“இது அப்படி இல்லை. எவ்வளோ கேர்லஸ்? எப்படி போறான் பாருங்க? அதுவும் ரோட் இவ்வளோ ப்ரீயா இருக்கும்போது. குடிச்சிட்டு ஓட்டறான் போல? ராஸ்கல்…” என்றவள்,
“சொல்றதுக்கு எல்லாருக்கும் ஈஸியா இருக்கும். என்னோட அம்மாப்பாவும் இறந்தது ஆக்ஸிடென்ட் தான். எனக்கு நடந்ததும் ஆக்ஸிடென்ட் தான். முன்னது தெரியலை. ஆனா என்னை தட்டிவிட்டு ஆக்ஸிடென்ட் பண்ணினதெல்லாம் பக்கா ப்ளான்….” என்று கூற அதிர்ந்து பார்த்தனர் பிரத்யூக்ஷாவும், ஆகர்ஷனும்.
இருவரின் பார்வையும் சொல்லிவைத்ததை போல கௌரவ்வை தான் கவனித்தது.
“அவ டென்ஷன் ஆகாம எப்படி இருப்பா? உயிர் மட்டும் தான் இருந்துச்சு நிலாவை காப்பாத்த நினைக்கும்போது. அவ மீண்டும் வந்திருக்கான்னா அவளோட வில் பவர் தான்…” என சுனந்தாவும் பேசியபடி இருந்தாள்.
ஆகர்ஷனின் பார்வை இன்னும் இதனை பற்றி கூறவில்லையா என்று கௌரவ்விடம் கேள்வி எழுப்பியது.
மௌனமாய் கல்லென நின்றிருந்தவன் முகத்தில் எந்தவித மாறுபாடும் இல்லை.
“ஏன் ம்மா இருக்க சொல்லியிருக்கலாமே?…” ஆகர்ஷன் கேட்க,
“வந்திருவாங்க ஆர்ஷ். அவ மட்டும் தான் கிளம்பினா. பிள்ளைங்களும் கூடவே கிளம்பிட்டாங்க. நீங்க வந்து உட்காருங்க…” என அவர்களை அமர செய்து பேச்சுக்களை ஆரம்பிக்க, வெண்ணிலா பட்டும் படாததை போல பேசிக்கொண்டிருந்தாள்.
அவளின் உற்சாகம் எல்லாம் சுத்தமாய் வடிந்துவிட்டதை போலிருந்தது. கௌரவ்வும் அதனை கவனித்தபடியே இருக்க,
“கஷ்டமா?…” என திரும்பி நிலாவை பார்த்தவன் விழிகள் விஷமத்தில் சுருங்கியது.
“ம்ஹூம், அவ்வளோ கஷ்டமில்லை…” என்ற கௌரவ் கூட இயல்பிற்கு திரும்பியிருந்தான் இப்போது.
இப்போதும் அவனிதழ்கள் மெல்லிய குரலில் மிக நிதானமான பார்வை வருடலோடு வார்த்தைகளை உதிர்க்க, அதற்குள்ளிருந்த ரசவாத உணர்வுகள் நிலாவின் கன்னங்களில் செம்மை படர செய்தது.
விழிகள் இன்னதென்று கண்டுகொள்ளமுடியாத வினாடிக்கும் குறைவான மின்சார தாக்குதலாய் சட்டென்று ஒரு கண் சிமிட்டல் அவனிடமிருந்து நிலவுக்கு வந்தடைந்தது.
‘ப்பாஹ்’ என மற்றதெல்லாம் மறந்து அவளுள்ளம் மொத்தமாய் சரிந்தேவிட்டது அவனின் பரிபாஷையில்.
“ஓகே ஓகே, நீங்க பேசிட்டே இருங்க. நாங்க போய் மத்த வேலையை பார்க்கறோம்…” என பிரத்யூக்ஷா நந்தாவை கை பிடித்து எழுப்பி தானும் எழுந்துகொள்ள,
“கௌரவ் அந்த ரூம்ல கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுடா. நானும் வந்திடறேன்….” என்றான் ஆகர்ஷன்.
“இல்ல நாங்க…” என சங்கடமாய் வெண்ணிலா மறுக்கும்முன்,
“வா…” என்று கௌரவ் அழைத்து சென்றான் அங்கிருந்த ஒரு அறைக்குள்.
“ப்ச், இப்ப எதுக்கு ரூம்க்கு?…”
“அதுக்கு ஹால்லையே பேசலாமா நிலா? என்ன தான் இருந்தாலும் இன்னும் கொஞ்சநாளைக்கு மத்தவங்க பார்வை நம்ம மேல தான் குறுகுறுப்பா விழும். அது எதுக்கு?…”
“சரி ஓகே, ஆனா நீங்க என்ன பேசறீங்க? எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்காது…” என்றாள் அவஸ்தையுடன்,
“என்ன பேசினேன்?…” கதவை சாற்றிவிட்டு வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
“ப்ச், மத்தவங்க முன்னாடி நான் ஷைய்யாகற மாதிரி பேசாதீங்க. எனக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு….” வெட்கத்தை மறைக்க முடியாமல் கேட்க,
“ஆமா, உண்மை தானே?…” மீண்டும் இதழ் மடித்து கள்ளப்புன்னகை புரிந்தான்.
“மத்தவங்களுக்கு அது தர்ற மீனிங் வேற மிஸ்டர் கௌரவம். ஆனா நீங்க என்ன அர்த்தத்துல என்னை பார்த்துட்டே சொன்னீங்கன்னு எனக்கு புரியுமே? இந்த கண்ணையும் நோண்டிடனும்….” என அருகில் வந்தமர்ந்து கூற, இதழ்களை மடக்கி சிரித்தபடி கௌரவ்.
“ப்ச், என்னால உங்களை மாதிரி எல்லாம் எல்லா நேரத்துலயும் முகத்துல இப்படி சைலன்ட் கில்லர் எக்ஸ்ப்ரஷன் குடுக்கமுடியாது. ஐம் நாட். அதுவும் இப்போ நான் இருக்கிற மைண்ட்செட்ல…”
அதற்குமே சத்தமின்றிய புன்னகை. லேசாய் இதழோரம் நெளிய அவனது புருவங்கள் ஒற்றையாய் ஏறி இறங்கியது.
“ப்ச், ப்பாஹ்…” என்று நெற்றியை பிடித்துக்கொள்ள,
“கட்டிக்கோ கட்டிக்கோ…” என மெல்லிய குரலில் பாடல் வரிகளை வேறு முணுமுணுக்க,
“ஓஹ், காட்…” எழுந்துவிட்டாள் வெண்ணிலா.
அவள் எழுந்தவேகத்தில் மனைவியின் கைபிடித்து கௌரவ் நிறுத்த, திரும்பி சுதாரிக்கும் முன் தன்னை நோக்கி அவளை இழுத்திருந்தான்.
அவனின் மடியில் பொத்தென்று விழுந்தவள் பதறி திரும்பி பார்க்க கதவடைத்திருந்தது.
“இப்படியா?…” என்றவள் மேலும் கோபத்துடன் பேசும்முன்,
“வெட்கப்பட வைக்கறேனா நான்?…” என்ற கேள்வியில் மெதுவாய் அவனின் மீசையை நீவிவிட்டாள் வெண்ணிலா.
சந்தோஷமாய் இருக்கவேண்டிய நேரத்தினை அந்த நொடிநேர பரபரப்பு சுருட்டிக்கொண்ட ஆற்றாமையில் அவளுள்ளம் தவித்தது.
“நிலா…” என அவளின் முகம் நிமிர்த்தியவன்,
“உன்னை வெக்கப்படுன்னு நான் சொல்லவே இல்லை. வெக்கமெல்லாம் முகத்துல காமிக்கிறது மட்டுமா? மனசுக்குள்ள ஒரு அவஸ்தை தோணனும். இங்க இந்த இடத்துல படபடன்னு கூச்சத்துல ஒரு பெரும்பசி உண்டாகனும்….” என்றவன்,
“அது நம்மை மொத்தமா முழுங்கிடனும். இதெல்லாம் தவிச்சு அனுபவிச்ச பின்னாடி தாளமுடியாம இங்க இந்த முகத்துக்கு வரனும் அந்த வெக்கம். இதோ இப்போ நீ காமிக்கிற இந்த வெக்கம்…” என்றவனின் இடதுகரம் அவளின் இடையோடு இறுக்கமாய் பதிய,
“அச்சோ…” என்று நிஜத்திற்கும் தாளமுடியாமல் அவனை அணைத்துக்கொள்ள,
“இதை தான் சொன்னேன். கட்டிக்கோ கட்டிக்கோ…” என்றான் ஸ்ருங்காரமாய்.
“கரடுமுரடான வாய்ஸ், இவ்வளோ சாப்ட்டா? கௌரவம் உங்க வாய்ஸ் கூட ஹாட்…..” என்றவள் சிணுங்கி சிறைபட அணைப்பின் அழுத்தம் வலுத்தது.
“இன்னும் நல்லா அணைச்சுக்கோ நிலா. வேற எதையும் யோசிக்காத. இது நமக்கான நேரம். நமக்கான நெருக்கம். இங்க நாம மட்டும் தான். புரியுதா?…” என்றான் அவளின் கன்னங்களை பற்றி.
“புரிஞ்ச மாதிரியும் இருக்கு. நீங்க என்னை டைவர்ட் பன்ற மாதிரியும் இருக்கு. ஆமாவா?…”
“ஹ்ம்ம், ஆமா. மொத்தமா எனக்குள்ள உன்னை வாங்கிக்கனுமே. எல்லாம் மறந்து வந்திடேன்….” என்றவன் அவளின் பார்வை கௌரவ் முகத்தினை துளைக்க கண்டு,
“ஹர்ட் பண்ணுவேன். பொறுத்துக்கோ…” என்று சொல்லியநொடி அவளின் மொழியை மொத்தமாய் தனக்கென எடுத்துக்கொண்டவன் ஆழ்மனம், அவளும் அவனுக்காக யோசிக்க கூடுமா என்று காத்திருந்தது.