“எக்ஸ்க்யூஸ்மீ பாஸ்…” என உள்ளே நுழைந்தவள் அழைப்பில் அவன் இமை உயர்த்தி பார்க்க,
“ஹாய்…” என்றபடி வந்தாள் தங்கவெண்ணிலா.
“உங்களை பார்க்க தான் வந்தேன்…” என்றவளை பார்த்தவன் கண்களால் இருக்கையை காண்பிக்க, தோளை குலுக்கிக்கொண்டு அமர்ந்தாள் நிலா.
“என்ன விஷயம்?…” என நேரடியாக கௌரவ் விஷயத்திற்கு வர,
“முக்கியமான விஷயம். என் கல்யாண விஷயம்…” என அலட்டிக்கொள்ளாமல் அவளுமே பதிலளித்தாள்.
“ஓஹ்…” அவ்வளவு தான் அவனிடம் அதற்கான எதிரொலி.
“என் வெடிங்க்கு பஸ், இல்லையா கார் தேவைப்படும். ரிலேட்டிவ்ஸ் எல்லாம் சென்னைக்கும் காஞ்சிபுரத்துக்கும் ட்ரிப் அடிக்கிற மாதிரி இருக்கும்…” என்று சொல்லி அவனையே பார்க்க,
“ஓஹ்…” என்றான் கௌரவ்.
“அதுதான், இந்த பஸ் ஓனர் ஸ்ட்ரிக்ட்டா இருந்தாலும் எத்திக்ஸ் பாலோ பண்ற்றவர். அதான் இங்க புக் பண்ண வந்தேன்…” என்று சொல்ல, அவனுக்கு அப்பட்டமாய் புரிந்தது என்ன சொல்ல வருகிறாள் என்று.
“வெய்ட்…” என்றவன், இண்டர்காமை எடுத்து அதில் அழைப்பு விடுக்கவும் மேனேஜரின் வருகை.
“சுசீ இவங்களுக்கு என்னமாதிரியான ட்ராவல்ஸ் வேணும்ன்னு கேட்டு புக் பண்ணுங்க. அந்த டேட்ல நமக்கு வேகிள்ஸ் அவேளபிளான்னும் செக் பண்ணுங்க. நினைச்ச நேரம் நினைச்ச எதுவும் கிடைக்காதே…” என்று சொல்லிவிட்டு,
“உங்களுக்கு அவர் ஹெல்ப் பண்ணுவார்…” என்று மேனேஜரை கௌரவ் கை காண்பிக்க,
“ஓஹ், இஸ் இட்?…” என்ற வெண்ணிலா, எழுந்துகொண்டாள்.
“மிஸ்டர் மேனேஜர், கல்யாண தேதி எப்போன்னு உங்க பாஸ் சொல்லுவார். என்ன வேகிள்ஸ் வேணும்ன்னும் அவரே பிக்ஸ் பண்ணுவார். எனக்கு டேட் எல்லாம் நோ இஷ்யூஸ். இதுக்கு மேல மத்த டீடெய்ல்ஸ் நீங்க உங்க பாஸ்கிட்டையே கேட்டுக்கோங்க…” என்று பட்டென்று கூற கௌரவ்வின் முகத்தில் திகைப்பை வெளிக்காட்டிவிடாத பாவனை.
தனது கை பேசியில் இருந்து கௌரவ்வின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தவள், அவன் தன் கைப்பேசியை திரும்பி பார்க்கவும்,
“இதுதான் என் நம்பர். பேசி முடிச்சிட்டு இன்பார்ம் பண்ணுங்க. ஓகே…” என்று சொல்லி தன் கைபேசியை உள்ளே வைத்தவள்,
“எத்திக்ஸ் எமோஷன்ஸ் ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி போக என்னால முடியும். முடிஞ்சாலும், இல்லைன்னாலும் தாராளமா நீங்க சொல்லலாம். கம்பல்ஷன் இல்லை…” என்று கூறி தன் ஷோல்டர் பேக்கில் இருந்து ஒரு பூங்கொத்தை வெளியில் எடுத்தாள்.
“ஹேவ் எ லவ்லி டே…” என்று கூறி அவனிடம் நீட்ட, மேனேஜர் வேறு என்ன நடக்கிறதென பேயறைந்தார் போன்று பார்த்து நின்றார்.
கொத்தாய் ரோஜா பூங்கொத்து. அத்தனை வண்ண மலர்களும் அதில் பூத்தாட மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டான் கௌரவ்.
அதன் அட்டையில் கிரேட் கௌரவம் (எத்திக்ஸ் ஆட்டிட்யூட்) என்று எழுதி அருகில் சிறு புன்னகை ஸ்மைலி வேறு.
வெண்ணிலாவை கௌரவ் நிமிர்ந்து பார்க்க அவனின் அந்த பார்வையில் என்ன உள்ளதென இப்போதும் அவளால் கண்டுகொள்ளமுடியவில்லை.
அவளை
இத்தனை தூரம் இழுத்து வருவதும் இந்த பார்வை தானே. உணர்வுகளை காண்பிக்காமலேயே வசீகரிக்கும் கண்கள்.
“வரட்டுமா?…” என்றாள் வெண்ணிலா மெல்லிய குரலில்.
ஒற்றை தலையசைப்பு. அதுவும் அசைந்ததா இல்லையா என்றே கண்டுபிடிக்க முடியாத விதமாய் இருக்க, சுசீ மீண்டும் கண்ணை தேய்த்துக்கொண்டு பார்த்தான்.
தோளை குலுக்கிக்கொண்டு சிரிப்புடன் அவள் அங்கிருந்து செல்லவும், கௌரவ்வும் எதுவும் நடவாததை போல கணினியில் திரும்ப,
மயக்கம் வராத குறை தான். கோபமில்லாத, அழுத்தமில்லாத இறகை போலொரு வெளியேற்ற வார்த்தை.
மந்திரித்து விட்டதை போல சுசீ வெளியேற, வெண்ணிலாவும் மூடியிருந்த கேட்டை திறக்கும்படி ஹாரன் அடிக்க, திறந்ததுமே ஆக்ஸிலேட்டரை அழுத்தியவள் வெளியே வர, ஒருவரின் திடீர் வரவு.
சட்டென சுதாரித்து பைக்கை ஒடித்து லாவகமாய் திருப்பிவிட்டு ஒதுங்கி நின்றவள் யார் என திரும்பி பார்க்க,
“ஏம்மா கண்ணை என்ன பின்னாடியா வச்சிருக்க?…” என்று அவள் நின்றதும் ராம்நாத் போட்ட சத்தம் இன்னும் ஹெல்மெட் போடாததில் நன்றாகவே கேட்டது.
“பொட்டப்புள்ளைக்கு எம்புட்டு தைரியம்? வண்டியும் ஆளும்…” என்று சொல்லி முடிக்கும்முன் ஆக்ஸிலேட்டரை முறுக்கியவள் வண்டியை சுழற்றி திருப்பி, ராம்நாத்தை சுற்றுபோட்டு வந்து அவரின் முன் நிறுத்த அரண்டுவிட்டார்.
கேட்டின் முன் செக்யூரிட்டி பார்க்க புழுதியை கிளப்பிக்கொண்டு அவரை நடுங்க செய்துவிட்டவளை கோபமாக பார்த்து நிற்க,
“என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க?…” என்றாள் வெண்ணிலா ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நிமிர்ந்தமர்ந்து.
“என்ன என்ன சொல்லுவாங்க? எதிர்க்க ஆளு வர்றது தெரியாம…” என்று ராம்நாத்தின் நாக்கு உளறியது என்ன பேசுவதென தெரியாமல்.
படபடவென்று வந்தது. இன்னும் அவருக்கு இதயத்துடிப்பு சீராகவில்லை வெண்ணிலா அவரை சுற்று போட்டதில்.
“நானா ராங் ரூட்ல வந்தேன்? லெப்ட் சைட்ல தான நான் போனேன். உங்களோட லெப்ட் சைட்ல தான நீங்க வந்திருக்கனும்? வயசாகிருச்சு. இந்த பேஸிக் கூட தெரியாதா உங்களுக்கு?…” என்றவள்,
“அப்பறம் என்ன சொன்னீங்க? இந்தம்மாவா? பதிலுக்கு நான் பேசவா?…”
“ஏய்…”
“இந்த ஏய் எல்லாம் திரும்ப சொன்னீங்க…” என்றவள் பார்வையே அவரை மிரள செய்தது.
“ராங் ரூட்ல வந்தது நீங்க. உங்க மேல பைக்கை ஏத்தாம விட்டதுக்கு தேங்க்ஸ் சொல்லலைன்னாலும், எவ்வளோ பேச்சு? நான் மட்டும் கண்ட்ரோல் எடுக்கலைன்னா என்னாகிருக்கும்?…” என கூற, ‘ஆமா என்னவாகியிருக்கும்?’ என்று ராம்னாத்திற்கும் தோன்றாமல் இல்லை.
‘வண்டியை பாரு, ஜைஜாண்டிக்கா. பொட்டப்புள்ள ஓட்டற வண்டியா இது? ஆளும், மூஞ்சியும்’ என மனதிற்குள் நினைத்தபடி அவளை முறைத்தாரே தவிர வாய்விட்டு கூறவில்லை.
“பார்த்து போங்க பெருசு? மாப்பிள்ளை பார்க்க வந்தாஹ் இடத்துல, இந்த கொசுத்தொல்லை வேற….” என்றபடி ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியை கிளப்பி பறந்துவிட்டாள் வெண்ணிலா.
‘என்ன சொன்னா? என்ன சொன்னா?’ என பதறிய மனம், மாப்பிள்ளை என்றதும் மட்டும் மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்தது.
தன்னை பெருசு என்று சொல்லி சென்றதை கிடப்பில் போட்டவர் வேகமாய் உள்ளே நுழைந்தார்.
டிப்போவின் வாசலில் வைத்தே தன்னுடைய கார் மக்கர் ட்ரைவரை வசைபாடிவிட்டு இறங்கி நடந்து வருகையில் இப்படி ஒரு சந்திப்பு.
வேகமாய் உள்ளே வந்தவர் மகனின் மனநிலை என்ன என்றெல்லாம் பார்க்கவே இல்லை.
“இப்ப வந்துட்டு போன அந்த பொண்ணு யார் கௌரவ்?…” என்றார் மகனிடம்.
எதை பேச வந்தோம் என்பதையே மறந்து அவனிடம் எகிறிக்கொண்டு கேட்டவர் பார்வையில் அந்த பூங்கொத்தும் பதிந்தது.
“மாப்பிள்ளை பார்க்க வந்தேன்னு வேற சொல்றா?…” என்றுவேறு கேட்க,
“ப்ச்…” என்று சலிப்பாய் அவரை பார்த்தவன்,
“வீட்டுக்கு போங்க பேசலாம்…” என்றான்.
“ஓஹ், அப்போ உங்கம்மா சொன்னவ இவ தானா?…” இளக்காரமும் கோபமுமாய் வார்த்தைகள் வர மகனின் அமைதியான பார்வையில்,
“இதை நான் ஒத்துக்கவே மாட்டேன். சம்மதிக்கவும் மாட்டேன். என்னை மீறி கல்யாணம் பண்ணி வச்சிருவாளா உங்கம்மா?…” என்று கேட்க,
“ஓஹ்…” என்ற கௌரவ் தன் கைபேசியை எடுத்து ஷ்யாமளாவுக்கு அழைத்தான் கௌரவ்.
“ஷ்யாமாம்மா, வெண்ணிலா, எனக்கு சம்மதம்…” என்று ரத்திர சுருக்கமாய் சொல்லியவன் ராம்நாத்தை பார்த்துக்கொண்டே பேசி அழைப்பை துண்டித்தான்.
“வீட்டுக்கு போங்க. பேசலாம்…” என்று மீண்டும் கூற, அவனை வெறித்து பார்த்தபடி ராம்நாத் கோபமாய் கிளம்ப,
“நானும் கிளம்பிட்டேன். பின்னாடியே வருவேன்…” என்று கூறியவனை திரும்பி பார்த்தவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அவனின் இந்த குறிப்பு தன் கோபத்தை கௌசல்யாவிடம் காண்பித்துவிட கூடாதென்னும் எச்சரிக்கை என்று தெளிவாக புரிந்தது.
தன் கோபத்தை வேக நடையில் ராம்நாத் காண்பித்து செல்ல, அவர் கிளம்பியதை கவனித்தவன் பார்வை மீண்டும் பூங்கொத்தில் பதிந்தது.
‘மாப்பிள்ளை பார்க்க வந்தேன்னு சொல்றா?’ என்று கேட்ட ராம்நாத்தின் வார்த்தையில் வெண்ணிலாவின் பேச்சில் கௌரவ்வின் முகத்தில் சிறு புன்னகை அழகாய்.