“இதை முதல்லையே சொல்லியிருந்தா அந்த ஒருமணி நேர மேக்கோவர் தேவையே இல்லை. டைமும் வேஸ்ட். எல்லாமும் வேஸ்ட்…” என்றவள் பார்வை, ‘நீயும் தான் வேஸ்ட்’ என கூறாமல் கூறியது.
சட்டென மௌனமாய் ஒரு புன்னகை சன்னமாய் இதழ்களில் பூக்க, தலையை திருப்பி புன்னகைத்து திரும்பியவன் மயக்கம் இன்னும் கூடியது.
“ஹ்ம்ம், குட்…” என்றான் சீண்டலுடன் அமைதியாய்.
“நான் எப்பவும் குட். ஐ க்னோ…” என்றவள்,
“இப்படி ஒரு பர்ஸ்ட் நைட். காட்…” என தலையை பிடித்தவள்,
அவள் மயங்கியதை எத்தனை இலகுவாய் பறைசாற்றுகிறான் என பார்த்தவளுக்கு மீண்டும் கோபம் கரையுடைக்க,
“யூ யூ…” என்றவள் அவனின் கன்னங்களை வலிக்காமல், நோக செய்ய, கண்கள் மூடி அதனை உள்வாங்கினான் கௌரவ்.
“உங்களை எப்படித்தான் கன்ட்ரோல் பன்றது கௌரவம்? டயர்ட் ஆகிட்டேன்….” அவள் களைத்து போய் அவன் மார்பில் அடித்து கேட்க,
“இப்பவும் உன் கண்ட்ரோல்ல தான் நான் இருக்கேன் நிலா. புரியலையா…” கண் சிமிட்டி கேட்டதும், சட்டென்று வெட்கம் மீதுற அவனின் மார்பில் முகம் மறைத்தவள், சிரிப்பு அவனை வளைத்து சிறை பிடித்தது.
நொடிக்கு நொடி சுகமாய் ஒரு அரவணைப்பு ஆளுமையாய் அவன் ஆதிக்கத்தோடு.
கௌரவ் கலந்திருந்தான் வெண்ணிலாவின் முழுமையில். முத்தங்கள் ஒவ்வொன்றும் அவர்களின் காத்திருப்பின் எண்ணிக்கையை பறைசாற்ற, உணர்வுகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டது.
நிறைவுகள் ஆரம்பமாகவும், ஆரம்பம் நிறைவை நோக்கியுமான காதலின் பயணம் அது முடிவற்ற வான்வெளியாய் ருசித்தும் பசித்திருந்தது.
மனதோடு மட்டுமான அவனின் இறைஞ்சுதல் உயிர்வரை உறவாடியவளின் உள்ளத்தினுள் சென்றடையா மொழியாகிவிடுமோ என்னும் மன்றாடல் அந்த பார்வையில் உறைந்திருந்தது.
அவன் ஆழ்மன அழைப்பு அவளின் இதயத்தின் ஆழத்திற்கு சென்றடைந்ததை போல மீண்டும் விழி மலர்ந்தாள் வெண்ணிலா.
“தூங்கலையா?…” சோர்வுடன் கேட்க,
“ம்ஹூம்…” தலையசைத்தவன் முகம் பார்த்தவள்,
“விட்டுட்டு தூங்கிட்டேனா? கௌரவம் நீங்க குழந்தையா? கௌசிம்மா பரவாயில்லை போல…” அவன் தாடை பிடித்து கொஞ்சியவள்,
“தூங்க பண்ணவா?…” என்றாள் கண் சிமிட்டி.
தன் முக மாற்றத்தினை எத்தனை துள்ளியமாய் கவனித்து தன்னை கொண்டாடுகிறாள் இவள் என பார்த்தவன் இதயமெங்கும் நுரை ததும்பும் அலையாய் அவள் மீதான நேசம் பிராவகமெடுக்க,
“ஏன் காலையில என்னை விட்டு விலகி நின்ன நீ?…” என்றான் சட்டென காரணம் கண்டவனாக.
“வாட்?…” அவள் திகைக்க,
“ரொம்ப கோவம். தூங்க முடியலை…”
“கௌரவம்…” லேசாய் அவள் பக்கென்று சிரித்துவிட,
“ஹ்ம்ம், இப்பவும் சொல்றேன். என்னை விட்டு நகர்ந்த கொன்னுடுவேன்….” என்றவன் முத்தங்கள் வன்மையில் பதிய,
“பார்ரா ஆக்ஷன் ஹீரோவாமா?…” என்றவளின் சீண்டல்கள் கூட கௌரவ்வை கட்டுக்குள் நிற்க வைக்கமுடியாது போனது.
“இனிமே எங்கயும் கௌரவத்தை விட்டு தர்றதா இல்லை…” என்றவளை ஆசை ஆசையாய் கொண்டாடி சிலிர்த்தான் கௌரவ் அவள் உதிர்த்த வார்த்தைகளில்.