அவரிடம் ஒப்புவிக்க பேத்தியை முறைத்தார் சாவித்ரி.
“புரியுது. கொஞ்சம் ஈகோ க்ளாஷ். ஆரம்பத்துலையே இந்த நந்தாட்ட சொன்னேன். நீ கிளம்பு. நான் நேரா வந்திடறேன்னு. எனக்கென்ன ட்ராவல் பண்ண பயமா?…” என்று தோளை தலையை சிலிர்த்து தோளை குலுக்கி கொண்டவள்,
“கூடவே வான்னு என்னை பாடா படுத்தி அவளுக்கு புக் பண்ணின ட்ராவல்ஸ்ல என்னையும் சேர்த்து கூட்டிட்டு போய், அவன் முதல்ல டிக்கட் எடுங்கன்னு தான் சொன்னான். இவ தான் கொஞ்சம் ஓவரா ஆரம்பிச்சா. பத்திக்கிச்சு…”
“அதெப்படி சாவி? ட்ரைவர் சொன்னதும் கூட ஓகேன்னு சொல்லி நாங்க டிக்கெட் எடுத்திருக்கலாம். ஆனா அது ஒரு ஆர்க்யூமென்ட்ல வந்து, அந்த ஓனர் கௌரவம் வேற பிரஷர் குக்கரா விசிலடிச்சு, அடுத்து போனா என் பிரஸ்டீஜ் என்னாகறது?…” என்றவள்,
“அப்பவும் நான் சொன்னேன். உன் டிக்கெட்ல நீ போ. நான் பார்த்துக்கறேன்னு. நந்தா கேட்கலை. சரி வா சுருதின்னு கூட்டிட்டு வந்தா, உன்னால நான் கெட்டேன்னு வழி எல்லாம் புலம்பல். கூடவே சைட்டிங் வேற…” என்று நிலா கண்ணடிக்க,
“கழுதைங்களா. செய்யிறதையும் செஞ்சுட்டு இது வேறையா?…” என பேத்தியின் தோளில் தட்டினார் சாவித்ரி.
“நான் ஒண்ணுமே செய்யலை. இவளுக்கு தான் கௌரவத்து மேல ஒரு கண். மனுஷனுக்கு தெரிஞ்சா அதுக்கும் பயர் பண்ணுவான் போல. சரியான ஆட்டிட்யூட் தெரியுமா சாவி? பட் இப்படித்தான் இருக்கனும். ஆனா அது என்கிட்டயேவா?…” என்று சொல்லி,
“அந்த கிளீனர் கொஞ்சம் நக்கலா பேசிட்டான். அதை என்னன்னு கேட்கனுமா இல்லையா? அட்ஜஸ்ட் பண்ணுங்கன்னு நந்தா சொன்னதுக்கு அவன் பேசின மீனிங். செம்ம கடுப்பு. அறையனும் போல இருந்தது….” என்றாள் சூடான பானத்தை பருகியபடி.
“நீ செஞ்சதும் தப்பில்லையா?…”
“நான் இல்லைன்னு சொல்லவே இல்லை சாவி. அந்தநேரம் அப்படி பேசவும் ஹைப்பராகி பேசிட்டேன். எல்லாருக்குமே ஈகோ இருக்கும் தானே? இளக்காரமா நினைச்சு இல்லை….” என்று சொல்லியவள் முகத்தில் சிறு வருத்தம்.
“தப்பு தான். ஒருத்தர் தப்பு பண்ணினா அதையே இன்னொருத்தரும் செய்யனுமா என்ன? ப்ச், நந்தா தான் ஆரம்பிச்சது. அவங்களும் பேசி, ட்ரைவர், கிளீனர் பேசி, லாஸ்ட் அந்த ஓனர். அதான் நானும் ரிவ்யூ போடறேன் பாருன்னு ஜம்பமா சொல்லிட்டு வந்தேன்…” என்றதும், புன்னகைத்த சாவித்ரி,
“போட்டாச்சா?…” என்றார்.
“ம்ஹூம். ட்ராவல்ஸ் அவங்களோடது. அதை எப்படி ரன் பண்ணனும்ன்னு அவங்க தான் முடிவு செய்யனும். அதுதான் எத்திக்ஸ் கூட. அங்க ஒரு ஓல்ட் கப்பிள்ஸ் வந்திருந்தாங்க. பொம்பளை புள்ளைங்கப்பான்னு சொல்லியும், அந்த ஓனர் ஜெண்டர் அங்க ஒரு விஷயமே இல்லைன்னதை பார்க்கனும்….”
“ஆனா அதுக்காக அந்த கௌரவம் செஞ்சதை எல்லாமே சரின்னு சொல்ல மாட்டேன். பார்த்ததுமே ஒரு பேட் இமேஜ். கொஞ்சமும் நின்னு நிதானமா சிக்னல் போடவும் வரனும். இல்லை கார், பைக்ன்னு இல்லாத ரோட்ல க்ராஸ் பண்ணனும்ன்னு இல்லை….”
“ஹ்ம்ம், பின்ன?…” என்றார் சாவித்ரி.
“ஆப்போசிட் டைரெக்ஷன்ல காரை பார்க் பண்ணிட்டு, பேரிகட் தாண்டி, அவ்வளோ ரஷ் ட்ராபிக்ல ஸ்டெயிலா கை காமிச்சு ரிலாக்ஸா ரோட் க்ராஸ் பன்றது தப்பு தானே சாவி. இதுல ட்ராவல்ஸ் வச்சு நடத்தறாங்க. ரூல்ஸ் அவங்களுக்கு இல்லை போல. பஸ்க்கு மட்டும் தான்…” என கூறி,
“இந்த லட்சணத்துல இந்த நந்தா ஸ்ரீபெரம்பத்தூர் டோல்ல வச்சு கூட அந்த கௌரவத்தை பார்த்து ஒரே ஜொள்ளு. செம்ம சிரிப்பு. ஒருபக்கம் கோபம். என்னவோ பண்ணி தொலைன்னு விட்டுட்டேன்…”
“சரி, இப்ப என்ன பண்ண போற நிலா?…”
“முதல்ல ப்ளைட் டிக்கெட் புக் பண்ணனும். இவளுக்கு கல்யாணம் முடியறதுக்குள்ள நான் ஒருவழி ஆகிடுவேன் போல. நல்லவேளை எனக்கு நாளைக்கு பெங்களூர்ல ரெக்கார்டிங். இல்லைன்னா என்னை அங்கயே நாலஞ்சு நாள் இருக்க வச்சிருவா…” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்தாள்.
“புக் ஆகிடுச்சா?…”
“டிக்கெட்ஸ் நிறைய அவேலபிள் இருக்கு சாவி. இருந்தாலும் பண்ணிட்டேன். இன்னும் எவ்வளோ நாளைக்கு உன்னால என் டிக்கெட் காசு போச்சோன்னு சொல்ல போறாளோ?…” என்று சொல்லிவிட்டு,
“சரி, நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகனுமே. நீ போய் தூங்கு பேபி…” என்று சாவித்ரியின் கன்னம் கிள்ளி முத்தமிட்டபடி வெண்ணிலா தன் அறை நோக்கி சென்றாள்.
சலசலவென்று அருவியாய் பொழிந்துவிட்டு அனைத்தையும் நேர்மறையாய் பேசி செல்லும் பேத்தியை கண்கள் கலங்க பார்த்திருந்தார் சாவித்ரி.
உறக்கம் முற்றிலும் தொலைந்திருந்தது அவருக்கு. மௌனமாய் அங்கேயே அமர்ந்துவிட்டார்.
எதிரே மிகப்பெரிய படமாய் மகன், மருமகள் புகைப்படம் மாலை போடப்பட்டிருந்தது.
கலங்கிய மனதை முயன்று வலிமையாய் இறுக்கிக்கொண்டவர் மனம் சமன்பட மறுத்தது.
அதிகாலை நேரமே விமானம். சுனந்தாவை அடித்து கிளப்பி விமானநிலையம் புறப்பட்டுவிட்டாள் வெண்ணிலா.
“இது தேவையா? ப்ராப்பர் ஸ்லீப் இல்லை எனக்கு. இதுல கல்யாணம் வரை நிம்மதியா தூங்க கூட விடமாட்டாங்க…” என மீண்டும் புலம்பிக்கொண்டே கிளம்பி வந்து சாவித்ரியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டனர்.
“என்ன சாவிம்மா, பேத்தி ஊருக்கு போறதா சொன்னீங்க?…” என்று பால் கொண்டு வருபவர் பார்த்துவிட்டு கேட்க,
“ஆமா சாமி. இப்பவும் ஊருக்கு தான் போறா. நேத்து ப்ரோக்ராம் மாறி போச்சு…” சாவித்ரி கூறவும்,
“கூட ஒரு பொண்ணு இருக்கே. சொந்தம்களா?…”
“ஹ்ம்ம், நிலாவுக்கு அக்காவாகனும். பெரியப்பா பொண்ணு….” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் வந்தார்.
வந்ததும் பாலை அடுப்பில் வைத்துவிட்டு தனது அக்கா மகனான குமரனுக்கு அழைத்தார்.
“சின்னம்மா என்ன இந்தநேரம்?…” என்று எடுத்ததும் அவர் கேட்க,
“பொண்ணுங்க ரெண்டுபேரும் கிளம்பிட்டாங்க குமரா. அதை சொல்ல தான் கால் பண்ணுனேன்…”
“இந்த பொண்ணு கொஞ்சமாவது யார் பேச்சையும் கேட்குதா? நாங்க ட்ரெஸ் எடுக்கும் போதே அவளோட ப்ரெண்ட்ஸ்க்கும் எடுக்கறதா சொல்லியும் கேட்காம, அவளா அவ ப்ரெண்ட்ஸ் சர்க்கிளுக்கு பட்டு சேலை எடுக்க வந்திருக்கா…” என்று சுனந்தாவை பற்றிய புலம்பலை துவங்கினார்.
“அதுதான் எடுத்தாச்சுல. விடு…” சாவித்ரி பேச்சை தவிர்க்க நினைக்க,
“பெத்தவங்க இருந்தும் இப்படி இவ இருக்கலாமா சின்னம்மா? பாருங்க நிலாவை பார்த்து இவளும் இவ முடிவு தான் எல்லாம்ன்னு செஞ்சுட்டு இருக்கா. நீங்களாவது கொஞ்சம் சொல்ல கூடாதா?…” என்றதும் சாவித்ரிக்கும் கோபம்.
“உன் பொண்ணை நீ தான் கண்டிக்கனும் குமரா. நாங்க வழி மட்டும் தான் சொல்ல முடியும். எங்களை கேட்டா நீ உன் மகளை பெங்களூர்ல வேலை பார்க்க விட்ட. இப்ப வந்து எங்ககிட்ட எல்லாத்துக்கும் நாங்க காரணம்ன்னு சொன்னா எப்படி?…” என்றவருக்கு அந்த நேரமே தலைவலியானது.
ஏன்தான் அழைத்தோமோ என்று தோன்றிவிட்ட பாதியில் வைக்கவும் முடியாமல் இருந்தார்.
“அப்படி சொல்லலை சின்னம்மா, என்ன இருந்தாலும் நிலாவை பார்த்து இவளுக்கும் ஒரு ஆசை. ஒரு இடத்துல இருக்கமாட்டேன்றா. இப்ப இந்த கல்யாணத்துக்கே போராடி சம்மதிக்க வைக்க வேண்டியதா போச்சு….” என்றவர்,
“நிலா மேல குறை சொல்றோமேன்னு நினைக்காதீங்க. தாய் தகப்பன் இல்லாத பொண்ணு. நீங்களும் செல்லம் குடுத்து அவ இப்படி இருக்கா. படிச்ச படிப்புக்கு வேலைக்கு போறாளா இவ? எதுவும் இல்லை. கார்ட்டூன் படங்களுக்கு, டப்பிங் படங்களுக்கு வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டா இது ஒரு வேலையா? இதுல என்ன கிடைச்சிடும்? நினைச்சா பைக்கை எடுத்துட்டு தனியா ரைட் கிளம்பிடறா….”
“குமரா…”
“கோவிச்சுக்காதீங்க சின்னம்மா, இதுவரை எப்படியோ. கொஞ்சவருஷம் முன்னாடி குத்துயுரா அவளை ஆக்ஸிடண்டாகி தூக்கிட்டு வந்த பின்னாடியாவது பைக்கை எடுக்கறதை நிப்பாட்டினாளா?…” என்று பேச,