“உங்களை இருக்க வேண்டாம்ன்னு யார் சொன்னா? எப்போ இங்கயே செட்டிலாகற ஐடியா?…” என கௌரவ் கேட்க, ஆகர்ஷன் முகத்தில் மென்புன்னகை.
“வரலாம். சீக்கிரமே. அதுக்குள்ள உன் கல்யாண டேட் சொல்லு. முன்னாடியே வந்திருவோம்…” என்று கூற,
“ஹ்ம்ம், பார்க்கலாம்…” என்ற கௌரவ் திரும்ப விமானநிலையத்திலிருந்து வெளியேறிய அந்த இருசக்கர வாகனம் அவனின் விழிகளின் கவனத்தை தன் புறம் திருப்பியது.
‘Harley Davidson’ என பார்த்ததுமே விழிகள் சுருங்கியது. சட்டென்று பிரத்யூக்ஷா, ஆகர்ஷனின் திருமணத்தின் முன் நிகழ்ந்த அந்த நிகழ்வும், விபத்தும் நினைவில் வந்து நின்றது.
“கௌவாப்பா…” குழந்தை உறக்கத்தில் அவனின் கழுத்தை துழாவி பிடித்துக்கொள்ள,
“இருக்கேன்டா கௌசல்யாம்மா…” என்றான் கௌரவ் சட்டென நினைவு கலைந்தவனாக.
“நாளைக்கு என்ன பன்றான்னு பார்க்கறேன். ரொம்பத்தான் கௌவாப்பா பேசறா….” பிரத்யூக்ஷா சந்தோஷமாய் அலுத்துக்கொள்ள,
“ஹ்ம்ம், அன்னைக்கு கௌசல்யா வந்தப்போவும், எங்க கௌவாப்பா மெலிஞ்சு போயி. பாவம், நோ ஃபூடான்னு கேட்டு அவங்களை ஒருவழி பண்ணிட்டா. சும்மா இல்லாம விக்ரம் வேற எங்கப்பா தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு சொல்லி வச்சு, இவ சண்டை போட்டே தீருவேன்னு அவருக்கு கால் பண்ண சொல்லி, வீடியோ கால்ல இங்கிலீஷ்ல அவ்வளோ திட்டு…” என ஷ்யாமளா தலையை தட்டிக்கொண்டார்.