“நான் ஸ்டோரி சொல்றேன். கேளு…” என தன்னோடு அவளை சாய்க்க, ஊஞ்சல் கட்டில் அவர்களின் அசைவுக்கேற்ப ஆலாபனை சேர்த்தது.
சஞ்சலங்கள் கரைந்தாலும் கரை ஒதுங்கியிருக்க, அவர்களுக்கான நேரம் அதனை தள்ளாமல் அள்ளிக்கொண்டனர்.
———————————————
முறைத்துக்கொண்டே காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினான் கௌரவ்.
“என்னவோ கையை காலை கட்டி கூட்டிட்டு வந்த மாதிரி தான். என்னை எதுவும் கேட்க கூடாது பாஸ்…” என்றாள் வெண்ணிலா தோள் குலுக்களுடன்.
வழக்கம் போல் அவனிடம் எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை. நிலாவின் பக்கம் கதவை திறக்க செய்தவன் அவளை பார்க்க,
“முத்து கொட்டிடும்…” என்று கோபமாய் இறங்கினாள் அவள்.
“உள்ள போ. பார்க் பண்ணிட்டு வர்றேன்…”
“பார்க் பண்ணியாச்சே. வாங்க…” என்று நின்றாள்.
ராம்நாத்தை பார்க்க தான் இருவரும் வந்திருந்தது. காலை எழுந்து ச்நேற்றதுமே சாவித்ரி கூறிவிட்டார் வெண்ணிலாவை போய் பார்த்துவரும்படி.
கௌரவ்விற்கு அழைத்து செல்ல மனமில்லை என்றாலும் போய் பார்த்துதானே ஆகவேண்டும் என அழைத்து வந்துவிட்டான்.
“ண்ணா ஹாஸ்பிட்டல் வர்றோம். வந்தாச்சா நீங்க?..” என்று ஆகர்ஷனுக்கு அழைத்து கேட்க,
“டேய் டேய் நான் இன்னும் கிளம்பவே இல்லைடா…” என்றவனின் அலறலை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை.
“ஸோ வாட்? மெதுவா வாங்க…” என்று வைத்துவிட்டான்.
இதோ மருத்துவமனைக்குள் இருவரும் நுழைய அங்கே ராம்நாத்தை அனுமதித்திருக்கும் தளத்தின் வெளியே சாருலதா அமர்ந்திருந்தாள்.
அப்போதுதான் வந்திருக்கவேண்டும் என்றும் புரிந்தது அவளை பார்த்ததுமே.
“அண்ணா, வாங்கண்ணா…” என்று தன் அண்ணனை மட்டும் அழைத்தவள், பார்வையிலேயே அலட்சியம் காண்பித்தாள் வெண்ணிலாவிடம்.
‘ஹப்பா, இந்த ஸீன் இருக்கே?’ என நிலா அவளை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.
“இந்த நேரம் இங்க என்ன பன்ற?…” என கௌரவ் கேட்க,
“ஒரு நம்பர்ல இருந்து அப்பா பேசினார். ஹாஸ்பிட்டல் வா, பார்க்கனும்ன்னு. என்னன்னு கேட்கறதுக்குள்ள கால் கட்டாகிருச்சு. அதான் கிளம்பி வந்தா தூங்கறாங்கன்னு உள்ள விடலை…” என்றாள்.
“ஓஹ், சரி நீ கிளம்பு. நான் பேசிட்டு உனக்கு சொல்றேன்…” என்றான் அவளை கிளம்பும்படி.
“இல்ல இங்க நம்ம யாராவது இருக்கனுமே? அம்மா கூட இங்க இல்லை. விக்ரமும் கிளம்பிட்டான். அப்பாவை விட்டுட்டு எப்படி போக?…” என அவள் குற்றச்சாட்டு போல அதனை கூற,
“நான் தான் விக்ரமை கிளம்ப சொன்னேன். அம்மாவுக்கு ஹெல்த் இஷ்யூ. அவங்களுக்கும் முடியலைன்னா இன்னும் கஷ்டம். இன்னைக்கு நாங்க இங்க தான் இருப்போம். நீ கிளம்பு….” என்றுவிட்டான் கத்தரிப்பதை போல.
சட்டென முகம் முழுவதும் வெறுப்பு. அவளை காணவே பிடிக்காதவராய் முகம் சுளித்து மகனிடம் திரும்ப,
“எப்டி இருக்கீங்க?…” என்றான் அவன்.
“கௌரவ் இங்க…” என வேகமாய் குறை கூற ஆரம்பிக்கும் முன்,
“ஷ்ஷ்ஷ் உங்களை அதிகம் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அமைதியா இருங்க. கேட்டதுக்கு தலையசைச்சா போதும். உடம்பை தேத்திட்டு வீட்டுக்கு வாங்க. இன்னும் எவ்வளோ பார்க்க வேண்டியதிருக்கு….” என்றான் அவன் எவ்வித பாவனையும் இன்றி.
இப்படியும் ஒருவனால் இருக்கமுடியுமா? பேசமுடியுமா? என்று புருவம் உயர்த்தி உள்ளார்ந்தெழுந்த ஆச்சர்யபாவத்துடன் அவனை பார்த்தாள் வெண்ணிலா.
“ப்ச்…” என்று அவளின் பார்வையில் அதிருப்தி காண்பித்து விழிகளால் அதட்டியவன் தலையசைக்க,
“டேக் கேர்…” என்றாள் பல்லை கடித்து வெண்ணிலா.
“கௌரவ்…” என ராம்நாத் அவனின் கையை பிடித்துக்கொள்ள,
“சீக்கிரம் குணமாகிட்டு வீட்டுக்கு வாங்க. நாளைக்கு நாங்க காஞ்சிபுரம் கிளம்பறோம். நீங்களும் வந்திருங்க. நிறைய வேலைகள் இருக்கே…” என்று கூற,
“இல்லப்பா…”
“ஷ்ஷ்ஷ் பேசக்கூடாதுன்னு சொன்னேன்ல. உங்க உடல்நிலை முக்கியம். ஆரோக்கியம் முக்கியம். அதனால நல்லா தேறி வாங்க. எதையும் தாங்கக்கூடிய தெம்பு வேணுமே…” என்று அவன் கூற,
வெண்ணிலாவிற்கு தான் புரியாத படம் பார்ப்பதை போலிருந்தது. இதென்னடா என்று தான் பார்த்தாள்.
“ஓகே, நான் கிளம்பறேன். அப்பறம் சாருவுக்கு எதுக்கு கால் பன்றீங்க? அவ அவளோட குடும்பத்தை பார்க்க வேண்டாமா? எதுவானாலும் எனக்கு கூப்பிடுங்க. புரியுதா?…” என்று கேட்டு அதற்கும் அவரை தலையசைக்க வைத்துவிட்டே வெளியில் வந்தான்.
வெண்ணிலா ராம்நாத்திடம் சொல்லிக்கொள்ள கூட இல்லை. அவன் கிளம்பவும் அவளுமே புறப்பட்டுவிட்டாள்.
“போறா பாரு, வீட்டுக்கு வந்து உன்னை என்ன பன்றேன்னு பாரு மோட்டார்க்காரி….” என கருவியபடி பார்த்திருந்தார் இருவரையும்.
அறையிலிருந்து வெளியே வந்ததுமே ஆகர்ஷனுக்கு கௌரவ் அழைக்க அவன் இன்னும் கிளம்பியிருக்கவில்லை.
கௌசல்யாவை பார்த்தால் மட்டுமே அடிமனத்தின் அலைகழிப்புக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும் என்பதை போலிருந்தது.
“அம்மாவை மட்டுமா என் குட்டி மாமியாரையும் பார்க்க போறீங்கன்னு சொல்லுங்க…” என கிண்டலாய் நிலா கேட்டு,
“ஆமா அது என்ன ஆடர் பன்றீங்களா உங்கப்பா முன்னாடி? அதுவும் வாயே திறக்காம?…” என்றாள் அவனிடம் வம்பிற்கே.
“அப்படியா தெரிஞ்சது?…” அமர்த்தலாய் கேட்டுக்கொண்டு கார் சாவியை சுழற்றியபடி நடந்தான் கௌரவ்.
“நல்லாவே…”
“ஓஹ், புரிஞ்சவரை ஓகே…”
“எவ்வளோ கொழுப்பு?…” என்றவள்,
“ஹலோ கௌரவம், எல்லா நேரத்துலயும் நான் இறங்கி வரமாட்டேன் பார்த்துக்கோங்க….”
“நோ இஷ்யூஸ். நான் வேணா இறங்கிடறேன்…” என்றான் மின்னலாய் ஒற்றை கண்ணை சிமிட்டி.
சடுதியில் அவன் நிகழ்த்திய ஜாலத்தில் அசந்து நின்றவள் லிப்ட் திறக்கவும் உள்ளே நுழைந்தாள் அவனுடன்.
“நான் உங்க வொய்ப் பாஸ். இப்படி கொஞ்சமும் பார்த்து ரசிக்கவிடாம பட்டுன்னு கண்ணடிச்சி மறைச்சிடறீங்க?…” என்று கேட்க, அதற்கும் இதழ்மடித்து குறும்பாய் சிறு புன்னகை.
“பார்த்து இன்னைக்கும் கீயை கீழ விட்டு மோதிரம் விழுந்திடாம….” என்றாள் வேண்டுமென்றே.
அவள் கூறவும் தான் எதை பற்றி பேசுகிறாள் என கௌரவ்விற்கும் புரிந்தது.
தன்னுடைய கார் கீயை பார்த்தான். அதில் பொருத்தியிருந்த கௌசல்யாவின் குட்டி மோதிரத்தையும் பார்த்தான்.
இதழ்கள் மெலிதாய் விரிந்தது அன்றைய நிகழ்வின் தாக்கத்தில். அதனோடே நிலாவை நிமிர்ந்து பார்க்க,
“அன்னைக்கு என்னை கவனிக்க கூட இல்லை தானே?…” என்று கேட்க,